Posts

Showing posts from April, 2022

காலிமுகத்திடல் போரட்டமும் பெருந்தேசியவாத சிந்தனையின் போக்கும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகாலத்தில் இலங்கை அரசியல் போராட்டங்களால் நிறைந்துள்ளது. மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியின் பங்காளி கட்சிகள் என பல்வேறு முனையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வீரியம் பெற்று வருகின்றது.  “GO Home Gota”  என்பதே இலங்கை முழுவதும் ஒலிக்கும் செய்தியாக உள்ளது. எனினும் வடக்கிலும் தெற்கிலும் போராட்டத்தின் வீச்சும் போராட்டம் தொடர்பிலான உரையாடல்களும் வேறுபட்டு காணப்படுகின்றது. தெற்கில்  “GO Home Gota”   போராட்டத்திற்கு எதிராக  “We Want Gota”   எனும் பிரசுரங்களுடன்  அரசாங்க ஆதரவாளர்கள் ஒருசிலர் போராட்டங்களை முன்னெடுக்க முனைகையில் அதற்கு எதிரான கருத்துக்களே தெற்கில் அதிகளவில் உரையாடப்படுகிறது. எனினும் மாறாக வடக்கில் ' GO Home Gota ' போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு சில இளைஞர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகையில் அப்போராட்டத்தின் மையக்கருத்துக்கள் தமிழ்த்தேசிய பிரச்சினையை உள்வாங்க தவறியுள்ளது என்ற விமர்சனத்துடன் தமிழர் ஆதரவு தேவையற்றது என்பதான கருத்தாடல்களே காணப்படுகிறது. இக்கட்டுரை ' GO Ho...

பாகிஸ்தானின் புதிய பிரதமர் வருகை; அமெரிக்க-பாகிஸ்தான் உறவை பலப்படுத்துமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
பாகிஸ்தான் அரசியல் இயல்பாகவே அதிகம் குழப்பங்களும் நெருக்கடிகளும் நிறைந்ததாகும். கடந்த ஏழு தசாப்த தன்னாட்சி வரலாற்றில் அதிகம் இராணுவ ஆட்சிகளிலும் முரண்பாடுகளின் நீட்சியிலுமேயே பயணித்துள்ளது. பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரமற்ற சூழலினூடாக தென்னாசிய அரசியலை கையாளும் உத்திகளை காலத்துக்கு காலம் வல்லாதிக்கத்துக்காக போட்டியிடும் அரசுகளும் பயன்படுத்திக்கொண்டே வந்துள்ளது. அமெரிக்கா, பனிப்போர்க்காலத்திலும் ஒற்றைமைய அரசியலிலும் தென்னாசியாவினை பாகிஸ்தானூடாகவே அதிகளவில் அவதானித்து வந்தது. எனினும் 2013களுக்கு பின்னர் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியூடாக சீனாவின் செல்வாக்கு தென்னாசியாவிலும் குறிப்பாக பாகிஸ்தானிலும் அதிகரித்து வருவது அமெரிக்காவின் தென்னாசிய சார்ந்த இருப்பில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்நிலையிலேயே அமெரிக்காவின் எதிர்முகாமான சீன மற்றும் ரஷ்சியாவுடன் அதிக நட்பினை வெளிப்படுத்திவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவி நீக்கமும் பாகிஸ்தானின் புதிய பிரதமாக ஷேபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டுள்ளமையும் அமெரிக்காவின் சதி எனும் உரையாடல் சர்வதேச அரசியலில் உரையாடப்படுகிறது. இக்கட்டுர...

பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவினது உரை இனவாதத்தை பிரதிபலிக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் அரசியல் பொருளாதார பிரச்சினை தினசரி அதிகரித்து கொண்டே செல்கிறது. பொருளாதார நிபுணரான ஸ்டீவ் ஹான்கேயின் கூற்றுப்படி, உலகின் மிக உயர்ந்த பணவீக்க நாடுகளின் வரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்தில்(69மூ) உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சமாந்தரமாக காலி முகத்திடலில் கூடாரமிட்டு இளைஞர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் அரசாங்கம் அரசியல் பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்வதில் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முரணாக மீள இனவாத கருத்தியலை முதன்மைப்படுத்தும் பிரச்சாரங்களையே மேற்கொள்கின்றார்கள். குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷாவின் உரை தொடர்பில் பொதுவெளியில் அதிக வாதப்பிரதிவாதங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டுரை இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா அவர்களது உரையின் அரசியல் விளைவுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-11(2022)அன்று இரவு மக்களுக்கான விசேட உரையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா, அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்துமாறு போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், அவர்களின் எதிர்ப்பின் ஒவ்வொரு நொடியும் நாட்டிற்கு முக்கியமான டொலர்களை செலவழிக்கிறது எ...

தென்இலங்கையின் பொருளாதார முற்றுகைப் போராட்டமும் தமிழர்களின் அரசியல் கோரிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார ஸ்திரமற்ற சூழல் மக்களை வீதியில் இறக்கியுள்ளது. குறிப்பாக, தென்னிலங்கையின் பல பாகங்களிலும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அம்மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக அரசாங்கமும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. மேலும், போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசாரகாலச்சட்டத்தினை பிரயோகித்து வருகின்றது. எனினும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி தென்னிலங்கையில் மக்கள் போராட்டங்கள் தினசரி வீரியம் பெற்று வருகின்றது. ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை, பாராளுமன்றம், மற்றும் அமைச்சர்கள், அரசாங்க உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பே பெருந்திரளான மக்கள் கூடி அரசாங்கத்தை  பதவி விலக கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். எனினும் வடக்கு-கிழக்கு தமிழர் பரப்பில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வீரியம் பெற்றிருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அடையாள எதிர்ப்பு போராட்டங்களே நடைபெற்று வருகின்றது. அதேநேரம் தென்னிலங்கை மக்களின் அரசாங்கத்துக்கு எதிரான போராட்...

பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி தொடருவதற்கான வாய்பு நிலவுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இருபத்தொராம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு எனும் கருத்தியல் சர்வதேச அரசியலில் அதிக தாக்கத்தை பெற்றுள்ளது. அதனடிப்படையில் வல்லாதிக்க போட்டி நாடுகளும் ஆசிய நாடுகள் மீதே அதிக பார்வையை குவித்து வருகின்றன. எனினும் ஆசிய நூற்றாண்டை உறுதிப்படுத்தும் காரணிகளில் ஒன்றான இந்து சமுத்திரத்தின் பிராந்திய வலயமான தென்னாசிய நாடுகளின் அரசியல் ஸ்திரத்தன்மை பெரும் அச்சுறுத்தலுக்குள் காணப்படுகிறது. குறிப்பாக இலங்கை பொருளாதார நெருக்கடியால் அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. அமைச்சர்கள் முழுமையாக இராஜினாமா செய்த நிலையில் மூன்று அமைச்சர்களுடன் அதிலும் நிதியமைச்சர் இல்லாத அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் காணப்படுகின்றது. அத்துடன் மக்கள் அரசாங்கத்தை அதிகாரத்தை விட்டு வெளியேறுமாறு தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இவ்வாறானதொரு அரசியல் பொருளாதார நெருக்கடி சூழலையே பாகிஸ்தானும் எதிர்கொண்டுள்ளது. எனினும் இலங்கையிலிருந்து வேறுபடும் வகையில் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளால் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனினும் சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ச...