Posts

Showing posts from October, 2023

கிழக்கு மீதான பேரினவாத ஆதிக்கமும் ஈழத்தமிழர் அரசியல் இருப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறை தினசரி புதிய பரிமாணங்களுக்குள் நகர்ந்து செல்கின்றது. 'அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம்' என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ஒக்டோபர்-25அன்று தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு, பிரச்சாரம், அச்சுறுத்தல் என சிங்கள பேரினவாதிகள் தமிழர் நிலங்கள், தமிழர்கள், தமிழ் அரச அதிகாரிகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீது பேரினவாத நடவடிக்கைகளை தினசரி அதிகரித்து வருகின்றனர். வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம் முழுமையாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வீச்சுப்பெறுகின்ற போதிலும், கிழக்கில் முதன்மையான தாக்கத்தை செலுத்துவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் கிழக்கில் தமிழர்களின் அரசியல் தலைமைகளில் சாணக்கியனை தவிர, வேறு அரசியல் தலைமைகள் தமிழர்களின் விடயங்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாட்டை அவதானிக்க முடியவில்லை. சாணக்கியனிடமும் முதிர்ச்சியான அரசியல் அனுபவமின்மை வினைத்திறனான செயற்பாட்டை நகர்த்துவதாக அமையவில்லை. குறிப்பாக கடந்த வாரங்களில் தமிழ் அரசியல் தரப்பின் போராட்ட ம...

ஈழத்தமிழரின் அரசியல் போராட்டங்கள் மீள்சிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகால இலங்கை அரசியலில் ஈழத்தமிழர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற சூழலில் பேரினவாதக்கருத்தியல் பலம்பெற்றுள்ளது. பலவீனமான ஆளும் அரசாங்கமும் தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக இனவாத கருத்தியலை ஆதரிக்கும் அல்லது எதிர்க்காத நிலைமையிலேயே காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழ்த்தேசிய இனம் தனது இருப்பை பாதுகாத்து கொள்ள தாயகத்தில் பலமான எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன், புறத்தே தனக்கான ஆதரவை திரட்ட வேண்டியது மூலோபாய அரசியல் நெறியாக காணப்படுகின்றது. எனினும் தாயகத்தில் இடம்பெறும் தமிழ்த்தரப்பின் போராட்டங்கள் தொடர்பில் வலுவான எதிர்வினையான விமர்சனங்களே மீதமாகின்றது. விமர்சனம் என்பது ஒன்றை நிராகரிப்பது என்பதற்கு அப்பால் வலுவாக கட்டமைப்பதாக அமைய வேண்டும். எனினும் தமிழ் அரசியல் தரப்பு தொடர்ச்சியாக விமர்சனங்களை பகுப்பாய தயாரில்லாத நிலையினையையே வெளிப்படுத்தி வருகின்றது. இக்கட்டுரை மீளவும் தமிழரசியல் தரப்பின் போராட்ட நெறியினை கட்டமைப்பதற்கான வழிவகைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புக்கள், இனவ...

பொருளாதார நெருக்கடிக்குள் மீண்டும் நகரும் இலங்கை? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை கடந்த ஆண்டு வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. குறிப்பாக, அத்தியாவசியமான இறக்குமதிகளுக்குக் கூட பணம் இல்லாமல் போனது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியானது, ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்கு எதிராக பல மாத போராட்டங்களுக்குப் பிறகு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகச் செய்தது. அரசியல் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பாராளுமன்ற தெரிவின் மூலம் ஜனாதிபதியாகி இருந்தார். ஒப்பீட்டடிப்படையில் பொருளாதார நெருக்கடியில் மாற்றங்களை உணரக்கூடியதாக இருந்தாலும், சமீபத்திய இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நடிவடிக்கைகள் மற்றும் சர்வதேச அரசியல் போக்குகள் இலங்கை அரசு மீளவும் பொருளாதார நெருக்கடிக்கான சூழலுக்குள் நகர்கின்றதா எனும் சந்தேகங்களை உருவாக்குகின்றது. இக்கட்டுரை இலங்கை அரசின் நகர்வில் மீளவொரு பொருளாதார நெருக்கடிக்கான சூழலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் முதல் மதிப்பாய்வை நடத்துவதற்காக சர்வதேச...

சீனாவிற்கான பதிலீட்டு நகர்வை இந்தியாவின் பொருளாதார வழித்தடம் கட்டமைக்குமா? -சேனன்-

Image
சர்வதேச அரசியல் ஒரு நிலைமாறுகால சூழலுக்குள் பயணிக்கிறது. வல்லாதிக்கத்தை மையப்படுத்தி அரசுகளுக்கு இடையிலான போட்டியில் புதிய மூலோபாயங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் சர்வதேச அரசியல் களத்தை நிரப்பீடு செய்கின்றது. நாடுகளின் கூட்டாண்மைகள், மாநாடுகள் அதிக எதிர்பார்ப்புக்களையும் உருவாக்கி வருகின்றது. குறிப்பாக செப்டெம்பர் இரண்டாம் வாரத்தில் இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெற்ற ஜி-20 மாநாடும் முடிவுகளும் சர்வதேச அரசியலில் புதிய உரையாடல்களை ஆரம்பித்துள்ளது. பிரதானமாக இந்தியாவை மையப்படுத்தி இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கட்டுரையும் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா மெகா பொருளாதார வழித்தடத்தை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி செப்டெம்பர்-09அன்று அறிவித்தார். இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இந்தியா மத்த...

ஈழத்தமிழ் அரசியல்வாதிகளின் இயலாமையும் சிவில் சமுகத்தின் எழுச்சிக்கான அவசியப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஈழத்தமிழர்களின் இருப்பானது தினசரி ஏதொவொரு நெருக்கடிக்கு உள்ளாகும் செய்திகளே சமீபத்திய செய்தி நாளேடுகளை நிரப்பீடு செய்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இனவாத பிரச்சாரங்களால் இனவன்முறைக்கான தூபமிடப்படுவதாக புலனாய்வுத்தகவல்கள் வெளியாகி ஈழத்தமிழர்களிடையே அச்சத்தை உருவாக்கியிருந்தது. தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கான உயிர் அச்சுறுத்தலும், நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் ஈழத்தமிழர்களின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும் உரையாடல்களை பொதுவெளியில் உருவாக்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறையின் மீதான நிறைவேற்றுத்துறையின் ஆதிக்கம் வரலாற்றில் பல பதிவுகளை பகிர்கின்றது. எனினும் இனப்பாரபட்ச உரையாடல்கள் பெருமளவில் பொதுவெளியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்நிலையிலேயே முல்லைத்தீவு நீதிபதிக்கான அச்சுறுத்தல் இலங்கையின் சமீபத்திய பேரினவாதத்தின் ஆதிக்கத்தையே வெளிப்படுத்துகின்றது. எனினும் பேரினவாதத்தின் ஆதிக்க மனோநிலைக்கு எதிரான தமிழ் அரசியல் தரப்பின் நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களை பாதுகாக்கும் வியூகத்தை கொண்டுள்ளதா என்பதில் பொதுமக்களிடையே விசனங்கள் காணப்படுக...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் போனபார்டிச அரசியல் மரபை பேணுகிறரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு இனமுரண்பாட்டு போக்கில், நீண்ட போரியல் வரலாற்றை பகிர்வதனால், இலங்கை அரசாங்கங்களின் எதேச்சதிகார போக்கிலான நடத்தைகள் பலவும் முரண்பாட்டு சூழலுக்குள் மறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை அரசாங்கங்களின் செயற்பாடுகள், இலங்கை அரசாங்கங்களின் எதேச்சதிகார நிஜ வடிவத்தினை தோலுரித்து காட்டுவதாக அமைகின்றது. குறிப்பாக அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இந்நிலை விரைவாக அதிகரித்துள்ளது. அரசாங்கம், பொருளாதார மீட்சிக்கு அரசியல் ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்று கூறி, போராட்டங்களை நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கான பலத்த ஆயுதம் ஏந்திய போலீஸ் மற்றும் இராணுவ வீரர்களை அது நிறுத்துகிறது. மேலும், மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு தடை போடும் வகையில் இறுக்கமான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும் 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு ( Online Safety ) மசோதாவினூடாக வெளிப்படுத்தப்படும் இலங்கை அரசாங்கத்தின் போக்கை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ரணில் வி...