Posts

Showing posts from January, 2024

தமிழரசுக்கட்சியின் முக்கியத்துவத்தை புதிய தலைமையின் செயற்பாடுகள் சீர்படுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
நீண்ட வாதப்பிரதிவாதங்கள் மற்றும் கொதிநிலை விமர்சனங்களுடன் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்வு தேர்தல் கடந்த வாரம் முடிவு பெற்றுள்ளது. புதிய தலைமையாக யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டட பாராளுமன்ற பிரதிநிதி சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையின் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒப்பான பிரச்சார போட்டிகள் தமிழரசுக்கட்சி தலைமைக்கான தேர்வில் இடம்பெற்றுள்ளமை அதன் முக்கியத்துவத்தையே உறுதி செய்கின்றது. தமிழரசுக்கட்சிக்கு வினைத்திறனான தலைமை உருவாக வேண்டும் என்பதில் கட்சிக்கு வெளியே இருந்த கருத்தியலாளர்கள் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதனை மையப்படுதியே முந்தைய கட்டுரைகளில் தமிழரசு கட்சியின் தலைமைக்கான தேர்தல் தொடர்பில் இப்பந்தியில் எழுதப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே இக்கட்டுரை தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழசுக்கட்சியின் புதிய தலைமைக்கு உள்ள பொறுப்புக்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. முதலாவது, தமிழ்த்தேசியம் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் காலப்பகுதியில் தமிழரசுக்கட்சியில் புதியதொரு தலைமை மாற்றம் உருவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசி...

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகால அரசியலில் எந்தவொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும் பூகோள அரசியல் மற்றும் புவிசார் அரசியல் தாக்கங்கள் தவிர்க்க முடியாத நிலையை பெறுகின்றது. ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்திலும் புகோள அரசியல் மற்றும் புவிசார் அரசியல் வார்த்தைகள் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் மலிந்து காணப்படுகின்ற போதிலும், செயற்பாட்டு பரப்பில் அதனை உணர்ந்து செயற்படுகின்றார்களா என்பதில் தொடர்ச்சியான சந்தேகங்களே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் மேற்காசியாவில் ஏதெனும் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் யாழ்ப்பாண எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசைகளில் நிற்பதை அவதானிக்க கூடியதாக அமைந்தது. இது தொடர்பாக சமுகவலைத்தளங்களிலும் பல கேலிக்கை விமர்சன பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் சாதாரண மக்களிடம் தமது எண்ணங்களுக்குள் காணப்படும் பூகோள அரசியல் விழிப்புக்கூட ஈழத்தமிழரசியல் தலைவர்களிடம் காணப்படுகின்றதா என்பதில் வலுவான கேள்விக்குறியே உள்ளது. மேலும் ஊடகங்களும் போதிய அளவில் பூகோள அரசியல் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனும் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேல் பாலஸ்...

ஜனாதிபதி தேர்தலில் 'தமிழ் பொதுவேட்பாளர்' தத்துவம் தமிழ் மக்களின் அதிகாரத்தை மீளவலுப்படுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2024ஆம் ஆண்டு உலக அரசியலே தேர்தலுக்குரிய ஆண்டாகவே காணப்படுகின்றது. சர்வதேச அரசியலின் மைய அரசுகளான அமெரிக்க மற்றும் ரஷ்சியா அரச தலைவருக்கான தேர்தலையும் இந்தியா பொதுத்தேர்தலையும் எதிர்கொள்கின்றது. இவ்ஒழுங்கிலேயே இலங்கையும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாய்ப்பினை எதிர்கொண்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகளும் தேர்தலை உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றது. தென்னிலங்கை அரசியல் கட்சிகள் பரந்த அளவில் தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களையும், தமது வேட்பாளர்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றது. அதேவேளை சிறுபான்மை தேசிய இனங்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான பிரச்சார வேலைகளிலும் இறங்கியுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதியின் வடக்கு விஜயமும் அதனையே உறுதி செய்கின்றது. எனினும் சிறுபான்மை தேசிய இனங்கள் குறிப்பாக சுயநிர்ணய உரிமைக்காக நீண்ட பேராட்டத்தை மேற்கொள்ளும் தமிழ்த்தேசிய இனம் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான பலமான முடிவினை எடுக்க முடியாது உள்ளது. கருத்தியலாளர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான உபாயங்களை வழிகாட்டுகின்ற போதிலும் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக முரண்பாடான கருத்து...

ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழர்களின் முக்கியத்துவத்தினை தமிழ் அரசியல் தரப்பினர் பயன்படுத்தி கொள்வார்களா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் நகர்வுகள் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தியே இடம்பெறுகின்றது. குறிப்பாக, பிரதான அரசியல் கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களையும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். ஒரு சில கட்சிகள் சில பேரம்பேசலுக்கான உத்திகளை கையாண்டு வருகின்றது. ஈழத்தமிழரசியலில் ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் கருத்தியல் தளத்தில் ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது தொடர்பான உரையாடல்களை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் ஈழத்தமிழரசியலின் பிரதான அரசியல் கட்சியான தமிழரசுக்கட்சி அவ்உரையாடலை நிராகரிக்கும் தன்மை காணப்படுகின்றது. அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புறக்கணிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான தமிழ் அரசியல் கட்சிகளின் கடந்த கால தன்னிச்சையான செயற்பாடுகள் எதிர்மறையான அனுபவங்களினையே வழங்கியுள்ளது. இந்நிலையில் மீளவும் அவ்வாறானதொரு எண்ணங்களுக்குள்ளேயே தமிழ் அரசியல் கட்சிகள் நகர்வது தமிழ் மக்களிடையே விசனத்தை உருவாக்குவதாகவே அமைகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழரசியல் தந்திரோபாயரீதியாக கையாள்வதனூடாக பெறக்கூடிய வாய்ப்புக்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்ட...