அநுரகுமார திசநாயக்க ஒருவருடத்தில் தூசு தட்டியுள்ள நிர்வாக மாற்றங்களும் ஆழப்புதைத்துள்ள பேரினவாத அரசியல் கலாசாரமும்! -ஐ.வி.மகாசேனன்-
செப்டெம்பர்-21, 2024அன்று அநுரகுமார திசநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அவ்அலையின் தொடர்ச்சியாகவே நவம்பர்-2024இல் நடைபெற்ற 16வது பாராளுமன்றத்துக்கான தேர்தலிலும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது. செயல்களை கடந்து ஜனாதிபதி தேர்லுக்கு முன்பாகவும் தேர்தல் வெற்றிகளுக்கு பின்னராகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தம்மை இலங்கை அரசியல் கலாசார மாற்றத்தின் அடையாளமாகவே தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஒரு சில தளங்களில் குறிப்பாக நிர்வாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கடந்த கால நிர்வாக சலுகைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், போதைப் பொருட்களுக்கு எதிரான நடடிவடிக்கைகள் என சில மாறுதல்களை பொதுமக்களாலும் இனங்காணக்கூடியதாகவே உள்ளது. எனினும் அரசியல் கலாசார மாற்றத்திற்குரிய இயல்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஓராண்டுகளில் கொண்டுள்ளதா என்பதில் அரசியல் ஆய்வுத்துறை மத்தியில் பலமான கேள்விகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை அநுரகுமார திசநாயக்கவின் கடந்த ஓராண்டு கால ஆட்சி இயல்பை தேடுவதா...