Posts

Showing posts from September, 2022

நினைவேந்தலின் பெயரில் தமிழ்த்தேசியத்தை அழிக்கும் தமிழரசியல்? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் தேசிய அரசியலின் முக்கிய. விடயங்கள் யாவும் பருவ கால அரசியலாகவே நகர்த்தப்படுகிறது. குறிப்பாக ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிச்சினை தீர்வுக்கான களமாக தற்போது காணப்படும் சர்வதேச அரங்கான ஜெனிவா சார்ந்த உரையாடல்கள் அதன் கூட்டத்தொடரை அண்டிய மார்ச், செப்டெம்பர் மாதங்களிலேயே மேற்கொள்ளப்படும். அவ்வாறே தமிழ்த்தேசிய இருப்பு சார்ந்த பேணுகைக்கு அவசியமான கடந்த கால வரலாற்றை கடத்தும் நினைவுகளும் பிரதான நினைவேந்தல்களான மே-18 தமிழின படுகொலை நினைவு நாள், செப்டெம்பர் பின்னரைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவு தினம் மற்றும் நவம்பர்-27 மாவீரர் நாள் என அன்றைய காலப்பகுதிகளில் மாத்திரம் அதில் விளக்கேற்றுவதற்கான மோதலாகவே நினைவு தினங்கள் உரையாடப்படும். தேசிய இனங்களின் விடுதலை போராட்டமானது பருவ கால அரசியலுக்குரியது அல்ல. குறிப்பாக நினைவு தினங்கள் தேசிய அரசியலுக்கான களங்களாக முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் ஈழத்தமிழ் அரசியலில் தேசியம் பேணுகையும், அடைவும் பூச்சிய நிலைமையிலேயே காணப்படுகிறது. இக்கட்டுரை நினைவேந்தல் அரசியல் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந...

ஜெனீவா மனித உரிமை களமும் ஈழத்தமிழர்களின் நீதி போராட்டமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2012களுக்கு பிறகு ஈழத்தமிழரசியல் செப்டெம்பர் மாதம் ஜெனிவா அரசியல் கள உரையாடல்களையே நிரப்பியுள்ளது. இவ்வாண்டு செப்டெம்பர்-12அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி உள்ளது. இலங்கை தொடர்பான ஒரு வரைவுத் தீர்மானம் செப்டம்பர்-23அன்று கூட்டத்தொடரில் வாசிக்கப்படுவதுடன், உறுப்பு நாடுகளால் அக்டோபர்-06அன்று வாக்களிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக செப்டம்பர்-06அன்று திகதியிடப்பட்டு ஓய்வுபெறும் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையரின் அதிகாரப்பூர்வ அறிக்கை அதிக ஊடக கவனத்தைப் பெற்றுள்ளது. அதனை தழுவியதாக செப்டெம்பர்-12அன்று மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைக்கூட்டத்தொடரிலும் சமர்ப்பித்தார். இது நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத்தீவில் 'பொருளாதார குற்றங்கள்' இழைக்கப்படுவது பற்றி விரிவான குறிப்புகளை அளித்தது. மேலும் மனித உரிமைகளுக்கான பொறுப்புக்கூறலையும் பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் இணைத்தவாறு விளக்கியுள்ளது. இது ஈழத்தமிழர்களின் சர்வதேச பொற...

ஜெனிவா அரங்கில் தென்னிலங்கை உத்திகளும் ஈழத்தமிழரசியலின் எதிர்வினைகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2012ஆம் ஆண்டு ஐ.நா வெளிக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சினை நகர்த்தப்பட்டது முதல் வருடாவருடம் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் ஈழத்தமிழரசியல் ஜெனிவாவை மையப்படுத்தி திருவிழாவை அரங்கேற்றி வருகின்றது. 2022ஆம் ஆண்டு செப்டெம்பர்-12அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சர்வதேச சமூகத்திடம் இலங்கையில் அடிப்படை உரிமைகள் மீறல்கள் சம்பந்தமாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கையின் பின்புலம் 51வது அமர்வு இலங்கை அரசாங்கத்திற்கு அதிக நெருக்கடியை உருவாக்கலாமென்ற உரையாடல்களை ஆரம்பித்துள்ளது. அதேவேளை தென்னிலங்கை அரசியல் தேசிய நலன் என்பதை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நெருக்கடிகளை கையாள்வதற்கான உத்திகளையும் மூர்க்கத்தனமாக முன்னெடுத்து வருகின்றது. எனினும், ஈழத்தமிழரசியல் தரப்பு இலங்கை அரசாங்கத்தால் நிறைவேற்றப்படாத விடயங்களை முன்னிறுத்தி ஜெனிவாவிற்கான அரசியலை...

இடைக்கால வரவு-செலவுதிட்டம் பொருளாதாராத்தை வலுப்படுத்துவதா? அரசியலை வலுப்படுத்துவதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் ஸ்திரமற்றதாகும், புதிய புதிய குழப்பங்களுக்குள்ளும் நகர்ந்து கொண்டு செல்கின்றது. வின்ஸ்டன் சர்ச்சில் சோவியத் ஒன்றியத்தை ஒரு புதிர்க்குள் ஒரு புதிர் மர்மத்தில் மூடப்பட்டுள்ளது என்று அழைத்தார். அவ்வாறே இன்றைய இலங்கையை ஒரு குழப்பத்திற்குள் ஒரு முரண்பாடான மெய்யுரை முரண்பாட்டில் மூடப்பட்டுள்ளதாகக் கூறலாம் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது புரிந்துகொள்ளுதலை கடந்து விட்டது. இது பகுத்தறிவின் முரண்பாடு அல்லது 'பகுத்தறிவின்மையின் பகுத்தறிவு' என்று அழைக்கப்படுவதை விட புதிராக காணப்படுகின்றது. அரகல்யாவின் வெற்றி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற உரையாடல்கள் முதன்மை பெறும் சமகாலத்திலலேயே, லிபரல் அடையாளத்தை நீண்ட காலமாக வெளிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்து ஜனநாயக போராட்டக்களம் மீது எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்தியிருந்தார். இடைக்கால அரசாங்கத்தால் இடைக்கால நிதியறிக்கை சமர்ப்பிக்கப்படும் சமகாலத்தில் இடைக்கால அரசாங்கத்துக்கான ஆதரவை வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி...