மாக்சிச மரபாய் பிரச்சாரப்படுத்தும் ஜே.வி.பி சுரண்டலை ஆதரிக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-
மேற்காசியா போர் உலகை மீள பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக உலகிற்கான எரிபொருளின் மையம் மேற்காசியா சார்ந்தே காணப்படுகின்றது. மேற்காசியாவில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் சர்வதேச நாடுகள் பொருளாதார குழப்ப நிலைக்கு தள்ளப்படும் இயல்பு காணப்படுகின்றது. இம்முறை ஈரான் சார்ந்து எழுந்துள்ள மேற்காசிய போரும் ஹர்முஸ் நீரிணை முடக்கமும் உலகிற்கான எரிபொருளின் பெரும்பகுதியை தடை செய்துள்ளது. இது நீளும் அபாயமே காணப்படுகின்றது. ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, 'ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும். எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாக இதனை பயன்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். உலகின் எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. இதன் முடக்கம் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. ஈரான் உயர் தலைவரின் எச்சரிக்கை அது நீடிக்கும் அபாயத்தையே குறித்து நிற்கின்றது. இக்கட்டுரை உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் திறனை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரங்களில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல்...