Posts

Showing posts from February, 2025

வரவு-செலவுத்திட்டத்தின் ஜனரஞ்சகம் ஈழத்தமிழர்களின் இருப்பை சிதைக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது முழுமையான வரவு-செலவுத்திட்ட அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. நிதியமைச்சராகிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவும் கன்னி வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில், 'நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்து பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை நோக்கி செலுத்துவதால் இந்த வரவு - செலவு திட்டம் சிறப்புமிக்கதாக மாறும்' என்றவாறு தெரிவித்தார். பொதுவான பார்வையில் சுகாதாரம், கல்வி என்ற வரிசையில் வரவு-செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளமை மக்களை கவரக் கூடியதாகவே அமைகின்றது. மாறாக ஆட்சி மாற்றத்தின் தாக்கம் வரவு-செலவுத் திட்டத்தில் முழுமையான பிரதிபலிப்பை கொண்டிருக்கவில்லை என்ற விமர்சனம் பொருளாதார நிபுணர்களிடம் காணப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நியமங்களின் வரைபுக்குள்ளேயே வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்கள் காணப்படுவதனை சுட்டிக்காட்டியுள்ளனர். வரவு-செலவுத்திட்டம் மீதான ஒருங்கிணைந்த பார்வை தேசிய மக்கள்...

தமிழ் மக்களின் போராட்டங்களில் எதிரிகள் யார்? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் அரசியல் தொடர்ச்சியாக ஏதொவொரு சம்பவ அடிப்படையிலான கொதிநிலை அரசியலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டு வருகிறது. தீர்வுகளற்ற நிலையிலேயே போராட்டங்களும் திசைமாற்றப்படுகிறது. ஈழத்தமிழர்களின் போராட்டங்களை நீர்க்குமிழியுடன் ஒப்பிடும் தன்மை காணப்படுகின்றது. நீர்க்குமிழி போன்று விரைவாக பெருத்து எவ்வித நிலையாமை மற்றும் தொடர்ச்சி தன்மையற்று சிதறடிக்கப்படும் நிலைமைகளே காணப்படுகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் நாளாந்த பிரச்சினைகளுக்குள் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் இவ்வாறே நகர்த்தப்பட்டு வந்துள்ளது. கேப்பாபிலவு போன்ற காணி மீட்பு போராட்டங்கள் பகுதியளவில் தீர்வை பெற்ற போதிலும், எப்போராட்டங்களும் முழுமையான தீர்வற்று சிதறடிக்கப்பட்டு கிடப்பில் போடுவதாகவும் அல்லது திசை மாற்றப்படுவதுமாகவே அமைந்துள்ளது. சமகாலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலி வடக்கில் தையிட்டி கிராமத்தில் இராணுவம் எதேச்சதிகாரமாக மக்கள் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரிய போராட்டம் விரிவாக்கம் பெற்றுள்ளது. எனினும் சமதளத்தில் நல்லிணக்கம் மற்றும் பேரினவாத அச்சுறுத்தல்களை முன்னிறுத்திய எதிரான விமர்சனங்களையும்...

டெல்லியில் ஈழத்தமிழர் ஆய்வு மாநாடு ஈழத்தமிழர்களின் நியாயப்பாட்டை விரிவுபடுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம், ஓர் அரசின் புவியியல் எல்லைக்குள் மாத்திரம் சுருக்கி விடக்கூடியதில்லை. பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நலன்களுடன் இணைந்ததாகவே அமைகின்றது. தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தில் இராஜீக தொடர்பு தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெறுகின்றது. அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி கீசிங்கர், 'இராஜதந்திரம் என்பது அதிகாரத்தை கட்டுப்படுத்தும் கலை' என்கின்றார். இத்தகைய கலை ஈழத்தமிழரசியலில் வெகு குறைவாகவே அடையாளங்காணக்கூடியதாக உள்ளது. ஈழத்தமிழரசியலின் இராஜதந்திர செயற்பாடுகளும், தனியன்களாக செயற்பட்டுள்ள போதிலும் நிறுவனமயமாக்கப்பட்டதாவோ அல்லது தொடர்ச்சித் தன்மையுடையதாகவோ அமைந்திருக்கவில்லை. ஆதலால் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில், அறிவியல் தளம் போதிய பங்களிப்பை வழங்க தவறியுள்ளது. இக்கட்டுரை அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற சர்வதேச மாநாட்டின் முக்கியத்துவத்தை இனங்காண்பதாவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி-27 (2025)அன்று இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தில், 'துன்பம் மற்றும் உயிர்வாழ்வு பற்றிய ம...

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

Image
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் பூதாகரமான பேசுபொருளாகியுள்ளது. வேண்டாத செயல் அல்லது இந்தியாவின் மாறாத பெரியண்ணா இயல்பால் ஈழத்தமிழர்கள் மத்தியில் திருவள்ளுவரை வேண்டாதவராக விம்பப்படுத்தும் வாதங்கள் பொதுவெளியில் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் தமிழுக்கு பெருமையாக உள்ள திருவள்ளுவரை எல்லைகடந்து கொண்டாடுவதில் ஈழத்தவர்கள் பின்நின்றதில்லை என்பதற்கான சாட்சியமும் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அரங்கேற உள்ளது. யாழ்ப்பாணத்தின் நீண்டகாலமாக சைவத்திற்கும் தமிழிற்கும் சமுகப்பணியாற்றி வரும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் தலைமையிலான சிவபூமி அமைப்பின் மற்றொரு முயற்சியாக, மாவிட்டபுரத்தில் பெப்ரவரி-02 அன்று திருக்குறளுக்கான வளாகம் திறக்கப்படுகின்றது. இது ஈழத்தில் சிவபூமியின் கடந்தகால பணிகளின் தொடர்ச்சியாக ஒரு மைல்கல்லாகவே அமைகின்றது. இக்கட்டுரையும் திருக்குறள் வளாக உருவாக்கத்தை பற்றிய தொகுப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையிலான சிவபூமி அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர் வாழும் திசையெல்லாம் சைவத்தினதும் தமிழினதும் இருப்பை பாதுகாப்பதற்கான ...