Posts

Showing posts from August, 2022

தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த்தேசியத்தை பாதுகாக்க முன்வைத்துள்ள வேலைத்திட்டங்கள்? -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ் அரசியல் கட்சிகளின் தமிழ்த்தேசிய நிலைப்பாடு மற்றும் புரிதல் தொடர்பில் தொடர்ச்சியாக சந்தேகங்களே அதிகரித்து வருகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியில் தமிழ் மக்களும் கடுமையாக பாதித்துள்ளது. தற்போது நிவர்த்தியற்று அதனோடு வாழவும் தயாராகிவிட்டனர். தென்னிலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை கோரி அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களுக்கு தென்னிலங்கை கட்சிகள் முழுமையான ஆதரவை வழங்கி இருந்தன. இன்று போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாய் கைது செய்யப்படுகின்ற போதிலும் அவர்களுக்கான குரலை தென்னிலங்கை கட்சிகள் எழுப்புகின்றன. மற்றும் மக்களின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் தொடர்ச்சியாய் குரலெழுப்புகின்றார்கள். எனினும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டுள்ள எந்த அரசியல்வாதியும் பொருளாதார நெருக்கடியில் மக்களுடன் வரிசையிலும் இல்லை. பொருளாதார நெருக்கடியை சீர்செய்வதற்கான வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வரவில்லை. மேய்ப்பானற்ற மந்தைகளாகவே தமிழ் மக்கள் அரசியல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகின்றனர். இக்கட்டுரை தேசியத்தின் உள்ளடக்கங்களையும், தமிழரசியல் கட்சிகள் அது த...

தடைநீக்கமும் ஜெனீவா அரசியலும் எதிர்வினையற்ற தமிழரசியலும் -ஐ.வி.மகாசேனன்-

Image
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் காலப்பகுதியில் சில அதிரடியான அரசியல் முடிவுகளால் தமது அரசின் மீதுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுக்களை இழுத்தடிப்பு செய்வதில் இலங்கை அரசாங்க கட்டமைப்பு மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாகவே அவ்வாறான பொறிமுறையையே ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கான வியூகமாக இலங்கை அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது. சமகாலத்தில், முன்னர் தடைப்பட்டியலில் அறிவித்திருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஒரு தொகுதியினரையும் இலங்கை அரசாங்கம் தடைப்பட்டியலிலிருந்து நீக்கியுள்ளமையும் அவ்வாறான பொறிமுறையாகவே தமிழ்த்தரப்பில் விமர்சிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துமே குறித்த தடை நீக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. மறுதலையாக இலங்கை அரசாங்கத்தின் ஸ்திரமற்ற முடிவாகவும் தென்னிலங்கை அரசியல் பரப்பில் தடைநீக்கம் தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது. இக்கட்டுரை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைந...

ஜெனிவா களம் ஈழத்தமிழ் விவகாரத்திலிருந்து கைநழுவி செல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கடந்த மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களை இலங்கை தீவின் ஜனாநாயக மீட்சிக்கான புரட்சியாக பலரும் சிலாகித்தனர். அத்துடன் இலங்கை புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி நகருவதாகவும் வரவேற்றிருந்தனர். எனினும், சமாந்தரமாக புதிய இடைக்கால அரசாங்கம் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில், சர்வதேச சமூகத்திடமிருந்தும் கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரிலும் புதிய இடைக்கால அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் முதன்மை பெறக்கூடிய எதிர்பார்ப்பு அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது. எனினும் இலங்கை அரசாங்கங்கள் கடந்த ஒரு தசாப்தங்களுக்கு மேலாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாள்வதற்கான இராஜதந்திரத்தில் தேர்ச்சிமிக்கவர்களாக உள்ளனர். அவ்வாறானதொரு பொறிமுறையையே செப்டெம்பர் கூட்டத்தொடரிலும் நகர்த்த முற்படுகின்றார்கள். இக்கட்டுரை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் எதிர்கால போ...

கூட்டரசாங்க முயற்சி அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியானது தீர்வற்ற வகையில் நீண்டு கொண்டே செல்கின்றது. அரசாங்கத்ததின் தலைமையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் அரசியல் பொருளாதார நெருக்கடி தீர்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தினதோ அல்லது மேற்கின் உதவியோ தொடர்ச்சியாக நம்பிக்கையற்றதொன்றாகவே காணப்பட்டு வருகின்றது. அத்துடன் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த நாட்களிலிருந்து அரசியல் கட்சிகள் முன்வைக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்த கூட்டரசாங்கம் என்பதும் அதிக உரையாடல்களுடனேயே கடந்து செல்கின்றது. கூட்டரசாங்க உருவாக்கம் என்பது இலங்கை அரசியல் கட்சிகளிடையே முதன்மையான உரையாடலாக காணப்படுகின்ற போதிலும், நடைமுறை அரசாங்கங்கள் கூட்டரசாங்ககங்களை உருவாக்க எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிவடைகின்றன. இந்நிலைமை கூட்டரசாங்க உருவாக்கம் என்பது, இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு உகந்த தீர்வா? அல்லது அரசியல் கட்சிகளின் அரசியல் நலனுக்கான கோரிக்கையா என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரையும் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் கூட்டரசாங்கா உருவாக்கத்தின் நோக்கத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது...