Posts

Showing posts from March, 2025

வேட்பாளர்கள் தெரிவில் போட்டியும் உள்ளூராட்சி சபைத் தேர்தலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை மீளவொரு தேர்தல் களத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. செப்டெம்பர் (2024) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நவம்பர் (2024) பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து, எதிர்வரும் மே-06 (2025) அன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. முன்னைய தேர்தல் நிலவரங்களிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் இயல்பு வேறுபட்டதாக அமைகின்றது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைகின்ற போதிலும், முழுமையாக கடந்த தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கக்கூடியவையாக அமையப் போவதில்லை. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்திய காரணிகளிலிருந்து வேறுபட்டதொரு அரசியல் நடத்தையே உள்ளூராட்சி சபைகளில் பிரதிபலிக்கக்கூடியதாகும். கடந்த கால தேர்தல்களில் அத்தகையதொரு போக்கினையே அவதானிக்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஈழத்தமிழர் எதார்த்தங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளத...

ரணில் விக்கிரமசிங்கவின் பட்டலந்த மறுப்பு காணொளியும் கொலைக்கு கொலை தான் இலங்கையின் அரசியல் கலாசாரமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
பட்டலந்த விவகாரம் அதனை மையப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளும், அறிக்கைகளும், தென்னிலங்கை செய்திகளும் இலங்கை அரசியல் கலாச்சாரத்தின் வன்போக்கு தன்மையை சிங்கள பௌத்த தேசியவாத உள்ளக முரண்பாட்டுக்குள்ளாலேயே அடையாளப்படுத்துவதாக அமைகின்றது. ஈழத்தமிழர்களின் நீதிப்போராட்டத்தில், சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் வன்முறை கலாசாரத்தை தோலுரிக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம், இனவாத கருத்தியலாக சாயம் பூசும் நிலைமைகளே காணப்பட்டது. மேலும், சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் அரச இயந்திரம், ஈழத்தமிழர் நியாயாதிக்கத்தை இருட்டடிப்பு செய்திருந்தது. எனினும் சிங்கள-பௌத்த தேசியவாதம் தனக்குள் மோதிக்கொள்கையில் அரசியல் கலாச்சரம் மறைப்பின்றி புலப்படுகின்றது. எனினும் இதன் செல்தூரம் சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் வன்போக்கு தன்மை அம்பலப்படுவது, இலங்கை அரசின் சிங்கள-பௌத்த தேசியவாத இருப்பை கேள்விக்குட்படுத்தக்கூடியதாகும். இலங்கை ஆட்சியாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இக்கட்டுரை பட்டலந்தவை மையப்படுத்தி எழும் அரசியல் உரையாடல்களால் கட்டவிழும் இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரப் போக்கை அடையாளப்படுத்துவத...

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த வாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாச்சாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது. எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர்காணலில் ஊடகவியலாளரால் முன்வைத்த பட்டலந்த வதைமுகாம் விவாகரம் தென்னிலங்கை அரசியலில் முதன்மையை பெற்றுள்ளது. மாறாக ஈழத்தமிழர்கள் ரணிலின் சலனமான நிலைமைகளை இரசித்ததுடன் கடந்து சென்றுள்ளார்கள். இக்கட்டுரை பட்டலந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுமளவிற்கு, ரணில் விக்கிரமசிங்கவின் உரையாடலில் காணப்பட்ட இனப்படுகொலை சாட்சியங்கள் போதிய க...

ஜ.நா. மனித உரிமைப் பேரவையை ஈழத்தமிழர்கள் வினைத்திறனுடன் கையாண்டுள்ளார்களா! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச களத்திற்கு நகர்த்தப்பட்ட ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கான நீதிக் கோரிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவையின் அரங்கிலேயே உயிர்ப்புடன் பேணப்பட்டு வருகின்றது. நீதிப் பொறிமுறை என்பது அதிகார போட்டியினுள் அரசியல் பலத்துடன் இணைக்கப்பட்டதொன்றாகும். அரசியல் பலத்தை சரியாக பயன்படுத்தாத போது நிதிப் போராட்டத்தின் சாதகமான பக்கங்களை அடைய முடியாது என்பதுவே எதார்த்தமானதாகும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் களத்தில் ஈழத் தமிழர்களின் நீதிக் கோரிக்கையின் ஏற்ற-இறக்கங்கள் மைய அரசுகளின் நலன்களுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஈழத்தமிழர்கள் மைய அரசுகளுடன் எத்தகைய அரசியல் ஊடாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் தேடலுக்குரியதாகும். இக்கட்டுரை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு காணப்படும் வாய்ப்புக்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டு...

இனப்பிரச்சினை தீர்வுக்கான கூட்டு முயற்சியும் அரசியல் சமூகமயப்படுத்தலின் தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர் அரசியலில் அரசியல் கட்சிகளின் கூட்டு என்பது பிரதான உரையாடலை பெற்று வருகின்றது. குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே கூட்டு எண்ணங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபை அடிப்படையாய் கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்தியிருந்தது. எனினும் தமிழரசுக் கட்சி முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க பின்வாங்கியுள்ள நிலையில், கூட்டுச் செயற்பாட்டு முயற்சி நீர்த்து போய் உள்ளது. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக கூட்டுச் செயற்பாட்டிற்கு தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விட்டிருந்தனர். இக்கூட்டுச் செயற்பாட்டு முயற்சி, வெறுமனவே அரசியல் கட்சிகளின் நலன் சார்ந்த உரையாடலாகவே அமைகின்றது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கட்சிகளைக் கடந்து தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியதாகும். எனினும் அரசியல் சமுகமயப்படுத்துவதில் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாகாவே பின்னடிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினைக்கான தீ...