Posts

Showing posts from August, 2025

பலவீனமான போராட்டங்களால் தமிழ் மக்களின் போராட்ட மனநிலை சிதைக்கப்படுகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியலில் ஜனநாயக வழிப்போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஆயுதமாக மாறியுள்ளது. உலக அரசியலிலும் 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல், பயங்கரவாதத்தின் பெயரால் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்க வழிவகுத்தது. அதுவே உலகெங்கும் மக்கள் போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை 'இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை' என்பது ஜனநாயக வழிப் போராட்டத்திற்கு உரமளிப்பதாக அமைந்திருந்தது. எனினும் கடந்த 16 ஆண்டு கால இடைவெளியில் இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வகையிலான வினைத்திறனான போராட்டங்களை தொடர்ச்சியாக பின்பற்ற தவறியுள்ளார்கள். விதிவிலக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஏறத்தாழ 3000 நாட்களை கடந்ததாக அமைகின்றது. எனினும் பிறரை தூண்டக்கூடிய வகையிலோ அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையிலோ காணமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் பரிணமிக்க தவறியுள்ளது. அதற்கான வழிகாட்டலையோ அல்லது நெறிப்படுத்தலையோ தமிழ் அரசியல் பிரிதிநிதிகளும் வழங்க விரும்பியிருக்கவில்லை....

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு முயற்சிகளும் தமிழரசுக்கட்சியின் நிராகரிப்புக்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர், ஈழத்தமிழர்கள் மேய்ப்பானற்ற மந்தைகளாக அலையும் அவலம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்குரிய தற்காலிக தீர்வாக தமிழ் மக்களிற்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கும் தமிழ்க் கட்சிகளிடையே கூட்டுத் தன்மையை உருவாக்குவதற்கான செயற்பாடுகளும் பல கட்டமாக தமிழ் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் பலராலும் காலத்துக்கு காலம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும் தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தூய்மைவாத பிரச்சாரம் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரின் நிலையற்ற தன்மை என பல காரணங்களை குறித்து கூட்டு முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிவடைந்தது. இந்நிலையின் தொடர்ச்சியாய் தமிழ்ப் பொதுவேட்பாளரில் கட்சிகளால் ஏற்பட்ட ஏமாற்றங்களை தொடர்ந்து சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் பெருமளவில் ஒதுங்கு நிலைக்கு சென்றுள்ளார்கள். அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தூய்மைவாத பிரச்சாரங்களை களைந்து கூட்டு முயற்சிக்கான முனைப்புக்களை நகர்த்தி வருகின்றார்கள். எனினும் கட்சி நலனை மையப்படுத்திய ஈழத்தமிழரசியலில் முழுமையான...

செம்மணி மனிதப் புதைகுழியை திசைதிருப்பும் தென்னிலங்கையும் மௌனிக்கும் தமிழ் தரப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகின் அழகிய தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கைத்தீவு முதலாம் இடத்தை பெற்றுள்ளது. அதேவேளை இலங்கைத்தீவின் வடபகுதியில் தொடர்ச்சியான அகழ்வில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோரின் என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைத் தீவின் அழகில், ஒரு பகுதி மக்களின் கண்ணீர் கவனத்தைப்பெற தவறுகின்றது. இலங்கைத் தீவு, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஒன்றின் மூலமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியமாகவே வடக்கில் செம்மணியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகள் சாட்சியங்களாகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்படுகொலையை மறுத்துவரும் நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி அவலம் தொடர்பிலான கருத்தை தவிர்த்து வருகின்றது. மறுமுனையில் கடந்த கால தென்னிலங்கை அரசாங்க பிரதிநிதிகள், தமது குற்றங்களை மூடி மறைப்பதற்காக செம்மணி மனிதப்புதைகுழியை இறந்த உடல்களை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக பிரச்சாரப்படுத்துகின்றார்கள். இது செம்மணி மனிதப்புதைகுழி சாட்சியம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் தொடர்பில் தென்னிலங்கை அச்சம் கொள்வதனையே வெளிப்படுத்துகின்றது. எனினும் ஈழத்தமிழர்கள், செம்மணி மனிதப்பு...