Posts

Showing posts from May, 2024

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தகைமையை நிரூபிப்பதே இலங்கை அரசியலின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. தமிழ்ப்பரப்பில் தமிழ்ப்பொதுவேட்பாளர்கள் கடந்த காலங்களிலிருந்து முன்னேற்றகரமான விவாதத்தை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் உருவாக்கியுள்ள போதிலும், அரசியல் கட்சிகளின் குழப்பமான கருத்துக்கள் தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பில் தவறான பார்வையை ஏற்படுத்த முனைவதாக அமைகின்றது. குறிப்பாக அண்மையில் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் தெரிவித்ததாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ச்சியாக தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிக்கும் தொனியில் கருத்துரைத்துரைத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் நேரடியாக தெரிவிக்காத நிலையில், அத்தகைய கருத்துக்களை அவர் தெரிவித்தாரா என்பதிலேயே பொதுவெளியில் பலமான சந்தேகங்கள் காணப்படுகின்றது. எனினும் இக்கட்டுரை சம்பந்தன் தெரிவித்திருந்தாரா? இல்லையா? ஏன்ற வாதத்துக்கு அப்பால், சம்பந்தன் தெரிவித்துள்ளதாக சுமந்திரன் ஊடகப்பரப்பில் வெளியிட்டுள்ள, 'தமிழ்ப் பொதுவேட்பாளரினூடாக ஒஸ்லோ இணக்கப்பாட்டை சிதைக்க இடைமளியாதீர்' எனும் கருத்...

மேற்குலக பல்கலைக்கழக போராட்டங்கள் மேற்குலக அரசுகளின் வெளியுறவு கொள்கையை சீர்செய்யுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஒரு சில போராட்டங்கள் மேற்குலக அரசியலை ஸ்தம்பிக்க செய்யும் ஆற்றலை காலத்துக்கு காலம் வெளிப்படுத்தி வருகின்றது. இறுதியாக அமெரிக்காவில் இடம்பெற்ற ஜார்ஜ் பிலாய்ட் எனும் கறுப்பின இளைஞரின் படுகொலைக்கு எதிரான போராட்டம் Black Lives Matter எனும் பெயரில் மேற்குலக அரசியல் தரப்பினரை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூட்டோ தரையில் மண்டியிட்டார்கள். தற்போது பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தினூடாக மேற்குலக நாடுகளின் தலைவர்கள் மீளவும் தமது அரசியல் கொள்கைளை மீள்சரிசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். காசா நிலப்பரப்பில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலால் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டங்கள் மேற்குலக நாடுகள் முழுமையாக பரவியுள்ளது. சில பல்கலைக்கழகங்களில் பொலிஸாரை பிரயோகித்து போராட்டங்களை முடக்க முற்பட்டு அது வன்முறையாக மாறியுள்ள செய்திகளையும் சர்வதேச அரசியல் பரப்பில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை மேற்குலக அரசியலின் வெளியுறவுக்கொள்கையில் தாக்கம் செலுத்தியுள்ள பல்கலைக்கழக ...

தமிழ்த்தேசிய அரசியலில் வலுப்பெறும் சிவில் சமூக ஒன்றிணைவு சதிக்கோட்பாடுகளால் புறந்தள்ளப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ்த்தேசிய அரசியலில் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவதே கொதிநிலையான விவாதத்தை உருவாக்கியுள்ளது. தேசிய இனமொன்றின் விடுதலைப்போராட்டத்தில் வெளிப்புறத்திலிருந்து அதிகளவு நெருக்கடிகள் வருவது இயல்பானதாகும். எனினும் தமிழ்த் தேசிய இனத்தினை பொறுத்தவரை, தமிழ்த்தேசிய இனத்தின் இராஜதந்திர முயற்சிகள் உள்புறத்திலேயே அதிக நெருக்கடிகளுக்குள்ளேயே பயணிக்க வேண்டி உள்ளது. கடந்த காலங்களில் ஏமாற்றங்களை எதிர்கொண்டவர்களாக புதிய முயற்சிகளை சந்தேகத்துடன் ஆராய்வது ஆரோக்கியமானதாகும். அதுசார்ந்த விவாதங்களும் வினைத்திறனான முன்னேற்றங்களுக்கு வழி ஏற்படுத்தக்கூடியதாகும். எனினும் இங்கு சந்தேகங்கள் சதிக்கோட்பாடுகளை உருவாக்கி, முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கக்கூடியதாக அமைவது ஆபத்தானதாகும். தற்போது தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தியல்சார் நடைமுறையாக்கத்தை சிவில் சமூக குழுக்களே முன்னெடுத்துவருகின்றது. இக்கட்டுரை அரசியல் பரப்பில் சிவில் சமூகத்தின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் பரப்பில் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முதல் கருத்தியல் பரப்பில் பொதுவேட்பாளர் எனும் கோட்...

செல்வநாயகத்தின் அரசியல் அணுகுமுறையும் தமிழ்த்தேசியத்திற்கான கூட்டுப்பலமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் பகுதியளவில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் நிலையான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றது. தமிழ்த்தரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் காணப்படுகின்ற போதிலும், அரசியல் கட்சிகள் உறுதியான முடிவுகளை வெளிப்படுத்த தவறி வருகின்றது. அண்மையில் தமிழ் சிவில் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் இணைந்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த பொதுக்கட்டமைப்பினூடாக தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை முன்னிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நலன்களுக்குள் இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளை, தமிழ்த்தேசியத்தின் தேவையை முன்னிறுத்தி செயற்பாட்டு தளத்தில் ஒன்றிணைப்பதும் பெரும் சவாலுக்குரியதாகவே அமைகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒப்பீட்டடிப்படையில் அதிக பாராளுமன்ற பிரிதிகளை கொண்டுள்ள தமிழரசுக்கட்சியின் உட்கட்சி மோதலுக்குள் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலும் சிக்குண்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வ தீர்மானத்தை வெளியிட இருவார கால அவகாசத்தை கோரியுள்ளதுடன், மத்திய குழுவை கூட்டி ஆராயவுள்ளது. மத...

ஈழத்தமிழர்களின் பொதுவேட்பாளர் கோரிக்கை பொதுவாக்கெடுப்பை பலப்படுத்தும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜனாதிபதி தேர்தலை தமிழ்த்தரப்பு கையாள்வது தொடர்பாக தமிழ்த்தேசிய அரசியலில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. கருத்தியலாளர்கள் மத்தியில் உரையாடப்பட்டு வந்த தமிழ் பொதுவேட்பாளர் சித்தாந்தம், 2024இல் தமிழ் அரசியல் கட்சிகளிடையே முதன்மையான உரையாடலை பெற்றது. எனினும் தமிழ் சிவில் சமுகங்களின் அமைதியும், தமிழ் மக்களிடையே பொதுக்கட்டமைப்பின்மையாலும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை சிதைத்திடுவார்களா என்ற அச்சம் கருத்தியலாளர்களிடம் காணப்பட்டது. எனினும் கடந்தவாரம் தமிழ் கருத்தியலாளர்கள் மற்றும் தமிழ் சிவில் சமுக கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளர் சித்தாந்தத்தை பொறுப்பெடுத்துள்ளார்கள். அவர்கள் தமது ஊடக அறிக்கையில் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை பொது வாக்கெடுப்புடன் பிணைத்துள்ளார்கள். இக்கட்டுரை தமிழ் மக்கள் பொதுவாக்கெடுப்பு எனும் கோரிக்கையை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதனூடாக சாத்தியப்படுத்த கூடிய முறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளளது. கடந்த வாரம் தமிழ் பொதுவேட்பாளர் உரையாடலை முன்னிறுத்தி நிகழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் ஒன்றிணைவு, குறுகிய கா...