Posts

Showing posts from March, 2024

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் களம் தேர்தலுக்கான கொதிநிலையை பெற்றுள்ளது. தென்னிலங்கையின் பிரதான கட்களிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகள் முதன்மையான விவாதமாக உள்ளது. ஈழத்தமிழரசியலில் கருத்தாளர்கள் தளத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் மக்களின் வாய்ப்புக்கள் தொடர்பான உரையாடல் முனைப்பை பெற்றுள்ளது. எனினும் அரசியல் தரப்பினரும் சிவில் சமுகத்தினரும் இலங்கையின் தேர்தல்கள் தொடர்பில் முனைப்பான உரையாடல்களும் செயற்பாடுகளுமற்ற நிலையிலேயே காணப்படுகின்றார்கள். இது தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டின் பற்றாக்குறையினையே வெளிக்கொணர்கின்றது. இவ்இயல்பின் வெளிப்பாடே எதிரிக்கு எதிரி நண்பன் எனும் பொதுப்புத்தியில் ராஜபக்ஷhக்களை தோற்கடிப்பது எனும் ஒற்றை இலக்குடன், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான ஜனாதிபதி தேர்தல்களை கையாண்டு வருகின்றனர். இந்த நடத்தையிலிருந்து 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை வெளிப்படுத்துவது அவசியமாகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் கொள்கையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் ஜனாதிபதி தேர்தலை கையாள வேண்டுமென்பதே ஈழத்தமிழரசியல் கருத்தாளர்களின் வெளிப்பாடாக அமைகின்றது. இப்பின்னணியில் 2024ஆம் ஆண்டு த...

புடினின் உளவியல் தந்திரோபாய விளையாட்டு அமெரிக்க தேர்தலின் முடிவினை தீர்மானிக்குமா? -சேனன்-

Image
2024ஆம் ஆண்டு உலக அளவில் ஜனநாயக திருவிழாவிற்குரிய காலமாகவே காணப்படுகின்றது. உலகின் ¼ பகுதி நாடுகள் தேர்தலை எதிர்கொள்கின்றது. குறிப்பாக இலங்கையர்களாக நாம் ஜனாதிபதி தேர்தலா? பாராளுமன்றத் தேர்தலா? முதலில் இடம்பெறும் என்ற அரசியல் விளையாட்டை இரசித்து கொண்டுள்ளோம். அதேவேளை உலகப்பரப்பில் ரஷ்சியா மற்றும் அமெரிக்க தேர்தல்கள் முதன்மையான கவனத்தை பெற்றுள்ளது. மார்ச் 15-17 நடைபெற்ற ரஷ்சியா ஜனாதிபதி தேர்தலில் புடின் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மறுதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீளவும் குடியரசுக்கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடனும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு பின்னால் ரஷ்சிய அரசின் ஈடுபாடு காணப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு மீள அரசியல் அவதானிகளிடையே பரவலான கவனத்தை பெற்றுள்ளது. எனினும் புடின் தனது பிரச்சார காலத்தில் பைடனுக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்துக்கள் அமெரிக்க-ரஷ்சிய இராஜதந்திர மட்டத்தில் அதிக கவ...

ஜே.வி.பி.யின் இனவாத செயற்பாடுகளுக்கு அனுரகுமார திசாநாயக்கா பொறுப்புக்கூறுவாரா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச, பிராந்திய அரசுகளின் பார்வையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய ஆளுமையாக  தேசிய மக்கள் சக்தி என அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா  முதன்மைப்படுத்தப்பட்டுள்ளார். குறிப்பாக பகுதியளவில் இடம்பெற்ற சில கருத்துக்கணிப்புக்களும், 2022இல் இடம்பெற்ற அரகலயாவில் ஜே.வி.பி கட்சியின் தாக்கமும் அனுரகுமார திசாநாயக்க மீதான பார்வைக்குவிப்புக்கு காரணம் எனலாம். எனினும் அனுரகுமார திசாநாயக்க மீது போலியானதொரு விம்பம் கட்டப்படுவதை பல அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்பகுதியிலும் முன்னைய கட்டுரையொன்றில் உரையாடப்பட்டுள்ளது. தென்னிலங்கையை மையப்படுத்தி அனுரகுமார திசாநாயக்கா மற்றும் ஜே.வி.பி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் தற்போது சிறுபான்மை தேசிய இனங்கள் பக்கமும் திருப்பப்பட்டுள்ளது. இப்பின்னணியிலேயே,  ஈழத்தமிழர்கள் அனுரகுமார திசாநாயக்கா மற்றும் ஜே.வி.பி தொடர்பில் நம்பிக்கையை வைக்கலாமா என்பதை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் அரசியல் தென்னிலங்கையை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் வ...

தமிழர் மீதான ஒடுக்குமுறையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாகிறதா தொல்லியல் பாதுகாப்பு சட்டம்? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின், சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ச்சியானதொன்றாகவே அமையப்பெற்றுள்ளது. அரச இயந்திரத்தின் முழு ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதம் இயங்குவதனால், அதனை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றதொன்றாகவே காணப்படுகின்றது. தமிழ்த்தரப்பு தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள நீதிமன்றங்களை நாடி சார்பான உத்தரவுகளை பெற்றுக்கொள்கின்ற போதிலும், சிங்கள பேரினவாதம் நீதிமன்ற தீர்ப்புக்களை புறந்தள்ளி பொலிஸாரின் ஆதரவுடன் தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை கட்டற்ற முறையில் நிகழ்த்தி வருகின்றது. அண்மையில் வெடுக்குறாறி மலையில் பேரினவாத பௌத்த பிக்குகளை மகிழ்விப்பதற்காக, தமிழர்கள் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற தீர்ப்பினூடாகவே வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும் அரச இயந்திரங்களான பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் கூட்டு, தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை தடை செய்ததுடன், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. இது தமிழ் மக்கள் மத்தியில் தமது இர...

காசா போரின் இனப்படுகொலையும் கட்டவிழ்க்கும் சர்வதேச முறைமையின் யதார்த்தமும்! -சேனன்-

Image
உலக ஆதிக்கத்தை மையப்படுத்தி செயற்படும் அரசுகள் தமது சித்தாந்தங்களூடாவே உலகின் மேலான்மை உறுதி செய்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் காலனித்துவ சிந்தனையூடகவும், சமகாலத்தில் நவகாலனித்துவ பொறிமுறையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் முதன்மை பெறுகின்றன. இப்பின்னணியிலேயே, ஒற்றைமைய உலக ஒழுங்கில் அமெரிக்கா ஏனைய அரசுகள் மீது தனது ஆதிக்கத்தை பலப்படுத்தி வந்துள்ளது. அமெரிக்காவின் மேலாதிக்கம் தொடர்பான கேள்விகள் ஏற்படும் போதெல்லாம் ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை சித்தரிப்பதை வழமையாக்கி கொண்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஜனநாயகத்துக்கான மாநாடு அவ்வகையிலானதாகவே அமைகிறது. மேலும், ஒற்றைமைய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அடையாளப்படுத்திய 1991ஆம் ஆண்டு வளைகுடா போர் முதல் இன்று செங்கடலில் ஹவுதிகள் மீதான் தாக்குதல் வரையில் ஈராக், ஈரான், சிரியா, யேமன் போன்ற மேற்காசிய நாடுகள் மீதான அமெரிக்காவின் நேரடி தாக்குதல்களும், ஆதரவு கூட்டணி தாக்குதல்களும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டம் எனும் சொல்லாடல்களூடாகவே நியாயப்படுத்தப்பட்டு வர...

தமிழக அரசியல் தலைமைகள் தமிழக வாக்குகளுக்காவே ஈழத்தமிழர்களை கையாண்டு வருகிறார்கள்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த வாரம் ஈழத்தமிழ் அரசியலில் மீண்டுமொரு தடவை இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசு மீதான ஈழத்தமிழர்களின் சீற்றம் அதிகரித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்தை மையப்படுத்தி இந்தியாவிற்குமிடையில் மொழி மற்றும் கலாசார ரீதியிலான வலுவான பிணைப்பு காணப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் இந்தியாவினை தொப்புள்கொடி உறவாக அதிக நம்பிக்கையினை வரலாறு தோறும் வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் இந்திய அரசுகள் ஏற்படுத்தும் ஏமாற்றமும் துரோகங்களும் காலத்துக்கு காலம் ஈழத்தமிழர்களிடம் இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை வலுப்படுத்த சாதகமாகின்றது. குறிப்பாக தியாக தீபத்தின் மரணம் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது தமிழக முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் என்பன கடந்த காலங்களில் இந்தியாவின் துரோகம் தொடர்பில் ஈழத்தமிழர்களிடையே இந்திய எதிர்ப்புவாதத்தை உருவாக்கியது. எனினும் யாவற்றையும் கடந்து ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக மக்களின் உறவு இந்திய-ஈழத்தமிழ் உறவை தொடர்ச்சியாக பேணி வந்தது. இந்நிலையிலேயே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாந்தனின் மரணம் மீளவும் இந்திய மத்திய மற்றும் தமிழக...

தமிழரசியல் தரப்பின் இராஜதந்திரமற்ற செயற்பாடுகளால் தமிழ்த்தேசியம் இருப்பை இழக்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் தேசிய இனமுரண்பாட்டில் தமிழ்த்தேசிய இனம் அரசற்ற தரப்பாக, அரச இயந்திரத்தினை கொண்டு இயங்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராகவே போராடி வருகின்றது. அரசுடைய தரப்பு அரச இயந்திரத்தின் முழுமையான செயற்றிறனையும் கொண்டுள்ளது. குறிப்பாக வெளியுறவுக்கொள்கை மற்றும் இராஜதந்திர பொறிமுறைகளூடாக சர்வதேச உறவுகளில் அரசுடைய தரப்பு தனது பாதுகாப்பை கட்டமைத்து கொள்கின்றது. அரசற்ற தரப்பாகிய ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகளினது செயற்பாடுகளும் இலங்கை அரசிற்கு சேவகம் செய்வதாகவே காணப்படுகின்றது. மாறாக தம்மை தேசிய இனமாக சர்வதேச அரங்குகளில் அடையாளப்படுத்த தவறுவதுடன், வினைத்திறனான இராஜதந்திர பொறிமுறைகளை வெளிப்படுத்துவதனூடாக சர்வதேச அரசுகளின் கவனத்தை உள்வாங்க தவறி வருகின்றனர். இப்பின்னணியிலேயே தமிழ்த்தரப்பு தேசியத்தை சொற்பிரயோகத்துக்குள்ளேயே மட்டுப்பத்தியுள்ளதேயன்றி, நடைமுறையாக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பது பொதுவான விமர்சனமாக காணப்படுகின்றது. இக்கட்டுரை தமிழ்த்தரப்பின் இராஜதந்திரமற்ற செயற்பாடுகளால் இழந்துபோகும் தேசியப்போக்கினை சுட்டிக்காட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தரப்பில் முழுமையாக இராஜதந்திரப்...