Posts

Showing posts from September, 2021

அமெரிக்கா-இலங்கை உறவை பலப்படுத்துவதற்கான பொறி மகிந்த சமரசிங்காவா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை-சீனா நெருக்கமான உறவு, இலங்கை-அமெரிக்கா நெருக்கடிமிக்க உறவு பற்றிய உரையாடல்களே ராஜபக்ஷாக்களின் மீளெழுச்சியின் பின் அதிகமாக உரையாடப்பட்ட அரசியல் உரையாடலாகும். அதனை நிரூபிக்கும் வகையிலேயே ராஜபக்ஷாக்களின் ஆட்சியின் ஆரம்ப நாட்களும் காணப்பட்டது. எனினும் குறுகிய காலஅனுபவத்திலேயே ராஜபக்ஷாக்கள் நிர்வாகம் மேற்கு நாடுகளிடையே சமநிலையை பேண வேண்டிய தேவையையும் உணர்ந்துள்ளார்கள். அதிரடி மாற்றங்களாக சீனாவுடனான நெருக்கமான உறவிற்கு சமாந்தரமாகவே அமெரிக்க, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுடன் உறவை சீரமைக்கும் வகையில் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றியும் அதன் விளைவுகள் தொடர்பிலும் இப்பகுதியிலேயே முன்னைய வாரங்களில் அதிகமாக உரையாடப்பட்டுள்ளது. இவ்இராஜதந்திர நகர்வுகளில் ஒன்றாகவே பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்காவை அமெரிக்க தூதராக நியமிக்க முன்னெடுக்கப்படும் நகர்வுகளும் அவதானிக்கப்படுகிறது. இக்கட்டுரையும் மகிந்த சமரசிங்க அமெரிக்க தூதராக நியமிப்பதில் காணப்படும் இராஜதந்திர முக்கியத்தை தேடுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா ப...

"ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்" ஐரோப்பா-அமெரிக்க முரண்பாட்டை அதிகரித்துள்ளது? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலில் கடந்த வாரம் பூதாகரமாகிய விடயம் நேட்டோ பங்காளி நாடுகளிடையே ஏற்பட்ட பூசலாகும். அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து அவுஸ்ரேலியாவுடன் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தை மேற்கொண்டதையடுத்து பிரான்ஸ் தனது ஏமாற்றத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக பகைமை நாடுகளிடையே கையாளப்படும் தூதரர்களை மீளழைக்கும் செயற்பாட்டை பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக நகர்த்தி இருப்பது பிளவின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. இதனை அமெரிக்க ஐரோப்பிய உறவில் அதிகரிக்கும் முறுகலின் ஓர் பகுதியாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். இக்கட்டுரையும் அதிகரிக்கும் அமெரிக்க - ஐரோப்பா முறுகலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்கஸ்(AUKID) பாதுகாப்பு உடன்பாட்டு அவுஸ்ரேலியா(AUS), அமெரிக்கா(UK), பிரிட்டன்(US) ஆகிய நாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதன்பிரகாரம் பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை அவுஸ்ரேலியாவுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும் வழங்க இருக்கின்றன. முதல் முறையாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளும் அவுஸ்ரேலியாவுக்குக் கிடைக்க இருக்கின்றன. உளவுத் தகவல்களைப்...

வடகொரியாவின் க்ரூஸ் ஏவுகணை பரிசோதனை அமெரிக்காவுக்கான இராஜதந்திர பொறியா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரிய தீபகற்பமானது சர்வதேச அரசியலில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக ஏவுகணைப்பரிசோதனைகளால் நிலைத்த கொதிநிலையை கொண்ட புவிசார் பிரதேசமாகும். எனினும் சமீபத்தில் கொரிய தீபகற்பம் அமைதியை வெளிப்படுத்தி வந்தது. எனினும் நீண்ட இடைவெளிக்கு பின்பு வட கொரியா நடத்திய இரண்டு ஏவுகணை சோதனைகள் அதன் தலைமை மீதும், வெளியுறவுக் கொள்கை மீதும் அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இக்கட்டுரை வடகொரிய ஏவுகணை பரிசோதனை சார்ந்த சர்வதேச அரசியல் நகர்வுகளை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக வளர்ச்சியில் இருந்த க்ரூஸ் ஏவுகணைகள் (Cruise Missiles) கடந்த வாரம் செப்டெம்பர்11,12 ஆகிய தினங்களில் வடகொரிய பிராந்திய கடலில் 1,500 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாக வடகொரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) செப்டெம்பர்-13 அன்று உறுதிப்படுத்தியுள்ளது. க்ரூஸ் ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை. குறிப்பாக இந்த வகை ஏவுகணைகள் 1,600 கி.மீ வரை சென்று தாக்கக்கூடியவை என கூறப்படுகிறது. ஆனால், பரிசோதனையில் அவை சுமார் 1500 கி.மீ தூரம் பயணித்ததாக கே.சி.என...

ஜெனிவா களத்தில் தமிழர் உரிமை போராட்டம் முடிவுக்கு வருகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பிற்பாடு தமிழர் சர்வதேச சக்திகளால் இலங்கை அரசியலிலுள் தம் இருப்பை உறுப்படுத்துவதற்கான ஊடகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை களத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இலங்கையில் தமிழர்களின் உரிமைக்கான கோரிக்கையை முதன்மைப்படுத்தி இலங்கை அரசியலை கையாளும் பொறிமுறையை கட்டமைத்து வந்துள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களால் இலங்கை அரசாங்கங்கள் நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும் தென்னிலங்கை அரசியல் அதனை சரியான தடத்தில் நகர்த்தி கொண்டு சென்றுள்ளமையையே கடந்த கால வரலாறுகள் உறுதி செய்துள்ளன. இந்நிலையில் 48வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை மற்றும் அது தொடர்பாக உறுப்பு நாடுகளின் ஆதங்கங்கள் வெளிப்படுத்தும் அரசியல் நகர்வுகளை மற்றும் களநிலைமைகளை தேடுவதாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது. செப்ரெம்பர்-13அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் மிசெல் பச்லெட் தனது வாய்மூலமான அறிக்கையில் இலங்கை தொடர்பான விவகாரங்களையும் முதன்மைப்படுத்தியிருந்தார். மிசெல் பச்லெட்ன் வாய்மூல அறிக்கையில், இலங்கை தற...

ஜெனிவாவின் தோல்விக்கு தமிழ் தலைமைகளின் ஏமாற்றுத்தனமான அரசியலே காரணம் -ஐ.வி.மகாசேனன்-

Image
 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து வருடந்தோறும் மார்ச், செப்டெம்பர் மாதங்களில் ஜெனிவாவை மையப்படுத்தி இலங்கை அரசியல் களம் முட்டி மோதுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையூடாக ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தை அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் தம் தேசிய நலனுக்கு ஏற்ப வளைத்து கையாண்டு வருகின்றனர். 2015ஆம் ஆண்டு வரை ஈழத்தமிழர்களுக்கு சாதமாக இருந்த ஜெனிவா களம், 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான களமாக மாறியது. இம்மாற்றத்திற்கு ஈழத்தமிழரசியல் தரப்பும் பங்களிப்பு நல்கியமை குறிப்பிடத்தக்கது. இவ்ஒழுங்கில் 2019ஆம் ஆண்டு இறுதியில் மீள ராஜபக்ஷாக்களின் ஆட்சி இலங்கையில் துளிர் விட்டதும் ஜெனிவா களம் ஈழத்தமிழருக்கு சாதகமான மாற்றத்தை காண்பித்தது. இப்பின்னணியிலேயே 2021 மார்ச் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியானதாகவே செப்டெம்பர்-13 48வது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் 2021 செப்டெம்பர் ஜெனிவா கூட்டத்தொடர் யாருக்...

எதற்காக அவசரகால சட்டம்? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் கொரோனா வைரஸின் பரவுகையும் மரணங்களும் கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்து வருகிறது. இதன்விளைவாக அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக இலங்கை அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. இலங்கை அரசாங்கம் கொரானா வைரஸினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கட்டுப்படுத்த இயலாத சூழலில், அரசாங்கத்துக்கு எதிராக  மக்களிடம் எழும் விமர்சனங்களை எதிர்ப்புணர்வுகளை திசைதிருப்பும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. பஸில் ராஜபக்ஷாவின் பாராளுமன்ற மீள்வருகை, அமைச்சரவை மாற்றம் என்பன அவ்வாறன பொறிமுறையே ஆகும். அதன் தொடர்ச்சியாகவே தற்போது உணவு தட்டுப்பாடு தொடர்பிலான அவசரகால நிலையை பிரகடனமும்  அமைந்துள்ளது.  அது மட்டுமன்றி  அதனுள் இலங்கைக்கு சமகாலத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகளை நீர்த்து போகச்செய்யும் நிகழ்ச்சி நிரலும் ஒருங்கு சேர்க்கப்பட்டிருந்தன. அவ்வாறனதொரு சர்வதேச நெருக்கடியையும் உள்நாட்டு நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கான உத்தி அவசரகால சட்ட அமுலில் காணப்படுகிறதா என்பதை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவ...