Posts

Showing posts from June, 2024

ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் நலனுக்குள்ளேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகள்! -சேனன்-

Image
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில்  தமிழ் பொது வேட்பாளர் இலக்கு பல  முக்கிய புள்ளிகளின் அரசியல்  காய் நகர்த்தலை கேள்விக்குற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்த  ஏற்பாடுகள் கடந்த  வருடத்தில் இருந்து  உணரப்பட்டு அதற்கான  அரசியல் நகர்வுகளும் இலைமறை காயாய்  இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் வருகின்ற செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் இன்றுவரை தென்னிலங்கை அரசியல் கட்சிகள் உறுதியான  வேட்பாளர் தொடர்பான முடிவுகளை அறிவிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மாக்ஸிச லெனினிச பாரம்பரியத்தை உரையாடும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகள் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளர்ளை அறிவித்துள்ளது. ஆளும்தரப்பினை சேர்ந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளினை சேர்ந்தவர்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உறுதியான வெளிப்படுத்தலை மேற்கொள்ளவில்லை. இச்சூழ்நிலையில் சம்பள முரண்பாடுகளை மையப்படுத்தி அதிகரித்துவரும் தொழிற்சங...

ஜனாதிபதி பதவிக்காலம் நீடிப்பு அரசியலமைப்பு முரணும் ரணில் விக்கிரமசிங்காவின் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரசியல் மாற்ற கோரிக்கை, ஆட்சி தலைவர்களின் மாற்றத்துடன் சுருக்கப்பட்டது. இது போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்த்தரப்புக்களிடமிருந்து மக்கள் ஆணையை புதுப்பிப்பதற்கான தேர்தல் கோரிக்கையை வலுப்படுத்தியது. எனினும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம், தேர்தல்களை இழுத்தடிப்பதிலும், தவிர்ப்பதிலும் மும்மரமாக செயற்பட்டு வந்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் செப்டம்பர் 17 மற்றும் அக்டோபர் 16க்கு இடையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு மே மாத தொடக்கத்தில் தெரிவித்தது. முரணாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, 'ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் இரண்டையும் ஒத்திவைப்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கும், மிகவும் தேவையான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்காக இரண்டு வருடங்கள் பதவிக்காலத்தையும் நீட்டிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளது.' இது ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியலமைப்பிற்கு முரணானது எனும் குற்றச்சாட்டை முன்வைத...

தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலை பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடு! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை வலியுறுத்திய தமிழ் பொதுவேட்பாளர் கருத்தின் வீச்சு வடக்கு-கிழக்கில் பரவலாக அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இது முழு இலங்கையையும் தமிழ் பொதுவேட்பாளரின் கருத்துநிலை தொடர்பில் ஆழமான விவாதத்தை விரிவுபடுத்தியுள்ளது. தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியல் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. அண்மைக்கால தென்னிலங்கை வேட்பாளர்களின் வடக்கு நோக்கிய விஜயங்களும் பொதுவேட்பாளர் தொடர்பிலான உரைகளும் அதனையே வெளிப்படுத்துகிறது. மேலும், தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு அப்பால் பொதுவேட்பாளர் கருத்தியலின் எழுச்சி சில தமிழ் அரசியல்வாதிகளையும் அச்சமூட்டியுள்ளது. அதனையே தமிழரசுகட்சியின் அரசியல்வாதிகள் சிலரின் பதட்டம் உறுதிசெய்கின்றது. எனினும் தமிழ் பொதுவேட்பாளரின் வெற்றி, கருத்துநிலையில் தொடர்ச்சியாக அது பலப்படுவதிலேயே தங்கியுள்ளது. இக்கட்டுரை தமிழ் பொதுவேட்பாளர் கருத்துநிலையில் பலப்படுத்தக் கூடிய அணுகுமுறையை பரிந்துரைப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் அஞ்சலோட்டத்தில், தமிழ் பொதுவேட்பாளர் ஒரு பகுதியை நிரப்பக்கூடியத...

தென்னிலங்கை வேட்பாளர்களின் வடக்கு விஜயமும் மாயமான் பிரச்சாரங்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிக்கப்படாவிடினும், தேர்தலை மையப்படுத்திய வேட்பாளர்களின் வாக்காளர் வேட்டை ஆரம்பமாகி விட்டது.  தமிழ் பரப்பில் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பில் பொது அமைப்புக்களின் ஆதரவை திரட்டி வருகின்றது. இது தமிழ் மக்களிடையே ஆழமான செல்வாக்கை பெற்று வருகின்றது. மறுதளத்தில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் செயலாற்றி வருகின்றனர். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் தமிழ் மக்களை குறிவைத்து அபிவிருத்தி எனும் மாயையுடன் வடக்கு நோக்கி நகரும் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களின் மேடைகளை தமிழரசியல் தலைமைகளும் அலங்கரித்து வருகின்றனர். எனினும் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கடந்தகால இரட்டை நிலை அரசியலையே தென்னிலங்கை பிரதான வேட்பாளர்கள் தொடர்ச்சியாக பேணி வருகின்றனர். இக்கட்டுரை தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களின் யாழ்ப்பாண விஜயத்தின் அரசியல் வெளிப்பாடுகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் தமது ஜனாதிபத...

எதேச்சதிகார தமிழ் அரசியல்வாதிகளை சிவில் சமுகத்தின் எழுச்சி அச்சமூட்டுகிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர் அரசியலில் சிவில் சமுக செயற்பாடு இலங்கை ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி ஆரோக்கியமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றது. நீண்ட காலமாக தமிழ்ப்பரப்பில் எதிர்பார்க்கப்படும் நிலையானதொரு பொதுக்கட்டமைப்புக்கான முன்முயற்சிகளும் சிவில் சமுக தரப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் எழுச்சி பெற்ற சிவில் சமுக கட்டமைப்பு முயற்சிகள் பெரும்பாலும் அறிக்கையிடும் கட்டமைப்பாகவும், பிரமுகர் கட்டமைப்பாகவுமே செயற்பட்டுள்ளன. எனினும் தற்போது தமிழ் மக்கள் பொதுச்சபை என பரிணமிக்கப்பட்டுள்ள சிவில் சமுகங்களின் கூட்டிணைவு பரவலாக வடக்கு-கிழக்கில் இயங்கும் பொது அமைப்புக்களின் தன்னார்வ ஈடுபாட்டினூடாக ஒன்றிணையப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி தமிழ் சமுகத்திற்கு அவசியமானதாகும். எனினும் சிவில் சமுகங்களின் வளர்ச்சியால் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரசியல் கட்சிகள் தமது தனியுரிமையை பாதுகாக்க சிவில் சமுகங்களை புறமொதுக்க முற்படுவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிவில் சமுகம் பற்றிய சரியான புரிதலின்றி சிவில் சமுகத்தை மலினப்படுத்தும் கருத்துக்களை அரசியல் பரப்பில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அவதா...

கோரமற்ற ஜனாதிபதி தேர்தல் பகிஷ்கரிப்பு தமிழ் மக்களின் பலத்தை வீணடிக்கும் செயலாகும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழ் அரசியல் பரப்பில் சிவில் சமுக குழுக்களிடையே தமிழ்ப் பொதுவேட்பாளர் சார் கருத்தியல் ஆழமான நிலையை பெற்றுள்ளது. தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் சார்ந்து ஏப்ரல்-30அன்று 35இற்கு மேற்பட்ட சிவில் சமுக குழுக்கள் ஒன்றிணைந்து பொதுக்கட்டமைப்பினூடாக தமிழ்ப்பொதுவேட்பாளரை நகர்த்துவது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஒரு மாத கால இடைவெளியில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவான சிவில் சமுக குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. கடந்த ஜூன்-05அன்று 100இற்கும் மேற்பட்ட சிவில் சமுகங்களின் பிரதிநிதிகளுடன் ஒன்றிணைந்து இரண்டாவது பொதுக்கூட்டத்தை நெறிப்படுத்தியுள்ளார்கள். அப்பொதுக்கூட்டத்தில் இதுவரை வடக்கு-கிழக்கு சிவில் அமைப்புக்களின் கூட்டிணைவு என்ற பெயரில் செயற்பட்டு வந்தோர், 'தமிழ் மக்கள் பொதுச்சபை' எனும் பெயரில் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்கி செயற்பாட்டை தொடர்கின்றனர். சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் பலரும் தன்னார்வமாக பொதுவேட்பாளர் தொடர்பான கருத்தியலலை பலமாக ஆதரிக்கும் நிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளிலும் தமிழரசுக்கட்சி மற...

சீர்குலைப்பு யுத்தத்தை தாண்டி செல்வதற்கான கருவியே தமிழ்ப் பொதுவேட்பாளர்! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசியம் திரட்சியை மையப்படுத்தியே அதன் இருப்பு காணப்படுகின்றது. தமிழ்த்தேசியத்தின் இருப்பும் தமிழ்த்தேசியத்தின் திரட்சியிலேயே பாதுகாக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சி முதல் பிரபாகரனால் நெறிப்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் வரை தமிழ் மக்களின் திரட்சியை வலுப்படுத்துவதனூடாகவே தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச தேசிய கோரிக்கைகளை முன்னிறுத்தி வந்தனர். 2001ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளின் முகாமைத்துவத்தில் கட்டமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஜனநாயகவழியில் தமிழ் மக்களின் திரட்சியை பேணுவதற்கான நிறுவனமாகவே உருவாக்கப்பட்டது. இந்தப்பின்னணியிலேயே 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌணிக்கப்பட்டதற்கு பிற்படவும், தமிழ் மக்கள் தமது உயர்ந்தபட்ச திரட்சியை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பின்னால் வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் தமிழ் மக்களின் திரட்சியை சீர்குலைக்கும் வகையில் தமிழ் மக்கள் மீது சீர்குலைப்பு யுத்தமொன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இச்சீர்குலைப்பு யுத்தம் 2009களுக்கு பின்னர் தமிழ் மக்களிடையே இலகுவாக கட்டமைக்கக்கூடிய சூழல் அமையப்பெற்றுள்ளது. பிரதேசவாத, மதவாத பிர...