Posts

Showing posts from March, 2025

ஜ.நா. மனித உரிமைப் பேரவையை ஈழத்தமிழர்கள் வினைத்திறனுடன் கையாண்டுள்ளார்களா! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச களத்திற்கு நகர்த்தப்பட்ட ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கான நீதிக் கோரிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவையின் அரங்கிலேயே உயிர்ப்புடன் பேணப்பட்டு வருகின்றது. நீதிப் பொறிமுறை என்பது அதிகார போட்டியினுள் அரசியல் பலத்துடன் இணைக்கப்பட்டதொன்றாகும். அரசியல் பலத்தை சரியாக பயன்படுத்தாத போது நிதிப் போராட்டத்தின் சாதகமான பக்கங்களை அடைய முடியாது என்பதுவே எதார்த்தமானதாகும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் களத்தில் ஈழத் தமிழர்களின் நீதிக் கோரிக்கையின் ஏற்ற-இறக்கங்கள் மைய அரசுகளின் நலன்களுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஈழத்தமிழர்கள் மைய அரசுகளுடன் எத்தகைய அரசியல் ஊடாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் தேடலுக்குரியதாகும். இக்கட்டுரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு காணப்படும் வாய்ப்புக்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டு...

இனப்பிரச்சினை தீர்வுக்கான கூட்டு முயற்சியும் அரசியல் சமூகமயப்படுத்தலின் தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர் அரசியலில் அரசியல் கட்சிகளின் கூட்டு என்பது பிரதான உரையாடலை பெற்று வருகின்றது. குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட்டு எண்ணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபை அடிப்படையாய் கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்தியிருந்தது. எனினும் தமிழரசுக் கட்சி முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க பின்வாங்கியுள்ள நிலையில், கூட்டுச் செயற்பாட்டு முயற்சி நீர்த்து போய் உள்ளது. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக கூட்டுச் செயற்பாட்டிற்கு தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விட்டிருந்தனர். இக்கூட்டுச் செயற்பாட்டு முயற்சி, வெறுமனவே அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்த உரையாடலாகவே அமைகின்றது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கட்சிகளைக் கடந்து தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியதாகும். எனினும் அரசியல் சமுகமயப்படுத்துவதில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாகாவே பின்னடிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினைக்கான தீ...