Posts

Showing posts from November, 2020

கிர்கிஸ்தான் அரசியல் குழப்பத்தால் ரஷ்சியாவின் உறவு சீர்குலையுமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
மத்திய ஆசியா என்பது சமீபத்திய சர்வதேச அரசியலில் போராட்ட களமாகவே உருவகப்படுத்தப்பட்டு வருகிறது. முடிவில்லா போர்க்களமாக மாறியுள்ளது ஆர்மீனியா எதிர் அஜர்பைஜான் மோதல். மறுபக்கம் பெலாரஸ், மொன்ரிநீக்ரோ, வரிசையில் தற்போது கிர்கிஸ்தானிலும் நடைபெற்று முடிந்த தேர்தலை மையப்படுத்தி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளது. எனிலும் ஏனைய மத்திய ஆசிய நாடுகளின் போராட்ட பின்னனியிலிருந்து கிர்கிஸ்தான் போராட்ட பின்னனி வேறுபடுகிறது. கிர்கிஸ்தான் மக்கள் போராட்டம் ஜனநாயகத்துக்கான மக்கள் புரட்சியாகவே சர்வதேச அரசறிவியலாளர்களால் நோக்கப்படுகிறது. அதனடிப்படையில், இக்கட்டுரையும் கிர்கிஸ்தான் போராட்ட பின்னனிகள் மற்றும் நிலைமைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான் மக்கள் போராட்டத்தை தேடுவதாயின் அதன் புவியியல் அமைவிடமும் அவசியமாகிறது. கிர்கிஸ்தான் நாடு வடக்கே கஜகஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், மற்றும் தெற்கிலும் கிழக்கிலும் தஜிகிஸ்தான் மற்றும் சீனாவால் எல்லையாக உள்ளது. 1876ஆம் ஆண்டில், இது ரஷ்சிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாறியது, ரஷ்சிய புரட்சிக்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் கிர்கிஸ் சோவியத் சோசலிச குடிய...

சீனா சார்பு நிலைக்குள் 'சூகி'யின் தலைமையில் மியான்மர் நகருமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையை ஒத்த அரசியல் சூழமவை கொண்டுள்ள தென்கிழக்காசிய நாடாகிய மியான்மர் நவம்பர் முற்பகுதியில் தனது மூன்றாவது பொதுத் தேர்தலை ஆறு தசாப்தங்களில் நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்கான ஒரு முக்கிய வளர்ச்சியில் நடாத்தி முடித்துள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியிலும், தற்போது தென்கிழக்கு ஆசிய அரசு அதன் எதிர்பார்க்கப்பட்ட தேர்தலை நடாத்தி உள்ளது. இது சர்வதேச அரசியல் நிபுணர்களால் உற்றுநோக்கப்பட்டதொரு பொதுத்தேர்தலாக அமைகிறது. ஏனெனில் நீண்ட கால இராணுவ ஆட்சிக்கு பின்னராக 2015ஆம் ஆண்டில் ஜனநாயகத்தை மீளத்திருப்பிய ஆளும் கட்சி கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் பன்மடங்கு சவால்களை எதிர்கொண்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ள மியான்மரின் எதிர்கால அரசியல் போக்கினை கடந்த கால மியன்மரின் அரசியல் அனுபவத்திலிருந்து தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8ஆம் திகதி மியான்மர் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் மற்றும் 7 மாநில சட்டப்பேரவைகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 92 அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன பிரச்சாரங்களைச் சேர்ந்த 6,900க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் 1,171 இடங்களில் தேர...

அஜர்பைஜான், ஆர்மீனியா விவகாரம்; நகர்னோ - கரபாக் மையப்படுத்தி மூளும் பிராந்திய மோதல்? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலில் போர் என்பது தவிர்க்க முடியாத தொடர்கதையாகவே நீள்கிறது. ஒருபோர்ப்பதட்டம் தணியும் சூழலில் ஏதோவொரு மூளையில் இன்னொரு போர்ப்பதட்டம் ஏற்படவே செய்கிறது. அது சார்ந்து உலகமும் இருதுருவமாவதும் சர்வதேச அரசியலில் தவிர்க்க முடியாத பதிவாகிறது. சமகாலத்தில் சர்வதேச அரசியலில்உன்னிப்பாக அவதானிக்கப்படும் போராக அஜர்பைஜானிற்கும், ஆர்மேனியாவிற்கும் இடையில் மூண்டுள்ள போரே காணப்படுகிறது. அதனடிப்படையில் இவ் சர்வதேச அரசியல்கட்டுரையும் அஜர்பைஜானிற்கும், ஆர்மேனியாவிற்கும் இடையிலான போரை மற்றும் போரின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அஜர்பைஜானினதும், ஆர்மேனியாவினதும் எல்லையில் காணப்படும் ‘நகர்னோ கரபாக்’ என்ற பிரதேச உரிமம் தொடர்பான விவகாரமே, அஜர்பைஜானிற்கும் ஆர்மேனியாவிற்கும் இடையில் நீட்ச்சியான போரியல் வரலாற்றை உருவாக்கியுள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பிளவுபடுவதற்கு முன்னர், இரண்டு நாடுகளும் அதன் அங்கமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. சோவியத் ஒன்றியத்தின் இருப்பின் கீழேயே இவ்நாடுகளிடையே நகர்னோ கரபாக்-ஐ மையப்படுத்திய முரண்பாடு ஆரம்பிக்கப்பட்டு விட்டது.  சோவியத் ஒன்றியத்தின் கீழ், ஜோ...

கருத்துக்கணிப்புக்களை கடந்து ட்ரம்ப் இரண்டாவது தடவை அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா இடைவிடாது உலகை உலுக்கி வருகின்ற போதிலும் கடந்த ஒரு மாதங்களாய் சர்வதேச அரசியல் பரப்பில் முதன்மையான இடத்தை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலே கைப்பற்றியது. அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ( Donald Trump ) ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடனும் ( Joe Biden ) களமிறங்கியிருந்தார்கள். கடந்த நம்பர்-03ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அமெரிக்காவின்  ஜனாதிபதி தேர்தல்  நடைபெற்றது.  வழமைக்கு மாறாக இம்முறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பெரும் சர்ச்சைகளை சர்வதேச செய்திகளில் உலாவ விட்டுள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் சர்ச்சைகளின் தார்ப்பரியங்களையும், தேர்தலின் ஆரம்ப முடிவுகள் வெளிப்படுத்தும் எதிர்பார்க்கைகளையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் பரவுகை அமெரிக்காவை கடுமையாக பாதித்துள்ள நிலையில், தேர்தலை சுமூகமாக நடாத்துவதற்கு தபால்மூலமான வாக்களிப்புக்கள் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நவம்பர்-03 வாக்களிப்பு தினத்திற்கு முன்னரும்  9.5 மில்லியன் அமெரி...