Posts

செல்வநாயகத்தின் அரசியல் அணுகுமுறையும் தமிழ்த்தேசியத்திற்கான கூட்டுப்பலமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் பகுதியளவில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் நிலையான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றது. தமிழ்த்தரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் காணப்படுகின்ற போதிலும், அரசியல் கட்சிகள் உறுதியான முடிவுகளை வெளிப்படுத்த தவறி வருகின்றது. அண்மையில் தமிழ் சிவில் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் இணைந்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த பொதுக்கட்டமைப்பினூடாக தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை முன்னிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நலன்களுக்குள் இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளை, தமிழ்த்தேசியத்தின் தேவையை முன்னிறுத்தி செயற்பாட்டு தளத்தில் ஒன்றிணைப்பதும் பெரும் சவாலுக்குரியதாகவே அமைகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒப்பீட்டடிப்படையில் அதிக பாராளுமன்ற பிரிதிகளை கொண்டுள்ள தமிழரசுக்கட்சியின் உட்கட்சி மோதலுக்குள் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலும் சிக்குண்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வ தீர்மானத்தை வெளியிட இருவார கால அவகாசத்தை கோரியுள்ளதுடன், மத்திய குழுவை கூட்டி ஆராயவுள்ளது. மத

ஈழத்தமிழர்களின் பொதுவேட்பாளர் கோரிக்கை பொதுவாக்கெடுப்பை பலப்படுத்தும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜனாதிபதி தேர்தலை தமிழ்த்தரப்பு கையாள்வது தொடர்பாக தமிழ்த்தேசிய அரசியலில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. கருத்தியலாளர்கள் மத்தியில் உரையாடப்பட்டு வந்த தமிழ் பொதுவேட்பாளர் சித்தாந்தம், 2024இல் தமிழ் அரசியல் கட்சிகளிடையே முதன்மையான உரையாடலை பெற்றது. எனினும் தமிழ் சிவில் சமுகங்களின் அமைதியும், தமிழ் மக்களிடையே பொதுக்கட்டமைப்பின்மையாலும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை சிதைத்திடுவார்களா என்ற அச்சம் கருத்தியலாளர்களிடம் காணப்பட்டது. எனினும் கடந்தவாரம் தமிழ் கருத்தியலாளர்கள் மற்றும் தமிழ் சிவில் சமுக கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளர் சித்தாந்தத்தை பொறுப்பெடுத்துள்ளார்கள். அவர்கள் தமது ஊடக அறிக்கையில் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை பொது வாக்கெடுப்புடன் பிணைத்துள்ளார்கள். இக்கட்டுரை தமிழ் மக்கள் பொதுவாக்கெடுப்பு எனும் கோரிக்கையை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதனூடாக சாத்தியப்படுத்த கூடிய முறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளளது. கடந்த வாரம் தமிழ் பொதுவேட்பாளர் உரையாடலை முன்னிறுத்தி நிகழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் ஒன்றிணைவு, குறுகிய கா

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தமிழ் பொதுக்கட்டமைப்பினாலேயே சாத்தியப்படுத்தக்கூடியது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் ஜூலை நடுப்பகுதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட வேண்டும். பெருமளவில் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே முரண்பட்ட வாதங்கள் காணப்படுகின்ற போதிலும், ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்கும் நிலைப்பாடுகளே அதிகளவில் காணப்படுகின்றது. எனினும் தமிழ் அரசியல் தரப்பினரிடையே ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் அரசியலை மையப்படுத்தி இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் முடிவுகள் தமது தேர்தல் அரசியல் நலன் மீதான அக்கறையுடன் தொடர்புற்றதாகவே காணப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே அரசியல் கட்சிகள் மூன்று கோணங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழ் சிவில் சமுகங்களும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் போதிய அக்கறையை வெளிப்படுத்தாத நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதி தேர்தலை தமிழ் சிவில் அமைப்புக்கள் கையாள வேண்டிய

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தெரிவும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த ஒரு சில வாரங்களாக தமிழ் அரசியல் தரப்பினரிடையே தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் வலுப்பெற்று வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எதிரான வாதங்கள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் அரசியல் அரங்கிற்கு தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான உரையாடல் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதாகவே அமைகின்றது. 2010ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசிய கருத்தியலில் வலுவான நிலையை பெற்றுள்ள தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல், 2024களிலேயே தமிழ் அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இது தனியன்களின் அரசியலாகவே அமைந்துள்ளது. தமிழ்த்தேசியத்தின் மக்கள் ஆணைக்கான கருத்தியலை கொண்டிருக்கவில்லை. தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழ்த்தேசிய சித்தாந்தரீதியிலான கருத்தாகவே அமைகின்றது. இங்கு தமிழ்த்தேசிய அரசியல் சித்தாந்தத்தை மையப்படுத்தியே அரசியல் கட்டமைக்கப்படுகின்றது. இந்த தெளிவுடனேயே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பளரை நிறுத்துவது தொடர்பிலான உரையாடலை தமிழ் அரசியல் கட்சிகள் நகர்த்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. தமிழ் பொது வேட்பாளரை தனியனாக சிந்திப்ப

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவும் நிராகரிப்புக்கான சதிக்கோட்பாடுகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பிலான கருத்தாடல் பிரதான பேசுபொருளாகி தமிழரசியல் பரப்பில் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. கருத்தியலாளர்களை ஒன்றிணைத்து 'மக்கள் மனு' எனும் தலைப்பில் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்பு, தமிழ் மக்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஒழுங்கமைத்து வருகின்றது. ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தியதை தொடர்ந்து கடந்த வாரம் மட்டக்களப்பில் ஒழுங்குபடுத்தியிருந்தது. பொதுமக்களிடம் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டு வரும் விழிப்பு அரசியல் கட்சிகளையும் அது தொடர்பில் விவாதிக்க தூண்டியுள்ளது. இந்நிலையிலையே கடந்த வாரம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தமிழ் பொதுவேட்பாளர் விவகாரத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதேவேளை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இக்கட்டுரை தமிழ் பொதுவேட்பாளர் தெரிவு தொடர்பிலான வாதங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் த

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ்த்தேசிய கொள்கையை முன்னிறுத்துவதற்கான களம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வாண்டு நடுப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டிய தேவை தேர்தல் ஆணைக்குழுவிடம் காணப்படுகின்றது. எனினும் கடந்த கால ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நரித்தனத்தால், ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடைபெறுமா என்பதில் இலங்கை அரசியல் அவதானிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பலமான கேள்விகள் காணப்படுகின்றது. சமதளத்தில் தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களில் தென்னிலங்கை கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகளும் முறையே சஜித் பிரேமதாசா மற்றும் அநுரகுமார திசாநாயக்காவை தமது ஜனாதிபதி வேட்பாளராகவும் அறிவித்துள்ளது. இப்பின்னணில் தமது கூட்டை உருவாக்குவதற்கான பேரம்பேசல்களை முன்னெடுத்து வருகின்றன. ஆளுங்கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவே பெரும் குழப்பகரமான சூழலில் காணப்படுகின்றது. அவ்வாறே தமிழ் அரசியல் தரப்பிலும் ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் அரசியல் கட்சிகளிடையே முரண்பட்ட வாதங்கள் காணப்படுகின்றது. இக்கட்டுரை தமிழ் அரசியல் தரப்பின் கடந்த கால அரசியல் நகர்வுகளை அலசுவதனூடாக இவ்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் களம் தேர்தலுக்கான கொதிநிலையை பெற்றுள்ளது. தென்னிலங்கையின் பிரதான கட்களிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகள் முதன்மையான விவாதமாக உள்ளது. ஈழத்தமிழரசியலில் கருத்தாளர்கள் தளத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் மக்களின் வாய்ப்புக்கள் தொடர்பான உரையாடல் முனைப்பை பெற்றுள்ளது. எனினும் அரசியல் தரப்பினரும் சிவில் சமுகத்தினரும் இலங்கையின் தேர்தல்கள் தொடர்பில் முனைப்பான உரையாடல்களும் செயற்பாடுகளுமற்ற நிலையிலேயே காணப்படுகின்றார்கள். இது தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டின் பற்றாக்குறையினையே வெளிக்கொணர்கின்றது. இவ்இயல்பின் வெளிப்பாடே எதிரிக்கு எதிரி நண்பன் எனும் பொதுப்புத்தியில் ராஜபக்ஷhக்களை தோற்கடிப்பது எனும் ஒற்றை இலக்குடன், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான ஜனாதிபதி தேர்தல்களை கையாண்டு வருகின்றனர். இந்த நடத்தையிலிருந்து 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் கொள்கையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஜனாதிபதி தேர்தலை கையாள வேண்டுமென்பதே ஈழத்தமிழரசியல் கருத்தாளர்களின் வெளிப்பாடாக அமைகின்றது. இப்பின்னணியில் 2024ஆம் ஆண்டு த