Posts

Showing posts from October, 2024

பாரம்பரிய அரசியல் கட்சி மாயை பிரச்சாரம்; தமிழ்த் தேசிய அரசியல் கொள்கையே பாரம்பரியம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் பொதுத் தேர்தலை மையப்படுத்தி தென் இலங்கைக்கு சமாந்தரமாக ஈழத் தமிழர் அரசியலும் போட்டிக்களமாக மாறி உள்ளது. பிரதான அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக சுயேட்சை குழுக்களும் பிரதான போட்டியாளர்களாக காணப்படுகின்றார்கள். வெறுமனவே 28 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கில் 2000இற்கும் அதிகமானா வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். உயர்ந்த பட்ச ஜனநாயகம் சில சந்தர்ப்பங்களில் மக்களின் நலனை பாதிப்பதாகவே அமைகின்றது. இப்பொதுத் தேர்தலிலும் அதிகபட்ச வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. இதில் தமிழ் தரப்பு தமது அரசியல் பிரதிநிதியை தெரிவு செய்வது என்பது பெரும் குழப்பகரமானதாகவே காணப்படுகிறது. இன்னொரு பக்கம் மாற்றம் பற்றிய விவாதங்கள், கடந்த கால அரசியல் பிரதிநிதிகள் மீதான ஏமாற்றங்கள் மற்றும் பாரம்பரியம் பற்றிய கட்டுக்கதைகள் தமிழ் மக்கள் மத்தியில் பொதுத்தேர்தலில் பங்குபற்றுவது தொடர்பில் விசனத்தையும் உருவாக்கியுள்ளது. இதில் தமிழ் மக்களின் தெரிவில், நிராகரிப்பு பற்றிய தெளிவு பிர...

ஜே.வி.பி அரசாங்கமும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியும், அரகலய சமுக இயக்கத்தின் தாக்கமும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை அலையை தென்னிலங்கையில் உருவாக்கியது. அதன் அறுவடையை 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளிலும் அடையாளம் காணக்கூடியதாக அமைந்தது. எனினும், தேசிய மக்கள் சக்தியின் மூலமான ஜே.வி.பி சார்ந்த கடந்த கால அனுபவங்கள், ஈழத்தமிழர்கள் மீது தேசிய மக்கள் சார்ந்த விம்பத்தை உருவாக்கியிருக்க முடியவில்லை. தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க என்ற மாயை வடக்கு-கிழக்கிலும் இளையோர்களிடையே துளிர்வாடுகின்றதா? மாற்றம் எனும் மாயமான் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதா? எனும் சந்தேகங்கள் தமிழ்த்தேசிய ஆர்வலர்களிட ஏற்பட்டடுள்ளது. எனினும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இணைந்து கொள்வதை பலரும் நிராகரித்தமை, தேசிய மக்கள் சார்ந்த மாயை வடக்கு-கிழக்கில் இன்னும் போதிய தாக்கத்தை செலுத்த முடியவில்லை என்பது பகுதியளவில் உறுதியாகிறது. இந்நிலையிலேயே, ஈழத் தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பொய்யான வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் தேசிய மக்கள் சக்தி வழங்கி வருவதனை அண்மைய செய்திகளில் அவதானிக்...

தமிழ் அரசியல் சிதறல் தமிழ் மக்களின் வாக்குப் பலத்தை பலவீனப்படுத்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இலங்கைத் தீவு முழுமையாக சிதறடித்துள்ளது. ஜனநாயகத்தின் பேரில், மக்களின் எண்ணங்கள் சிதறடிக்கும் நிலைமைகளும், வாக்குகள் பலவீனப்படுத்தும் மற்றும் மலினப்படுத்தும் சூழ்நிலைகளே வெளிப்படுத்தப்படுகின்றது. 225 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு, 22 தேர்தல் மாவட்டங்களிலும், கட்சிகள் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 அணிகள் போட்டியிடுகளின்றன. இதில் வடக்கு-கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் மாத்திரம் 235 அணிகள் களமிறங்கியுள்ளன. ஏனைய 17 தேர்தல் மாவட்டங்களிலும் 455 அணிகள் களமிறங்கியுள்ளன. உச்சபட்ச ஜனநாயக வெளிப்பாட்டை தமிழ்ப் பகுதிகளிலேயே அவதானிக்கக்கூடியதாக அமைகின்றது. உச்சபட்ச ஜனநாயக வெளிப்பாடு, சில சந்தர்ப்பங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையக்கூடியதாகும். 2024இன் ஆரம்பத்தில் ஜனநாயகத்தை வெளிப்படுத்துவதாகவே தமிழரசுக்கட்சி கட்சி தலைமைத்துவத்திற்கான உள்ளக தேர்தலை வரவேற்றிருந்தது. தற்போது கட்சி ஒரு வருடங்களை அண்மித்து நீதிமன்ற வழக்கிற்கு தள்ளப்பட்டுள்ளது. இக்கட்டுரை அரசியல் கட்சிகளின் போட்டியால் பலமிழக்கப்படும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை அடையாளப்படுத்து...

ஜே.வி.பி போராளி மன்னம்பெரிக்கு பெற்றுக்கொடுத்த நீதி இசைப்பிரியாக்களுக்கு கிடைக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம், ஏற்படுத்திய அதிர்வலைகளை ஈடுசெய்யக்கூடிய அதிரடியான முடிவுகளை கடந்த மூன்று வாரங்களில் எடுத்திருக்கவில்லை. எனினும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்ப நாள் முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினாலை சந்தித்தமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடனான சந்திப்பு முதன்மையான கவனத்தை உள்வாங்கியது. தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட முக்கிய 7 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இதனை வரவேற்பதுடன், இது மாத்திரம் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றத்தின் குறியீடாக ஏற்றுக்கொள்ளலாமா என்ற வாதம் அரசியல் பரப்பில் தவிர்க்க முடியாததாகவே அமைகின்றது. கடந்த காலங்களில் இரு ஆயுதப் போராட்டங்கள், பல மரணங்கள், இரு தடவை தடை என பல இன்னல்களை எதிர்கொண்டு 1993களுக்கு பின்னர் அரசியல் பிரவேசத்தில் ஜே.வி.பி உறுதியாகியுள்ளது. கடந்த காலங்களில் தம...

பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
நவம்பர்-14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி இடப்பட்டு உள்ளது. அதேவேளை அக்டோபர் 04-11ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலை போன்றே, பாராளுமன்ற தேர்தலிலும் அதிகளவு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கியுள்ளன.  முழு இலங்கைத்தீவிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளடங்களாக 690 குழுக்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கும் பொதுத்தேர்தலை மையப்படுத்தி பெரும் குழப்பகரமான சூழலை எதிர்கொண்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை அதுசார்ந்திரட்சியை ஒருங்கிணைக்கும் களத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத்தேர்தலில் உருவாக்கி இருக்கவில்லை. கடந்த இரு தசாப்த கால ஈழத்தமிழர்களின் அரசியல் அடையாளமாக காணப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனும் பதிவு செய்யப்படாத கட்டமைப்பு முழுமையாக சிதறடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ் அரசியலில் 75 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்ட தமிழரசு கட்சிக்குள்ளும் அதிக குழப்பங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது. இக்குழப்பகரமான நிலையி...

சே குவேரா புரட்சியின் குறியீடு! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி எழுச்சியை தொடர்ந்து மாற்றம், இளைஞர்களின் அரசியல் எழுச்சி, மாக்சிசம் என்பன புதிய உரையாடலை பெற்று வருகின்றது. எனினும் அதன் உள்ளடக்கம் சந்தேகத்திற்குரியதாகவே அரசியல் ஆய்வு புலத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக மாற்றம் என்பது அதிகம் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒரு ஜனரஞ்சக சொல்லடலாகவே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் இளைஞர்களின் அரசியல் எழுச்சி என்பதும் புதிராகவே அமைகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கதின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காபந்து அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் முறையே 55, 54 மற்றும் 56 வயது உடையவர்களாகவே காணப்படுகின்றார்கள். அத்துடன் ஜே.வி.பியின் வெற்றி மாக்சிச கட்சி பாரம்பரியத்தின் வெற்றியாக ஊடக செய்தியிடல்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மறுதளத்தில் இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் மகா சங்கங்களின் ஆசிர்வாதத்துக்காக வளைகின்றார்கள். இப்பிரம்மைகள் முதன்மை பெறுவதற்கு, மக்களிடம் மாக்சிசம் மற்றும் இளைஞர் எழுச்சி தொடர்பான மெய்மைகள் பற்றியான சரியான பார்வையின்மையே காரணமாகும். இக்கட்டுரை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த மாக்சிச புரட்சியாளன்...

அநுரகுமார திசநாயக்க ஆட்சியில் இந்திய-இலங்கை உறவு? -ஐ.வி.மகாசேனன்-

Image
அனுரகுமார திசநாயக்கவின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையில் இடதுசாரி மரபுடைய கட்சியின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திடப்பட்டுள்ளது. இலங்கை ஊடகங்களும் அவ்வாறான ஒரு விம்பத்தையே பிரதிபலிக்கின்றது. எனினும் சில அரசியல் ஆய்வாளர்கள் ஜே.வி.பி.யின் இடதுசாரி தத்துவத்தை கேள்விக்கு உட்படுத்துவதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. அதேவேளை கட்டமைக்கப்படும் இடதுசாரி விம்பம், இலங்கைக்கு பிராந்திய மற்றும் சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்ற ஊகங்களும் சில செய்திகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் தூதரக செயற்பாடுகள் இராஜதந்திரத்தின் ஆரம்பப்படிமுறையில்  இருப்பதனையே சுட்டிக்காட்டுகின்றது. சமகால சர்வதேச ஒழுங்கும், பனிப்போர்க்கால கருத்தியல் மோதலை தொடர்வது இல்லை. மாறாக கருத்தியல்கள் கலந்து சங்கமிக்கும் நிலைமைகளையே அவதானிக்க கூடியதாக உள்ளது. தூய சோசலித்தையோ அல்லது தூய முதலாளித்துவத்தையோ அரசியல் கட்டமைப்புகளில் அவதானிக்க முடியாது. இக்கட்டுரை இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மற்றும் பிராந்திய-சர்வதேச அரசுகளின் இராஜீக நடாத்தையை மையப்பட...

பங்களாதேஷில் ஸ்திரப்படும் சீனாவும் விலகும் நெருக்கடியில் இந்தியாவும்! -சேனன்-

Image
இந்திய தனது அண்டை நாடுகளின் முதல் கொள்கையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடுகளையே சமகால தென்னாசிய அரசியல் நடாத்தைகள் வெளிப்படுத்துகின்றது. இந்திய வரலாற்றின் அரசியல் பிதாமகராக கருதப்படும் சாணக்கியர், ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையை நிர்ணயிப்பது தொடர்பில் நிலையான கோட்பாட்டை அடையாளப்படுத்தி உள்ளார். அதில் அயல் நாடுகளை இயற்கையான எதிரியாகவே அடையாளப்படுத்தி உள்ளார். 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம் இயற்கையான எதிரிகளுக்கு முதன்மை அளிப்பதனூடாக கூட்டாண்மையை உருவாக்கலாம் என்ற முனைப்பிலேயே அண்டை நாடுகளின் முதல் கொள்கையை ( Neighborhood First Policy ) அறிமுகப்படுத்தி இருந்தது. இந்திய அண்டை நாடுகளுக்கு முதன்மை அளிக்கின்ற போதிலும், கடந்த காலத்தில் இந்தியாவின் பெரிய அண்ணா (Big Brother) நடத்தையின் தாக்கம், அண்டை நாடுகளிடையே இந்தியாவால் நம்பிக்கையான நண்பர்களை உருவாக்க முடியவில்லை. இந்தியாவின் எதிர் அரசியல் சக்தியே, இந்திய பிராந்திய அரசுகளினை நண்பர்களாக்கி உள்ளது. இக்கட்டுரை மாணவர் புரட்சிக்கு பின்னரான பங்களாதேஷ் அரசியலில் இந்திய மற்றும் சீன நிலைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஆ...