Posts

Showing posts from January, 2025

அயலக தமிழர்தின அரசியல் வாய்ப்புக்களும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனங்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத் தமிழர் அரசியலில் வெளியுறவு கொள்கை என்பது பெருமளவு பூச்சியமாகவே அமைகின்றது. உள்ளக அரசியலிலேலேயே தெளிவான அணுகுமுறையை கொண்டிராத போது, வெளியுறவை பற்றி சிந்திப்பது பயனற்றதே ஆகும். எனிலும் உள்ளக அரசியலைப் போல வெளியுறவை கையாள்வது, எதிர்காலத்தையும் நெருக்கடிக்கு தள்ளக்கூடிய அபாயங்கள் காணப்படுகின்றது. ‘உதவி செய்யாவிடினும் பரவாயில்லை; உபத்திரம் செய்யக்கூடாதெனும்’ உரையாடல் பொதுவில் காணப்படுகின்றது. அது ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமானதாகும். ஈழத்தமிழர் அரசியல்வாதிகளின் ஆளுமைக்குள் தமிழ்த்தேசிய அரசியலினை முன்னேற்றகரமாக நகர்த்த முடியாவிடினும், அதனை அழிக்காது இருப்பதே சமகாலத்தின் தேவைப்பாடாகும். கடந்தவாரம் இப்பகுதியில் இந்தியாவின் தமிழகத்தில் இடம்பெற்ற அயலக தமிழர் தின விழாவை மையப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்ட போலி விளம்பரம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இன்னொரு தளத்தில் போலி விளம்பரம் தேர்தல் ஆசனத்தை மையப்படுத்திய போட்டியாக அமையலாம். தேர்தலை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இவ்இயல்பு எதார்த்தமானதாகும். மறுதளத்தில் அயலக தமிழர் தின விழாவில் போட்டி ப...

போலியான விளம்பர அரசியலில் மூழ்கியுள்ள தமிழ் அரசியல்வாதிகள்! -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியல் என்பது நலன்சார் விளையாட்டாகவே அமைகின்றது. இவ்நலன் தேசியத்தின் அடிப்படையிலோ அல்லது தனிநபர்கள் மற்றும் குழுக்கள் அடிப்படையிலோ கட்டமைக்கப்படுகின்றது. சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நலன்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்படுகின்றது. விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் விடுதலைக்கான இயல்பை கொண்டிருக்க தவறியுள்ளது என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. அதனடிப்படையிலேயே 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட வேட்பாளர்களின் தோல்வியினூடாக உறுதி செய்யப்பட்டது. எனினும் அரசியல்வாதிகள் தோல்வி சார்ந்த தெளிவான படிப்பினையை உள்வாங்க தவறியுள்ளார்கள். தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய முலாமிற்குள் போலியான விம்பங்களையே கட்டமைக்கின்றார்கள். கடந்தவாரம் தமிழக அரசின் ஏற்பாட்டிலான அயலக தமிழர் தின விழாவில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் நடத்தையும் போலி விம்பங்களின் தொடர்ச்சியையே தக்கவைத்துள்ளது. இக்கட்டுரை தமிழக அரசின் அயலக தமிழர் தின நிகழ்வில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் திணித்துள்ள போலியான விளம்பரங்களை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தமி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுள்ளதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தேர்தல் காலங்களை பொருத்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான உரையாடல்களும் விவாதங்களும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. இவ்வாறான ஒழுங்கின் தொடர்ச்சியாகவே பீரிஸ்-நீலன் தீர்வுப்பொதி, 13பிளஸ், ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு என்பன விவாதிக்கப்பட்டது. அத்தகைய உரையாடல்களின் இறுதி விளைவு தென்னிலங்கை அரசாங்கங்கள் தமது பதவி காலத்தில் ஈழத்தமிழ் தலைமைகளையும் சர்வதேசத்தையும் தங்கள் வரையறைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதாகவே அமைகின்றது. குறிப்பாக சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான உரையாடலும் விவாதமும் பீரிஸ்-நீலன் தீர்வுப்பொதியை மையப்படுத்தியே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறே மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக்காலப்பகுதியில் 13பிளஸ் மற்றும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு என்பவற்றுக்குள்ளே உரையாடல் மட்டுப்படுத்தப்பட்டது. அவற்றின் செயலாக்கங்கள் பூச்சியங்களாகவே அமைந்துள்ளது. அறிக்கைகளாகவும் நிராகரிப்புகளாகவும் மாத்திரமே பதிவாகியுள்ளது. சமகா...

சிரியாவில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளின் ஆட்சியும் மேற்கு நாடுகளின் ஒருங்கிணைவும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியலை தார்மீக ஒழுக்கமாக சிந்திப்பது தவறானதொரு பார்வையாகும். இது வெறுமனவே நலன்களை மையப்படுத்திய சுழலிலேயே இயங்குகின்றது. தார்மீக அடிப்படையில் விவாதிக்கப்படும் மாயையான ஒழுங்கமைப்பும் ஒருவகையில் நலனை ஈடேற்றி கொள்வதற்கான தந்திரோபாயமாகவே அமைகின்றது. இனப்படுகொலை பேரழிவிலிருந்து கட்டமைக்கப்பட்ட இஸ்ரேல் தேசம் தான், சமகாலத்தின் பலஸ்தீனியர்கள் மீது இனப்படுகொலையை கட்டமைத்து விட்டுள்ளது. தார்மீகம் மீது கட்டமைக்கப்பட்டுள்ள போலியான அரசியல் விம்பம் உடையும் வகையிலான அரசியல் நிகழ்வுகள் வரலாறுதோறும் ஏதொவொரு வகையில் இடம்பெற்றுக்கொண்டே தான் உள்ளது. அவற்றை சரியாக புரிந்து கொள்ளும் தரப்பினரே வெற்றிகரமான அரசியலை வழிநடத்தி செல்கின்றார்கள். சிரியாவின் அபு முகமது அல்-ஜோலனி என அறியப்பட்ட அஹ்மத் அல்-ஷாரா தலைமையிலன ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான ஆட்சியாளர்களை நோக்கி சர்வதேச இராஜதந்திரிகள் நகர்வது, போலியான விம்ப உடைவின் ஒரு சான்றாகவே அமைகின்றது. சர்வதேச பயங்கரவாதிகளுடன் சர்வதேச இராஜதந்திரிகள் கைகுலுக்கி வருகின்றார்கள். இக்கட்டுரை சிரியாவின் புதிய ஆட்சியில் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளின் ஒருங்கிணைப்...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 100 நாட்களும் மலிவான மாயைகள் நிறைந்த ஆட்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 100 நாட்களை கடந்துள்ளது. அவர்களின் தேர்தல் காலப் பிரச்சாரம் மற்றும் நடைமுறை அரசாங்க செயற்பாடுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆரோக்கியமான விளைவுகளையோ அல்லது மாற்றங்களையோ அவதானிக்க முடியவில்லை. சமகாலத்திலும் வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் மிலேச்சத்தனமாக முடக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான விசாரணைகள் தொடர்கின்றது. அரச அதிகாரிகளின் அசண்டைகள் தொடரவே செய்கின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஜனரஞ்சக அரசியலின் பிரச்சாரங்களையே, தேர்தலுக்குப் பின்னரும் அரசாங்கமாகவும் காவிக்கொண்டு திரியும் நிலைமைகளே காணப்படுகின்றது. குறிப்பாக பாராளுமன்றத்தை புதியவர்களூடாக சுத்தம் செய்தல், கல்வி கற்றவர்கள் ஊடாக பாராளுமன்றத்தை நிரப்புதல், அநீதிகளை அம்பலப்படுத்தல் போன்ற மக்களை உணர்வுபூர்வமாக கவரக்கூடிய ஜனரஞ்சக பிரச்சாரங்களையே சமகாலத்திலும் முன்னெடுத்து வருகின்றார்கள். மாறாக ⅔ பெரும்பான்மையை பெற்று அரசாங்கமாக நிலையான மாற்றம் சார்ந்த செயற்பாடுகளை ஒப்பீட்டளவில் காண முடியவில்லை. இக...