Posts

Showing posts from September, 2023

திலீபனின் தியாகம் கட்சி அரசியலால் பலியிடப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் அண்மைய நாட்களில் பேரினவாதத்தின் இனவன்முறைகளின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்திய புலனாய்வுத்துறையும் இனவன்முறைக்கான சூழலை இலங்கையில் எதிர்வுகூறியுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும். அண்மைய பேரினவாதத்தின் இனவாத பிரச்சாரங்களும் செயற்பாடுகளும் வடக்கில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களங்களின் ஆக்கிரமிப்பை மையப்படுத்திய அதிகம் சுழன்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்தவாரம் திருகோணமலையில் கப்பல் துறைமுக பகுதியில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மீது காடையர்குழு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த வன்முறை தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமைக்கு சிங்கள பேரினவாதம் ஏற்படுத்தும் தடையாக அவதானிக்கப்படுகின்றது. எனினும் தமிழ்ப்பரப்பில் போதிய அரசியல் எதிர்விளைவுகளை அடையாளங்காண முடியவில்லை. அத்துடன் கலவையான கருத்துக்களையே பொதுவெளியிலும் அறியக்கூடியதாக காணப்பட்டது. இந்நிலையில் இக்கட்டுரை தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் அரசியல் சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, தமிழ்த் தேசிய மக்கள் ...

தென்னிலங்கையில் பௌத்தம் மாத்திரமன்று கிறிஸ்தவமும் இனவாதத்தினையே பரப்புகிறது? -ஐ.வி.மகாசேனன்-

Image
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் சனல்-04 செய்தி அலைவரிசை இலங்கையின் அரசியலில் பிரதான நிலையை கட்டமைத்து வருகின்றது. ஆரம்பத்தில் 2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையின் சாட்சியங்களை பொதுவெளிக்கு கொண்டு வந்தது முதல் தற்போது ஆட்சியதிகாரத்திற்காக நடாத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வரை தென்னிலங்கையின் வன் அரசியல் முகத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்துவதில் முதன்மையான நிலையை பெற்றுள்ளது. அதேவேளை சனல்-04இன் 'இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள்' ஆவணக்காணொளியை சதிக்கோட்பாடாக சித்தரிக்கும் நிகழ்வுகளையும் சிங்கள பௌத்த பேரினவாதம் உயரளவில் மேற்கொண்டு வருகின்றது. எனினும் 'இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள்' ஆவணக்காணொளியின் விளைவுகள் மதத்தை கடந்து சிங்கள தென்னிலங்கையின் சுயரூபத்தை அளவிடவும் துணைபுரிவதாக அமைகின்றது. குறிப்பாக பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மன்னிப்பு பற்றிய உரையாடல் அதிக சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை பேராயர் மல்கம் ரஞ்சித்தின் செயற்பாடுகளூடாக தென்னிலங்கையின் அரசியல் எண்ணங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர்-08அன்று கொழும்பு கொச்சிக்கடை கத்தோலிக்க தேவஸ்த...

தென்னிலங்கையின் சர்வதேச விசாரணை கோரிக்கையை தமிழ்த்தேசியம் பயன்படுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் மீளவும் பிரித்தானியாவின் சனல்-4இன் ஆவணப்படம் புதிய அரசியல் சச்சரவுகளை உருவாக்கி உள்ளது. வாரத்தின் இறுதி நாட்களில் தென்னிலங்கை பிரச்சாரத்தில் சர்வதேச விசாரணையைக்கோரும் சூழ்நிலைக்கு நகர்த்தியுள்ளது. இப்பின்னணியில், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் ராஜபக்ஷhக்களின் அரசியல் அதிகாரத்துக்கான வேட்கையுடன் தொடர்புபட்டதாக சனல்-04 ஆவணம் குற்றம்சாட்டு காணப்படுகின்றது. சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் இலங்கையிலிருந்து வெளிவருவது நீண்ட வரலாற்றை பகிர்கின்றது. எனினும், தற்போது சர்வதேச விசாரணை கோரிக்கை முன்வைப்பவர்களின் உருவம் மற்றும் விடயம் மாறியுள்ளது. ஈழத்தமிழர்கள் தமக்கெதிராக இலங்கை அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கெதிராக 2009களுக்கு பிற்பட சர்வதேச விசாரணை பொறிமுறையை தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். எனினும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சர்வதேச நீதிப்பொறிமுறையை இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானதாக பிரச்சாரப்படுத்தி நிராகரித்திருந்தார்கள். தற்போது தென்னிலங்கை அரசியல் மற்றும் சிவில் தரப்பினரிடமிருந்தே சர்வதேச விசாரணைக்கோரிக்கைகளை முன்வைப்பது ஈழத்தமிழரசியலுக்கான ...

தேர்தலுக்கு தயாராகும் தென்னிலங்கையும் ஈழத்தமிரின் அபிலாசைக்கு முரணான தமிழரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஏற்கனவே இந்த வருடத்தின் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி சபைத்தேர்தல் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்த மோதல்கள் தென்னிலங்கையை ஆக்கிரமித்துள்ளது. எனினும், இலங்கையில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தேர்தல் காலத்தில் தென்னிலங்கை கட்சிகள் பிரச்சாரத்தில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை ஒழிப்பதாகவும், வெற்றியின் பின்னர் அவ்உரையாடல்களை தவிர்த்து செல்லும் நடைமுறையில் ஈடுபடுவதும் வழக்கமாயிருந்தது. எனினும் இம்முறை அதிகமாக அதிகாரத்துக்கான போட்டியை மையப்படுத்தியே தென்னிலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயர்த்தங்கள் காணப்படுகின்றது. மாறாக தமிழரசியல் தரப்பினர் ஜனாதிபதி தேர்தலை தென்னிலங்கை விவகாரமாக வழமைபோல் அதிக கரிசணையற்ற நிலைமையிலேயே காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை தென்னிலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களையும் தமிழ் அரசியல் இயங்குநிலையையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் பிரதான கட்சி...