Posts

Showing posts from July, 2025

தேசிய மக்கள் சக்தியின் சகோதரத்துவ நாடகமும் ஈழத்தமிழர்களின் நூற்றாண்டு கால ஏமாற்ற அனுபவமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பதிவுகள் நீண்ட வரலாற்றை பகிருகின்றது. அவற்றை ஈழத்தமிழினம் சரியாக கட்டமைக்கவோ அல்லது மூலோபாயரீதியாக கையாளத் தவறியுள்ளனர். எனினும் காலத்துக்கு காலம் ஆட்சிப்பீடமேறியுள்ள தென்னிலங்கை தரப்பினர் இனப்படுகொலை சுவடுகளை மறைப்பதில் அரச இயந்திரமாக தந்திரோபாயமாக செயற்பட்டுள்ளனர். இப்பின்னனியிலேயே 2025ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை தமிழினப்படுகொலை நினைவு நாளில் 'சகோதரத்துவ தினம்' எனும் அறிவிப்புக்களும் அவதானிக்கப்படுகின்றது. இந்நிகழ்வை ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சோசலிச இளைஞர் ஒன்றியத்தினர் ஒழுங்கமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. இது ஒருவகையில் இடதுசாரி சொற்பதங்களுக்குள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூடி மறைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்ற விமர்சனம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இக்கட்டுரை அரசறிவியலில் 'சகோதரத்துவம்' என்பதன் பொருத்தமான விளக்கத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான பொதுப் பார்வையில் சகோதரத்துவம் என்ற உரையாடல் ஒன்றிணைந்து வாழ்வதற்கா...

பி.கே.கே-யின் சரணாகதி அரசியலும் குர்துக்களின் ஜனநாயக எழுச்சிக்கான கோரிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகால சர்வதேச அரசியலின் பிரதான விவாதங்களில் குர்திஸ்தான் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய அமைப்புக்களில் ஒன்றான பி.கே.கே (PKK) என அழைக்கப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி ஆயுதங்களை களைந்து நிராயுதபாணியாக்கம் செய்துள்ள காணொளியும் முதன்மையானதாக அமைகின்றது. குறிப்பாக துருக்கியில் ஏற்கனவே கடுமையாக முடக்கப்பட்டுள்ள குர்துக்களுக்கு இராணுவரீதியான தலைமையை வழங்கியிருந்த பி.கே.கேயின் நிராயுதபாணியாக்கம், ஒரு தளத்தில் குர்திஸ் விடுதலை போராட்டத்தை ஜனநாயகமயப்படுத்துவதாக வரவேற்புகள் காணப்படுகின்றது. இன்னொரு தளத்தில் ஏற்கனவே ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனத்தை மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்குவதற்கான வாய்ப்பை பி.கே.கேயின் நிராயுதபாணியாக்கம் வழங்க உள்ளது என்ற ஆதங்கங்களும் சர்வதேச அரசியல் வெளியில் காணப்படுகின்றது. இந்நிலையில் விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களிடையே ஏனைய தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்களை அறிந்து கொள்வது அவசியமாகின்றது. ஏற்றங்களிலிருந்து அனுபவத்தையும் இறக்கங்களிலிருந்து படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும்  குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் நிர...

அமெரிக்காவின் புதிய தூதுவருக்கான பரிந்துரையும் பொருளாதார நலனை முதன்மைப்படுத்திய அணுகுமுறையும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம், வல்லரசுகளின் போட்டிக்குள் பிரதான களத்தை உருவாக்கியுள்ளது. இலங்கை மீதான அமெரிக்காவின் வரி ஏற்ற இறக்கங்களும் அத்தகைய போட்டியின் விளைவினதாகவே அமைகின்றது. கடந்த காலங்களில் அமெரிக்கா ஜனநாயகம் மற்றும் அதன் கூறுகளான மனித உரிமைகள், நல்லாட்சி என்பவற்றினூடாகவே ஏனைய அரசுகளினை அச்சுறுத்தி தமது பக்கம் வளைத்து கொண்டது. எனினும் டொனால்ட் ட்ரம்பின் தலைமைத்துவத்தின் கீழ் நேரடியாக வரிவிதிப்பை முதன்மைப்படுத்தி செயற்படும் சூழ்நிலையினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.   புவிசார் அரசியல் ரீதியாக, இந்தியப் பெருங்கடலின் மையத்தில் இலங்கையின் மூலோபாய இருப்பிடம், உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக அதை நிலைநிறுத்துகிறது. இது முக்கிய கடல் வழிகளை இணைக்கிறது. இதனால், இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு இந்த நாடு மையமாக உள்ளது. அவை ஒவ்வொன்றும் பரந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் ஆர்வத்தைக் கொண்டுள்ளன. பொருளாதார உறவுகள், காலநிலை மாற்றம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல முனைகளில் இலங்கையுடன் ஒத்துழைக்...

ஈழத்தமிழர் அரசியல் ஜெனிவாவை புரிந்துகொள்ள தவறியுள்ளதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழரசியல் ஏதொவொரு வகையில் சர்வதேச பொறிமுறையை ஆதாரமாக கொண்டே இருப்பை தக்க வைத்துள்ளது. குறிப்பாக 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 'இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்' தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம், சர்வதேச நாடுகளின் நலன்களின் இழுவையில் நகர்த்தப்பட்டு வருகின்றது. இரு வருடங்களுக்கு ஒருமுறை புதிய தீர்மானங்களும் இடையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் இதயத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த உறவால் கால நீடிப்பு என 12 ஆண்டுகள் கடந்து விட்டது. 13ஆம் ஆண்டில் 2025-செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் புதியதொரு தீர்மானத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது. ஈழத்தமிழர் அரசியல் தரப்பிலும் உள்நாட்டு பொறிமுறைகளில் அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், தொடர்ச்சியாக சர்வதேச நீதிக்கான உரையாடலையே முன்னகர்த்தி வருகின்றனர். எனினும் இவ்உரையாடலின் செயற்றிறன் மற்றும் செயலாக்கத்துக்கான வழிவரைபடங்களில் தொடர்ச்சியாக விமர்சனப்பார்வையே காணப்படுகின்றது. இக்கட்டுரை ஐ....

போர்களில் ட்ரம்பின் ஈடுபாடும் விளைவுகளும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சவால் செய்துள்ளதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலக ஒழுங்கு பற்றிய சக்கரவுகள் தொடர்ச்சியான பிரதான விவாதமாக காணப்படுகிறது. அமெரிக்காவின் ஒற்றைமைய அரசியல் மீதான சந்தேகங்கள் நீண்டகாலமாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 2008ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிகளும் அதன் பின்னரான விளைவுகளும் பொருளாதார ரீதியான பல துருவ ஒழுங்கை எதிர்வு கூறியது. அதேவேளை கொரோனாவுக்கு பின்னரான அரசியலில் சர்வதேச நிறுவனங்களில் சீனாவின் மேலாதிக்கமும் அமெரிக்காவின் சரிவும் சர்வதேச அரசியலில் அவதானிக்கப்பட்டது. இப்பின்னணியில் இருதுருவ உலக ஒழுங்குக்கான எதிர்பார்ப்பு விவாத மையத்தை பெற்றது. எனினும் சீனாவின் எழுச்சி பொருளதார ரீதியான மென் அதிகாரமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. உலக ஒழுங்கு பிரதானமாக மென் அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுவதால், அமெரிக்காவின் மேலாதிக்கம் தொடர்ச்சியாக முதன்மைப்படுத்தப்பட்டது. இப்பின்னணியிலேயே இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்காவின் தலையிடும், பின்வாங்கலும் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் செய்திகளும் அமெரிக்காவின் மென் அதிகார மேலாதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இக்கட்டுரை அமெரிக்காவின் மேலாதிக்க...

வெகுஜன போராட்டங்களும் அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது அணையா விளக்கு போராட்டமாகும். செம்மணி மனிதப்புதைக்குழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டது. மக்கள் செயல் என்ற தன்னார்வ இளைஞர் கட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஜூன் 23-25ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதி நாளான ஜூன்-25அன்று பெருந்திரளான மக்கள் தன்னார்வமாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசியல்வாதிகள் ஒருசிலருடன் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் தமது கோபங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இது அணையா விளக்கு போராட்டத்தின் பிரதான பேசுபொருளாகவும் மாறியிருந்தது. இக்கட்டுரை வெகுஜன போராட்டக்களங்களில் அரசியல்வாதிகள் மீதான மக்கள்...