Posts

Showing posts from November, 2022

ரணில் விக்கிரமசிங்காவின் நல்லிணக்க இராஜதந்திரம் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை இலக்கு வைத்துள்ளதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
நல்லிணக்கம் என்பது உலக நாடுகளில் பல்லின சமூக கட்டமைப்பு உள்ள நாடுகளில் போருக்கு பின்னரான காலத்தை திறம்பட கையாண்டு பல்லின சமூக கட்டமைப்பிடையே சுமூக உறவை வளர்ப்பதற்கான பொறிமுறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் நல்லிணக்கத்துக்கான தேவைப்பாடு நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருப்பினும், 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு, அதன் வடுக்களை களைவதற்காக இலங்கையில் கொண்டுவரப்பட்ட சர்வதேச உரையாடலாகவே நல்லிணக்க வரவு அமைகிறது. எனினும் இலங்கையில் நல்லிணக்கம் என்பது சர்வதேச உரையாடலுக்கு அமைய இடம்பெறவில்லை. அரசியல் நெருக்கடியை கையாள்வதற்கான இராஜதந்திர பிரச்சாரமாகவே இலங்கை அரசாங்கங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் கடந்த ஆட்சிக்காலங்களும் வேறுபட்டதாக அமைந்திருக்கவில்லை. இந்த பின்னணியிலேயே தற்போதைய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முதன்மைப்படுத்தும் நல்லிணக்கம் சார்ந்த உரையாடல்களும் தமிழ் மக்கள் மத்தியில் அதிக சந்தேகங்களை உருவாக்குகிறது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க உரையாடலின் அரசியல் பின்புலத்தை தேடுவதாவே உருவாக்க...

ரணில் விக்கிரமசிங்காவின் வரவு-செலவுத்திட்டம் அரசியல் பொருளாதாரத்தில் சீர்திருத்தத்தை உருவாக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது, கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளின் வெளிப்பாடே ஆகும். குறிப்பாக இலங்கை அரசாங்கங்கங்கள் பொருளாதார முதலீடுகளுக்கு அப்பால் தொடர்ச்சியாக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டையே அதிகமாக முதன்மைப்படுத்தி வந்துள்ளதுடன், அதிகம் சொல்லும் செயலும் வேறுபட்டிருந்தன. இது பொருளாதார நிபுணர்களாலும் அதிகளவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்பின்னணியில் பொருளாதார நெருக்கடியை நீக்குவதாக கூறி அரசாங்கத்தை பொறுப்பெடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்காவின் 2023க்கான வரவு-செலவுத்திட்டம் அதிக எதிர்பார்க்கையை உருவாக்கியது. இப்பின்னணியிலேயே நவம்பர்-14அன்று ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கா தனது முழு ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். வரவு-செலவு திட்ட உரையின் முகப்பில் பொருளாதாரத்தின் மீட்சி மற்றும் சீர்திருத்தமே பிரதான இலக்கு என ரணில் விக்கிரமசிங்கா முன்மொழிந்துள்ளார். எனினும், உள்ளடக்கங்கள் ஒப்பீட்டளவில் பெரிய புரட்சிகரமான சீர்திருத்தங்களை உள்ளடக்கி இருக்கவில்லை என்பதே பொருளியல் நிபுணர்களின் கருத்தாடலாக காணப்படுகின்றது. இக்...

ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிங்கள கட்சிகள் ஓரணியில் திரளுமா? -சேனன்-

Image
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலான உரையாடல்கள், தென்னிலங்கை அரசியலில் சமகாலத்தில் முதன்மையான பிரச்சாரமாக காணப்படுகின்றது. எனினும் இதன் நம்பகத்தன்மை தொடர்பில் பல சந்தேகங்களை கடந்த கால அனுபவங்கள் தமிழர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒத்துழைப்பை வழங்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அரசுகளின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலான பிரச்சாரமாகவே தென்னிலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த பிரச்சாரங்கள் அவதானிக்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பிலான பலவீனங்களை கூறி அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை கிடப்பில் போடும் நகர்வே தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தென்னிலங்கை பிரச்சாரத்தின் இறுதி படிமுறையாக தமிழ் அரசியல் அவதானிகளின் கணிப்பு உள்ளது. எனினும் அண்மையில் தென்னிலங்கையில், ஈழத்தமிழரசியல் தரப்பில் உள்ள ஒற்றுமையின்மையை முதன்மைப்படுத்தி இடம்பெற்றுள்ள உரையாடல்கள் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேசிய இனப்பிரச்சினை தீர்வுக...

போதைக்கலாசாரத்திற்கு எதிரான போரிற்கு ஈழத்தமிழர்கள் தயாராவது வேண்டும் -ஐ.வி.மகாசேனன்-

Image
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பும் அதுசார்ந்த தாக்கங்களும் பெருமளவில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையையே போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருவதாகவே யாழ்ப்பாணத்து நாளிதழ்களின் செய்தி தலைப்புக்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாண பண்பாடு பாரம்பரியமாக கந்தபுராண கலாசார மரபுடையதென்ற உரையாடல் காலம் காலமாக தமிழ் மக்களிடையே ஆழமாக காணப்படுகின்றது. எனினும் போருக்கு பிந்தைய சூழலில் 2013ஆம் ஆண்டை அண்மித்த காலப்பகுதியில் வாள்வெட்டு கலாசாரம் தொடர்பான உரையாடல் யாழில் முதன்மை பெற்றது. தற்போது அதன் தன்மை குறைவடையவில்லையாயினும், அது பற்றிய உரையாடல் தளர்வுற்று, இளையோரிடையே வீரியத்தை பெற்றுள்ள போதைப்பாவனை அதிகமாக முதன்மை செய்திகளாக யாழ்ப்பாணத்து நாளிதழ்களில் இடம்பிடித்துள்ளது. எனினும் இதனைக்கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆரோக்கியமான செயற்பாடுகள் அத்தகையை முதன்மையை பெறத்தவறியுள்ளது. போதைப்பொருள் பிரயோகம் இளைஞர்களிடையே வீரியம் பெற்றுள்ளமை தொடர்பிலான அரசியல் தாக்கங்கள் பற்றிய சந்தேகங்கள் தமிழ் மக்களிடையே அதிகமாக காணப்படும் சமதளத்தில்,...

தமிழர்களை சித்திரவதை செய்த 'புனர்வாழ்வு' சட்டமூலம் அரகலய போராட்டக்காரரை பாதுகாக்க முயலுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை பேரினவாத எதேச்சதிகார சக்திகள் தமது நலன்களை ஈடேற்றிக்கொள்வதற்கு காலத்துக்கு காலம் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கங்களூடாக தமக்கு எதிரான செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு இயன்றளவு அரச இயந்திரத்தை தொடர்ச்சியாகவே பயன்படுத்தி வந்துள்ளது. குறிப்பாக சுதந்திர இலங்கையின் 74ஆண்டுகால அரசியலில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தேசவிரோதமாக மற்றும் பயங்கரவாதமாக காட்சிப்படுத்தி ஒடுக்குவதற்கும், தமிழ் மக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களை நியாயப்படுத்தவும் அரச இயந்திரத்தை வெகுவாக பயன்படுத்தி வந்திருந்தது. 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தின் எதிர்த்தரப்பாக முஸ்லீம்களும் மாறிய நிலையில் முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறைகளை நியாயயப்படுத்தவும் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தை பயன்படுத்தி வந்தது. இலங்கையின் தமிழ், முஸ்லீம் தேசிய இனங்கள் அரச பயங்கரவாத செயல்களை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த போதிலும் சிங்கள தேசிய இனம் இலங்கை அரசை தமது அரணாக அதிகம் பாதுகாத்து வந்தது. எனினும் 2022ஆம் ஆண்டு அரகல்யாவுக்கு பின்னர் அரச பயங்கரவாதம் சிங்கள தேசிய இனத்தின் மீதும் தனது...

தமிழ்த்தேசிய அரசியல் தரப்பின் பிளவுகள் தமிழின அழிப்பின் வடிவமே! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ்த்தேசியத்துக்குள் பிளவுகளும் முரண்பாடுகளும் தமிழ்த்தேசிய வரலாற்றுடன் தவிர்க்க முடியாத இணைப்பாகவும் தமிழ்த்தேசிய வீழ்ச்சிக்கான களமாகவும் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது. தமிழ்த்தேசிய கட்சியாக மக்களால் அடையாளப்படுத்தி பேணப்பட்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் 2009களுக்கு பின்னர் கூட்டு கட்சிகளிடையே முறிவுகள் ஏற்பட்டு தொடர்ச்சியாக சிதைவுற்று வந்தது. 2010இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணணி, 2015இல் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் 2019களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் ரெலோ கிளையென தொடர்ச்சியாக கூட்டமைப்பின் கூட்டிலிருந்து வெளியேறின. அதன் எதிர்விளைவுகளை 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் முடிவுகளிலும் அவதானிக்கக்கூடியதாக அமைந்தது. இந்நிலையில் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் முதன்மையான கட்சியாக காணப்படும் தமிழரசுக்கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட்டு பூதாகாரமான உரையாடலை ஆரம்பித்துள்ளது. தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் பிளவுபட்டுள்ள தமிழ்த்தேசிய கட்சிகளிடையே கூட்டை மீளவும் கட்டமைப்பது தொடர்பான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்முவரும் சமதளத்தில் தமிழரசுக்கட்சிக்குள் முரண்பாடு...