Posts

Showing posts from November, 2024

நினைவேந்தல்களை சமுகமயப்படுத்துவதனூடாகவே தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்படுகின்றது! -ஐ.வி.மகாசேனன்-

Image
2024ஆம் ஆண்டு மாவீரர் தினம் தாயகத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடனேயே முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக ஒரு பக்கம் வெள்ளம், புயல் என்ற போன்ற இயற்கையின் சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கைகள் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. அதேவேளை அரசியலில் ஜே.வி.பி-யின் ஆட்சி மாவீரர் தின நாட்களில் புதிய வினோதங்களை வெளிப்படுத்தலாம் என்ற எண்ணங்களும் பொதுவாக காணப்படுகின்றது. வினோதங்கள் நேராகவோ, எதிராகவோ இரு வழியிலான சந்தேகங்களும் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு எதிராக இலங்கை அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் கொடுமை மற்றும் கொலைக்கு, குற்றவாளிகள் இலங்கை சட்டத்துக்குள் தண்டிக்கப்பட்டிருந்தனர். எனினும் தண்டனையின் பின் விடுதலையடைந்த குற்றவாளிக்கு பின்னாட்களில், ஜே.வி.பி தனது தண்டனையும் வழங்கியிருந்தது. எனினும் ஈழப் போராட்டத்தில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா போன்ற போராளிகளுக்கு எத்தகைய தீர்வுகளையும் ஜே.வி.பி உரையாட தயாராகவில்லை. இவ்வாறான  அனுபவத்தின் பின்புலத்தில் ஜே.வி.பி அரசாங்கத்தின் நேரான வினோதங்களை எதிர்பார்ப்பதும் சந...

தமிழ்த்தேசியத்தில் தமிழ் அரசியல் கட்சிகளே பலவீனப்பட்டுள்ளன! -வி.மகாசேனன்-

Image
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் முழு இலங்கையிலும் புதியதொரு அரசியல் மாற்றத்தை அல்லது புதியவர்களின் அரசியலை அடையாளப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 170க்கும் மேற்பட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கை வரலாற்றில் அதிகளவு பெண் பிரதிநிதித்துவத்தை (22 உறுப்பினர்கள் - 9.8%) கொண்டுள்ள பாராளுமன்றமாக இது அமைந்துள்ளது. மேலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் தேர்தல் மாவட்டங்களிலும் சிறுபான்மை மக்கள் குழுக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை புதியதொரு சமிக்கையாக அடையாளப்படுத்தப்படுகின்றது. அதேவேளை வடக்கில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கு மாறாக தென்னிலங்கை கட்சியான ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது. மட்டக்களப்பு தவிர்ந்த 21 தேர்தல் மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது. இதனடிப்படையில் ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்திற்கு பின்னர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கமே, தனிக்கட்சியாக ⅔ பெரும்பான்மை ஆசனத்தை (159 ஆசனங்கள்) ப...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் கட்டவிழும் போலி ஜனநாயக விம்பமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2024 ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் தொடர்ச்சியாக தேர்தல்கள் , ஆட்சி மாற்றங்கள்   மற்றும் ஆட்சி தொடர்கை தொடர்பிலான விவாதங்கள் முதன்மையான உரையாடலை பெற்று வருகின்றது . அதில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது . குறிப்பாக அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான ஜோ பைடன் தேர்தல் போட்டியிலிருந்து விலகியிருந்தார் . இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கியிருந்த உபஜனாதிபதி கமலா ஹரிஸ் பிரதான போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்டிருந்தார் . எதிர் முனையில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்பின் கடந்த கால நடத்தைகள் மீது எதிரான விமர்சனங்கள் உருவாகியிருந்தது . அதிலும் தேர்தல் காலப் பகுதியில் ரொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிப்படுத்தி கொண்டது . மேலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்குபற்றும் நேரடியான விவாத களத்திலும் ரொனால்ட் ட்ரம்பின் கருத்துகள் விமர்சிக்கப்பட்டு , கமலா ஹரிஸ் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தார் . மேற்கு ஊடகங்களும் அவ்வாறான பிரதிபலிப்பையே ...