Posts

Showing posts from May, 2025

தமிழக தொலைக்காட்சிகளில் ஈழத்தமிழர்கள் பங்கேற்பும் துயர் பிரச்சாரங்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத் தமிழர்களின் அரசியலில் தமிழகத்தின் பங்களிப்பு பிரதான வகிபாகத்தை பெறுகின்றனது. குறிப்பாக பல அரசியல் வரலாற்று அறிஞர்களும் தமிழகத்தினை மையப்படுத்திய சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எதிர்ப்பின் விளைவாகவே ஈழத் தமிழர்கள் நீண்டதொரு இன அழிப்பை இலங்கை தீவில் எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை விவரிக்கின்றார்கள். அதேவேளை தமிழகத்தின் பாதுகாப்பில் ஈழத்தமிழரின் கரிசணை தொடர்பிலும் புவிசார் அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இது மொழியால் ஒன்றினைந்த ஒத்த இன சகோதரத்துவத்தின் அரசியல் இயல்பை தமிழகமும் ஈழத்தமிழர்களும் பகிர்ந்து கொள்கின்றமையையே அடையாளப்படுத்துகின்றது. எனினும் பாக்குநீரிணையின் இடைவெளி சில சந்தர்ப்பங்களில் சில வேறுபாடுகளையும், உறவுகளுக்கு இடையிலான தளர்வையும் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் நடைமுறையில் அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது. மறுமுனையில் சமகாலத்தில் தமிழக கலைத்துறையில் ஈழத்தமிழர்களின் பிரவேசம் சடுதியாக அதிகரிக்கப்படுகின்றது. இது பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்ட ஒத்த சகோதரத்துவத்தின் இடைவெளிகளை குறைக்கிறது. இது வரவேற்கத்தக்கதாகும். இக்கட்டுரை தமிழகத்தின் கலைத்துறையில் அதிகரிக்கும் ஈழ...

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
யாதும் ஊரே! யாவருங் கேளீர்! -கணியன் பூங்குன்றனார்- (தமிழ்நாடு) இந்தியாவின் தமிழ்நாடு தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவும், தமிழினத்தின் தலைமையாகவும் தன்னை முன்னிலைப்படுத்தும் நிலப்பரப்பாகும். வரலாற்றில் சங்க காலம், சங்கமருவிய காலம் எனும் தமிழ் வரலாற்று கால வரிசையாயினும், சேரர் - சோழர் - பாண்டியர் எனும் மூவேந்தர் ஆட்சியாயினும் தமிழர் தம் வரலாற்றின் ஆதாரமாக தமிழ்நாடே குறிக்கப்படுகின்றது. சமகாலத்திலும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம், 'அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை' என்பதனை நிறுவி, அதன் செயற்பாட்டுகளூடாக உலகத் தமிழர்களின் தலைமையாக தம்மை சித்தரிக்க முயன்று வருகின்றார்கள். 2025ஆம் ஆண்டு தமிழக அரசின் அயலகத் தமிழர் தின விழாவிலும் மு.க.ஸ்டாலின், 'நாடு, நில எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ்மொழி தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம்! தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி! அந்த உணர்வோடு உறவோடு தாய் மண்ணாம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரையும், உங்களில் ஒருவனாக வருக... வருக...

யூதர்களுக்கான பிரித்தானியாவின் பால்போர் பிரகடனமும் ஈழத்தமிழர்களுக்கான கனடா பிரதமரின் இனப்படுகொலை அறிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவு தினம், ஈழத்தமிழர்கள் பரந்து வாழும் நாடுகள் அனைத்திலும் நினைவு கூறப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களுடன் ஒருங்குசேர்ந்து வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்கள். உயர்ந்தபட்சமாக கனடா நாட்டின் பிரதமர், ‘இந்தத் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களை - பிரிந்த குடும்பங்கள், பேரழிவிற்குள்ளான சமூகங்கள் மற்றும் இன்றுவரை காணாமல் போனவர்களை - நாங்கள் நினைவு கூர்கிறோம்’ என அறிக்கை வெளியிட்டிருந்தார். தமிழினப் படுகொலை நீதிக்கோரிக்கைகளுக்கான சர்வதேச ஆதரவுத் தளம் வலுவாக அதிகரித்து வருகின்றமையை 16ஆம் ஆண்டு நினைவேந்தலில் தெளிவாக இனங்காணக்கூடியதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இக்கட்டுரை சர்வதேச அரசியல் பிரதிநிதிகளின் தமிழினப்படுகொலை நீதிக்கோரிக்கைக்கான ஆதரவு தளத்தை ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்வது தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன்-10ஆம் திகதி கனடா ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் திறக்கப்பட்ட தமிழினப்படுகொலை நினைவுத்தூபி ஈழத்தமிழர்களுக்கு புதிய உற்சாகத்தை வழங்கியது. அதே...

கனடா தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும் ஈழத்தமிழர்களின் அரசியல் தந்திரோபாய தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் பேணுவதில் இனப்படுகொலை சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் முதன்மையாக அமைந்துள்ளது. அவ்அடிப்படையில் 2009களுக்கு பின்னர் மே மாதம் வடக்கு-கிழக்கு தாயக நிலப்பரப்பில் மாத்திரமன்றி, ஈழத் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழினப் படுகொலையை மையப்படுத்திய நிகழ்வுகளும், நினைவேந்தல்களும், நினைவு உரைகளும் நிலையான தன்மையை பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டு 16வது ஆண்டு தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக அண்மைய ஆண்டுகளில் இறுதி யுத்தத்தின் துயரை நினைவூட்டும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு' தமிழினப்படுகொலை நினைவேந்தலின் முக்கிய நிகழ்வாக நிலைபெற்றுவிட்டது. இவ்வாண்டு கனடாவில் தமிழினப்படுகொலைக்கான நினைவுத் தூபி அரச அங்கிகாரத்துடன் நிறுவப்பட்டுள்ளமை ஈழத்தமிழர்களிடையே புத்தெழுச்சியை கொடுத்துள்ளது. இப்பின்னணியிலேயே இக்கட்டுரை கனடாவில் நிர்மானிக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபியும், அதனை மையப்படுத்தி எழுந்துள்ள உரையாடல்களினதும் அரசியல் வகிபாகத்தை அடையாளங்காண்பதாக உ...

கூட்டுக்கான தேவையையே தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் உறுதி செய்துள்ளார்கள்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிப்பார்வையில், தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றியின் ஊடாக தமிழ் தேசியத்தின் எழுச்சியையும் மாறாக நாடளாவிய ரீதியில் ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தியின் வீழ்ச்சியும் அடையாளப்படுத்தப்படுகின்றது. எனினும் உள்ளார்ந்த பார்வையில் இரண்டு போக்குகளும் முழுமை பெறவில்லை என்பதே நிதர்சனமானதாகும். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றி, தமிழ்த்தேசியத்தை அளவீடு செய்ய போதுமானதாக அமையவில்லை. தமிழ்ப்பரப்பில் அதிகூடிய ஆசனங்களை பெற்றுள்ள தமிழரசுக்கட்சி, கடந்த காலங்களில் தென்னிலங்கை கட்சிகளில் ஆதிக்கம் செலுத்திய பலரையும் இம்முறை தமது வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கியிருந்தது. மேலும் தேசிய மக்கள் சக்தி தமிழர் சபைகளில் முன்னிலையை பெறாத போதிலும், தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் ஆசனங்களின் எண்ணிக்கையை உள்ளூராட்சி சபைகளில் உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளில் ஈழத்தமிழர்களின் அரசியல் வெளிப்பாட்டை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னரான தமிழ...

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் - 2025 | தேசிய மக்கள் சக்தியின் தனியாதிக்கத்திற்கான சவாலும் வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசிய அலை மேலெழுகையும் -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் களத்தில் சமகாலத்தில் அதிக விவாதத்தை உருவாக்கியதுடன், ஆளும்-எதிர் தரப்புகள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்வதற்கான களமாகவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அமைந்திருந்தது. குறிப்பாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தை பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை, தமிழ் தேசியத்தின் வீழ்ச்சியாக மதிப்பிடப்பட்டது. அதனை சீர்செய்வதற்கான களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரம் அமைந்திருந்தது. தமிழ்த்  தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் மத்தியில் பொது எதிரியாக ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி தோற்கடிக்கப்பட வேண்டும் எனும் பிரச்சாரமே முதன்மையாக காணப்பட்டது. தேர்தல் முடிவுகளிலும் அத்தகைய விளைவினையை அவதானிக்க கூடியதாகவும் உள்ளது. அவ்வாறே தென்னிலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கணிசமான சபைகளில் முன்னிலையை பெற்றுள்ள போதிலும், தனித்து ஆட்சியமைக்கக்கூடிய அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைகளது தேர்தல் முடிவுகளின் அரசியல் முக்கியத்துவத்...

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழகம்-ஈழத் தமிழர் உறவு தமிழ்த் தேசிய அரசியல் இருப்பில் அவசியமானதாகும். தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை இலங்கை இந்திய அரசுகள் பிரிவினைவாத சிந்தனையாக உருவகப்படுத்துவதனால், அவ்விரு நிலப்பரப்பின் இடைவெளியை மக்களுக்கிடையிலான இடைவெளியாகவும் பேணுவதில் விழிப்பாக உள்ளார்கள். சமகால நிகழ்வுகள், அரசுகளின் எதிர்பார்க்கைகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழக-ஈழத்தமிழ் மக்கள் குழுக்களிடம் இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் தமிழ் மொழி உரையாடலை, தமிழகத்தின் இளையவர்கள் 'சிங்கள தமிழ்' என்ற அடைமொழிக்குள் அழைக்கும் சூழலே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கெதிரான முதல் எதிர்க்குரலும், மரண ஓலமும் தமிழகத்திலிருந்தே கிடைக்கும். ஆயினும் சமகாலத்தில் ஈழத்தமிழர்களுக்கு சமாந்தரமாக தென்னிலங்கையையும் பொருத்தி பார்க்கும் நிலைமைகளையே தமிழகத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதில் கலை இலக்கிய வறுமையும் பாரிய செல்வாக்கு செலுத்தும் காரணியாக அமைகின்றது. இக்கட்டுரை தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர்களின் நிலையை தேடுவதாகவே ...

தேசிய மக்கள் சக்தியின் 'இனவாதமற்ற ஆட்சி' பிரச்சாரமும் சிங்கள பௌத்தமயமாக்கும் ஆட்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜே.வி.பி பரிமாணமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியலின் தேர்தல் யுக்திகள் தொடர்பிலான விமர்சனங்கள் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் பிராச்சரங்களில் அதிகளவில் வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதன் செயலாக்க தன்மைகள் தொடர்பில் சமகாலத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகள் நிறைந்துள்ளன. இந்த பின்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களில் கடந்த காலங்களை இருண்ட காலமாகவும், பழையவர்களை சாத்தான்களாகவும் சித்தரித்து, தங்களை புறக்கணிப்பதனூடாக பழைய இருண்ட காலத்திற்குள் சாத்தானின் பிடிக்குள் செல்வீர்களென்ற எச்சரிக்கை அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றார்கள். தங்களின் கடந்த காலங்களுக்கு பொறுப்பு கூறாது, தங்களை மீட்பர்களாகவும் புனிதர்களாகவும், தங்கள் ஆட்சியை ஒளி நிறைந்ததாகவும் சித்தரிக்க முயல்கின்றார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஏழு மாதங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் அடையப்பட்ட விகிதங்களையாவது பொதுவெளியில் சொல்ல திராணியற்ற நிலைமையிலேயே உள்ளார்கள்.  இக்கட்டு...