Posts

Showing posts from October, 2022

தென்னிலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல்கள் பெருமளவில் மட்டுப்படுத்தப்பட்டது. இன்றைய அரசியல் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமாக தேசிய இனப்பிரச்சினை விளைவுகளை தமிழ்த்தரப்பு அடையாளப்படுத்திய போதிலும், தென்னிலங்கை அரசியல் தரப்பு தேசிய இனப்பிரச்சினை சார்ந்த உரையாடலை முழுமையாக தவிர்த்து வந்தன. அரகலவில் தேசிய இனப்பிரச்சினை உரையாடப்பட்ட போதிலும், மறுதளத்தில் அரகல இராணுவத்தை உயர்நிலையில் பேணியதனூடாக தேசிய இனப்பிரச்சினையின் கணதியை சரியாக உள்வாங்கியிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே சமகாலத்தில் தென்னிலங்கை அரசியல் தரப்பினரால் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினை தீர்வானது இலங்கையில் காணப்படும் தேசிய இனங்களின் ஒருமித்த கருத்துக்களுடன் உருவாக்கப்பட வேண்டும். மாறாக ஒரு தரப்பின் விருப்புடன் திணிக்கப்படுகையில் ஏற்படக்கூடிய விளைவுகள் கடந்த கால அனுபவங்களாய் காணப்படவே செய்கிறது. இக்கட்டுரை தென்னிலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான திடீர் உரையாடலுக்கான காரணத்தையும், தமிழ் தர...

சீனா மீதான ஈழத்தமிழரின் எதிர்ப்பரசியல் தந்திரோபாய ரீதியானதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தினால், இலங்கையினை தமது தேசிய நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசு நாடுகள் போட்டிபோடுகின்றன. அதற்கு சாதகமாக  இலங்கையின் தேசிய இனங்கள் மீது அக்கறை செலுத்துவதனூடாக தமது தேசிய நலனை ஈடேற்றி கொள்ள அந்நாடுகள் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன. இதனை சிங்கள தேசிய இனம் சிறப்பாக கையாண்டு வருகின்றது. அரசுடைய தரப்பாக தமது அரச இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி சர்வதேச ஆதிக்க நலனில் எதிர்முனையாக உள்ள அரசுகளையும் ஓரணியாக தமது நலனை ஈடேற்றி கொள்ள பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் சமாந்தரமாக கையாண்டு தமது நலனை சிங்கள தேசிய இனம் நிறைவேற்றிக்கொள்கிறது. எனினும் தமிழ்த்தேசிய இனம் அவ்வாறான இராஜதந்திர பொறிமுறைக்குள் நகர்வதில்லை என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. குறிப்பாக அண்மைக்காலத்தில் வடக்கு-கிழக்கு மக்ககளின் மீது அக்கறை செலுத்துவதான காட்சியை சீனா அரங்கேற்றி வருகின்ற போதிலும், சீனாவை எதிர்மனப்பாங்குடன் சீனாவின் உதவித்திட்டங்களை முழுமையாக விமர்சிக்கும் உரையாடல்களே தமிழ்ப்பொதுவெளிகளில் காணப...

சிரியாவின் விசாரணைப் பொறிமுறை ஈழத்தமிழருக்கு வாய்ப்பானதாக அமையுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட்டதை தொடர்ந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதுவழி இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை என்பன சர்வதேசமயப்படுத்தப்பட்டதாக நிலைபெற்றது. அவ்வகையில் சர்வதேச நீதிப்பொறிமுறைகள் தொடர்பில் கடந்த 12 ஆண்டுகளில் பல வேறுபட்ட உரையாடல்கள் ஈழத்தமிழர் அரசியல் களத்தில் முதன்மைபெற்று வருகின்றது. குறிப்பாக சமகால ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் முதன்மை பெறும் உலகளாவிய நியாயாதிக்கம் ( Universal Jurisdiction ) மற்றும் ஈழத்தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான சர்வதேச குற்றவியல் நீதியமன்றங்களின் ( International Criminal Court ) எல்லை வீச்சு தொடர்பில் கடந்த இதழ்களில் இப்பகுதியில் உரையாடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே சிரியாவில் ஐ.நா பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 'சர்வதேச, பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான பொறிமுறை' ( International Impartial And Independent Mechanism ) என்று முறையாகக் குறிப்பிடப்படும் விசேட விசாரணைப்பொறிமுறையின் ஈழத்தமிழருக்கான வாய்ப்புக்களும் அவதானிக்க வேண்டிய விடயமாக உள்ளது. இக்கட்டுரை சிரயாவின் விசேட விசாரணைப...

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பிரச்சாரம் சாத்தியமான அரசியல் வியூகமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சாட்சிகளை பேணாப்படாது அழிவடையும் சூழலில், 'சாட்சிகள் இல்லாத போர்'(War Without Witness) என்று குறிப்பிடப்படும், இலங்கை ஆயுத மோதல்கள் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கடந்துவிட்டன. போரின் கடைசி கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை. இலங்கையின் இனப்படுகொலை 2012ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமை பேரவையில் மனித உரிமை விவகாரமாக முன்னெடுக்கப்படுக்கப்பட்டது முதல் இலங்கையின் பிரதான கட்சிகள் தனியாகவும், கூட்டரசாங்கமாகவும் ஆட்சியமைக்கப்பட்ட போதிலும் மனித உரிமை விவகாரமாகவும் தீர்வை வழங்க தயாரில்லாத நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கைகளூடாக நீதிப்பொறிமுறையை வழங்கி செல்லக்கூடிய ஐ.நா மனித உரிமைப்பேரவை சர்வதேச நாடுகளிடம் பாரப்படுத்தும் வகையிலான உலகளாவிய நியாயாதிக்க விசாரணையையே(Universal  Jurisdiction)  முதன்மைப்படுத்தி வருகின்றனர். எனினும் ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் கோரிக்கையாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம்(International Criminal Court) பாரப்படுத்த வேண்டும் என்பதாகவே அமைகின்றது. கடந்த ...

உலகளாவிய நியாயாதிக்க விசாரணை ஈழத்தமிழர்களுக்கு முழுமையான நீதியை வழங்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை மனித உரிமை விவகாரமாக மற்றும் போர்க்குற்ற விவகாரமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நகர்த்தி வருகின்றது. 2012ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முதலில் கொண்டு வரப்பட்ட 19/2 தீர்மானம் முதல் இறுதியாக 2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானம் வரை வேறுபட்ட நீதிப்பொறிமுறைகளை பரிந்துரைத்து வருகின்றது. எனினும் இதன் சாத்தியப்பாடுகள் அதிகளவு விமர்சனப்பார்வையுடனேயே செயற்பாடின்றி கடந்து சென்றுள்ளது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் அரசின் இறைமையை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்துரைக்கும் நீதிப்பொறிமுறைகளை நிராகரிகரிக்கும் அதேவேளை தமிழ் அரசியல் தரப்பு இனப்படுகொலையை முன்னிறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு(ICC) இலங்கையை பரிந்துரைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையிலேயே இவ்வாண்டு நடைபெறும் 51வது கூட்டத்தொடரில், உலகளாவிய நியாயாதிக்கம் ( Universal Jurisdiction ) எனும் முறைமை பற்றிய உரையாடல் முன்னகர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டுரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி...