Posts

Showing posts from April, 2023

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை ஈழத்தமிழர் புதிய அணுகுமுறையில் எதிர்கொள்ள வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட (ATA) முன்வரைபு ஜனநாயக விழுமியங்களை மீறியுள்ளதாக உள்ளூர் மற்றும் சர்வதேசரீதியிலான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. ஏப்ரல்-25அன்று வடக்கு-கிழக்கில் நடைபெற்ற ஹர்த்தாலிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கண்டனங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது. முன்னைய பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் (PTA) தாண்டி உயரளவில் ஜனநாயக மற்றும் அடிப்படை மனித உரிமைகளை தடை செய்யக்கூடிய உள்ளடக்கங்களை புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்வரைபின் ஏற்பாடுகள் கொண்டிருப்பதாகவே தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் பிராச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். இந்த தளத்தில் ஈழத்தமிழரசியல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கான எதிர்வினையை இலங்கை தேசியத்துடன் ஒருங்கிணைக்காத வகையில் முன்னெடுக்க வேண்டிய தேவை அடையாளப்படுத்தப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களின் சுதந்திரமான வாழ்வியலை முழுமையாக தடைசெய்திருந்தது. ஒப்பிட்டு அடிப்படையில் நிராகரிக்கும் கோரிக்கையானது பின்னையதை நிராகரித்து முன்னையதை பேண வழிகோலக்கூடியதாகவும் அமைகின்றது. இக்கட்டுரை புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...

பொதுக்கட்டமைப்பு மாத்திரம் தமிழர்கள் மீதான அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்பை தடுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் அரசியலில் பொதுக்கட்டமைப்பு பற்றிய உரையாடல்கள் காலத்துக்கு காலம் மீள மீள சுழற்சி பெறுகின்றது. குறிப்பாக ஈழத்தமிழர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும் காலங்களில் பொதுக்கட்டமைப்பு பற்றிய உரையாடல்களும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுகத்தினரிடையே எழுச்சி பெறுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. சமகாலத்தில் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டமை மற்றும் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய சிவலிங்கம் இடிக்கப்பட்டமை போன்ற பௌத்த ஆக்கிரமிப்புக்கள் குறுகிய கால இடைவெளியில் நிகழ்ந்ததை தொடர்ந்து மீள பொதுக்கட்டமைப்புக்கான உரையாடல் புத்தெழுச்சி பெற்றுள்ளது. அதன் விளைவாக கடந்த ஏப்ரல்-09அன்று அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை தமிழர்கள் மீதான அரசு இயந்திரத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக பொதுக்கட்டமைப்பு உருவாக்கம் மாத்திரம் தீர்வை வழங்க போதுமானதாக அமையுமா என்பதனை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு தமிழர் ...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களின் இறையாண்மையை மீறுகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்றும் சூடான விவாத பொருளாகவே காணப்படுகின்றது. 1970களின் இறுதியில் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசாங்கத்தால் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலாய், பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் கடந்த நான்கு தசாப்தங்களாக உள்நாட்டு மற்றும் சர்வதேச பரப்பில் விமர்சனங்களை பெற்று வருகின்றது. குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையினை காரணங்காட்டி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமானது, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (ATA) எனும் புது சட்ட உருவாக்க முயற்சியினை மேற்கொண்டு வருகின்றது. எனினும் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை தாண்டி உயர்வீச்சில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இலங்கையின் அடிப்படை உரிமைகளை மீறும் அபாயம் இருப்பதாக கண்டனங்களை பெற்று வருகின்றது. குறிப்பாக தென்னிலங்கையும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் அதிக அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளமை ஆழ்ந்த கவனத்தை பெற்றுள்ளது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்...

சர்வதேசரீதியாக அரசியல் பொருளாதார ஆதரவை திரட்டும் இலங்கை வெளியுறவு அமைச்சகம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசாங்கம் தனது அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்து கடந்து செல்வதற்கான செயற்றிட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றது. குறிப்பாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மார்ச் ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா உரையாடலின் கலந்து கொள்வதற்காக மார்ச்-2ஆம் திகதி முதல் 04ஆம் திகதி வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தர். தொடர்ச்சியாக மார்ச் இறுதியில் வெளிவிவகார அமைச்சர், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பாண்டூரின் அழைப்பின் பேரில் மார்ச்21-25ஆம் திகதிகளில் தென்னாப்பிரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளனர். உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்திற்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாக சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் அறிவித்த கொள்கைக்கு இணங்க இந்த விஜயம் அமைந்துள்ளது. இக்கட்டுரை குறித்த இரு சந்திப்புக்களினதும் இலங்கை அரசாங்கத்தின் அரசிய...