Posts

Showing posts from July, 2022

ராஜபக்ஷாக்களின் வெளியுறவுக்கொள்கையை பின்தொடரும் ரணில்? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் புதிய இடைக்கால ஜனாதிபதியும் நீண்ட அரசியல் பாரம்பரியத்தையுமுடைய ரணில் விக்கிரமசிங்காவின் சமகால அரசியல் நடவடிக்கைகள் அதிக குழப்பத்தை உருவாக்குகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் பிரதமராகி, பதில் ஜனாதிபதியாகி, தற்போது இடைக்கால ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் கொள்கை தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களிடையே விமர்சனப்பார்வையே காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் மரபுக்குள் வளர்ந்த புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் கொள்கை அமெரிக்க தலைமையிலான மேற்கு சார்ந்த இயல்புடையதாகவே காணப்பட்டு வந்துள்ளது. மாறாக பொதுஜன பெரமுன, மேற்கிற்கு எதிராக கிழக்கே சீனா சார்பான கொள்கையையே முதன்மைப்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக பதவியேற்கையில் பலரும் இலங்கையின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படுவதுடன் ரணில் விக்கிரமசிங்காவின் மேற்குசார் விம்பத்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரப்பட்ட நிதியுதவிகள் தடையின்றி கிடைக்குமென்ற எதிர்பார்ப்புகளையும் உருவாக்கி கொண்டனர். எனினும் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொள்ளும் உள்ளக மற்...

அரசியலமைப்புக்குட்பட்ட தாராண்மைவாதியின் எதேச்சதிகாரமும் இலங்கை அரசியலும் -ஐ.வி.மகாசேனன்-

Image
சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில், வரலாறு காணாத அரசியல் திருப்பங்கள் பலவும் 2022 ஜூலை நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. 69இலட்சம் வாக்குகளை, பெற்று இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே அதிகூடிய வாக்குகளை பெற்றவராக சிறப்பு பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா மக்கள் கிளர்ச்சிக்கு அஞ்சி, நாட்டைவிட்டு ஓடியதுடன் ஜனாதிபதி பதவியையும் இராஜினாம செய்தார். மறுவலத்தில் பொதுத்தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு, கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியப்பட்டியலூடாக ஓராண்டுக்கு பின்னர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற பிரதிநிதிகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இத்தெரிவு இலங்கையின் ஜனநாயகத்தை கோட்பாட்டுரீதியாக கேள்விக்குட்படுத்துகின்றது. அத்துடன் ஜனாதிபதி தெரிவு தேர்தல், நடைமுறையில் இலங்கை அரசியல் கட்சிகளிடையேயும் கட்சிகளுக்குள்ளேயும் அதிக நெருக்கடிகளை உருவாக்கியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவால் உருவாகக்கூடிய அரசியல் பிரச்சினைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜன...

'அரகல' 'புரட்சியாய்' பரிணமிக்கையிலேயே ஜனநாயத்தின் எல்லைகள் விரிவாக்கப்படுகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஒன்பதாம் திகதி சாதமான திகதியாக அமைகின்றது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷாவின் பதவி விலகல், மே மாத குழப்பமென, இறுதியாக ஜீலை-09 ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஆக்கிரமிப்பு வரையான மக்கள் போராட்டத்தின் வெற்றிகள் யாவும் 09ஆம் திகதிகளில் ஆழமான பதிவுகளை கொண்டுள்ளது. ஜீலை-09முதல் அரசாங்கத்துக்கெதிரான மக்கள் போராட்டம் வேறொரு பரிமாணத்தை பெற்றுள்ளது. குறிப்பாக போராட்டக்காரர்களால் தமது கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான ஆறம்ச கோரிக்கைகள் போராட்டம் புரட்சியின் எல்லையில் பயணிக்க வேண்டிய தேவையையும் உணர்த்தி உள்ளது. அதேநேரம் சமகால நிகழ்வுகள் எளிமையான அரகல(கிளர்ச்சி) அரசியலமைப்பை தாண்டி பயணிப்பது கடினமானதாகும் என்பதே வெளிப்படுத்தப்படுகின்றது. இது அரகல புரட்சியெனும் வடிவில் பரிணமத்தாலே அதன் இலக்கை அடையவோ அல்லது அதன் சாத்தியத்தை பரீட்சிக்கவோ முடியும் என்பதையே உணர்த்துகின்றது. இக்கட்டுரை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் ஜனநாயக தூய்மைப்படுத்தல் அம்சங்களையும்...

சிவில் அமைப்புக்கள் ஈழத்தமிழர் விவகாரத்தை முன்கொண்டு செல்லவேண்டிய அவசியப்பாட்டை உணர்வார்களா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாத நிலையே ஈழத்தமிழ் அரசியல் கட்சிகளிடம் காணப்படுகின்றது. ஏனெனில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டம் அநாதரவானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. பயணித்து கொண்டு செல்கின்றது 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம் முழுமையாக ஜனநாய அரசியல் கட்டமைப்புக்குள் பயணிக்க தொடங்கி விட்டது. இங்கு ஜனநாயக அரசியல் கட்டமைப்பின் ஒரு பகுதியினரான அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளை வினைத்திறனாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நியாயமானவை. இருந்த போதிலும், ஜனநாயக அரசியல் கட்டமைப்பின் பிற பகுதிகளில் தனித்துவமானதும் யதார்த்தத்துக்கு அவசியமானதுமான சிவில் சமூகங்கள் ஈழத்தமிழரசியல் உரிமை போராட்டத்தில் ஆரோக்கியமான நகர்வை மேற்கொள்கின்றதா என்ற தளத்திலான பார்வை தவிர்க்கப்பட்டே வருகின்றது. ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் குறிப்பாக ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் தமிழ் சிவில் சமூகங்களுக்கு அதிக முக்கியத்துவம் எழுந்துள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் சிவ...

பசுபிக் தீவுக்கூட்டத்தில் மலரும் புதிய அரசு புவிசார் அரசியல் மோதலுக்குள் அகப்படுமா? -சேனன்-

Image
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் 2027ஆம் ஆண்டு புதியதொரு அரசு உருவாகுவதற்கான முன்னாயர்த்தங்கள் விரைவுபடுத்தப்படுகிறது. பசுபிக் சமுத்திரத்தில் பப்புவா நியூ கினியாவின் ஒரு தன்னாட்சி பகுதியாக காணப்படும் போகன்விலே(Bougainville)  தீவானது, நீண்ட கால அடக்குமுறை, ஒரு தசாப்த ஆயுதப்போராட்டம், போர் நிறுத்தமும் சமாதான உரையாடல்களும், தன்னாட்சி கட்டமைப்பு உருவாக்கம், சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு என்று நீண்ட போராட்ட வரலாற்றை தனதாக்கியுள்ளது. இவ்வரலாற்றின் தொடர்ச்சியாய் 2027இல் போகன்விலே தீவு தேசம், பப்புவா நியூ கினியாவிலிருந்து முழுமையாக சுதந்திரம் பெறுவதற்கான இணக்கத்தை இவ்வாண்டு எட்டியுள்ளது. நவீன காலப் பிரிவினைகளைப் பற்றி நினைக்கும் போது,  கற்றலோனியா, ஸ்கொட்லாந்து, காஷ்மீர் மற்றும் குர்திஸ்தான் ஆகிய தேசங்களில் நிகழும் ஒருபட்ச கோரிக்கைகளும் முரண்பாடுகளுமே சர்வதேச அரசியலை நிரப்பியுள்ளது. ஆனால் பப்புவா நியூ கினியாவின் தன்னாட்சிப் பகுதியான போகன்விலே  சுதந்திரத்தை அடைவதற்கும் உலகின் 194வது நாடாகவும் முழுமையான நிலையை அடைந்துள்ளது. இதனடிப்படையில் 2027இல் போகன்விலே தனி அரசாக உதயமாக உள்ளது. 201...

அமெரிக்காவின் அதிகாரத்தை பாதுகாக்கும் அரணாக ஜி-07, நேட்டோ செயற்படுமா? -சேனன்-

Image
சர்வதேச அரசியலில் வல்லாதிக்க அரசுகள் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அதிகம் கூட்டுக்களுக்குள்ளேயே பயணிக்கின்றன. குறிப்பாக பனிப்போருக்கு பின்னரான ஒற்றைமைய அரசியலின் எஜமானாக தன்னை காட்சிப்படுத்திய அமெரிக்கா தன் வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த பலதரப்பு கூட்டுக்களை உருவாக்கியுள்ளது. அவ்வகையில் அமெரிக்கா தனது அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதாக ஒழுங்கமைத்துள்ள அமைப்புக்களில் ஜி-07 மற்றும் நேட்டோ முதன்மையான அமைப்புக்களாக கருதப்படுகின்றது. அமெரிக்க மற்றும் ஐரோப்பா கூட்டாக குறித்த அமைப்புக்கள் காணப்படுகின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான பனிப்போர் அரசியல் மற்றும் பனிப்போருக்கு பின்னரான அரசியலில் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அரணாக ஐரோப்பாவே செயற்பட்டு வருகின்றது. எனினும் கோவிட்-19க்கு பின்னர் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்கா-ஐரோப்பா இடையே விரிசல்கள் உருவாகுவதை பல சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ஐரோப்பா கூட்டை பாதுகாப்பதிலும், இந்தோ-பசுபிக் பிராந்திய ஆதிக்...

ஜப்பான் தூதுக் குழுவினரின் வடக்கு நோக்கிய விஜயத்தின் அரசியல் பின்னணியும் ஈழத்தமிழரின் எதிர்காலமும்? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆரம்பத்தில் வரிசையில் நின்று பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையிருந்த போதிலும், தற்போது வரிசையில் நின்றும் பொருட்களை பெறஇயலாத நிலையை நோக்கி நகர்கின்றது. அரசாங்கமும் தொடர்ச்சியாக பாராளுமன்ற விவாதங்களிலும் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான சரியான தீர்வை அடையாளங்காண முடியாது உள்ளது. சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் கடனுதவியையே தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கம் கோரி வருகின்றது. மலையாய் காணப்படும் இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச நாடுகளும் மடுவாகவே உதவிகள் மேற்கொள்கின்றன. உலக நாடுகள் அறிவுறுத்தும் அரசியல் ஸ்திரத்தன்மையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த தவறுகின்றமையே சர்வதேச நாடுகளின் அசமந்த போக்குக்கும் காரணமாகின்றது. அத்துடன், சர்வதேச நாடுகளும் இலங்கையின் அரசியல் பொருளாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாகவே முதன்மையான கரிசனையை செலுத்துகின்றார்கள். இலங்கையின் இன்றைய நெருக்கடி தேசிய இனப்பிரச்சினை சார்ந்ததாகவோ அதுசார் தீர்வை நோக்கிய விடயங்களையோ அதிகளவில் அழுத்தம் கொடுப்பதை தவிர்த்தே வருகின்றன. ...