Posts

Showing posts from February, 2022

ரஷ்சியா-உக்ரைன் போரும் மேற்குலக்தின் நெருக்கடிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த இரண்டு மாதங்களாக கொதி நிலையிலிருந்த ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைனின் கிழக்கு பகுதியில்  கிளர்ச்சிப் படைகளின் ஆதிக்கத்தில் காணப்பட்ட இரு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக ரஷ்சியா பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன்  சுதந்திர குடியரசுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உக்ரைன் மீது போருக்கான அறிவிப்பை நிகழ்த்தி கடுமையான போரை புடின் உக்ரைன் நிலப்பரப்பில் நிகழ்த்தி வருகிறார். ரஷ்சியாவின் சுதந்திர பிரகடனத்தை தொடர்ந்து ரஷ்சிய சார்பு அரசுகளும் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றன. எனினும் உக்ரைன் எல்லையில் ரஷ்சிய நிலப்பரப்பில் இராணுவ குவிப்பு மேற்கொள்ளப்பட்டு கொதிநிலையில் காணப்படுகையில் போருக்கான எச்சரிக்கைகளை முன்வைத்த அமெரிக்கா,  ரஷ்சியாவின் சுதந்திர தேச மற்றும் போர் அறிவிப்புக்கு பின்னர் ரஷ்சியாவிற்கு எதிராக காட்டமான எதிர்வினைகளை முன்னெடுக்கவில்லை. பொருளாதார தடைகளுடன் மட்டுப்படுத்தியுள்ளது. இது சர்வதேச அரசியலில் நுணுக்கமான தேடலை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை உக்ரைனின் கிழக்கு பிராந்தியங்கள் மீதான ரஷ்சியாவின் சுதந்திர பிரகடனமும் அதன் பின்னரான சர்வதேச அரசியல் ...

தமிழரசு கட்சி மறைமுகமாக எதிர்தரப்புக்கு மீளவும் சேவை செய்ய ஆரம்பித்துவிட்டதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
வடக்கு-கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கையெழுத்து போராட்ட அரசியலை மேற்கொள்வது மறைமுகமாக தென்னிலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாய் அமைகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக தென்னிலங்கையின் எதிரணிகளை ஒன்றினைக்கும் அரசியலை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னெடுத்து வருகின்றார். இவ்விருமுனை அரசியலும் வேறுபட்ட பார்வைகளை பொதுவெளியில் வழங்குகின்ற போதிலும், இரண்டினதும் அடித்தளம் பொதுவானதாயும் மேற்குலகின் எண்ணங்களை பிரதிபலிப்பனவாயும் அரசியல் வெளியில் உரையாடப்படுகிறது. இக்கட்டுரை பாராளுமன்ற உறுப்பினரினால் ஒருங்கிணைக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட கையெழுத்து போராட்டம் மற்றும் தென்னிலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுப்பதற்கான முயற்சி என்பவற்றின் அரசியல் பரிமாணத்தைத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று, எதிரணிகளை ஒன்றிணைத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் கூட்டு முயற்சிக்கான இரண்டு சுற்று கூட்டங்களை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நெறிப்படுத்தியுள்ளார். இரண்டு சுற்றுக் கூட்டங்களில் முதல் கூட்டம் ஜனவரி-27ஆம் ...

அரசியல் கட்சிகள் தமக்காக வரலாற்றை திரிவுபடுத்த முயல்வது ஆரோக்கியமற்றது! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஊடகப்பரப்பில் தமிழ்த்தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும் தமிழ்க்கட்சிகளிடம் தமிழ்த்தேசியம் தொடர்பிலும் அதன் வரலாற்று பரிமாணங்கள் தொடர்பிலும் சரியான பார்வை காணப்படுகின்றதா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே காணப்படுகிறது. தேசியம் என்பது வாழ்வியல் கட்டமைப்பாகும். எனினும் தமிழ் மக்களிடம் அதனை வாழ்வியலாக நகர்த்தியுள்ளார்களா என்ற கேள்விகளுக்கு முன்னே, தமிழரசியல் தரப்பினர் தாம் தேசியத்தை வாழ்வியலாக கடைப்பிடிக்கின்றார்களா என்பதை தேட வேண்டியுள்ளது. அத்துடன் இலங்கையில் தமிழ்த்தேசியத்தின் பரிணாம வளர்ச்சியை சீராக அறியாதவர்களாகவே உள்ளனர். ஆதலாலேயே ஆயுதப்போராட்ட மொனிப்புக்கு பின்னராக கடந்த 12ஆண்டு கால தமிழரசியலை ஆரோக்கியமாக நகர்த்துவது அறியாது பயணிக்கின்றனர். தமிழரசியல் தரப்பின் தமிழ்த்தேசிய பரிணாமம் தொடர்பான சர்ச்சையை, அண்மையில் தமிழ்த்தேசிய கட்சியொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் தனிநாட்டு கோரிக்கை நிலைப்பாடு சார்ந்தும், தேசிய அந்தஸ்து கோரிக்கை நிலைப்பாடு சார்ந்தும் வெளியிட்ட கருத்து ஏற்படுத்தியுள்ளது. இது வரலாற்றை திரிவுபடுத்தும் செயலாகவும் விமர்சிக்கப்படுகிறது. அவதானிக்கப்படுகிறது. இக்கட்டுரை தமிழ்த்...

உக்ரைன் கொதிநிலையை பயன்படுத்தி புடின் ஐரோப்பிய உறவை பலப்படுத்துகிறாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ரஷ்சியா-உக்ரைன் விவகாரம் மூன்றாம் உலகப்போராகா மூளுமா என்பதே சர்வதேச அரசியல் பரப்பை நிரப்பி உள்ள செய்தியாகும். ஆரம்பத்திலிருந்து ரஷ்சியா போருக்கான எவ்வித ஆர்வமும் தம்மிடம் காணப்படவில்லையென தெரிவித்துவந்தபோதிலும், தொடர்ச்சியான கூட்டு இராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதுடன், உக்ரைன் எல்லையில் ரஷ்சியா நிலப்பரப்பில் இராணுவ துருப்புக்களை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளனர். அது தமது உள்ளக பாதுகாப்புக்கான இராணுவப்பயிற்சியாகவே தெரிவித்து வருகின்றனர். மறுதலையாக அமெரிக்கா போருக்கான அபாய அச்சுறுத்தல்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். அதன் உச்சகட்டமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பெப்ரவரி-16 ரஷ்சியா உக்ரைன் மீது தாக்குதலை நிகழ்த்தும் என்ற திகதியையும் அறிவித்திருந்தார். அவ்வாறே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனும் அமெரிக்காவின் கருத்தை ஆதரித்து ரஷ்சியா உக்ரைன் மீது நிச்சயம் போர் நிகழ்த்துமென அழுத்தமாக தெரிவித்து வருகின்றனர். ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் அச்சத்தின் காரணமாக உக்ரைனிலிருந்து தமது மக்களை மீள அழைத்த போதிலும் போரை தணிப்பதற்கான உரையாடல்களில் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். இக்...

ஜனாதிபதியின் சுதந்திரதின உரையும் அது வெளிப்படுத்தும் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் சில நிகழ்வுகளின் காட்சிகள் இலங்கை இரு தேசமாக காணப்படுகிறது என்பதையே மீள மீள உறுதி செய்கின்றது. கடந்த பெப்ரவரி-4(2021)அன்று தென்னிலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களை ஆடம்பரமாய் விமர்சையாக கொண்டாடி இருந்தது. மறுமுனையில் வடக்கு-கிழக்கு கரிநாளாக இலங்கையின் சுதந்திர தினத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இது, வடக்கும், தெற்கும் வேறுபட்ட தேசங்கள் என்பதையே வெளிப்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் தமிழர் தரப்பில் தமிழ் மக்களின் எண்ணங்ளை புறந்தள்ளி  தென்னிலங்கையின் சுதந்திர விழாக்களில் பங்குபற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளும் இவ்வருடம் கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளமை அதிக கவனத்தை பெற்றுள்ளது. இக்கட்டுரை தென்னிலங்கையின் சுதந்திரநாள் பிரகடன உரை எதிர்ப்புக்களை கவனத்தில் எடுத்துள்ளதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 74வது சுதந்திர தினம் முழுமையாக எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புடன் வெளிநாட்டு தூதுவர்களின் பிரசன்னத்துடனும் கோலாகலமாக இடம்பெற்றது. நாட்டின் பொருளாதார நெருக்கடி சுமைகளை காரணங்காட...

தென்னிலங்கை அமைச்சர்களின் வடக்கு விஜயம் ஜெனிவா அமர்வின் நெருக்கடிகளை தளர்த்த முற்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜனவரி இறுதி வாரங்களில் இலங்கையின் முக்கியமான இரு அமைச்சர்களான வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிம், நீதி அமைச்சர் அலி சப்ரியும் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார்கள். குறித்த விஜயம் பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பிக்க உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருடன் தொடர்புடையதாக அமையுமா என்பது தொடர்பில் கடந்த கால அனுபங்களினை மையப்படுத்தி ஊடகப்பரப்பில் சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் ஜி.எல்.பீரிஸ் வடக்கு விஜயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்(UNHCR) எதிர்வரும் அமர்வுகள் பற்றிக் குறிப்பிடுகையில், 'தமது வடக்கிற்கான விஜயத்தை ஊடகங்களில் ஒரு பிரிவினர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் மேற்கொண்ட விஜயத்திற்கும் எதிர்வரும் ஜெனிவா அமர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை' என வலியுறுத்தி குறிப்பிட்டிருந்தார். இக்கட்டுரை 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு பிறகு வருடாவருடம் மார்ச் மாத ஜெனிவா கூட்டத்தொடரை அண்டித்து இலங்கை அரசாங்கங்கள் தமது தந்திரோபாயங்களை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றமையை...

வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனையும் இராஜதந்திரமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியலில் அரகளிடையேயான உறவில் எப்போதுமே யதார்த்தவாத சிந்தனையான அராஜகவாதமும் அதிகாரமுமே நிரம்பி உள்ளது. சர்வதேச அரசியல் நிகழ்வுகளை தேடுமிடத்து மாறி மாறி அராஜகம் பற்றிய உரையாடல்களே முதன்மை பெறுகிது. அத்துடன் அவற்றுக்கிடையிலா இடைவினை தொடர்புகளும் தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆறு வாரங்களாக தொடர்ச்சியாக ரஷ்சியா-உக்ரரைன் விவாகாரத்தை மையப்படுத்தியே உலக அரசியல்  பயணிக்கிறது. அதனை விடுத்து வேறு சர்வதேச அரசியல் நிகழ்வினை தேடுவோமாயினும் கூட அதிலும் ஏதொவொரு வகையில் ரஷ்சியா-உக்ரைன் விவகாரத்தின் தாக்கங்களும் உரையாடப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். இதுவே சர்வதேச அரசியலின் யதார்த்தமுமாகும். இக்கட்டுரை ரஷ்சியா-உக்ரைன் விவாகரத்துக்குள் உலக நாடுகளின் பார்வைகள் குவிந்திருக்கையில், வடகொரியா அணுவாயுத பரிசோதனையில் நிகழ்த்தி வரும் உச்சத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.  இந்நிலையில் வடகொரியா ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஏழாவது முறையாக ஏவுகணை சோதனையை ஜனவரி-30(2022) மேற்கொண்டுள்ளது. வட...