அரசாங்கத்தின் தன்முனைப்பும் எதிர்க்கட்சிகளின் அதிகார போட்டியும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-
உலகம் இயங்கு நிலையை மேற்காசிய போர் கடுமையாக பாதித்துள்ளது. ஹார்மூஸ் நீரிணை முடக்கத்தால் எரிபொருள் விலையேற்றம் முதன்மையான பொது உரையாடலை பெற்று வருகிறது. இது அனைத்து பொருட்களின் விலையேற்றத்திலும் ஏதொவொரு செல்வாக்கு செலுத்தும் காரணியாக காணப்படுகிறது. அதேவேளை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து, அது வளைகுடா நாடுகளிடையே விஷ்தரிக்கப்பட்ட போது பெருமளவு தூரதேசங்களுக்கிடையிலான விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு-கிழக்கு நாடுகளுக்கிடையிலான விமான சேவையின் வழிப்பாதை மற்றும் இடைத்தங்கலாக வளைகுடா நாடுகளே பெருமளவில் காணப்படுகிறது. போரை காரணங்காட்டி மாற்றுவழியில் இயக்கப்படும் தூரதேசங்களுக்கிடையிலான விமான சேவையும் செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பெருமளவு சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடுகளுக்கு நெருக்கடியாக அமைகின்றது. இந்த பின்னணியில் மேற்காசியா போர் உலக நாடுகளுக்கு இசைவாக அல்லது ஒரு படி மேலாகவே இலங்கை பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. எனினும் 2021-2022ஆம் ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து சமகால நிலைமை மாறுபட...