Posts

Showing posts from August, 2023

இன-மத வன்முறையை தூண்டும் தென்னிலங்கை அரசியல்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் இன்றைய அரசியலில் முக்கிய அம்சமாக இன உறவுகள் தொடர்பான பிரச்சினையே காணப்படுகின்றது. நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இனப்பிரச்சினையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய போதிலும், அதன் தீர்வுக்கு வேண்டிய நடவடிக்கைகள் பூரணப்படுத்தும் உபாயங்களை வினைத்திறனுடன் மேற்கொள்ள தயாராகவில்லை. கால இழுத்தடிப்புக்கான உபாயங்களையே நகர்த்தி வருகின்றார். இச்சூழல் இனப்பிரச்சினையை உக்கிரப்படுத்தும் முறையிலேயே அமைந்துள்ளது. அரசாங்க உறுப்பினர்களே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக இனவாத செயற்பாடுகளை மும்மரமாக நடைமுறைப்படுத்துகின்றார்கள். குறிப்பாக முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் அரசாங்கத்துக்கு உட்பட்ட வகையில் அரசாங்க திணைக்களங்களினாலேயே தமிழர்-சிங்களவர்களுக்கு இடையிலான இனப்பதட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்இனப்பதட்டம் மீளவொரு இனக்கலவரத்தை உருவாக்கக்கூடிய சூழல் காணப்படுவதாக இந்திய புலனாய்வுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இக்கட்டுரை இலங்கையின் சமகால தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையிலான இனப்பதட்ட சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் க...

ரணில் விக்கிரமசிங்காவின் பலவீனமும் ஜனாதிபதி தேர்தலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து முழுமையாக மீளாத நிலையிலும், தென்னிலங்கை அரசியலில் ஆட்சியதிகாரம் பற்றிய பேரங்கள் முதன்மையான அலையாக காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு இலங்கையின் தேர்தல் ஆண்டாகவே உரையாடப்படுகின்றது. மாகாண சபைத்தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஆரூடங்கள் முன்வைக்கப்படுகின்றது. பிரதானமாக ஜனாதிபதித் தேர்தலின் போட்டியாளர்கள் பற்றியும் அவர்களது அணி சேர்க்கைகளும் தென்னிலங்கை அரசியலில் சூடான விவாதமாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் நகர்வுகள் யாவும் அரசு இயந்திரத்தை கொண்டு தேர்தலூடாக தனது ஜனாதிபதி பதவியினை தக்கவைப்பதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதற்கான முயற்சியாகவே நோக்கப்படுகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் உள்ள வாய்ப்புகள் தொடர்பாக தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராக மற்றும் சில தடவைககள் பிரதமரானாலும், இலங்கை அரசியலின் துருவத்தின் உச்சிக்கு வராத மனிதராக வரலாற்றில் இடம்பிடித்தார். அதேவேளை இலங்கையின் க...

தீர்வு முயற்சிக்கான பாராளுமன்ற உரைகளும்இனவாத உணர்வுகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
13ஆம் திருத்தத்தை மையப்படுத்திய உரையாடல்களே இலங்கை அரசியலின் பிரதான விவாதப்பொருளாகி உள்ளது. ஜூலை-26அன்று 13ஆம் திருத்தத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில், 13வது திருத்தத்தின் நோக்கத்தில் எவ்வித இணக்கப்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து, 13வது திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஆகஸ்ட்-09அன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்தார். எனினும் 13ஆம் திருத்த சட்ட நடைமுறையாக்கத்திற்கு இசைவானதொரு பதிலை தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடமிருந்து ஜனாதிபதியால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மாறாக இனவாத பிரச்சாரங்களே தென்னிலங்கையில் முதன்மையாக காணப்படுகின்றது. தென்னிலங்கையின் இனவாத தரப்பினரால் முன்னெடுக்கப்படும் 13வது திருத்தத்துக்கு எதிரான பாராளுமன்ற உரைகள் மீளவொரு இனக்கலவர போர்வையிலான இனவழிப்புக்கு தூபம் போடுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இக்கட்டுரை 13வது திருத்த சட்டம் தொடர்பான இலங்கை அரசியல் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களின் தாக்கத்தினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்-09அன்று இலங்கை ஜனாதி...

தென்னிலங்கை-தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தை ஏமாற்று அரசியலுக்குள் நகர்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் பேச்சுவார்த்தைகளும், மாநாடுகளும் என்பதுவே சமகாலத்தில் முதன்மையான உரையாடல்களாக காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை நீர்த்து போகச்செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளும் மாநாடுகளும் அவசியமாகின்றது. பொருளாதார நெருக்கடியின் ஒப்பீட்டடிப்படையிலான மீட்சியும், அதன் வெற்றிப்போக்கினையே  உறுதி செய்கின்றது. அரச இயந்திரத்தை முழுமையாக ஈடுபடுத்தி அவ்வெற்றி போக்கை இலங்கை அரசாங்கம் சாத்தியமாக்கியுள்ளது. மறுதளத்தில் தேசிய இனப்பிரச்சினை சார் அரசியல் விவகாரத்துக்கும் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை மற்றும் மாநாட்டு பொறிமுறையை இலாபகரமாக பயன்படுத்தி வருகின்றது. எனினும் தமிழ் அரசியல் தரப்பினர் பேச்சுவார்த்தையை இராஜதந்திர பொறிமுறைக்குள் கையாள தவறுகின்றனர் என்ற விமர்சனம் பொதுப்பரப்பில் காணப்படுகின்றது. இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் இலங்கை அரசாங்கம் மமற்றும் தமிழ் அரசியல் தரப்பின் பேச்சுவார்த்தை இயங்கியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. முறையான அரசியல் தீர்வுகள் அல்லது சமாதான உடன்படிக்கைகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சுவார்த...