மேற்காசிய போரும் இலங்கையின் வெளியுறவும்! 'நடுநிலைமை மற்றும் மனிதாபிமானம்' -ஐ.வி.மகாசேனன்-
மேற்காசியாவின் போர் ஆரம்ப நிலையில் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கீட்டை வழங்கக்கூடிய ஆபத்தையே சர்வதேச அரசியல் அவதானிகள் ஆருடம் கூறி வந்தார்கள். ஹார்மூஸ் நீரிணை இடைமறிப்பு மற்றும் எண்ணெய் வர்த்தக நெருக்கீடுகள் பற்றிய உரையாடலே சர்வதேச பிரச்சினையாக அணுகப்பட்டது. எனினும் இலங்கைக்கு அருகில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஈரான் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல், மேற்காசியப் போரை இந்து சமுத்திரப் பிராந்தியம் வரை விஷ்தரித்துள்ளதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கையின் வெளியுறவுக்கொள்கைக்கு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழ்நிலை எதிர்வுகூறப்படுகின்றது. தி ஹிந்து பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, 'பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் சிறிய நாடுகளுக்கு, குறிப்பாக இலங்கைக்கு, வெளிப்புற அதிர்ச்சி இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அதைத் தாங்கும் அளவுக்கு போதுமான இடையகங்களை இன்னும் உருவாக்க முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை 'நெருக்கடியான நிலையில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பொருட...