Posts

Showing posts from June, 2021

பிரதமர் உரையில்; இலங்கை தேசியவாதத்தை சீன தேசியவாதமாக்க முயற்சிக்கிறாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
பல நாடுகள் சீன முதலீடுகளை மறு மதிப்பீடு செய்தாலும், இலங்கையில் ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை சீனாவுடனான பொருளாதார ஈடுபாட்டை இரட்டிப்பாக்கி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காலப்பகுதியிலும் போது கூட, பெய்ஜிங்கின் இலங்கைக்கான கருத்துக்கள் ஒரு விழிப்புணர்வோடு தொடர்கின்றன. ராஜபக்ஷாக்களின் நிர்வாகத்தின் முழு கட்டுப்பாட்டில்;, சீன செல்வாக்கை செலுத்துவதற்கான ஒரு தனித்துவமான தருணமாக கருதப்படுகிறது. எனினும் இலங்கையர்கள் மத்தியில் சீனாவுடனான இலங்கை அரசாங்கத்தின் உறவு தொடர்பில்  அதிருப்தியான எண்ணங்களும் சந்தேக பார்வைகளும் ஒருதளத்தில் காணப்படவே செய்கிறது. இது ராஜபக்ஷாக்களிற்கான ஆதரவை மக்களிடம் குறைப்பதாக விமர்சனம் உண்டு. இந்நிலையை சீர்செய்ய ராஜபக்ஷாக்களின் நிர்வாகம் சீனா தொடர்பான நேரான எண்ணங்களை  இலங்கையின் பெரும்பான்மை இன சிங்கள பௌத்த தேசியவாத மக்களிடையே பரப்புரை செய்வதில் அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது. அந்த வகையிலானதோர் செயற்பாடாகவே சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மெய்நிகர் வழியூடாக இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷா அவர்கள் ஆற்றிய உர...

ஈழத்தமிழர்களிடமிருந்து தமிழக மக்கள் திட்டமிட்டு அந்நியப்படுத்தப்படுகிறார்களா? -ஐ.வி.மகாசேனன்-

Image
 தமிழக மக்கள் விலகிச்செல்லும் வகையில், ஈழத்தமிழர்களின் தமிழக அரசியல் செயற்பாடுகள் சமீபத்தில் அதிகரித்து வருவதனை  அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியப்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை விவகாரம் இந்திய அரசியலை ஈழத்தமிழர்களிமிருந்து தூரமாய் நகர்த்திய போதிலும் தமிழக மக்கள் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தில் இறுக்கமான ஒத்துழைப்பையே வழங்கி வந்தார்கள். எனினும் இன்று தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் மற்றும் போராட்ட வீரர்கள் பற்றிய எதிர்மறையான கொச்சைப்படுத்தல் கருத்தியல்கள் தமிழக மக்களிடம் அதிகமாக உரையாடப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவை தமிழக மக்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்கான ஆதரவு தளத்திலிருந்து விலகிச்செல்கின்றார்களோ என்ற ஐயப்பாட்டை உருவாக்குகின்றது. இதனை மையப்படுத்தியே இக்கட்டுரை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டம் தொடர்பிலே தமிழக மக்கள் இன்று கொண்டுள்ள கரிசனையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தடம் புரண்ட காலங்களிலெல்லாம் தமிழக அரசியல் பார்வையில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டங்களை நகர்த்தியதில் தமிழக மக்களின் உன்னத போராட்ட...

இலங்கை விடயத்தில் இந்தியாவின் இராஜதந்திர தோல்வி மீளமைக்கப்படுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பது எல்லையற்ற வகையில் அதிகரித்து வருகிறது. இந்நிலைமை பிராந்திய அரசாகிய இந்தியாவிற்கு பேரிடரான விடயமாகும். எனினும்  இலங்கை ஆட்சியாளர்கள்  கூறிவரும் இந்தியா முதல் (India First) கொள்கையால் சற்று நிதானமாக இருந்தார்கள். எனினும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பது நெட்டிசன்களால் இலங்கை சீனாவின் காலணித்துவ நாடென கிண்டலடிக்கும் நிலைமையையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் அமைச்சர் ஒருவரும் சீனா மொழி கற்க வேண்டியது அவசியம் என்ற வகையில் கருத்துரைத்துள்ளார். இந்நிலையில் இலங்கையின் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷா அவர்கள் சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றி உள்ள விடயம் இலங்கை இந்தியா முதன்மை எனும் கொள்கையை முழுமையாக நிராகரித்து விட்டார்களா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அதனை மையப்படுத்தியே இக்கட்டுரையும் இலங்கையின் இந்தியா முதன்மை கொள்கை முற்றாக காலாவாதியாக நீக்கப்பட்டு விட்டதா? என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றதுமே இந்தியாவுடனான இலங்கையி...

தமிழகத்துடன் இராஜதந்திர உறவை பலப்படுத்துமா; இலங்கை தமிழ் அரசியல் தரப்பு? -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதார நிலைமைள் வரலாறு தோறும் இலங்கையில் குறிப்பாக தமிழர்களிடையே நெருக்கமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்துள்ளன. தமிழகம் தொடர்பான நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் கூட இலங்கை தமிழரிடையே அதிகமாக இருந்து வந்துள்ளது. அவ்நம்பிக்கையை தமிழக மக்களும் நீண்ட காலமாக பாதுகாத்தே வந்துள்ளனர். 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட காலப்பகுதியில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் 17 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்றும் அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆழமான எதிர்பார்ப்புக்களுன் ஈழத்தமிழர் காத்திருந்தனர்.  இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ள மு.கஸ்டாலினின் ஆரம்பகால அதிரடி நடவடிக்கைகள் சிலது இலங்கை தமிழரிடையே ஓர் புத்துணர்வையும் நம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் இக்கட்டுரை தமிழக முதல்வரின் இலங்கை தமிழர்களுக்கு சாதகமான அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும், அதுசார்ந்த இலங்கை தமிழ் தரப்பின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் ஈழத்தமிழ...

அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தையாவது கையாளுமா தமிழ் அரசியல் தரப்பு? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலில் ஜூன் மாத முதல் வாரத்தில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் உரையாடலாக அமெரிக்க காங்கிரஸில் ஈழத்தமிழர் நலன் சார்ந்து முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை காணப்படுகின்றது. 2021 மே-18 அன்று அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் குறித்த பிரேரணை பிரேரிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசியலில் இலங்கை அரசாங்கம் ஜூன் முதல் வாரத்திலேயே அதற்கு எதிர்வினையாற்ற ஆரம்பித்துள்ளது.  மறுமுனையில் தமிழ் அரசியல் தரப்பின் அமெரிக்க காங்கிரஸ் பிரேரனை தொடர்பான செயற்பாடுகளை தேடுகையில் அதில் அபிவிருத்தியான நகர்வுகளை காண முடியவில்லை. மேலும் தமிழ் ஊடகப்பரப்பும் அமெரிக்க பிரேரனையை வலுவற்றதொரு செயற்பாடாய் உதறித்தளும் போக்கே தமிழ் ஊடக செய்தி பரப்புக்களில் அவதானிக்க முடிகிறது. இவற்றை மையப்படுத்தியே இக்கட்டுரை தமிழ் சமூகத்தின் உரிமைப்போராட்டத்தில் அமெரிக்க பிரேரனையின் வகிபாகத்தையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 'இலங்கையில் போர் நிறைவடைந்து 12 வருடங்களை அங்கீகரித்தல், உயிரிழந்த உயிர்களை கௌரவித்தல்.;  நீடித்த அமைதியான அரசியல் தீர்வை உறுதி செய்வதற்காக இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், புனரமைப்பு, இழ...

சீனாவுடனான அமெரிக்க வெளியுறக்கொள்கையில் மேம்பாடாற்றபோக்கு பிடன் நிர்வாகத்திலும் காணப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், தமது நாட்டின் உளவு அமைப்புகளிடம் கொரோனா வைரஸின் மூலத்தை 90நாட்களுக்குள் கண்டறிந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மீளவும் கொரோனா தொடர்பிலான அமெரிக்க சீண்டல் கருத்துக்களும், சீனாவின் எதிர்வினை கருத்துக்களுமாக அமெரிக்க மற்றும் சீனாவிடையே கொரோனா அரசியல் மீளவும் சூடுபிடிக்க ஆரம்பிதுள்ளது. ட்ரம்ப்-இன் அரசியல் செயற்பாடுகளை கோமாளி அரசியலாக அதிகம் விமர்சித்து ஆட்சியை கைப்பற்றிய ஜோ பிடனும் ட்ரம்ப் ஆட்சியில் முன்னிறுத்தப்பட்ட சீனா மீதான சதிக்கோட்பாட்டு அரசியலை மீள முன்னிறுத்துகின்றார். இது அமெரிக்க சீனாவுடனான வெளியுறவுக்கொள்கையில் தன்னை மேம்படுத்த (Upgrade) தவறுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனை மையப்படுத்தியே இக்கட்டுரை உலக ஒழுங்கில் சீனாவின் வளர்ச்சியை தடைசெய்யும் வல்லமை அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் காணப்படுகின்றதா? என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுநாள் வரை உலக அளவில் 17.1கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள...