Posts

Showing posts from February, 2020

ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதி திட்டம் பாலஸ்தீனியர்களுக்கான அமெரிக்காவின் சதி! -ஐ.வி.மகாசேனன்-

Image
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்கா விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நெதன்யாகுவின் கரங்களைப் பிடித்தவாறு “அமைதியை நோக்கி இஸ்ரேல் பெரிய படியை எடுத்து வைத்துள்ளது, இது தான் பாலஸ்தீனத்திறகான கடைசி வாய்ப்பு” என பாலஸ்தீனத்தை எச்சரிக்கும் வகையில் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய முரண்பாட்டிற்கு தீர்வாக மேற்குக் கரை குடியேற்றங்கள் மீதான இஸ்ரேலின் இறையான்மையயுடன் அங்கு பாலஸ்தீன சுதந்திர அரசு காணப்படும் எனவவும், ஜெருசலேம் பிரிக்கப்படாத இஸ்ரேலின் தலைநகராகத் தொடர்ந்து இருக்கும் எனவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆள்புல பிரிவினை வரைபடம் உருவாக்கி ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டம்’ எனும் பெயரில் அறிவித்தார். ட்ரம்பின் மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் பாலஸ்தீன சனாதிபதி மஹ்முத் அப்பாஸ் ட்ரம்பின் திட்டம் சதி திட்டம் என நிராகரித்துள்ளார். 1993ஆம் ஆண்டு  ஒஸ்லோ சமாதான உடன்படிக்கையில் கற்பனை செய்யப்பட்டதை விட பாலஸ்தீன அரசு 2020 ட்ரம்பினது அமைதி திட்டத்தில் குறைந்து போயுள்ளது. அத்தோடு சியோனிச ...

இந்திய பிரேசில் உறவு புதிய பரிணாமத்தில்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இந்தியாவின் 71வது குடியரசு தின விழாவின் சிறப்பு அதிதியாக பிரேசிலின் சனாதிபதி ஜெய்ர் போல்சொனாரோ அழைக்கப்பட்டிருந்தார். போல்சொனாரா, அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் அடங்கிய குழுவுடன் இந்தியாவிற்கு நான்கு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்திந்தார். பிரேசில் சனாதிபதியின் பயணத்தில் இந்தியாவிற்கும் பிரேசிலிற்குமிடையே வர்த்தகம் - முதலீடு, எண்ணெய் - எரிவாயு, இணையதளப்பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக 15ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஒருங்கே பிரேசில் - இந்திய பாதுகாப்பு தொழில் உரையாடலும் முதன்முறையாக நடைபெற்றுள்ளது. போல்சொனாரா – மோடி கூட்டு உலக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையுமென அரசியல் அவதானிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர். இதனடிப்படையிலே பிரேசில் - இந்திய மூலோபாய உறவை வெளிப்படுத்துவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.  பிரேசில் - இந்தியா அரசியல் ஒத்துழைப்பு சர்வதேச நிறுவன அரங்கு சார்ந்து 1960ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலே உருவாக்கப்பட்டுள்ளது. 1964 ஆம் ஆண்டில் இருநாடுகளும் கூட்டாக வர்த்தக மற்றும் மேம்பா...

பிரிக்ஸிட் பிரித்தானியவும் அதன் அரசியல் தாக்கங்களும் -ஐ.வி.மகாசேனன்-

Image
19ஆம் நூற்றாண்டில் தம் ஏகாதிபத்திய ஈடேற்றத்திக்காய் அரசுகளைப் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டு சூரியன் மறையாத தேசமாக விளங்கிய பிரித்தானியா, இன்று தன்னுள் இணைந்த அரசுகளை பிரிய விடாது பேண தினறுகின்றது பிரிக்ஸிட் என்ற ஒற்றை வார்த்தையினால். கடந்த 31சனவரி பிரித்தானிய நேரப்படி நள்ளிரவு 11 மணிக்கு பிரித்தானியா 43ஆண்டு கால கூட்டு வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சட்டபூர்வமாக வெளியேறியது. எனிலும் டிசம்பர் 31 வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களின் கீழேயே பிரித்தானியாவின் செயற்பாடுகள் காணப்படும். இக்காலப்பகுதி நிலைமாறு காலமாகக் காணப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே, வெளியேறிய பின்னரான வர்த்தகரீதியான மற்றும் உறவு நிலைப்பாடுகள் தொடர்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். ஒப்பந்தங்கள் நிறைவேறாவிடின் ஒப்பந்தம் ஏதும் இன்றி டிசம்பர் 31 முழுமையான ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான உறவு பிரித்தானியாவிற்கு இல்லாது போகும். பிரித்தானியாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் பிரித்தானியவின் தேசங்கள் பிரியும் சூழலும் ஏற்பட்டுள்ளது. குறித்த கட்ட...

கொரோனா வைரஸ் சதியா! பரிசோதனை கசிவா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2018ஆம் ஆண்டு இறுதியில் பில்கேட்ஸ், 'நாடுகள் போருக்குத் தயாராகும் அதே தீவிரமான வழியில் தொற்றுநோய்களுக்குத் தயாராக வேண்டும்' எனக்கூறியிருந்தார். இன்று சீனாவில் அது மெய்த்துள்ளது. போர்க்கால சூழல் போன்று சீன அதிபர் அவசர அவசரமாக சீன கொம்யூனிஸ்ட் கட்சி கொள்கை வகுப்பாளர்களை அழைத்து சீன நாட்டை உலுக்கும் வைரஸ் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக உரையாடியூள்ளார். சீன நாட்டில் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் துளிர்விட்ட வைரஸ் நோய் ஒன்று 20 நாட்களுக்குள் உலகை பதற வைக்கும் பெரும் உயிர்கொல்லியாக வளர்ந்துள்ளது. சீனாவினை மையப்படுத்தி தோன்றியுள்ள குறித்த உயிர்கொல்லி நோய் அரசியல் தாக்கம் நிறைந்ததாக காணப்படுமோ என்ற எண்ணப்பாடு அரசியல் ஆய்வாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. சீனாவின்  நட்பு நாடுகள் பலவும் சீன மக்களின் வரவை விரும்பாதோராய் தடைகளை ஏற்படுத்தி வரும் நிலைமை காணப்படுகின்றது. சீனாவை தனிமைக்குள் தள்ளும் குறித்த உயிர் கொல்லி நோய் பற்றியும் அதுசார்ந்த சீனாவினை மையப்படுத்திய அரசியல் தாக்கத்தினை எடுத்துக்காட்டுவதாகவே குறித்த கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. சனவரி 1 அன்று சீனாவின் வூஹான் நகரில் 61 வயதான ஒருவரு...