Posts

Showing posts from July, 2021

எதிர்க்கட்சிகளின் கூட்டு பொதுஜன பெரமுனாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா அரசாங்கத்தின் மீது மக்களுக்கு சமீபத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தமக்கு சாதகமாக்கி கொள்ள இலங்கையின் எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துவரும் முயற்சிகளே இலங்கையின் அண்மைய சூடான அரசியல் களநிலவரமாக காணப்படுகிறது. குறிப்பாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டணி உருவாக்கத்திற்கான முன்முயற்சிகள் அதிக விவாதங்ளை உருவாக்கி இருந்தன. எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் ஆளுங்கட்சியை பலப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும் மற்றும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இரண்டாவது அதிக ஆசனங்களை(10) தக்கவைத்துள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஸ்திரமற்ற கொள்கை நிலைப்பாடுகள் தொடர்பிலும் அரசியல் அரங்கில் பல உரையாடல்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இக்கட்டுரை எதிர்க்கட்சிகளின் முயற்சிகளையும், அவற்றின் அரசியல் செல்நெறியை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.  ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல்களையும் மற்றும் மக்களிடம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்திகளை...

தென்கிழக்காசியா பாணியிலான ஆட்சி முறைக்குள் இலங்கையின் அரசியல் கலாசாரம் நகர்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராளுமன்றத்திற்கு வெளியே பொது இடங்களிலும், ஊடகப்பரப்பிலும் தினசரி சூடான விவாதங்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கி வருகிறது. அண்மையில் பாராளுமன்றில் அமைச்சரவை ஒப்புதலுடன் முன்மொழியப்பட்டுள்ள சேர். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான எதிர்ப்புக்கள் விவாதங்களை தாண்டி களத்திலும், சமூக வலைத்தளத்திலும் சாத்வீக முறையிலான போராட்டங்களையும் உருவாக்கி உள்ளது. களப்போராட்டங்களை முடக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மேலும் பூதாகரமாக மாற்றியுள்ளது. இது இலங்கை அரசியல் கலாசாரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்ற முயலுகிறது என்ற விமர்சனத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. இந்நிலையிலேயே இக்கட்டுரை இலங்கை அரசியல் கலாசாரம் தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் மாறும் போக்கை தேடுவதாக உள்ளது. சர்வதேச வல்லாதிக்க சக்திகளால் நிராகரிக்கப்பட்டு வந்த அரசியல் கலாச்சாரங்கள் சில கொரோனாவிற்கு பின்னரான உலக ஒழுங்கில் புத்தெழுச்சி பெறலாயிற்று. கொரோனா தொற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்ட நாடுகள் பட்டியலில் சீனா, ரஷ்சியா, வடகொரியா, கியூபா போன்ற ஒரு கட்சி ஆதிக்கம் அல்லத...

அரசாங்கத்தின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவார பஷில் ராஜபக்ஷா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் ராஜபக்ஷாக்களின் நாமம் தவிர்க்க முடியாத நிலையை பெற்றுவிட்டது. இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷா மற்றும் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷா, நாமல் ராஜபக்ஷா எனும் பெயர்களை தாண்டி, ஜுன் நடுப்பகுதியிலிருந்து  ராஜபக்ஷா சகோதர்களின் நடுவான் (நடுச்சகோதரர்) பசில் ராஜபக்ஷா-இன் நாமம் ஆளும் கட்சி உறுப்பினர்களாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாலும் அரசியல் விமர்சகர் பரப்பிலும் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயராக காணப்படுகின்றது. குறிப்பாக ராஜபக்ஷாக்களின் சரிவு மற்றும் இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளின் மீட்பாராக பசில் ராஜபக்ஷா தொடர்பில் தென்னிலங்கை அரசியலில் வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றது. இதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் பசில் ராஜபக்ஷாவின் அரசியல் ஆளுமையை தேடுவதனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் பொதுத்தேர்தல் மூலம் பொதுஜன பெரமுனா ஆட்சிப்பீடமேறியதும் சடுதியாக செய்த அரசியல் செயற்பாடாய் 20வது சீர்திருத்தமே காணப்படுகிறது. இது மைத்திரி-ரணில் அரசாங்கம், ராஜபக்ஷாக்களின் அரசியலை ஸ்தம்பிக்க செய்வதற்காக 19வது சீர்திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட ஏற்ப...

ராஜபக்ஷாக்களின் அரசாங்கம் வீழ்ச்சியை நோக்கி நகர்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அண்மைய அரசியல் நிகழ்வுகள், இலங்கையின் ஆளுந்தரப்பு கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றமையை புலப்படுத்துகிறது. சர்வதேச ரீதியாக அமெரிக்க / இந்தியாவின் நெருக்கடிகளை இராஜதந்திர ரீதியாக நகர்த்தி செல்லும் இலங்கை அரசாங்கம், உள்ளூர் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சீர்செய்யக்கூடிய ஆளுமையற்ற நிலையில் காணப்படுகிறது. நிழல் அரசாங்கமாய் செயற்பட வேண்டிய பிரதான எதிர்க்கட்சியும் ஆரோக்கியமான அரசியல் முன்னகர்வுகளின்றி உள்ளமையானது ஆளும்கட்சிக்கு சற்று நிம்மதியான விடயமாகும். இந்நிலையில் உள்ளூர் அரசியல் நெருக்கடியின் விளைவுகளை நேரடியாய் எதிர்கொள்ளும் தரப்பாய் இலங்கை மக்களே காணப்படுகின்றனர். இதனடிப்படையில்இலங்கை ஆளும் தரப்புக்கு எதிராக எழுந்துள்ள நெருக்கடிகளையும், பிரதான எதிர்க்கட்சியின் பலவீனத்தை தேடுவதாகவும் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. 2/3 பெரும்பான்மை என்பது எளிதில் கிடைக்கக்கூடாது என்ற அடிப்படையிலேயே இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உருவாக்கி இருந்தார். எனிலும் யாவற்றையும் முறித்து யுத்த வெற்றி வாதத்தையும்,  சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியலையும் முதலாய் க...