Posts

Showing posts from October, 2020

கொரோனா பரவலை தடுக்க மக்களே விழிப்பாக இருக்க வேண்டும். -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா பதற்றம் உலகை கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உலுக்கும் சமகாலப்பகுதியில் கொரோனாவிலிருந்து மழுமையாக விடுதலை பெற்ற நாடாக 'Corona Free' பலகையை மாட்டி தெம்பா இருந்த இலங்கையை செப்டெம்பர்-04 முதல் கொரோனா வைரஸ் மீளவும் பதட்டத்துக்குள் தள்ளியுள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை இலங்கையில் காணப்படும் கொரோனா வைரஸ் சூழல் மற்றும் அதுசார் மக்கள் விழிப்புணர்வு பற்றி தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா அபாயம் பற்றிய உரையாடல் மற்றும் அதுசார் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே உயரளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக மார்ச்-13ஆம் திகதி இலங்கையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச்-20 இலிருந்து கொரோனா வைரஸ் பரவுகையை கட்டுப்படுத்துவதற்காய் சமூக இடைவெளியை ஏற்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் போடப்பட்டது. இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுக்குள் பேண அது பெரிதும் உதவியது. 16 ஏப்ரல் 2020 நிலவரப்படி, வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய 16வது அதிக...

ஐ.நா. 75வது பொதுச்சபை விவாதங்கள்; இருதுருவ உலக ஒழுங்குக்கு வித்திடுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டதன் இலக்கு 75 ஆண்டுகளாகியும் அடையப்படவில்லை என்பதையே, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்களின் பதிவு செய்யப்பட்ட காணொளி பேச்சு தெளிவாக புலப்படுத்துகிறது. ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆதங்க உரையும் 75ஆம் ஆண்டுக்கான சிறப்புரையாக அமையவில்லை என்ற விமர்சனமே மேலோங்கி காணப்படுகிறது. அதனடிப்படையில் இக்கட்டுரை ஐ.நா.வின் 75ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் இடம்பெற்ற அரச தலைவர்களின் உரையை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் அழிவு முதலாம் உலகப்போரின் முடிவில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சங்கத்தின் தோல்வியை வெளிப்படுத்தி நின்றது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் பேரழிவின் பின்னர் மீள ஓர் போர் மூண்டு விடக்கூடாது என்பதை உலகம் இலக்காக்கியது. அவ்இலக்கை நிறைவேற்றுவதற்காக கட்டமைக்கப்பட்ட நிறுவனமே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமாகும்.   1945ஆம் ஆண்டில், 50 நாடுகளின் பிரதிநிதிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அமைப்பு தொடர்பான மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை வரைந்தனர். இந்த சாசனம் 26 ஜூன் 194...

அமெரிக்கா மற்றும் சீனா; வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த போரை நாடுகின்றதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா வைரஸ் உலக ஒழுங்கில் ஓர் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுதலிக்க முடியாத நிதர்சனமாகும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய மாறுதலின் பின்னரான புதிய உலக ஒழுங்கில் தம்மை நிலைநிறுத்துவதற்கான மோதுகையையே உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. செப்டெம்பர் இறுதியில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் அரச தலைவர்களின் உரைகளும் அதனையே உறுதி செய்கின்றன. மாறும் உலக ஒழுங்கில் தம் மேலான நிலையை முன்னிறுத்த வல்லாதிக்க போட்டி அரசுகள் எடுத்துள்ள ஆயுதமும் போரே ஆகும். அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் போரினூடாக தம் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த முற்படும் அரசுகளின் செயற்பாடுகளை தேடுவதாக உருவிக்கப்பட்டுள்ளது. சமகாலம் கொரோனா வைரஸை மையப்படுத்தி கட்டமைக்கப்படவுள்ள உலக ஒழுங்கு பற்றியே அதிகம் உரையாடுகின்றது என்பதற்கு சான்றுபயிர்க்கும் விதத்திலேயே உலக தலைவர்கள் யாவருமே ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் கொரொனா வைரஸை மையப்படுத்தியும் அதுசார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரசியல் சூழல் சார்ந்துமே தமது கருத்தாடல்களை பதிவு செய்துள்ளனர்.  குறிப்பாக நேரடியாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராகவும்,...