செல்வநாயகத்தின் அரசியல் அணுகுமுறையும் தமிழ்த்தேசியத்திற்கான கூட்டுப்பலமும்! -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் பகுதியளவில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் நிலையான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றது. தமிழ்த்தரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் காணப்படுகின்ற போதிலும், அரசியல் கட்சிகள் உறுதியான முடிவுகளை வெளிப்படுத்த தவறி வருகின்றது. அண்மையில் தமிழ் சிவில் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் இணைந்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த பொதுக்கட்டமைப்பினூடாக தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை முன்னிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நலன்களுக்குள் இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளை, தமிழ்த்தேசியத்தின் தேவையை முன்னிறுத்தி செயற்பாட்டு தளத்தில் ஒன்றிணைப்பதும் பெரும் சவாலுக்குரியதாகவே அமைகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒப்பீட்டடிப்படையில் அதிக பாராளுமன்ற பிரிதிகளை கொண்டுள்ள தமிழரசுக்கட்சியின் உட்கட்சி மோதலுக்குள் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலும் சிக்குண்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வ தீர்மானத்தை வெளியிட இருவார கால அவகாசத்தை கோரியுள்ளதுடன், மத்திய குழுவை கூட்டி ஆராயவுள்ளது. மத