Posts

Showing posts from February, 2024

ரணில் விக்கிரமசிங்காவை வலுப்படுத்த முயலுகிறதா அமெரிக்க இராஜதந்திரம்!

Image
2012ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையின் அரசியல் போக்கில் மார்ச் மாத காலப்பகுதி என்பது மனித உரிமை விவகாரங்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த ஆயுதப்போரில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மையப்படுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் காலத்துக்கு காலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. ஒரு தசாப்தங்களை கடந்துள்ள போதிலும், மனித உரிமை விவகாரங்களுக்கு நேர்த்தியானதொரு பொறிமுறையை கட்டமைக்க இலங்கை அரசாங்கம் தவறி வருகின்றது. சர்வதேச சமூகமும் தமது நலன்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், இலங்கை அரசாங்கத்துடன் ஒத்திசைந்து செல்வதாகவும் தீர்மானங்களை நெறிப்படுத்தி வருகின்றது. அதுமட்டுமன்றி போர்க்குற்றங்கள் என ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை உரையாடல் 2018களில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னரான கலவரங்களை மையப்படுத்தியும், 2022களிற்கு பிற்பட பொருளாதார நெருக்கடிசார் மனித உரிமை விவகாரங்களை முதன்மைப்படுத்தியும் வடிவம் கொண்டுள்ளது. தற்போது நிகழ்நிலை சட்டம் சூடான விவாதத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை இலங்கையின...

ஜே.வி.பி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிகொள்ளக் கூடிய வலிமையையும் இந்திய விஜயமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல், சமூக, பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கு வரலாற்றில் நிலையான வடிவத்தை பெற்றுள்ளது. கடந்த காலங்களில் சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர் தேர்தல்களிலும் இந்தியாவின் செல்வாக்கு முடிவுகளை தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஆட்சியாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறானதொரு அனுபவத்தின் தொடர்ச்சியை சமகால தேர்தல் முன்னகர்வுகளுக்கு சமாந்தரமாக இந்திய அரசின் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கான வரவேற்பிலும் அவதானிக்கப்படுகின்றது. குறிப்பாக, இந்திய எதிர்ப்பினூடாக கட்டமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வந்த ஜே.வி.பியினை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துள்ளமையும், ஜே.வி.பியினரின் இந்தியாவுக்கான பயணமும் தென்னிலங்கை அரசியலின் சில ஆரூடங்களை உறுதி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதாவது, அரகலயாவிற்கு பின்னர் தென்னிலங்கையில் ஜே.வி.பி மீதான மக்கள் நம்பிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்அதிகரிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நம்பிக்கை, ஆட்சி அதிகாரத்துக்கு ஜே.வி.பியினரை கொண்டுவருவதற்கு போதுமானதாக அமையுமா என்பதில் அரசியல் அவதானிகளிடையே முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் கலாச...

ஜனாதிபதியின் ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பும் ஈழத்தமிழர் மீதான பேரினவாத அச்சுறுத்தலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கை கடந்த வாரம் 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தினை வெகுவிமர்சையாக கொண்டாடியிருந்தது. சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் சிறப்புரை தவிர்க்கப்பட்டு, வாழ்த்து செய்தியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்கபட்டிருந்த ஜனாதிபதியின் சிறப்பு உரை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் ஆரம்பித்தில், ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் அடங்கியிருந்தது. ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி மற்றும் கொள்கை பிரகடன உரை இரண்டினதும் சாரம்சம் ஒன்பட்ட இலங்கைக்கான அழைப்பாகவே அமைகின்றது. மறுபுறம் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுகத்தினர் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனத்தியதுடன், தமிழர்களின் சுதந்திரம் முடக்கப்படுவதற்கு எதிராக வடக்கு-கிழக்கு முழுவதும் போராட்டங்களை ஒருங்கிணைத்திருந்தார்கள். இவ் முரண்பாட்டு யதார்த்தத்தின் வெளிப்பாடாக, ஜனாதிபதியின் உரைகள் நடைபெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்த பிரச்சார உத்தி என்பதே அரசியல் அவதானிகளது விமர்சனமாக காணப்படுகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதியின் பிரச்சாரங்களில் முதன்மைப்படும் ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப...

வெளியுறவுக்கொள்கையை மையப்படுத்திய மோடியின் தேர்தல் பிரச்சாரம்; இந்தியா 'சர்வதேச சக்தி' எனும் விம்பத்தை உருவாக்குகிறதா! -சேனன்-

Image
2024ஆம் ஆண்டு இந்தியா பொதுத்தேர்தலை நோக்கி நகருகின்றது. 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியிலேயே தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துள்ள பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கத்திற்கு முடிவு கொண்டுவர எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இருந்தனர். I.N.D.I.A எனும் மெஹா கூட்டணியையும் அறிவித்தனர். இக்கூட்டணி 2024இன் ஆரம்பத்திலேயே தேர்தலுக்கு முன்னர் மெலிந்து வர ஆரம்பித்துள்ளது. மறுபக்கத்தில் ஆளுங்கட்சியாக மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை தேர்தல் இலக்கிற்கான பிரச்சாரமான நகர்த்த ஆரம்பித்துள்ளனர். இது பெருமளவுக்கு மோடி 3.0இற்கான வாய்ப்பையே அதிகம் புலப்படுத்துவதாக இந்திய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இக்கட்டுரை தேர்தலை மையப்படுத்தி இந்திய அரசாங்கம் கட்டமைக்கும் கொள்கை பிரச்சாரத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2023இல் ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றில் பா.ஜ.கவின் அமோக வெற்றி, தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது பா.ஜ.க மற்றும் அதன் சின்னமான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான உறுதியா...

தமிழரசுக்கட்சியில் வலுப்பெறும் தனிநபர் ஆதிக்கமும் ஈழத்தமிழர்களுக்கான நிபுணர்குழு கட்டமைப்பின் தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசியம் என்பது திரட்சியினாலேயே கட்டமைக்கப்படுகின்றது. ஈழத்தமிழரசியல் களத்தில் அரசியல் கருத்தியலாளர்கள் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் இலக்குகள் காலந்தாழ்த்தப்படுவதற்கு பின்னால் ஈழத்தமிழர்களின் திரட்சித்தன்மையின்மையை தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வருகின்றனர். எனினும் ஈழத்தமிழர்களிடையே திரட்சியை உருவாக்குவதற்கான எவ்வித ஆக்கபூர்வ செயற்பாடுகளையும் தமிழரசியல் தலைமைகள் செய்ய தயாரில்லை. மாறாக தமது தேர்தல் அரசியலுக்காக ஈழத்தமிழர்களை மேலும் மேலும் சிதறடிக்கும் செயற்பாடுகளையே முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். சுயநிர்ணய உரிமைக்காக போராடி, பல உயிர்த்தியாகங்களை அளித்துள்ள தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் தொடர்ச்சியாக அற்ப பதவிகளுக்கான இலக்கை மையப்படுத்தியே நகருகின்றது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு இலங்கையின் தேர்தல் ஆண்டாக எதிர்பார்க்கின்ற நிலையில், அரசியல் கருத்தியலாளர்கள் இவ்வாய்ப்பை ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்குக்கு வாய்ப்பாக நகர்த்தும் அறிவுபூர்வமான அரசியலை உரையாடுகின்றார்கள். எனினும் தமிழ் அரசியல் தலைமைகள் தமது குறுகிய நலன்களுக்குள்ளேயே இயங்கி வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை ஈழத்த...