Posts

Showing posts from June, 2023

சிங்கள பௌத்த அரசுக்கான சர்வதேச நெருக்கடியும் வடக்கின் பௌத்த மேலாதிக்கமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகாலத்தில் இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கருத்துக்களும், அதற்கு எதிரான தமிழ் அரசியல் தரப்பினது கருத்துக்களுமே ஆழமாக நிறைந்து உள்ளது. இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்குவாரத்தினை எதிர்கொள்கின்றது. மறுதளத்தில், ஈழத்தமிழர் அரசியல்பரப்பில் ஜெனிவாவை மையப்படுத்திய அரசியல் களம் காணப்படுகின்றது. எனினும், தென்னிலங்கை மற்றும் தமிழ் அரசியல் தரப்பினரிடையே யாவற்றையும் மிஞ்சி சிங்க பௌத்த பேரினவாத அரசியலே பிரதான உரையாடலாக காணப்படுகின்றது. தமிழரசியலும் தென்னிலங்கையின் இனவாதத்தினை கண்டனம் செய்வதுடன் தமது எதிர்ப்பு அரசியலினை பதிவு செய்து நகர்ந்து செல்கின்றார்கள். மாறாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வீச்சு அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறியவும் பகிரங்கப்படுத்தவும் வினைத்திறனான அரசியலை முன்னகர்த்த தயாரில்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை சமகாலத்தில் உயர்வீச்சுப் பெறும் சிங்கள பௌத்த பேரினவாத பிரச்சார தேவைப்பாடுகளை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசாங்கங்கள் வரலாறுதோறும் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை பகுதியளவில் பேணி வருகின்றது. டி.எஸ். சேனநா...

அம்பேத்கர் - அநாகரிக தர்மபாலாவின் அரசியல் பௌத்தமும் தமிழக-ஈழத்தமிர் பௌத்த நிலைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகால அரசியலில் மதம் முதன்மையான நிலையை பெறுகின்றது. அமெரிக்க அரசறிவியலாளரான சாமுவெல் பி. ஹண்டிங்டன் தனது புகழ்பெற்ற 1993 கட்டுரையிலிருந்து விரிவுபடுத்தப்பட்ட 'நாகரீகங்களின் மோதுகை' எனும் புத்தகத்தில் மதம், மதிப்புகள், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை உள்ளடக்கிய அடையாளத்தின் பரந்த மற்றும் மிக முக்கியமான நிலை நாகரிகங்கள் என விவரித்தார். பனிப்போருக்குப் பிந்தைய உலகில், 'நீங்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர்கள்?' என்பதற்குப் பதிலாக, மிக முக்கியமான கேள்வி 'நீங்கள் யார்?' என்பதாகவே அமையுமென குறிப்பிட்டார். சமகால உலக ஒழுங்கும் ஹண்டிங்டனின் எண்ணங்களை உறுதி செய்யும் வகையில் மதங்களை மையப்படுத்தியே சுழலுகின்றது. மதங்களும் அரசியல் சூழலுக்கேற்ப வேறுபட்ட பரிமாணங்களையும் பெறுகின்றது. குறிப்பாக பௌத்த மதம் 32கி.மீ இடைவெளியில் ஒரே இனமக்களிடம் வேறுபட்ட விம்பங்களை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் இந்து மதத்தின் சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக ஒடுக்குமுறையிலிருந்து மீட்கும் கருவியாக பௌத்த மதம் முதன்மையான அரசியல் வகிபாகத்தை பெறுகின்றது. அதேவேளை ஈழத்தமிழர்களிடையே பௌத்தம் மதம், சிங்கள பேரினவாதத...

ஜனாதிபதியின் தமிழ்ப் பௌத்த உரையாடலும் ஈழத்தமிழர் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் மதமும் மதம் பீடித்த ஆட்சியாளர்களின் ஆட்சிமையும் தொடர்ச்சியான நீடித்த வரலாற்றை பகிருகின்றது. இதன் விளைவாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியும் கட்டவிழ்க்க முடியாத இறுகிய பிணைப்பை கொண்டுள்ளது. இந்த சூழலிலே அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்லியல் திணைக்கள அதிகாரிகரிகளுடன் உரையாடிய தொல்லியல் வரலாற்றில் தமிழ் பௌத்தம் பேரினவாத அரசியலிலும் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலும் அதிகமான வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. சுதந்திர இலங்கையின் 75ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சியதிகாரத்தை உறுதிப்படுத்தி கொள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசியலையே முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். அதன்விளைவான கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள சமகாலத்தில் ஜனாதியின் தமிழ் பௌத்த வரலாறு தொடர்பான பார்வை தமிழ்த்தரப்பிலும் அதிக  சந்தேகங்களையே உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடனான உரையாடல் மற்றும் அதன் அரசியல் வகிபாகத்தினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ச...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையின் கைதும் ஈழத்தமிழரது கட்சி அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் தமிழ்த்தேசியத்தின் உரிமைக்கான போராட்டச் சூழுலை மற்றும் போராடுபவர்களை பேரினவாத அரச தரப்பினர் ஒடுக்குவது மற்றும் அழிப்பது வரலாற்றின் நீட்சியாகவே அமைகின்றது. 1977ஆம் ஆண்டு தமிழினப்படுகொலைகளுக்கு பின்னால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் பாராளுமன்ற உரை ஆதிக்கம் செலுத்தியது. ஜே.ஆர் பாராளுமன்ற உரை 'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்' என்று பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டது. இதன் விளைவு சிங்களக் காடையர்களுக்குத் தமிழ் மக்களைக் கொல்லவும், தமிழர் சொத்துக்களைச் சூறையாடவும் தமிழர் வீடுகளுக்குத் தீ வைக்கவும் ஜே.ஆர் அரசினால் வழங்கப்பட்ட பகிரங்க அனுமதியாகவே அவதானிக்கப்பட்டது. இவ்வாறானதொரு அரசியல் தொடர்ச்சியே கடந்தவாரம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான இலங்கை காவல்துறையின் அச்சுறுத்தலுமாகும். இதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் பலரும் தமது கண்டன உரைகளை நிகழ்த்தியிருந்தார்கள். இக்கட்டுரை கஜேந்திரகுமாரின் கைதுக்கான தமிழ் அரசியலின் எதிர்வினையின் வடிவத்தையும் அவசியத்தையும் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தமி...

இலங்கையின் மத நல்லிணக்கமும் சிங்கள பௌத்த அதிகார அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடியை தாண்டி சமகாலத்தில் முதன்மைபெறும் உரையாடலாக மதவிவகாரம் அமைகின்றது. குறிப்பாக இலங்கை அரசியலமைப்புரீதியாக பாதுகாப்பு அளிக்கப்படும் சிங்கள பௌத்தத்திற்கு ஆபத்து என்ற செய்தியை தென்னிலங்கை அரசியல்வாதிகள் முதன்மைப்படுத்தி வருகின்றனர். இந்த பின்னணியில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்கி வருவதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இக்கட்டுரை சமகாலத்தில் தென்னிலங்கையில் மத அடிப்படைவாத அபாயத்தை பற்றிய உரையாடலின் அரசியலைத் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இனப் பிரத்தியேகவாதம் மற்றும் மத தீவிரவாதத்தின் உலகளாவிய மற்றும் பிராந்திய எழுச்சிக்கு இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை அரசியலமைப்பின் விதிகளின் அடிப்படையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு, மத நல்லிணக்கம் என்ற உரையாடலில் ரணில் விக்கிரமசிங்க-பொதுஜன பெரமுன அரசாங்கம் சமகாலத்தில் அதிக முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சிங்கள நகைச்சுவை நடிகர் நதாஷா எதிரிசூரிய பௌத்த மதத்தை அவமதித்ததன் அடிப்படையில், பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தினால் மு...