நினைவேந்தல்களின் உணர்வுபூர்வ எழுச்சியும் உணர்வைக் கடந்து அரசியல்மயமாக்கப்பட வேண்டிய தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-
2025ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள், 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 16 ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வழமைக்கு மாறாக வடக்கு-கிழக்கில் தமிழர்கள் வாழும் நிலங்களில் உள்ளூராட்சி சபைகளின் முன்னெடுப்பில் மாவீரர் தின நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இப்பின்னணியில் தெருக்களில் சிவப்பு-மஞ்சள் வர்ண கொடிகள் அலங்கரிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியப் பாடல்களும் ஒலிவாங்கியில் தெருக்களெல்லாம் பாடப்பட்டது. இடையிடையே சில இடங்களில் இலங்கை காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு துறையினர் தலையிட்டு எச்சரிக்கைகளை வழங்கியுள்ளமையும் செய்திகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மாவீரர் தின நாட்களை அண்மிக்கையில், தமிழ் இனத்தின் அவலமான ஒற்றுமையின்மையால் கட்சிசார் போட்டிகளால் சிறு சஞ்சலங்கள் வெளிப்பட்ட போதிலும், நிகழ்வுகளில் கட்சி முரண்பாடுகள் வெளிப்படாத வகையில் பொதுமக்கள் முகஞ்சுழிக்காத வகையிலும் பெருந்திரட்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிறைவேறியுள்ளது. இக்கட்டுரை 2025ஆம் ஆண்டு மாவீரர் தின பரிணாமத்தை கொண்டு செல்ல வேண்டிய நகர்வினை தேடுவதாக உருவாக்கப்பட்ட...