Posts

ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும் தென்னிலங்கையின் நட்பு சக்திகளின் ஆதரவும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதன் வழி தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது நீண்ட விவாதங்களையும் ஆழமான உள்ளடக்கங்களையும் கொண்டதாகும். இந்தப் பின்னணியிலேயே இப்பத்தி தொடர்ச்சியாக அரசியலமைப்பு உருவாக்கத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் சார்ந்து சில கவனங்களை உள்வாங்கி வருகின்றது. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வில் உள்ளகப் பொறிமுறை பற்றிய விவாதங்களில், ஈழத்தமிழர்கள் தென்னிலங்கை நட்பு சக்திகளை உருவாக்குவதும் ஒருங்கிணைந்து பயணிப்பதும் தொடர்ச்சியான பரிந்துரையாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் குறிப்பாக 2009ஆம்ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னரான தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையிலும் தென்னிலங்கையுடன் ஒருங்கிணைந்து பயணிப்பது பிரதானமாக காணப்பட்டது. மறைந்த இரா.சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கியது தொடக்கம் சம்பந்தன்-சுமந்திரன் இலங்கை சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டமை முதலான பல நிகழ்வுகள் அதனை உறுதி செய்யக்கூடியதாக அமைகின்றது. இது தென்னிலங்கை நட்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் வழி...

ஈழத்தமிழராய் ஏக்கிய இராச்சிய வரைபிற்கு பதிலளிக்க வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கம் தென்னிலங்கை அரசியல் தரப்பினரிடையே தெளிவான உரையாடலை கொண்டுள்ளது. குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய தென்னிலங்கை வாதங்களில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பதுவே முதன்மையான விடயமாக அவதானிக்கப்படுகிறது. மாறாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மங்கலான தன்மையையே கொண்டுள்ளது. அதில் ஏக்கிய இராச்சிய வரைபே பிரதான வெளிச்சத்தைப் பெறுகிறது. அதற்கானதொரு ஆதரவை தமிழ்த் தரப்பினுள் காட்டும் முயற்சியாகவே, மீள கட்டமைக்கப்படும் தமிழரசுக் கட்சி ஆதிக்க புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் பங்காளிகளின் சேர்க்கை அமைகின்றதோ என்ற சந்தேகங்களும் பொதுவெளியில் காணப்படுகின்றது. அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏக்கிய இராச்சிய வரைபுக்கு எதிரான பிரச்சாரத்தை பிராந்திய அரசு மற்றும் புலம்பெயர் தமிழர்களிடம் முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் சிவில் சமூகங்கள் புதிய அரசியலமைப்பு உள்ளடக்கங்கள் தொடர்பில் எவ்வித வினையாற்றலுமின்றி மௌனித்துள்ளார்கள். இவை தொடர்பான விபரணங்கள் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக இப்பத்தியில் விவரிக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாரம் புதிய அரசிய...

புதிய அரசியலமைப்பு உருவாக்க உரையாடல்களில் தமிழ் சிவில் சமூகங்களின் மௌனம்!                   -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் ஜே.வி.பியின் உள்ளடக்கம், ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் நடத்தைகள் என்பதற்கு சமாந்தரமாக சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் மற்றும் கட்டமைப்புக்களின் செயற்பாடுகளும் மையமாக காணப்படுகிறது. அரசற்ற ஒரு தேசமாகிய தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியலை முன்னெடுக்க கூட்டுச் செயற்பாடும் பொறுப்பும் அவசியமாகிறது. அரசியல் அதிகாரப் போட்டியில் பிரதான பொறுப்பு தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கே உரியதாயினும், அரசியல் பிரதிநிதிகள் மெத்தனமாக செயற்படுகையில், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பெரும் பொறுப்பு தமிழ் சிவில் சமூகத்திற்கு காணப்படுகிறது. அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுப் பொதியை அடையாளப்படுத்துவதில், அரசியல் கட்சிக்கு சமாந்தரமாக சிவில் சமூக பங்களிப்புக்களும் கடந்த காலங்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய தன்மையில் காணப்படுகிறது. எனினும் சமகாலத்தில் சிவில் சமூக செயற்பாடுகளில் சில வெற்றிடங்கள் காணப்...

தென்னிலங்கையின் அரசியலமைப்பு முயற்சி ஏமாற்றுக்களும் அதிகாரப் பகிர்வு முறைமையில் முரண்படும் தமிழ் கட்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் ஆட்சியாளர்களும் சர்வதேச தரப்பினரும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக அரசியலமைப்பு மாற்றத்தையே அடிப்படையாய் கருத்துரைக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் பரிந்துரைக்கப்ட நிலைமாறுகால நீதியிலும் நிறுவனச்சீர்திருத்தம் என அரசியலமைப்பு மாற்றம் வலியுறுத்தப்பட்டது. அதற்கான முன்முயற்சிகளையும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கமும் மேற்கொண்டிருந்தது. அன்றைய காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் புதிய அரசியலமைப்பு முயற்சிகளுக்கு இணக்கத்தை வழங்கியிருந்தது. இதன் விளைவாகவே ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபும் உருவாக்கப்பட்டிருந்தது. அது அன்றைய தேசிய அரசாங்கத்தின் ஊடல் சீர்குலைந்ததால், இடைநிறுத்தப்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இடைநிறுத்தப்பட்ட ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் அரசியலமைப்பு முயற்சிகளை முழுமைப்படுத்தப் போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. எனினும் தமிழ் அரசியல் தரப்பிடம் தேசிய இனப்பிரச்சி...

தேசிய மக்கள் சக்தியும் தொடரும் பேரினவாத அரசியலமைப்பு முயற்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, அரசியலமைப்பு மாற்றம் என்பதாகவே இலங்கையின் ஆட்சியாளர்களிடமும் ஈழத்தமிழர் அரசியல் தரப்பினரிடமும் பொதுப் பிரக்ஞை உருவாக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்சவைத் தவிர, 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முதல் ஆட்சிக்கு வந்திருந்த ஜனாதிபதிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் அரசியலமைப்பு மாற்றம் முதன்மையானதாக இருந்துள்ளது. சமகால அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளிலும் அரசியலமைப்பு மாற்றம் பிரதான நிலை பெற்றிருந்தது. எனினும் ஓராண்டுகளைக் கடந்தும் வெளிப்படையாய் அரசியலமைப்பு மாற்றத்திற்கான முன்னகர்வுகளை அறிய முடியவில்லை. அதேவேளை அரசியலமைப்பு மாற்றத்திற்கான கோரிக்கை, இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கானது என்பதுவும், ஈழத்தமிழர்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கைக்கானது என்பதுவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலப்பகுதியில் மலினப்பட்டுள்ளதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் விவாத நிலைக்கு வெளியே ...

ஈழத்தமிழ் அரசியலில் Gen-Z சமுகத்தின் மெத்தனமும் முன்னைய தலைமுறையினரின் பொறுப்பின்மையும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இளையோர் அரசியல் சர்வதேச அரசியல் பரப்பில் பேசு பொருளாகியுள்ளது. இணைய யுகத்தில் பிறந்து வளர்ந்துள்ள இன்றைய இளைய தலைமுறையாகிய Gen-Z பருவத்தினரின் இணையத்தள பயன்பாட்டின் ஊடான சமூகப் போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் சர்வதேச அரசியல் கவனத்தை குவித்துள்ளது. அதன் அடிப்படையாக இலங்கையின் 2022ஆம் ஆண்டு அரகலயவே சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் ஈழத்தமிழ் அரசியல் பரப்பில், குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிராக நீதியைக் கோரும் ஒரு சமூகத்தின் இளையோரின் அரசியல் விழிப்புணர்வும் செயற்பாடும் பொருத்தமான வழித்தடத்தை கொண்டுள்ளதாக என்பதில் வலுவான சந்தேகங்களே காணப்படுகிறது. 2024-2025ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகளில் நகர்த்தப்படும் ஈழத்தமிழ் அரசியலும், இளையோரின் அரசியல் நடத்தைகளும் விருப்புக்களும் எதிரான விமர்சனத்தை உருவாக்கி வருகின்றது. தமிழ் அரசியல் கலாச்சாரம் மரபுகளை கடந்து செல்ல வேண்டும். நடைமுறையில் மரபுகளை கடந்து செல்லல் வளர்ச்சியை நிராகரித்து,  எதிரான போக்கில் காணப்படுவதாக பொது விசனம் எழுந்துள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழரசியலில் இளையோரின் வழித்தடத்தை அடையாளம் காட்ட முயல்வதாகவே அமைகிறது. ஈழத்தம...

2025ஆம் ஆண்டு உலகளாவிய போராட்டங்களும் Gen-Z சமுகம் ஏற்படுத்தியுள்ள நிலையற்ற மாற்றங்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகாலத்தில் தமிழ்ப்பரப்பில் குறிப்பாக தென்னிந்தியாவின் தாக்கத்தில் ‘தற்குறி’ என்ற வசைபாடல் இளந்தலைைமுறையினர் மீது விரவி காணப்படுகின்றது. பெரும்பாலும் 2000இற்கு பின்பு பிறந்தவர்களை சமுகம் பற்றிய போதிய அறிவும் அக்கறையுமற்றவர்கள் என்ற தொனியிலேயே தற்குறிகள் என்ற வசைபாடல்கள் காணப்படுகின்றது. அதே பருவத்தினர் ‘Gen-Z போராட்டக்காரர்கள்’, ‘Gen-Z புரட்சியாளர்கள்’ என சமுக மாற்றத்தின் பிரதான பங்களிகளாக கொண்டாடும் சூழலொன்று சர்வதேச பரப்பில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் ஆரம்ப படிமங்கள் தென்னாசியாவில் குறிப்பாக 2022ஆம் ஆண்டு அரகலயவை மையப்படுத்திய இலங்கையின் போராட்ட சூழலே அடையாளப்படுத்தப்படுகின்றது. 2025ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசியல் நெருக்குவாரங்களுக்கு பின்னால் முதன்மையான விவாதமாக Gen-Z ('Generation-Z’ தோராயமாக 1997-2012களுக்கு இடையில் பிறந்தோர்) என்ற சொல்லாடல் பரவலாக காணப்பட்டுள்ளது. இக்கட்டுரை 2025ஆம் ஆண்டு எதிர்ப்பு போராட்டங்களை வடிவமைப்பதில் Gen-Z இயக்கத்தின் வகிபாகத்தை தேடுவதாக உருவாக்கப்பட்ட...