Posts

Showing posts from December, 2022

தீர்வு முயற்சி மீண்டுமொரு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கான உரையாடல்கள் சமகாலத்தில் உயர்வீச்சில் இடம்பெற்று வருகின்றது. தேசிய இன நல்லிணக்க வேலைத்திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பிலான விடயங்களை கலந்துரையாடுவதற்காக டிசம்பர்-13அன்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்து கட்சி மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தொரு நிகழ்வாகும். அடுத்த வருடம்(2023) பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு பெறப்பட்டிருக்கும் என்ற பிரச்சாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா முன்னெடுத்து வருகின்றனர். எனினும், ஜனாதிபதி தீர்வு உள்ளடக்கம் தொடர்பிலான தெளிவான கருத்தினை முன்வைக்கவில்லை. தமிழ் அரசியல் தரப்பினர் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வை வலியுறுத்தும் அதேவேளை தென்னிலங்கையில் ஒரு தரப்பினர் 13ஆம் திருத்தத்திறகான ஆதரவை முன்னிறுத்துவதுடன் இன்னொரு தரப்பு அதிகார பகிர்வு எனும் விடயத்தையே முழுமையாக நிரகரிப்பவர்களாக காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை தென்னிலங்கையில் அதிகார பகிர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர்-13அன்று ந...

நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடும் தமிழரசியல் தரப்பின் உத்திகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் களத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வே முதன்மையான உரையாடலாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படுகையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு, இலங்கையின் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் எட்டப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா உறுதியளித்தார். அதனை தொடர்ந்து தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளான தீர்வு தொடர்பாகவும், தமிழரசியல் தரப்பு ஜனாதிபதியின் உரையில் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்தினர். எனினும் பொது தளத்தில் சமஷ்டி தொடர்பாகவும், இந்தியாவின் மத்திதியஸ்தம் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகள் மீள மீள வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையிலேயே டிசம்பர்-13அன்று தேசிய இனப்பிரச்சினை தொடர்பான சர்வகட்சி மாநாடொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளின் நடத்தைகளுக்கு பின்னாலான அரசியல் வெளிப்பாடுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு போர் இல்லாதது எதிர்காலத்தில் மற்றொரு போர் உருவாகாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. இந்தப் பின்னணியில், உண்மையான நல்ல...

தென்னிலங்கையால் முன்வைக்கப்பட்டதே சமஷ்டித்தீர்வு! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடல்களே இலங்கை அரசியலில் சமகாலத்தின் மைய உரையாடலாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் கட்சிகளுடன் உரையாட உள்ளதாத அறிவித்துள்ளார். பிரதமர் சர்வ கட்சி கூட்டத்துக்கான அழைப்பை சபாநாயகரூடாக முன்னெடுப்பதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் கட்சிகள் சமஷ்டி பற்றிய உரையாடல்களையும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஒற்றையாட்சிக்குள் 13, 13பிளஸ் மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைகளை பற்றியும் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள முரண்பாட்டு எண்ணங்கள் ஒரு தளத்தில் பயணிக்குமா? தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு 75வது சுதந்திர தினத்துக்குள் சாத்தியப்படுமா? என்பதில் சந்தேகங்களும் ஐயப்பாடுகளுமே மீதமாகிறது. இக்கட்டுரை தமிழர்கள் முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கை தான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதனை தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முன்னிலைப்படுத்தி உள்ளமையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. சமஸ்டி என்றால் நாடு ஒன்பது துண்டாகி விடும் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அவர் மேலும் க...

சீனாவில் எழுச்சிபெறும் வெகுஜன போராட்டமும் சீனா அதிகார வர்க்கமும் -ஐ.வி.மகாசேனன்-

Image
2020களிள் ஆரம்பத்தில் உலகை நெருக்கடிக்குள் தள்ளிய கோவிட்-19இன் தாக்கங்கள் இன்றுவரை உலக நாடுகள் ஏதொவொரு வகையில் எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக பொதுமுடக்கத்தின் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகளாயினும் சரி, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளாயினும் சரி ஏதொவொரு வகையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கான ஆபத்துடனேயே நகருகின்றது. எனினும் கோவிட்-19 பெருந்தொற்று ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட சீனாவில் அதுசார் தாக்கங்களின் செய்திகள் பெருமளவில் பொது அரங்கிற்கு கிடைக்கப்பெறவில்லை. எனினும், சீனாவின் தேசியவாத செயற்பாடுகளினூடாக, அங்கு 'பூச்சிய கோவிட்'(Zero Covid) கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், அது சீனாவின் இனவாதத்தை வளர்ப்பதுடன் சீனா அதிகம் இரும்புதிரை அரசியலுக்குள் நகர்வதாக மேற்கு ஊடகங்கள் சுட்டிக்காட்டி வந்தன. இவ்வாறான பின்னணியில் நவம்பர் இறுதி வாரங்களில் சீனா முழுவதும், நாட்டின் கடுமையான 'பூச்சிய கோவிட் தொற்றுநோய்' கொள்கைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகள் வளர்ந்துள்ளன. பல நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்த தெருக்களில் இறங்கினர். இக்கட்டுரை சீனாவில் வளர்ந்துவரும...

தமிழரசியல் கட்சிகள் தமிழ் மக்களினை ஒன்றிணைத்து அரசியல் சமூகமாக செயற்பட தயங்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் சமகாலத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உரையாடல்கள் முதன்மையான செய்தி தலைப்புக்களாக உள்ள. தென்னிலங்கையில் இனப்பிரச்சினை தீர்வாக பல மாறுபட்ட பொறிமுறைகள் பிரேரிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பிராந்தியங்களின் ஒன்றியம்,முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் மாவட்ட அதிகார சபை, 13ஆம் சீர்திருத்தம் மற்றும் மகிந்த ராஜபக்ஷா தரப்பினரால் 13பிளஸ் தொடர்பான விடயங்கள் முதன்மை பெறுகின்றன. யாவுமே கடந்த 74ஆண்டுகால இலங்கை சுதந்திர வரலாற்றில் இனப்பிரச்சினை தீர்வாக உரையாடி தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வியடைந்தவையாகவே காணப்படுகின்றது. தமிழ் தரப்பு வலியுறுத்தும் சமஷ்டியை தொடர்ச்சியாக நாட்டினை பிளவுபடுத்தும் பொறிமுறையாகவே பேரினவாத தென்னிலங்கை அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இம்முரணகையான நிகழ்வுக்குள் தமிழ் மக்கள் அரசியல் தீர்வு தொடர்பாக கொண்டுள்ள எண்ணங்களையும், தமிழ் அரசியல் தரப்பின் நகர்வையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்து 75வது வருடத்திற்கு முன்னர் பிரச்சினையை பேசி தீர்த்துவைக்க அனைத்து தரப்பினரையு...