ரணில் விக்கிரமசிங்கவின் கைதும்-பிணையும் உள்ளக நீதிப்பொறிமுறையின் பலவீனமும்! -ஐ.வி.மகாசேனன்-

கடந்த வாரம் இலங்கை அரசியலில் மீளவும் ரணில் விக்கிரமசிங்க பிரதான தலைப்பு செய்தியாக மாறியிருந்தார். இலங்கை மாத்திரமின்றி சர்வதேச செய்திகளிலும் முதன்மையாக அமைந்திருந்தது. சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் நிறைவேற்றுத்துறை ஜனாதியாக ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார். ஒருவகையில் இவ்சீர்திருத்தத்தின் பின்னணியிலும், கைது நடவடிக்கைகளுக்கு பொறுப்பான விசாரணைக் குழு உருவாக்கத்திலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்து செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இக்கைது தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகளிடையே கூட்டுச்செயற்பாட்டை ஊக்குவித்துள்ளதுடன், ஆளுந்தரப்பு இலங்கையின் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். எனினும் குறைந்தபட்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியை ஒரு நாள் கூட சிறைக்குள் அனுப்பமுடியவில்லை என்ற விமர்சனமும் அரசியல் அவதானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை இலங்கையின் நீதிப்பொறிமுறை உள்ளக நீதிப்பொறிமுறையின் உறுதிப்பாட்டை...