Posts

Showing posts from March, 2023

ஈழத்தமிழர் அரசியலுக்கு மத அடையாளம் அல்ல தமிழ்த்தேசிய அடையாளமே அவசியம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியம் என்பது மொழியால், இனத்தால், பண்பாட்டால் மற்றும் நிலத்தால் கட்டியெழுப்பப்பட்டதாகும். மாறாக மதப்பல்வகைமை என்பது தமிழ்த்தேசியம் அரவணைத்து சென்ற ஜனநாயக விழுமியமாகவே அமைகின்றது. எனினும் சமகாலத்தில் தமிழ்த்தேசிய எல்லைக்குள் மதப்பிரிவுகளால் பிளவுகள் அதிகரித்து செல்கின்றது. அதேவேளை மேய்ப்பானற்ற மந்தைகளாக நம்பிக்கைகள் மீதான விமர்சனங்களாலும் தமிழ்த்தேசியம் சுருங்கிச்செல்லும் நிலைமைகளே ஈழத்தமிழ் அரசியல் அரங்கில் சமீபத்திய முதன்மையான வெளிப்பாடாக காணப்படுகின்றது. குறிப்பாக, சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழ்த்தேசியத்தின் மீதான ஆக்கிரமிப்பாக சைவ சமயத்தின் மீது ஆக்கிரமிப்பை நிகழ்த்துகையில், சைவ சமயம் தன் தற்காப்புக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தேசியத்திற்கு எதிரானதாக சாடுவது, சைவ சமய நம்பிக்கை உடையவர்களை தமிழ்த்தேசியத்திலிருந்து விலக வழிகோலுகிறது. மாறாக தமிழ்த்தேசியத்துக்குள் இந்து எதிர் கிறிஸ்தவ மோதல் உக்கிரம் பெற்று வருகின்றமையும் மறுக்க இயலாத யதார்த்தமாகவே காணப்படுகின்றது. இக்கட்டுரை பன்முக கலாசாரத்தினூடாக தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாப்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள...

தமிழக-ஈழத்தமிழ் மீனவர் நெருக்கடியும் தமிழர் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் சர்வதேசம் மற்றும் பிராந்திய ரீதியில் பலமான பிணைப்பை கட்டமைக்க முடியவில்லை என்பது நீண்டகால உரையாடலாகவே காணப்படுகின்றது. மறுதளத்தில் பலமான உறவுகளை ஈழத்தமிழரசியலின் முதிர்ச்சியற்ற நகர்வுகளால் இழக்கின்ற பரிதாபங்களும் அரங்கேறுவது தமிழர்களின் துர்ப்பாக்கியமாக காணப்படுகின்றது. கைக்கெட்டும் நிலையில் தன்னியல்பாக கிடைப்பவை மீது காணப்படும் அலட்சியப் போக்கானது, அது பிறர்வசமாகின்ற போது, அதனை எண்ணி வருத்தப்படுவது மனித இயல்பாகும். ஈழத் தமிழர்களது தொப்புள்கொடி உறவின் வழியே, மிகப்பெரும் ஆதரவு தளமாக காணப்படும் தமிழ்நாட்டை நோக்கி இலங்கை அரசின் பார்வை பதிந்துள்ளதை தொடர்ந்து, ஈழத்தமிழர் பரப்பிலும் அவ்வாறானதொரு வருத்தப்பாடு மேலோங்கி வருவதனையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மீனவர்களை மையப்படுத்தி தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமான நெருக்கடியே, தமிழக-ஈழத்தமிழர்கள் உறவின் பின்னடைவுகளுக்கும் ஆதாரமாகின்றது. இக்கட்டுரை தமிழக-ஈழத்தமிழ் மீனவர்களுக்கிடையிலான நெருக்கடிசார் அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இனம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றின் பிணைப்புகள் பல நூற்றாண்டுகளாக தம...

ஜெனிவா களத்தில் இலங்கை அரசியல்! உள்ளூராட்சி சபை தேர்தல் களத்தில் தமிழரியல்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகவே மனித உரிமைகள் என்பதனூடாக சர்வதேச நெருக்குவாரத்தை எதிர்கொண்டு வருகின்றது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான மூலோபாய நகர்வுகளால் நெருக்கடிகளை கடந்து செல்லும் சூழலும் காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த ஒரு தசாப்தங்களாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வருடந்தோறும் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகளால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும், தீர்மானங்களின் இயங்கு தன்மை தொடர்பில் சர்வதேச சக்திகள் இறுக்கமான முடிவுகளை தொடராமை என்பது இலங்கை அரசாங்கத்தின் மூலேபாய நகர்வின் வெற்றியாகவே அவதானிக்கப்படுகின்றது. மறுதளத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு என்பது சர்வதேச பொறிமுறையில் இலங்கையின் மனித உரிமை என்ற உரையாடலுக்குள்ளேயே பொதிந்துள்ளது. எனினும் இலங்கை தொடர்பான மனித உரிமை விவகாரங்களில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் ஆரோக்கியமான அரசியல் விழிப்பினை கொண்டிருக்கவில்லை என்பதனையே கடந்த ஒரு தசாப்த கால நகர்வுகளும் உணர்த்தி உள்ளது. குறிப்பாக 2023இன் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால மீளாய்வு (UPR), சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் ...

நீளும் ரஷ்யா-உக்ரைன் போரும் மாறும் உலக அரசுகளின் போக்கும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகம் பெரும் போர் பதட்டத்துக்கான விழிப்புடன் ஓராண்டை கடந்துள்ளது. குண்டுவெடிப்புகள், கொலைகள், அழிவுகள் மற்றும் அரசியலை மாற்றியமைப்பது என்பன தொடர்ச்சியான போர் சோர்வுக்குள் அடிபணிவது எளிது. ஆனால் ரஷ்சியா-உக்ரைன் போர் ஒரு வருடத்திற்குப் பிறகும், முடிவின்றி பலம் பெறுவதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போலந்துக்குச் செல்வதற்கு முன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக ஒரு திடீர் விஜயம் செய்தார். இது உக்ரைனை உளவியல்ரீதியாக யுத்தம் மீதான சோர்வை தளர்த்துவதாக அமைய கூடியது. அவ்வாறே பெப்ரவரி இறுதியில் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பலத்தை அதிகரிப்பதைக் குறிப்பதாக ஒரு முரண்பாடான உரையை நிகழ்த்தினார். இவை போரின் நீடிப்பையே உறுதி செய்கின்றன. ரஷ்சியா உக்ரைன் போர் உலகெங்கிலும் தொடர்ச்சியாக அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கி வருகின்றது. எனினும் முழுமையாக உலகம் நாடுகள் ஒருங்கிணைந்து ரஷ்சியா-உக்ரைன் போரை தடுக்க முன்வர தயாரில்லாத நிலையிலேயே காணப்படுகின்றது. இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் போரில் உலக அரசுகளின் நிலைப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.  ர...

வலுவற்ற உள்ளகபொறிமுறையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையும் -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் நல்லிணக்கம் பற்றிய உரையாடல்கள், 2009ஆம் ஆண்டில் ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பின்னர் சர்வதேச திணிப்பாக தொடர்ச்சியாக நிலைபெற்று வருகின்றது. எனினும் நல்லிணக்கத்தின் செயற்பாடற்ற நிலைமையையே, அரச ஆதரவுடனான சிங்கள பௌத்தத்தின்  மேலாதிக்க செயற்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றது. அரசிற்கு தனித்துவமான இறைமை எனும் மேலான அதிகாரத்தை கூறிக்கொண்டு சிங்கள பௌத்த அரசு மேற்கொள்ளும் இனமேலாதிக்க செயற்பாடுகளை சர்வதேச அரசுகளும், மனித உரிமை நிறுவனங்களும் மௌனித்து அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தி கடந்து செல்வது, இலங்கை ஏனைய தேசிய இனங்கள் வாழத்தகுதியற்ற நிலைமையையே உணர்த்துகின்றது. அரசு தனது முழுமையான கட்டமைப்பினூடாகவே இன ஒடுக்குமுறை வரலாற்றை தொடர்கின்றது. கடந்த வாரம் நீதிமன்ற தீர்ப்பை மீறி இராணுவ பொலிஸ் ஆதரவுடன் வெடுக்குநாறி மலை மீதான விகாரை நிர்மாணிப்பு அதனையே உறுதி செய்கின்றது. எனினும் மறுதளத்தில் வடக்கிற்கு விஜயம் செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமிழர்கள் உள்ளக பொறிமுறையை ஏற்பதாக அறிக்கையிட்டுள்ளமை முரணாகவே அமைகின்றது. இக்கட்டுரை சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீதித்துறை தேசிய இனங்கள் மீத...