இனப்பிரச்சினைத் தீர்வு வரைபில் பெருகும் தீர்மானங்களும் முரண்பாடுகளும் எதிரியை பலப்படுத்துகிறது! -ஐ.வி.மகாசேனன்-
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, ஈழத் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை அது பற்றிய உரையாடல் கடந்த ஒரு ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் நிரவி காணப்படுகின்றது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏக்கிய இராச்சிய அரசியல் வரைபை நிராகரிப்பது தொடர்பான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்தப் பின்னணில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் சிவில் தரப்புக்களுடனும் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் திம்பு கோட்பாட்டை முன்னிறுத்திய அரசியல் தீர்வை கூட்டாக தயாரிப்பதற்கான முன்முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். அதேவேளை ஏக்கிய இராச்சிய வரைபு உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கிய தமிழரசுக்கட்சி மற்றும் இன்றைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணினர் மீள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஏக்கிய இராச்சிய வரைபை பாதுகாக்கக்கூடிய சூழ்நிலைகள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவில் தரப்பில் ஒரு பகுதியினர் 'ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று' என்ற கூட்டுப் ப...