Posts

Showing posts from July, 2024

சஜித் பிரேமதாசா போர்க்குற்ற இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்பது வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ள போதிலும், தென்னிலங்கை தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களுடனேயே நகருகின்றது. தமிழ் பரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் பற்றிய முனைப்பு ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவான மக்கள் பொதுச்சபையின் ஒன்றிணைவில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு எனும் கட்டமைப்புக்கூடாக முன்னர்த்த இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பு என்பதில் உறுதியாக உள்ளது. ஒரு சில நகர்ப்புறங்களில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கியிருந்தனர். தமிழரசுகட்சி ஒரு உறுதியான முடிவை வெளிப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வமாக எவ்வித முடிவையும் அறிவிக்காத நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்தலில் பொதுக்குழுவில் அதிக வாக்குகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் போன்றோர் பொதுவேட்பாளருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருகின்றார்கள். மாறாக, தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மா...

பண்பாட்டு தேசியத்தின் சிதைப்பு தமிழ்த்தேசியத்தை கேள்விக்குட்படுத்தக்கூடியது! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசியம் அரசியல் விவதாங்களாகவே தமிழ் அரசியல் பரப்பில் அதிகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேசியம் பெயர்ப்பலகைகளாகவே அரசியல் கட்சிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. மாறாக தமிழ்த்தேசியத்தின் உள்ளடக்கங்களின் இருப்புக்கள் பாதுகாக்கப்படுகிறதா என்பதில் வலுவான சந்தேகங்களே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழர் தயாகக்கோட்பாட்டின் இருப்பு, தமிழர் பண்பாட்டு கூறுகளின் இருப்பு மற்றும் அனைத்தையும் ஒன்றிணைத்த தமிழ் மக்களின் திரட்சி என்பன தமிழ்த்தேசிய பரப்பில் கேள்விக்குறியாகவே அமைகின்றது. தமிழர் தாயக கோட்பாட்டின் சிதைவு மற்றும் தமிழ் மக்களின் திரட்சியின்மை தொடர்பிலே ஒப்பீட்டடிப்படையில் வாதப்பிரதிவாதங்கள் எழுப்பட்டுள்ளது. எனினும் தமிழர் பண்பாட்டு கூறுகளின் இருப்பு தொடர்பில் ஒப்பீட்டளவில் பாரிய விவாதங்கள் உருவாக்கப்படுவதில்லை. இதன் விளைவாய் தமிழ்த்தேசியத்தின் ஓர் பகுதியான பண்பாட்டு கூறுகளின் இருப்பு எதிரிகளால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. தமிழர்களும் தெளிவின்றி பண்பாட்டு அழிப்பில் துணைபோகும் போக்கு காணப்படுகிறது. இக்கட்டுரை தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்த பண்பாட்டு கூறுகளின் இருப்பின் தேவையை வலியுறுத்துவதாகவே உருவாக...

கலாநிதி ஆறு.திருமுருகன் மீதான பொய்ப்பிரச்சாரமும் அறமற்ற ஊடகத்தின் தமிழ்த்தேசிய சிதைப்பு! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜனநாயக சமுகத்தினை கட்டமைப்பதில் ஊடகம் பெறுமதியானதொரு பகுதியாக அமைகின்றது. கடந்த காலங்களில் ஈழத்து அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை முன்னிறுத்தி பல ஊடகவியலாளர்கள் செயற்பட்டுள்ளனர். அவர்களது குருதிகளிலேயே இன்று பல ஊடக நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றும் அக்குருதிகளின் பின்புலத்திலேயே இயங்குகின்றது. எனினும் சில ஊடக முதலாளிகள் தமது வியாபார நலன்களுக்குள், ஊடகவியலாளர்களின் குருதிகளில் வளர்ந்த ஊடக நிறுவனங்களை சிதைக்க முயலுகின்றனர். அவ்வாறானதொரு நிகழ்வாகவே, சிவபூமி எனும் அமைப்பினூடாக சமய மற்றும் சமுக அறப்பணிகளை மேற்கொண்டுவரும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அச்சு ஊடகமொன்று முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டு அமைகின்றது. கலாநிதி ஆறு. திருமுருகன் சிவபூமி அமைப்பின் தலைவர் எனும் பொதுமுகத்தை தாண்டி தமிழ் தேசியத்தின் நிறுவன உருவாக்கிகளில் தனியான அடையாளத்தை பெறுகின்றார். அவர் தொடர்பில் ஆதரமற்ற குற்றச்சாட்டை அச்சு ஊடகம் முதன்மைப்படுத்துவது, தமிழ் சமுகத்தின் நம்பிக்கையை பெற்றுள்ள நிறுவன உருவாக்கியின் தமிழ்த்தேசிய செயற்பாட்டிற்கு பெர...

ஈழத்தமிழரசியலில் சம்பந்தரின் தோல்வியடைந்த தலைமைஎதிர்கால தலைமைகளுக்கு படிப்பினையை வழங்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயற்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் ஜீன்-30அன்று தனது 91வது வயதில் மரணித்துள்ளார். தமிழர் அரசியலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கியத்துவம் கருதி அதன் தலைவருக்கு, தென்னிலங்கை மற்றும் பிராந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர். எனினும் தமிழ் மக்களிடையே நேரான மற்றும் எதிரான செய்திகள் பொதுவெளியிலே நிறைந்து காணப்படுகிறது. கட்சி மோதல்களாவும், மனிதநேய பண்புசார் வாதங்களாகவுமே இரா.சம்பந்தனின் மரணம் ஈழத்தமிழரசியலில் உரையாடலை பெற்றுள்ளது. எனினும், ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்தில் ஓர் பகுதியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியலில் இரா.சம்பந்தனின் பங்களிப்பு முதன்மை பெறுகின்றது. அதனை கட்சி மோதலாகவும், மனிதநேய உரையாடலாகவும் மட்டுப்படுத்திவிட இயலாது. அது ஈழத்தமிழர்களின் அரசியலை கட்டமைக்கப்போவதில்லை. இக்கட்டுரை தமிழ்த்தேசிய அரசியலில் சம்பந்தனின் தலைமைத்துவ இயல்பை மதிப்பிடுவதனூடாக எதிர்கால தலைமைகளுக்கான படிப்பினையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இரா.சம்பந்தனுக்கான இரங்கலில் அவரது தலைமைத்துவம் ...