Posts

Showing posts from June, 2022

மேற்காசிய நாடுகளால் அரவணைக்கப்படும் இஸ்லாமிய சமூகங்களும் நிர்கதியாகும் ஈழத்தமிழரும்!

Image
இலங்கை 1948ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. அதேநேரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியால், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷh பதவி விலகக் கோரி போராட்டக்காரர்கள் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளனர். இந்நெருக்கடியை சீர்செய்ய இலங்கை தனது பிராந்திய மற்றும் சர்வதேச நட்பு நாடுகளிடம் உதவியை கோரி வருகின்றது. மகிந்த ராஜபக்ஷh பிரதமர் பதவி விலகிய பின் பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை மாத்திரம் கொண்டிருந்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக்கப்பட்டமைக்கு முன்வைக்கப்பட்ட பிரச்சாரமும் சர்வதேச ரீதியாக ரணில் விக்கிரமசிங்க உதவிகளை பெறக்கூடியவர் என்பதாகவே அமைந்தது. எனினும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகிய பின்னர் பொருட்களுக்கான மக்களின் வரிசைகளே அதிகரித்துள்ளது. முன்னர் வீதிகளில் வாகனங்கள் செல்வதாலேயே போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. தற்போது வாகனங்கள் எரிபொருளுக்காக வீதியின் இருமருங்கிலும் வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல்கள் உருவாகி உள்ளது. பிரதமர் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை முன்வைக்...

இந்தியாவின் மூலோபாய சுற்றிவளைப்புக்குள் இலங்கையின் பௌத்த அடையாளம்? -ஐ.வி.மகாசேனன்+

Image
மதச்சார்பின்மை பற்றிய உரையாடல்கள் நவீன அரசியலில் ஒரு பிரதான முற்போக்கான விடயமாக அவதானிக்கப்படுகின்ற போதிலும், அரசுகள் நாகரீக மோதலுக்குள் மற்றும் நாகரீக பிணைப்புக்களுக்குள்ளேயே சர்வதேச உறவுகளை வடிவமைத்து வருகின்றனர். இவ்உலக ஒழுங்கின் தொடர்ச்சி தன்மையிலேயே இலங்கையும் காணப்படுகின்றது. அரசியல் பொருளாதார நெருக்கடியை மையப்படுத்தி அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, போராட்டங்களை முன்னெடுக்கும் இளையோர் சில முற்போக்கான விடயங்களை வெளிப்படுத்துகின்றனர். எனினும் இலங்கை அரசாங்கம், கடும் அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியிலும், தனது மரபுரீதியான பௌத்த இனவாதத்தை முதன்மைப்படுத்திய அரசியலையே தொடர்ச்சியாக பேணி வருகின்றது. இலங்கையின் சமகால அரசியல் நிலவரங்களும் அதனையே வெளிப்படுத்தி வருகின்றது. அத்துடன் இலங்கையின் பிராந்திய தேசமாகிய இந்தியாவும் இலங்கையின் பௌத்த நாகரீகத்தை மையப்படுத்தி இலங்கையுடனான உறவை சீர்செய்யும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளதை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிகாட்ட முனைகிறார்கள். இக்கட்டுரை அரசியல் பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் இலங்கையின் பௌத்த தேசியவாதத்தை மையப்படுத்தி இடம்பெறும்...

தமிழகமும் ஈழத்தமிர்களிடமிருந்து விலகிச் செல்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் பொருளாதார பிரச்சினை தினசரி மாறுபட்ட வடிவத்தில் பரிணமித்துக்கொண்டே செல்கின்றது. தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு ஒரு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து, எரிவாயு, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பசியின் அளவுகள் அதிகரித்து வருகின்றன. உலக நாடுகள் இலங்கையின் நிதிப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், நட்பு நாடுகள் எதிர்பார்த்த ஒத்துழைப்பினை வழங்கவும் முன்வரவில்லை. இந்தியா, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) மட்டுமே உதவ முன்வருகின்றன. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது. இந்தியா மத்திய அரசும், தமிழக அரசுமே இலங்கையுடனான நட்பை வெளிப்படுத்தியுள்ளது. தமிழக அரசு இலங்கை அரசுடன் வளர்த்து கொள்ளும் உறவு ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் அபாயச்சூழலை அடையாளப்படுத்துகிறது என்ற அச்சம் ஈழத்தமிழ் பரப்பில் உரையாடப்படுகின்றது. இக்கட்டுரை ஈழத்தமிழருடனான தமிழக அரசின் உறவின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர், இந்தியா குறிப்ப...

ஜனாதிபதி எதிர் உயர் நீதிமன்ற தீர்ப்பு புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கு வழிவகுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் தற்போது முதன்மையான உரையாடலாக அரசியலமைப்பு சீர்திருத்தத்தினூடாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சீர்செய்வது தொடர்பிலான விவாதமே காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் 19வது சீர்திருத்த ஏற்பாடுகளை மீள கொண்டுவரும் வகையிலான 21வது சீர்திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் 21வது சீர்திருத்தம் தொடர்பிலான உரையாடலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தியிருந்தார். எனினும் 21வது சீர்திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மாத்திரமின்றி ஆளும் கட்சியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் அதிகளவு சந்தேகங்கள் இலங்கை அரசியல் பரப்பில் உலாவுகிறது. அத்துடன் கடந்த வாரம், அரசியலமைப்புரீதியாக காணப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் அரசியலமைப்புரீதியாக கட்டமைக்கப்பட்ட நீதித்துறையே தீர்ப்பளித்துள்ளது. இது இலங்கை அரசியலமைப்பின் இயல்பு தொடர்பிலான வாதங்களையும் உருவாக்கியுள்ளது. அதிகார முரண்பாடுகள் நிறைந்த இலங்கை அரசியலமைப...

அவுஸ்ரேலியாவின் ஆட்சி மாற்றம் சீனாவுடனான உறவை புதுப்பிக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2021-2022ஆம் ஆண்டுகளில் உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றாலும் ரஷ்சியா-உக்ரைன் போரின் விளைவினாலும் அரசியல் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், ஜனநாயக தேர்தல்களும் ஒருங்கே அரங்கேறிக்கொண்டு தான் உள்ளது. சில நாடுகள் ஆட்சி மாற்றத்தை வரவேற்றுள்ளதுடன், சில நாடுகள் முன்னைய ஆட்சியை ஏற்று மீளவும் வாய்ப்பளிக்கும் சூழலினையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறானதொரு சர்வதேச அரசியல் பின்னணியிலேயே, அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஆட்சி மாற்றமொன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவை வலது பக்கம் தள்ளிய 'ஒரு புல்டோசர்' என்று தன்னை அழைத்த தற்போதைய பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன், அவரது சவாலான போட்டியாளர் தொழிற்கட்சியின் அந்தோனி அல்பானீஸால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் ஏறக்குறைய ஒரு தசாப்தகால பழமைவாத தலைமைக்குப் பிறகு மோரிசனை முற்றிலுமாக நிராகரித்து, மிதவாதம் வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றியின் பின்னர் இந்தோ-பசுபிக் அரசியல் வெளியுறவிலும் மாற்றங்களுக்கான எதிர்வுகூலை சர்வதேச அரசியல் அவதானிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இக்கட்டுரை அல்பானீஸின் தேர்தல் வெற்றியின் பி...