Posts

Showing posts from May, 2022

காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிகரமான போராட்டமாக கொள்ள முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பாக தீவு முழுவதும் மக்களிடம் அரசாங்கத்துக்கு எதிராக  அதிருப்தி காணப்படுகின்ற போதிலும், மக்கள் தங்கள் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த தவறியுள்ளார்கள். மக்களின்காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிகரமான போராட்டமாக  கொள்ள முடியுமா?             -ஐ.வி.மகாசேனன்- எதிர்வினைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் கொழும்பின் ஒருபகுதியினரும், பல்கலைக்கழக மற்றும் உயர்கற்கை மாணவர்களுமே போராட்ட களத்தில் களமிறங்கி உள்ளனர். காலிமுகத்திடலில் இடம்பெறும் கோதா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்டங்கள் அவ்வகையிலானதாகவே காணப்படுகின்றது. இப்போராட்டங்களை ஆதரிக்கும் தரப்பினர்  காலிமுகத்திடல் போராட்டத்தை இலங்கையின் புதிய யுகத்திற்கான புரட்சியாக பிரச்சாரப்படுத்துகிறார்கள். எனினும் காலிமுகத்திடல் போராட்டம் புரட்சியின் இயல்புக்குள் பயணிக்கவில்லை என்ற வாதப்பிரதிவாதங்களும் பொதுவெளியில் உரையாடப்படுகிறது. இக்கட்டுரை காலிமுகத்திடல் போராட்டம் புரட்சிக்கான பரிணாமத்தில் பயணிக்கின்றதா என்ற தேடலை அடிப்படையாய்...

பிரிட்டன் பிரதமர் வின்சன்ட் சர்ச்சில் பெற்ற வெற்றியை பிரதமர் ரணிலால் பெற இயலுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் ஆட்சி மாற்றம் எனும் விம்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. தேசிய பட்டியல் ஒரு ஆசனத்தினூடாக ஒரு வருடம் கழித்து பாராளுமன்றத்துக்குள் விஜயம் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுள்ளார். எனினும் ஏனைய எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த பத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவை வெளிப்படுத்திய போதிலும், தேசிய அரசாங்க உருவாக்கத்துக்குள் அமைச்சுப்பதவியை ஏற்க போவதில்லையென அறிவித்துள்ளார்கள். ஆதலால் ரணில் தலைமையில் உருவாக்கப்படும் அமைச்சரவையும் பொதுஜன பெரமுன அரசாங்கமாகவே கட்டமைக்கப்பட உள்ளது. எனிலும், மாற்றம் பெற்றுள்ள பிரதமர் பதவியினால் இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி சீர்செய்யப்படுவதான விம்பம் அண்மைய நாட்களில் ஊடகப்பரப்பின் செய்திகள் உருவாக்க முனைகிறது. இக்கட்டுரை பிரதமர் மாற்றத்தால் ரணில் விக்கிரமசிங்காவினால் முன்னெடுக்கக்கூடிய அரசியல் நகர்வுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மே-12அன்று(2022) நிறைவேற்றுத்துறை அதிகார...

பிலிப்பைன்ஸ் அரசியலில் மீள ஆதிக்கம் பெறுகிறதா மார்கோஸ் குடும்ப அரசியல்? -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகமயமாக்கலின் எழுச்சி எந்தவொரு அரசும் தனித்து இயங்க இயலாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் ஒரு அரசின் இராஜதந்திர நகர்வுகளை வெளியுறவுக்கொள்கைகளை வடிவமைக்கவும், ஒரு அரசின் அரசியல் எதிர்கால போக்குகளை அணுகுவதற்கும் சர்வதேச நாடுகளின் அரசியல் நடத்தைகள் பற்றிய புரிதலும் அவசியமாகிறது. அதுசார்ந்தே சர்வதேச அரசியல் கற்கையும் வளர்ச்சி பெற்றுள்ளது. இலங்கை அரசியலில் ஏறத்தாழ இருவருடங்களுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ராஜபக்ஸாக்களின் ஆட்சி 20வருடங்களுக்கு அசைக்க முடியாத நிலை பெறப்போகின்றது என்ற ஆரூடங்கள் இலங்கை அரசியல் பரப்பில் உரையாடப்பட்டது.  எனினும் தற்போது இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு ராஜபக்ஸாக்கள் ஆட்சியின் எதேச்சதிகாரப்போக்கே காரணமென சுட்டிக்காட்டி மக்கள் ராஜபக்சாக்களுக்கு எதிராக வீதியில் இறங்கியுள்ளனர். அவர்களை அதிகாரத்தை விட்டு வெளியேறக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக காலிமுகத்திடலில் முகாமிட்டு போராட்டம் நடாத்தி வருகின்றார்கள். மே-09அன்று பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் காலிமுகத்திடல் போராட்டம் கலவரமாக மாற்றப்பட்ட...

காலிமுகத்திடல் போராட்டமும் பழைய அரசியல் கலாசாரத்தின் நீட்சியும் மாற்றத்துக்கு வழிகோலுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
மார்ச் மாத(2022) இறுதியில் இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியினை குறித்து அரசாங்கத்துக்கு எதிராக சாத்வீக வழியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் மே-09(2022)அன்று கலவரமாக மாற்றப்பட்டுள்ளது.  இலங்கையின் 74 ஆண்டு கால சுதந்திர அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக காலத்துக்கு காலம் தமிழ்-சிங்கள மற்றும் முஸ்லீம்-சிங்கள இனக்கலவரங்கள் இலங்கையின் அரசியல் பொருளாதார அமைதியை சீர்குலைத்துள்ளது. எனினும் மே-9 காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டு தென்னிலங்கை முழுமையாக வியாபித்துள்ள கலவரமானது, இலங்கையின் கலவர வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைகிறது. குறிப்பாக இக்கலவரம் சிங்கள மக்களிடையே வியாபித்துள்ளது. அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கும், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையிலேயே கலவரம் இடம்பெற்றுவருகிறது. இதனடிப்படையில் பாஸிச பேரினவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி முற்போக்கானவர்களாக அடையாளப்படுத்தும் இளைஞர்கள் போராடுவது இலங்கையின் அடுத்த தலைமுறையின் மாற்றத்தை வெளிப்படுத்துவதாக உரையாடப்படுகிறது. இக்கட்டுரையும் காலிமுகத்திடல் கலவர சம்பவங்கள் வெளிப்படுத்தும் இலங்...

அரசியல் பொருளாதார நெருக்கடியில் மகாசங்கங்களின் ஈடுபாடு; ராஜபக்ஷாக்களை பாதுகாக்கும் உத்தியா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி இலங்கையின் அரசியல் கலாசாரத்திலும் நேரிடையாக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆதிக்கம் முதன்மையானதாக இருந்து வந்துள்ளது. எனினும் காலிமுகத்திடலில் கூடியுள்ள இளைஞ்ஞரணி இனவாத ஆதிக்கத்தால் இலங்கையில் இடம்பெற்ற சீரழிவுகளை அடையாளப்படுத்துபவர்களாக காணப்படுகிறார்கள். குறிப்பாக, ஏப்ரல்-29அன்று 'கொடகோகம' போராட்ட தளத்தில் நிற்கும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் காலிமுகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்காவின் கண்களை கறுப்புத்துணியால் மூடி கழுத்தில் கயிற்றை தொங்கவிட்டார்கள். அதனூடக சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக அளிக்கப்ட்ட அங்கீகாரத்தை சுட்டிக்காட்டி, இனவாதத்தின் ஆரம்ப கர்த்தாவாக பண்டாரநாயக்காவை அடையாளப்படுத்தி இளையோர் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்கள். இது பௌத்தத்தினூடாக அதிகாரத்தை தக்கவைத்துள்ள மகா சங்கங்களுக்கு பேரிடரை ஏற்படுத்துவதாகவே அமைகிறது. இதனை சுதாகரித்துகொள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப காலத்தில் அதிக மௌணத்தை வெளிப்படுத்திய மகா சங்கங்களும் ...

மக்ரோனின் வெற்றி; ஐரோப்பாவின் நெருக்கடியை சீர்செய்யுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ரஷ்சிய-உக்ரைன் மோதலும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்வினைகளும் சர்வதேச அரசியலிலில் ஐரோப்பிய நாடுகள் மீது அதிக கவனத்தை திருப்பியுள்ளது. ரஷ;சிய-உக்ரைன் போரை அமைதிக்கு நகர்த்த கூடிய ஆற்றலும் வாய்ப்பும் ஐரோப்பிய நாடுகளின் முடிவுகளிலும் செயற்பாடுகளிலுமேயே தங்கியுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் நகர்வுகள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தீர்மானமெடுக்கும் சக்தியாக காணப்படுவதனால் பிரான்ஸின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முழு உலகினதும் கவனத்தையும் பெற்றுள்ளதுடன், சர்வதேச அரசியலில் பிரதான ஆய்வுப்பொருளாகவும் உருவாகியுள்ளது. இக்கட்டுரையும் மக்ரோனின் இரண்டாம் கட்டத்தின் அரசியல் நகர்வுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் வாக்காளர்கள் ஏப்ரல்-24அன்று ஜனாதிபதித் தேர்தலின் போது தங்கள் நாட்டிற்கான இரண்டு வித்தியாசமான தரிசனங்களுக்குள் தங்கள் தெரிவை வெளிப்படுத்தியுள்ளார்கள். ஏப்ரல்...

தென்னிலங்கையில் எழுச்சிபெறும் போராட்டத்தை கையாள்வதில் தமிழ்த்தரப்பின் தோல்வி! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் நிலவும் அரசியல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக ஆட்சி மாற்றத்தை கோரிய மக்கள் போராட்டங்கள் தென்னிலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. எனினும் ஆட்சித்தலைவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இறுக்கமாக பற்றிக்கொள்வதிலேயே குறியாக உள்ளனர். அதேநேரம் வடஇலங்கையில்,  நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளை கடந்த போர்க்கால நெருக்கடிகளுடன் ஒப்பிட்டு விலையேற்றங்கள் தட்டுப்பாடுகளுக்கு வரிசையில் நின்று இயைந்து பயணிக்கிறார்கள். எனினும் நெருக்கடிக்கு சரியான தீர்வுடன் கடந்து செல்ல இயலாத நிலைப்பாடுகளே காணப்படுகிறது. வடக்கு-கிழக்கின் அரசியல் பிரதிநிதிகளும் இந்நெருக்கடியை கடந்து செல்வது தொடர்பில் தம்மக்களுக்கு சரியான வழிகாட்டல்களை செய்ய தவறியுள்ளார்கள் என்ற விமர்சனமே பொதுவெளியில் காணப்படுகிறது. இக்கட்டுரை இலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடியில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் அரசியல் நகர்வுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள ஜோன்ஸ் ஹொப் கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கியின் கூற்றுப்படி, உலகில் வருடாந்த பணவீக்க வீதத்தில் சிம்பாப்வே மற்றும் லெபனானை தொ...