Posts

Showing posts from March, 2020

கொரோனா வைரஸை வடக்கு மக்களால் எதிர்கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயுதப்போரின் வடுக்களிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத சூழலில் இன்னுமோர் போர்க்கால சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது வடமாகாண தமிழ் சமூகம். உலகையை உலுக்கி வரும் கொரோனா வைரஸின் தொற்று இலங்கையினையும் பெரும் உலுக்கு உலுக்கி வருகின்றது. இலங்கையில் 100இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 22ஆம் திகதி இலங்கையின் வடபுலத்தே யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து மாவட்டங்களுக்கிடையிலான நகர்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளது. எனிலும் தமிழ் சமூகம் கொரோனா பற்றிய போதிய விழிப்புணர்வினையோ, நிலைமையின் முழுமையான வீரியத்தையோ உணராத சமூகமாகவே காணப்படுகின்றார்கள் என்பது துயரமான பதிவாக உள்ளது. அதனடிப்படையில் இக்கட்டுரை தமிழ் சமூகத்தின் பார்வையிலான கொரோனாவினை விபரிப்பதோடு ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களையும் விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா பற்றிய செய்திகள் பரவுகையில் யாழ்ப்பாண மக்களின் முதல் செயற்பாடாய் பொருட்களின் தட்டுப்பாட்டை தவிர்க்க உணவுப் பொருட்கள் மற்றும் பெற்றோலிய பொருட்களின் விற்பனை நிலையங்களில் பெரு...

அமெரிக்க –சீன வல்லரசுப் போட்டியில், கொரோனா வைரஸ்: உயிரியல் போரின் ஆரம்பமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஆயுதமுறுகல்கள் இல்லை ஆனாலும் உலகநாடுகள் யாவும் போர்க்கால அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளது. சமீபகால நிகழ்வுகள், இன்னுமோர் உலகப்போராயின் அங்கு ஆயுதங்களாய் உயிரியலும் இலத்திரனியலுமே ஆதிக்கம் செலுத்துமென போரியல் நிபுணர்கள் கூறும் கூற்றுக்களையே ஞாபகப்படுத்துகின்றது. கொரோனா “COVID19” இன்று உலகை உலுக்கி வரும் வைரஸ் தொற்று. அதன் உருவாக்கம் மற்றும் பரவுகை தொடர்பிலே அவிழ்க்க முடியாத மர்மங்களே நிறைந்து காணப்படுகின்றது. ஆரம்பத்தில் வெளவாலால் பரவியது என உறுதிப்படுத்தாத தகவலை சீனா தெரிவித்திருந்த போதிலும் இது ஓர் உயிரியல் கசிவு என்பதாயும் செய்திகள் உலாவி வந்தன. இந்நிலையிலேயே இன்று வல்லரசுபோட்டியில் மோதிக் கொள்ளும் அமெரிக்காவும் சீனாவும் நேரடியாக கொரோனா பரவுகை தொடர்பிலே ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இது கொரோனாவின் அரசியலை தெளிவாக உணர்த்துகின்றது. இதனடிப்படையிலேயே இக்கட்டுரை அமெரிக்க–சீனாவை மையப்படுத்திய கொரோனாவின் அரசியலையும் அதுவழிசதிக் கோட்பாடுகளையும் தெளிவாக விபரிக்கின்றது. ஒருபுறம் அனைத்து நாடுகளிலும் கொரோனாவினால் மரணங்கள் குவியும் அதேவேளை, மறுபுறம் கொரோனாவினை மையப்படுத்திய அமெரி...

ஆதரிப்போரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம்; அமைதியை கொண்டு வருமா சிரியாவில்? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலில் அதிகாரத்தை மையப்படுத்தி பூகோள அரசியல் கையாள்கையும் அதுவழி போர்களும் முடிவின்றி தொடர்வனவாகவே உள்ளது. அவ்வாறானதொரு பூகோள அரசியல் போட்டியின் விளைவுகளில் ஒன்றே சமீபகாலத்தில் உக்கிரமடைந்துள்ள சிரியா உள்ளக போரும் இரு தரப்பிற்குமான சர்வதேச நாடுகளின் ஆதரவு நிலைப்பாடுகளும். சிரியாவின் உள்ளக போருக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த 6ஆம் திகதி  ரஷ்யா மற்றும் துருக்கி அரச தலைவர்களுக்கிடையிலே நடைபெற்ற கலந்துரையாடலின் நிறைவில் சிரிய உள்ளக மோதலை மையப்படுத்தி ரஷ்யா – துருக்கி நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனிலும் குறித்த ஒப்பந்தத்தின் வலு தொடர்பிலே அரசியல் பார்வையாளர்களிடம் பல ஐயப்பாட்டுடனான கேள்விகளே தொடர்கின்றது. அதனை மையப்படுத்தியே குறித்த கட்டுரையானது சிரியாவின் உள்ளக போரையும் அதுசார் ரஷ்யா – துருக்கிக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் வலுவையும் விளக்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. சிரியாவின் உள்ளக போர் வரலாறு ஓர் தசாப்தத்தினை தொடுகிறது. 2000ஆம் ஆண்டில் ஹபீஸிற்கு பின்னர் ஆட்சிப்பீடமேறிய அவரது மகனான அல்-அசாத்தினுடைய ஆட்சி காலத்தில் ஏற்பட்ட வேலை...

மலேசியாவில் மாறும் கூட்டுகளும் அரசியல் உறுதிப்பாடும்? -ஐ.வி.மகாசேனன்-

Image
“அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை” என்ற அரசியல் தந்திரமே சமீபத்திய மலேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்கின்றது. ஆளும் கூட்டணியில் மறுசீரமைப்பு மற்றும் அரசாங்கத்தின் மாற்றம்; என்று தொடர்ச்சியான செய்திகளில் மலேசியாவின் அரசியல் கடந்த வாரங்கள் பெரும் இழுபறிக்குள் சிக்கி திணறி வருகின்றது. ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவால் அரசியலில் நீண்ட அனுபவத்தை கொண்ட டாக்டர் துன் மகாதீர் முகமட் பெப்ரவரி 24 அன்று தனது பிரதமர் பதவியையும் தனது ஐக்கிய மக்கள் கட்சியின் தலைமை பதவியையும் ராஜினாமா செய்தார். மலேசிய மன்னர் மகாதீரை இடைக்கால பிரதமராக நியமித்தார். மீள மகாதீர் ஆளும் பாக்காத்தான் கூட்டணியுடன் இணைந்து பிரதமராக முயலுகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் முஹைதீன் யாசின் 8வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.  ஆயினும் பாராளுமன்றில் முஹைதீன் யாசினுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்தை பாக்காத்தான் கூட்டணி விமர்சித்து வருகிறது. இதனடிப்படையில் குறித்த கட்டுரை மலேசியாவின் அரசியல் ஸ்திரமின்மைக்கு காரணமான ஆளும் கூட்டணியின் பிளவு அதுசார் அரசியல் மாற்றங்களை விபரிப்பதாகவ...

சவால்கள் நிறைந்த அமெரிக்க-தலிபான் ஒப்பந்தம் யாருக்கானது? -ஐ.வி.மகாசேனன்-

Image
நீண்டகாலமான போர்வாடை வீசப்பட்ட ஆப்கானிஸ்தான் தளத்தில் கடந்த வாரத்தில் அமைதிக்கான சமிக்ஞைகளும் பேசப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலான போருக்குப் பிறகு, அமெரிக்காவும் தலிபானும் கடந்த பெப்ரவரி 29அன்று ஒரு உடன்பாட்டை எட்டினர். தலிபான்களின் நீண்டகால கோரிக்கையான ஆப்கான் மண்ணிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறுதல் என்பதுடன், ஆப்கான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறாது என்பதற்கான தலிபான்களின் உத்தரவாதம். என்பவற்றை மையப்படுத்தி குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அயினும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இரு நாட்களுள்ளேயே ஆப்கான் இராணுவ தளங்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியதோடு அதற்கு பதிலீடாக அமெரிக்க தலிபான் நிலைகளில் வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அமெரிக்க-தலிபான் ஒப்பந்த இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதனடிப்படையிலேயே குறித்த கட்டுரையானது அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்தம் உருவாக்க பின்னணியையும் ஓப்பந்தத்தின் ஈடேற்றத்தில் உள்ள சவால்களையும் விபரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்...