Posts

Showing posts from April, 2021

மாணவர் எழுச்சியை வலுப்படுத்துவது தமிழ் சமூகத்தின் பொறுப்பு! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் தமிழ்த்தரப்பு தங்கள் உரிமை சார்ந்து முன்னெடுக்கும் முனைப்புக்கள் யாவும் ஏதொவொரு வகையில் சிதையுறும் நிலையே சமீபகால பதிவுகள் நீள்கிறது. இது தமிழ் தரப்பின் உரிமைசார் போராட்டத்தை தொய்வுற செய்யும் எண்ணங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 23.04.2021 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ள  முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கொரு புத்துணர்ச்சியான பதிவொன்றை நிகழ்த்தியுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீளவும் நிறுவியுள்ளமை  தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரசியல் வாய்ப்பினை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இலங்கை அரசாங்க தரப்பினரின் கடும் அழுத்தத்தின் மத்தியில் கடந்த ஜனவரி-08ஆம் திகதி இரவோடு இரவாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அன்று இரவே பல்கலைக்கழக சூழலில் பதட்ட நிலை உருவாக்கம் பெற்று மாணவர்களோடு தமிழ் அரசியல்...

போலிகளை அதிகம் கொண்ட இராஜதந்திர செயற்பாடற்ற தமிழரசியல்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழரசியல் தரப்பு காலம் காலமாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிட்டு செல்லும் இராஜதந்திரமற்ற அரசியல் அணுகுமுறையினையே கையாண்டு வருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது மற்றும் அதுசார்ந்து திரண்டுள்ள சர்வதேச ஆதரவு என்பவற்றை தமிழ் தரப்பு சரியாக கையாளும் நுட்பத்;தை கொண்டுள்ளனவா? என்பது தொடர்பான தேடலும் தமிழ் சமூகத்திடையே அவசியமாகிறது. அதனை மையப்படுத்தியே யாழ்ப்பாண மாநகர முதல்வரின் கைது புலப்படுத்தும் செய்தி மற்றும் கைதுக்கு எதிராக திரண்டுள்ள சர்வதேச ஆதரவை பேணுவதும் பலப்படுத்துவதும் தொடர்பாக இக்கட்டுரை தேட முற்படுகிறது. யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்கும் பொறிமுறைகளுக்கு பொறுப்பாக தண்டப்பணம் அறவிடும் உத்தியோகத்தர்களை மாநகரசபை கட்டளைச்சட்ட ஏற்பாடுகளின்படி பாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் நியமித்திருந்தார். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மெல்லிய நீல நிற சீருடையானது விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்படையின் சீருடையை ஒத்திருந்ததாக சமூகவலைத்தளங்களில் இடம்பெற்ற உரையாடலை மையப்படுத்தி யாழ்ப்பாண பொலிஸாரால் 09.04.2021 அன்று அதிகாலை ...

லெனின் புரட்சியின் நாயகன்! -ஐ.வி.மகாசேனன்-

Image
 'ஒரு புரட்சிகர நிலைமை இல்லாமல் ஒரு புரட்சி சாத்தியமற்றது. மேலும், ஒவ்வொரு புரட்சிகர சூழ்நிலையும் புரட்சிக்கு வழிவகுக்காது.'  -விளாடிமிர் லெனின்- 2021 ஏப்ரல் 22 அன்று, புரட்சியை ஒரு வாழ்வாய் வகுத்து வென்றவர் மண்ணில் அவதரித்து 151 ஆண்டுகளாகிறது. ஆம், கார்ள் மாக்ஸ் கண்ட சோசலிச கனவை புரட்சியின் மூலம் நிஜமாக்கிய விளாடிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22, ரஷ்சியாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார். தொழிலாளர் புரட்சியை நிலைநாட்டி மாக்ஸிச சித்தாந்தத்துக்கு லெனினிச வடிவம் கொடுத்த லெனினின் அரசியல் கருத்தியல்களை தேடுவதனூடாக லெனினை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் உரிமைக்காக போராடும் ஒவ்வொருத்தரும் லெனின் வாழ்க்கையிலிருந்து எவ்வளவோ பாடங்களை கற்றுக் கொள்ளலாம். நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கடந்து போகும் மனிதர்களுக்கு மத்தியில் லெனின் என்ற சாதாரண மனிதன் மக்களை ஒன்றுதிரட்டி ஆதிக்கத்தை எதிர்த்து வென்று காட்டியுள்ளார். அடக்குமுறைகள் எப்போதுமே இந்த சமூகத்துக்காக, மக்களுக்காக உழைக்கப் பிறந்த புரட்சியாளர்களை அடையாளம் காட்டும். அந்த வகையில...

மியான்மர் முன்னுதாரணமாகிறதா இலங்கைக்கு? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலில் கொரோனா கொடூர தாண்டவமாடுகின்றது. சதிக்கோட்பாடுகளுக்கு அப்பால் கொரோனா பேரழிவை இயற்கையின் கொடூரம் என்று மனம் நோகும் அதேவேளை செயற்கையாய் கோர தாண்டவமொன்று மியான்மரில் ராட்சகர்களால் நிகழ்த்தப்படுகின்றது. அமைதியையும் சாந்தியையும் நேசித்த சித்தார்த்தனை  நேசிக்கும் தேசங்களின் ஆட்சியார்களுக்கு இரத்த வாடை மீது நேசமிருப்பது கலியுகத்தின் புதிராகவே காணப்படுகின்றது. மியான்மரின் இராணுவ ஆட்சியில் தினம் தினம் உயிர்கள் கொத்தாக மடிக்கப்படுகின்றது. சர்வதேசமும் கண்கெட்டா பிறகு சூரிய நமஸ்காரத்தை செய்ய காத்துள்ளனர். இக்காட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களிடம் 2009ஆம் ஆண்டு நினைவுகளையே மீட்டுகிறது. இந்நிலையிலேயே இக்கட்டுரை மியான்மர் கொடூர அழிவின் அரசியல் போக்கை இலங்கைக்கான அனுபவத்திற்கான தேடலாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மியான்மரின் அரசியல் களநிலை பற்றிய புரிதல் அவசியமாகிறது. கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி மியான்மர் இராணுவம், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அடுத்த ஓராண்டு காலத்துக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. அப்போதிலிருந்து ஜனநாயகத்துக்கு ஆதரவாக, மியான்மர் முழுக்க மக்கள் போரா...

கொரோனா தடுப்பூசி இராஜ தந்திர அரசியல் பற்றி தமிழ் தலைமைகள் விழிப்படைவார்களா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா வைரஸ் வூஹானிலிருந்து உலகிற்கு வியாபிக்கப்பட்ட நாள் முதலாய் சர்வதேச அரசியலில் கொரோனா வைரஸ் தவிர்க்கப்பட முடியாத பேசுபொருளாக மாறிவிட்டது. உலக ஒழுங்கின் மாற்றங்களினையே கொரோனா வைரஸ் நிர்ணயிப்பதாக கொரோனா வைரஸின் அரசியல் தொடர்பிலே சர்வதேச அரசியல் ஆழமான ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா அரசியல் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை மையப்படுத்தியே சுழலுகிறது. குறிப்பாக வல்லாதிக்க நாடுகள் தடுப்பூசிகளை பகீர்வதன் மூலம் நாடுகளை அணைத்து கொள்ளும் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. இலங்கையிலும் சீனா தன் நட்பை தொடரவே சினோபார்ம் தடுப்பூசியை அனுப்பியுள்ளது. அந்த வகையில் இலங்கையில் இடம்பெறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அரசியலையும் அதனால் ஏற்படக்கூடிய அபத்தங்களையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வருகைக்கு பின்னரான உலக ஒழுங்கில் சீனா பிரதான அரசியல் சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணிகள் யாவற்றிலும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உரையாடல்களே முதன்மை பெற்று காணப்படுகிறது. பட்டி மற்றும் சாலை முன்முயற்சியில் தற்போது கொரோனா தடுப்பூசியை...

சீனாவின் கடன்பொறி முறை இராஜதந்திரத்தில்; இலங்கை இறைமையை இழந்துவிட்டதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அண்மைய வெளியுறவுக்கொள்கைசார் செயற்பாடுகள் அரசியல் நிபுணர்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தி ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிடமிருந்து பெற்றிருந்த  400 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெப்ரவரி முதல் வாரத்தில் இலங்கை மீளச்செலுத்தி இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே தெரிவித்திருந்தார். அண்மைக்காலத்தில் இந்தியா மற்றும் மேற்கின் நிதிச்சுமைகளிலிருந்து இலங்கை வெளியேறுவதான செய்திகள் அதீதமாகவே வெளியாகி வருகிறது. இதனை வெளி பொதுப்பார்வையில் இலங்கையர்கள் மகிழ்வான செய்தியாக நோக்குவார்களாயின், நிதி அமைச்சின் செயலாளரின் தொடர்ச்சியான செய்திக்குறிப்பையும் அறிய வேண்டியது அவசியமகின்றது. 'சீனா மற்றும் இந்தியாவிலிருந்து நாணய இடமாற்ற வசதிகளைப் பெறுவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றதாகவும், பெப்ரவரி 2021இல் சீனாவிலிருந்து 1500 மில்லியன் கடன்கள் பெறப்படும்' என நிதி அமைச்சின் செயலாளர் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கடன் மீளழிப்பு கடன்சுமையை குறைவதற்கான பொறிமுறைக்கு மாற்றாக சீனா என்ற ஒரு அரசின் கடன்பொறிமுறைக்குள் உள்வாங்கப்படும் அணுகுமுறையாகவே காணப்படுகிறது...