Posts

Showing posts from July, 2023

ஜனநாயக மறுசீரமைப்புக்கு வழிகோலுமா இஸ்ரேல் வசந்தம்! -சேனன்-

Image
20ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து மேற்காசியாவின் அரசியலின் அமைதியின்மைக்கு காரணமான இஸ்ரேல் இன்று உள்நாட்டு போருக்கு ஏதுவான சூழலில் பயணிக்கின்றது. இஸ்ரேலின் அரசியல் ஸ்திரமற்ற சூழல் தீவிர வலதுசாரிகளின் கூட்டணி அரசியலை உருவாக்கியுள்ளது. இக்கூட்டணி இஸ்ரேலின் அரசியலை மேற்காசியாவின் ஜனநாயகம் பலவீனமான அரசியல் இயல்புக்குள் நகர்த்தி செல்கின்றது. குறிப்பாக அரசாங்கக் கொள்கைகளின் உச்ச நீதிமன்ற மேற்பார்வையை கட்டுப்படுத்தும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் புதிய சட்டம், ஆழமடைந்துவரும் சமூகப் பிளவுகள் மற்றும் சாத்தியமான ஜனநாயக பின்னடைவு குறித்து இஸ்ரேலியர்களிடையே எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. இவ்எச்சரிக்கை மக்களை இஸ்ரேல் வீதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு திரட்டியுள்ளது. அரசியல் அவதானிகள் 'இஸ்ரேலின் வசந்தம்' என அண்மைய இஸ்ரேலியர் போராட்டங்களை கோடிட்டு காட்டுகின்றனர். இக்கட்டுரை இஸ்ரேலிய அரசாங்கத்தின் நீதித்துறை திருத்தத்தின் போக்கினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட், நாட்டின் நீதித்துறை அமைப்பின் திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பின் முதல் பகுதியை கடந்த ஜூலை-24அன...

தேசிய இனப்பிரச்சினை தீர்வில் மோடியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றும் தமிழ்க் கட்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இந்திய பிரதமரால் எடுத்துரைக்கப்படுவதுடன் முன்னேற்றகரமான மாற்றங்களுக்கான எதிர்பார்க்கைகள் ஈழத்தமிழரசியில் தரப்பிடம் காணப்பட்டது. எனினும் இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பில் தேசிய இனப்பிரச்சிளை தொடர்பில் இந்திய பிரமதரால் எடுத்துரைப்பு மாத்திரமே இடம்பெற்றுள்ளது. எடுத்துரைப்புகள் வினைத்திறனான தீர்வு நோக்கி இலங்கை அரசாங்கத்தை நகர்த்தக்கூடிய வகையிலானதாக பலமாக அமையவில்லை என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாடலாக காணப்படுகின்றது. இச்சூழலில், தமிழ் கட்சிகள் இந்திய பிரதமரின் எடுத்துரைப்பை வெகுவாக வரவேற்று கருத்துக்களை வழங்கியுள்ளமை தமிழ் கட்சிகளின் அரசியல் அறிவு தொடர்பிலேயே வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை இந்தியாவுக்கான இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் தமிழர்களுக்கான விளைவை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை-20அன்று இரண்டு நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். குற...

இலங்கையின் பௌத்தத்தின் மறுசீரமைப்பே ; இலங்கையின் மாற்றத்த்திற்கான அடிப்படை! -ஐ.வி.மகாசேனன்-

Image
சிங்கள பௌத்த பேரினவாதம் நீண்டகாலமாக இலங்கையில் அரசியல் அணிதிரட்டலின் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை வரலாற்றின் முரண்களும் இயங்கியலும் பௌத்த பேரினவாத கருத்தியல் ஆதிக்கத்தித்திலும், பௌத்த பீடங்களின் எண்ணங்கங்;களின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கான நாடு என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் அல்லது மோசமானவர்கள் என்றும் இந்தக் கோட்பாடு வலியுறுத்துகிறது. பேரினவாதத்தின் இந்த நச்சு முத்திரை, பௌத்த பிக்குகள் உட்பட, பாகுபாடு, வெறுப்பு மற்றும் வன்முறையை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறது. பன்மைத்துவ அரசான இலங்கையின் தேசிய இனங்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். பௌத்தம் அமைதியான மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்று பலர் அடையாளப்படுத்துகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இலங்கை மற்றும் மியான்மர் போன்ற இடங்களில் யதார்த்தம் மிகவும் சிக்கலானது. இக்கட்டுரையும் இலங்கையில் பௌத்தத்தின் யதார்த்த இயல்பை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில், இலங்கையின் நவகமுவவில் உள்ள பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் பல்லேகம சுமண தேரர் என்ற பிக்கு இரண்டு பெண்களுடன் தகாத முறைய...

இலங்கையின் வரலாறு முழுவதும் பாராளுமன்ற அரசியல் இனவாதத்தை தூண்டுகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் பாராளுமன்ற நியதிகளுக்குள் ஜனநாயகத்தின் அடிப்படையான தனிமனித சுயாட்சி மற்றும் சமத்துவம் பாரிய அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு நீதிபதியின் செயற்பாட்டை அச்சுறுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அவ்அச்சுறுத்தல் பாராளுமன்ற சிறப்புரிமை என்ற நியதிக்குள் எவ்வித நீதிப்பொறிமுறைகளுக்குள்ளும் உட்படுத்தப்படாது விலக்களிப்பு பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமன்றி வடக்கு-கிழக்கு நீதிமன்றங்களை தாண்டி புறத்தே நீதித்துறைக்கான சவாலாக கூட எவ்வித கண்டனங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. இது இலங்கையின் பாராளுமன்றத்தினூடாக இனவாதம் பராமரிக்கப்படுவதனையே சுட்டிக்காட்டுவதாக அமைகின்றது. இக்கட்டுரை பாராளுமன்ற சிறப்புரிமை எனும் நியதிக்குள்ளால் இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனவாத அரசியல் பிரச்சாரங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை-07அன்று ஓய்வுபெற்ற அட்மிரலும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, 'முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்துமலை தளத்தில் இருந்து எங...

இலங்கைத்தீவின் நீதிப்பொறிமுறையை மீறும் சிங்கள பௌத்தமும் ஈழத்தமிழரின் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியலை நெருக்கடி காலங்களில் பாதுகாக்கும் கருவியாக சிங்களம் பௌத்தம் இலங்கையில் தொடர்ச்சியாக பேணப்பட்டு வருகின்றது. அண்மையில் இலங்கையில் அதிகரித்துவரும் சிங்கள பௌத்த பிரச்சாரம் இலங்கை எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார நெருக்கடிசார் உரையாடலை நீர்த்துப்போகச்செய்துள்ளது. குறிப்பாக வடக்கில் பௌத்த மேலாதிக்கம் ஆக்கிரமிப்பு வடிவில் தங்குதடையின்றி பயணித்து வருகின்றது. இது இலங்கையின் நீதித்துறை செயற்பாட்டையும் சுயாதீனத்தன்மையையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதனை களஆய்வு மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மேற்கொண்ட விஜயமும், சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் தலைவரான சரத் வீரசேகராவை எச்சரிக்கை செய்தமையும் தமிழ் அரசியல் பரப்பில் சிங்கள பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிரான நீதிமன்ற செயற்பாட்டின் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இக்கட்டுரை இலங்கை அரசியலில் கடந்த காலங்களில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக நீதித்துறை மேற்கொண்ட நடவ...

சர்வதேசத்தை இனப்பிரச்சினை தீர்வுவிடயத்தில் ஏமாற்ற முயலும் ரணில் அரசு! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய தலைவராக ஈழத்தமிழர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு தன்னை பிரச்சாரப்படுத்தும் அரசியல் நிகழ்ச்சி நிரலையே இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா முதன்மைப்படுத்தி வருகின்றார். குறிப்பாக இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடாத்தப்பட்ட நல்லிணக்கத்துக்கான சர்வகட்சி மாநாடாயினும் சரி, அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்புக்களும் அந்நிகழ்ச்சி நிரலின் ஓர் பகுதியாகவே கடந்த காலங்களில் அரசியல் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிரான்சிற்கான விஜயமும் ஜனாதிபதியின் சர்வதேச சமூகத்திற்கான பிராச்சார உள்ளடக்கங்களையே அதிகமாக கொண்டுள்ளது. ஜனாதிபதி கடந்த ஒரு வருடங்களில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அதிக பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ள போதிலும் நடைமுறையாக்கத்தில் இதுவரை எவ்வித முன்னேற்றங்களையும் அடையாளங்காண இயலாத நிலைமைகளே காணப்படுகின்றது. இந்நிலையில் இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்சிய பயணத்தில் முதன்மைப்படுத்தியுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டு இய...