Posts

Showing posts from May, 2023

தமிழரசியலும் தென்னிலங்கை அரசாங்கமும் பேரினவாதத்தோடு தமிழ்த்தேசியத்தை சமப்படுத்த முயல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்கள் கடந்த நூற்றாண்டுகால இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பிட்ட சில போராட்ட நுட்பங்களும் வடிவங்களும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான உரிமைப்போராட்டத்தின் சிறப்பை அடையாளப்படுத்துகிறது. எனினும் ஈழத்தமிழர்கள் தமது உரிமைப்போராட்டத்திற்கு பலமான கருத்தியல் தளத்தை சீராக கட்டமைக்கவில்லை என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் தலைமைகளின் உரையாடல்களும், சிங்கள பேரினவாத அரசாங்க செயற்பாட்டுக்கான தமிழரசியல் தரப்பின் எதிர்வினைகளும் ஈழத்தமிழர்களின் கருத்தியல்தள குறைபாட்டையே சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகராவை சிங்கள தேசியவாதியாக விழித்துள்ளமையும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடந்த கால வன்முறைகளில் இறந்தவர்களுக்கான பொதுத்தூபி அமைத்தலும் பொதுநினைவு நாளை பிரகடனப்படுத்தலுமென எடுத்துள்ள தீர்மானமும் ஈழத்தமிழரசியலில் தரப்பிடையே இனவாதம் மற்றும் தேசியவாதத்துக்கு இடையிலான கருத்தியல் வேறுபாட்ட...

இடைக்கால நிர்வாக வாய்ப்பு கட்சி நலன் சார்ந்து நிராகரிக்கப்படுகின்றதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான வைகாசி மாத சந்திப்பு இரண்டு கட்டமாக நடைபெற்றுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரனால் பரிந்துரைக்கப்பட்டு, வடக்கு-கிழக்கு தமிழ் கட்சிகளில் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்ட இடைக்கால நிர்வாகம் பற்றிய உரையாடல், ஜனாதிபதியால் சந்திப்பின் பிரதான உள்ளடக்கமாக இணைக்கப்பட்டது. எனினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் இடைக்கால நிர்வாகம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி-வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு எவ்வித தீர்க்கமான முடிவுமின்றி நிறைவடைந்துள்ளது. மீள ஜுன் மாதம் சந்திப்புக்கான அழைப்பையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இடைக்கால நிர்வாகம் பற்றிய உரையாடல் இலங்கை அரசியல் வரலாற்றில் பல சமாதான பேச்சுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னகர்வு என்ற அடிப்படையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால நிர்வாகத்தை ஆரம்ப நகர்வாக ஏற்று ஜனாதிபதியுடனான சந்திப்பை முன்னகர்த்தியிருக்கலாம் என்ற விமர்சனப்பார்வை ஈழத்...

ஜனாதிபதியின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் களத்தில் தென்னிலங்கை அரசாங்க தரப்பினருக்கும் தமிழ் அரசியல் தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும், ஏமாற்றுக்களும், முரண்பாட்டு முறிவுகளும் நீண்ட வரலாற்றை தன்னகத்தே பகிர்கின்றது. இந்த வருடத்தின் (2023) ஆரம்பத்திலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா 75வது சுதந்திரத்திற்கு முன்னர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற தலைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தையை நகர்த்தியிருந்தார். எனினும் 75வது சுதந்திர தினம் பெப்ரவரி-04 நடைபெறுவதற்கு முன்னரே பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளுமின்றி இடைநிறுத்தப்பட்டது. தற்போது மீளவும் ஜனாதிபதி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். கடந்தகால வரலாற்றின் நீட்சியாய் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தொடர்பில்; விழிப்புடன் இருக்க வேண்டியது தொடர்பில் தமிழ்த்தரப்பிடையே கருத்தாடல்கள் காணப்படுகின்றது. இக்கட்டுரை வடக்கு-கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தைக்கான ஜனாதிபதியின் அழைப்புக்கு தமிழ்த்தரப்பில் உள்ள எதிர்வினைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. வடக்க...

ஈழத்தமிழருடைய போராட்ட உத்திகள் பின்னோக்கி நகர்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களிற்கெதிராக அண்மையில் அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் கையறுநிலை தொடர்பில் மக்களிடையே விசனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக அண்மையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ்த்தேசிய கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் பொதுமக்களிடையேயே பல எதிர்மறையான விமர்சனங்கள் காணப்பட்டது. தமிழ்த்தேசிய கட்சிகளின் பாதுகாப்பு வரையறையுடன் கூடிய போராட்டங்கள் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்விமர்சனங்களுக்கு மத்தியிலேயே அண்மையில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சட்ட மறுப்பு போராட்டத்துக்கு செல்ல வேண்டிய சூழல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். மேலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமது கட்சி சட்ட மறுப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருவாதாக தெரிவித்திருந்தார். இக்கட்டுரை தமிழ்த்தேசிய அரசியலில் சட்ட மறுப்பு போராட்டத்தின் நிலையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழரசியல் அதிகம் கடினமற்ற பாதுகாப்பான போ...