Posts

Showing posts from February, 2023

பௌத்தத்தினூடாக வலுப்பெறும் சீன-இலங்கை உறவும்! நெருக்கடிக்குள் நகரும் இந்திய-இலங்கை உறவும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வினை பல கோணங்களில் இலங்கை அரசாங்கம் அலசி வருகின்றது. குறிப்பாக, 13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சார்ந்த உரையாடல்களும் அதனோர் பகுதியாகவே அமைகின்றது. மேலும், பொருளாதார முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலான வாய்ப்புக்களையும் உருவாக்கும் வகையில் சட்ட ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்தி வருகின்றது. இப்பின்னணியிலேயே கடந்த வாரம் பாராளுமன்ற விவாதத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகளின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் பற்றிய ஆய்வுகளில், தென்னிலங்கை புத்திஜீவிகளே அச்சட்டமூலம் இலங்கையின் இறைமைக்கு பாரதூரமான தாக்கத்தை உருவாக்கக்கூடியதென்ற எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஒற்றையாட்சிக்கு உட்பட்ட அதிகார பகிர்வினையான 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தும் சிங்கள பௌத்த பேரினவாதம், நாட்டின் இறைமைக்கு சவால் ஏற்படுத்தக்கூடிய துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் சலன...

இந்தியா- இந்து தேசியவாதத்தால் தமிழ்த்தேசியம் திசைதிருப்பப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக இயல்பு தொடர்ச்சியாக இலங்கை மீது ஏதொவொரு வகையில் தாக்கத்தை செலுத்தும் காரணியாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவின் இத்தாக்கங்கள் வரலாற்றுரீதியாகவே இலங்கையில் வடக்கினூடாகவே நகர்த்தப்பட்டு வந்துள்ளது.  இலங்கையில் பௌத்தத்தின் வருகையும் இவ்வாறான வரலாற்று முன் அனுபவத்தையே கொண்டுள்ளது. இவ்வரலாற்று முன் அனுபவங்களின் தொடர்ச்சியாகவே, இந்தியாவின் தற்போதைய ஆளும் அரசாங்கமான பாரதீஜ ஜனதாக்  கட்சி, தாம் முதன்மைப்படுத்தும் இந்து தேசியவாதத்தை இலங்கையில் நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சமகாலத்தில் இலங்கை-இந்திய உறவில் இந்து தேசியவாதம் முதன்மையான பகுதியாக இருப்பதனை, இந்திய தலைவர்களின் உரையாடல்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனடிப்படையிலேயே இக்கட்டுரை இந்தியாவின் இந்து தேசியவாதம், ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியவாதத்துக்குமிடையிலான முரண்நகைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி-9 முதல் 12ஆம் திகதி வரை நான்கு நாட்கள் விஜயமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் இந்திய மத்திய அரசின் மீன்பிடித்துறை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வ...

இலங்கை தேசிய இனப்பிரச்சினையும் பௌத்த தீவிரவாதத்தின் உபாயமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் பௌத்தம் மேலான நிலையை பெற்று வருகின்றமையை வரலாறுகள் தொடர்ச்சியாக உணர்த்தி வருகின்றது. இப்பின்னணியிலேயே தேசிய இனப்பிரச்சினை உருவாக்கம் மற்றும் தொடர்கையிலும் இலங்கை அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மேலதிக்கமே மைய காரணமாகும். இலங்கையின் வரலாற்றில் ஆரம்பத்திலிருந்தே அரசியலமைப்புக்களுக்கூடாக ஜனநாயகமயப்படுத்தலும், பேரினவாதமயப்படுத்தலும் சமாந்தரமாகவே வளர்ந்து வந்து பின்னர் ஒரு கட்டத்தில் பேரினவாதம் மேலாட்சிக்கு வந்து தானே ஜனநாயகமயப்படுத்தலையும் தீர்மானிக்குமொன்றாக நிலைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இலங்கை தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடலில் 13ஆம் சீர்திருத்தம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தேசிய இனப்பிரச்சினை தீர்வில் பௌத்த மேலாதிக்கத்தின் ஆதிக்கத்தை மீண்டுமொரு தடவை உணர்த்தியுள்ளது. இக்கட்டுரை இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் பௌத்தத்தின் மேலாதிக்க விளைவுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில், இலங்கையின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்குள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கப்போவதாக உறுதியளித்...

75வது சுதந்திர தினத்தில்; தென்னிலங்ககையின் ஜனநாயக மீட்பு போராட்டமும்! வடக்கு-கிழக்கின் சுயநிர்ணய உரிமைபோராட்டமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை பெப்ரவரி-04(2023) அன்று 75வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றது. குறிப்பாக 75வது சுதந்திர தினத்தை விமர்சையாகவும், நல்லிணக்க பொறிமுறையை ஒன்றிணைத்தும் கொண்டாட இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பெப்ரவரி-11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டங்களும், இந்தியாவின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலையமும் திறந்து வைக்கப்பட உள்ளது. மறுதளத்தில் வடக்கு-கிழக்கில் இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி ஒன்றும் வடக்கு-கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பில் சிவில் சமூகங்களால் நடாத்தப்பட உள்ளது. அத்துடன் தென்னிலங்கையிலும் சிவில் சமுகத்தினர் மற்றும் எதிரக்கட்சிகள் அரசாங்கத்தின் சுதந்திர தின விழாவை புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இக்கட்டுரை தென்னிலங்கையின் 75வது சுதந்திர தின நிலைப்பாடுகளினதும், வடக்கு-கிழக்கு கரிநாள் அரசியல் பிரகடனத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள...