போராட்டங்களால் வலுப்பெற்ற ஜே.வி.பி., போராட்ட சூழலை அரசாங்கமாக தடுக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
போராட்டங்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் என்ற போர்வையில் உருவாக்கப்படும் அரசாங்கங்கள் மீள இன்னுமொரு ஒரு போராட்டம் கிளர்ச்சி மற்றும் புரட்சி என்பவற்றின் ஊடாக தமது ஆட்சி மாற்றப்படக்கூடாது என்பதில் முன்னேற்பாடாக செயல்படுகின்றார்கள். உலக அரசியலில் இது பொதுவான மரபாகவே காணப்படுகின்றது. இம்மரபுக்குள் 2024ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொண்டஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி நகரும் சந்தேகங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளது. இடதுசாரி போர்வையில் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி பற்றிய பொது சந்தேகங்களில் ஜனநாயகம் மீதான சவால் பெரும் கேள்விக்குறியாகவே ஆரம்பம் முதல் எதிர்த்தரப்புகளால் முன்வைக்கப்பட்டு வந்தது. அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் உருவாக்க முன்மொழியப்படும் சில சட்டங்கள் அதனை உறுதி செய்வதாகவே அமைகின்றது. குறிப்பாக ‘பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு’ (PTA) மாற்றாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்’ (PSTA), எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முன்மொழிவாக குற்றம் சாட்டப்படுகின்றதூ. இவ்வாறே பலவழிமுறைகளிலு...