ஏக்கிய இராச்சிய வரைபும் பயனற்ற பொருள்கோடல் விவாதமும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் ஆயுத போராட்ட மௌனிப்புக்கு பின்னரான சர்வதேச தலையீடுடனான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் பற்றிய விவாதத்தில் நிறுவனச் சீர்திருத்தம் என்ற அடிப்படையிலான அரசியலமைப்பு மாற்றம் பிரதான உரையாடலாக நிலைபெற்று வருகின்றது. இந்த பின்னணியிலேயே 2009க்கு பின்னரான தேர்தல்கள் யாவற்றிலும் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் விஞ்ஞாபனங்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை ஒரு பகுதியாய் கொண்டுள்ளது. எனினும் ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு மாற்றத்திற்கு கிடைக்கப்பெற்ற ஆணைகள் யாவையும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களாகவே சுருக்கி கொடார்கள். இதுவொரு வகையில் சர்வதேச அழுத்தங்களை தணிக்கை செய்வதற்கும் இழுத்தடிப்பதற்கான உத்தியாகவுமே அமைந்துள்ளது. இந்த பின்னணியிலேயே அநுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதிகள் பொது மக்கள் பார்வையில் அணுகப்படுகிறது. எனினும் தமிழ்த்தரப்பிடம் அவ்அசமந்தம் ஆபத்தானதாகும். அரசியலமைப்பு மாற்றம் நடைபெறினும் நடைபெறாவிடினும் தமிழ்த்தரப்பு தமது அரசியல் அபிலாசைகளை திரட்சியாகவும் உறுதியாகவும் வெளிப...