Posts

Showing posts from August, 2021

உத்தியற்ற ஈழத்தமிழரின் அரசியலும் இலங்கையின் இராஜதந்திர செயல்பாடுகளும் -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையை கொரோனா வைரஸ் பேரிடரும் சமதளத்தில் சர்வதேச நெருக்கடிகளும் உச்ச கட்டத்தில் சூழ்ந்துள்ளது. அரசியல் தலைமைகளின் உயிர்களும் கொரோனா வைரஸால் காவு கொள்ளப்படுகிறது. எனினும் மறுமுனையில் அமைச்சரவை மாற்றத்துக்கு பின்னர் வெளிவிவவகார அமைச்சின் செயற்பாடுகள் இலங்கையை சூழ்ந்துள்ள சர்வதேசநெருக்கடிகளை நீர்த்து போகச்செய்வதற்கான சூழலை வெளிப்படுத்துகிறது. வெளிவிவகார அமைச்சின் செயலகம் சர்வதேச தூதுவர்களின் வரவால் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ளது. இப்பகுதியின் சென்ற வார கட்டுரையில் அமைச்சரவை மாற்றத்தினில் வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நியமனத்தில் காணப்படும்  இராஜதந்திர மூலோபாய செயற்பாடு விபரிக்கப்பட்டிருந்தது. அதன் இன்னோர் நகர்ச்சியாக இக்கட்டுரை புதிய வெளிவிவகார அமைச்சு நியமனத்தை தொடர்ந்து இடம்பெற்றுள்ள அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்த உள்ள மாற்றங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எல்.பீரிஸ் (18.08.2021) உத்தியோகபூர்வமாக வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற பின் சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பு தென் இலங்கையை பரபரப்பான இயங்கு தளத்திற்குள் நகர்த்துகிறது. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்...

இலங்கைக்கு எதிரான சர்வதேச நெருக்கடியை புதிய வெளியுறவு அமைச்சர் வெற்றி கொள்வாரா? -ஜ.வி.மகாசேனன்-

Image
இலங்கை மக்கள் கொரோனா பரவலின் அதிகரிப்பாலும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றினை சீர்செய்யாத ராஜபக்ஷாக்களின் அரசாங்கத்தின் மீது பெரும்பான்மை சமூகத்தினரிடையே கடுமையான எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளது. ராஜபக்ஷாக்களின் பொதுஜன பெரமுன அரசாங்க உருவாக்கத்திற்கு பெருந்துணையாக இருந்த பேரினவாத தரப்பினரே அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வசைபாட ஆரம்பித்துள்ளளர். இந்நிலையில் இலங்கையின் அரசாங்கம் அமைச்சர்களை இடமாற்றுவதனூடாக அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுவிடலாமெனும் புதியதொரு உத்தியை வகுத்து வைத்துள்ளனர். இவ்வடிப்படையிலேயே பஷில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள்வருகை நிதியமைச்சு பொறுப்பு மற்றும் அண்மையில் இலங்கை அமைச்சரவையில் ஏற்படுத்திய மாற்றங்கள் அமைகின்றன. இக்கட்டுரையும் அமைச்சரவை மாற்றத்தை மையப்படுத்தியே வெளிவிவகார அமைச்சின் மாற்றத்துக்கான அரசியல் பின்னணியை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட்-16அன்று இலங்கை அமைச்சரவையில்  அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களிடையே சுகாதாரம், கல்வி, மின்சாரம் ...

பீரிஸ்-சுமந்திரன் சந்திப்பு தமிழர் அரசியலில் இன்னொரு ஏமாற்றுதத்தின் ஆரம்பமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் கோர தாண்டவம்  அரசியல், சமுக பொருளாதார ரீதியாக இலங்கைக்கு பேரிடரை வழங்கி வருகிறது. அதேநேரம் சர்வதேச வல்லாதிக்க அரசியல் போட்டியும்,  தீர்வற்ற தேசிய இனப்பிரச்சினை கேள்விகளும் இலங்கை அரசியலில் ஒருங்கே பயணிக்கிறது. இலங்கையின் ஆட்சி தலைமைகள் கொரோனா பேரழிவை மௌனமாய் கடந்து செல்கின்ற போதிலும், இலங்கையை மையப்படுத்தி நிகழும் சர்வதேச வல்லாதிக்க அரசியல் போட்டியையும் தேசிய இனப்பிரச்சினையையும் ஒரே தளத்தில் நகர்த்தி செல்ல முனைகின்றர்.  இவ்வாறான களநிலவரத்திலேயே தென்னிலங்கையின் மூத்த அரசியல் தலைவர் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்-க்கும்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும்  இடையிலோர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பின் பின்னாலுள்ள அரசியலை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்-04(2021) அன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ்-உம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் சந்தித்து உரையாடியுள்ளார்கள்...

தென்னிலங்கை எதிர்க்கூட்டணியின் உபாயத்திற்குள் மீண்டும் பலியாவார்களா தமிழ் அரசியல் தரப்பினர்? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் அண்மைக்காலங்களில் சூடான விவாதமாக அமைவது எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கட்டமைப்பு உருவாக்கங்களும் ஆகும். இவ்முயற்சிகளின் உரையாடல்களில் எதிரணியினை பலப்படுத்தம் உத்திகளில் தமிழ் தேசிய இனத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் அதிக கரிசனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும். எனினும் தமிழ்த்தேசிய பரப்பில் இயங்கும் அரசியல் தலைமைகள் எதிரணிகள் தமிழ் தேசிய இனத்துக்கு அளித்துவரும் முக்கியத்துவத்தை ஒருங்கினைக்கும் வல்லமையுடன் செயற்படுகிறார்களா? என்பது தேட வேண்டியுள்ளது. அதனடிப்படையிலேயே இக்கட்டுரை எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளில் தமிழ்த்தேசிய இனம் முக்கியத்துவப்படுத்தப்படுவதும் தமிழ் அரசியல் தலைமைகளின் பலவீனங்களை அடையாளப்படுத்தப்படுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர தூய தேசப்பற்றாளர்கள் எனும் இயக்கத்தை உருவாக்கி நிகழ்த்திய ஊடக சந்திப்பில் இலங்கையின் நிலைத்த இருப்புக்கு தமிழ்த்தேசிய இனத்தினை அரவணைத்து செல்ல வேண்டும் என்ற கருத்தை விளக்கியிருந்தார். 'இனவாத, மதவாத காலம் கடந்த பழைய கொள்கைகள் கோட்பாடுக...