Posts

Showing posts from August, 2024

தென்னிலங்கையின் பொருளாதார பிரச்சாரமும்! ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையும்! -சேனன்-

Image
ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி இலங்கை அரசியல் புதிய மாயைகளுக்குள் பயணிக்க தொடங்கியுள்ளது . குறிப்பாக அரசியல்வாதிகளின் மாஜை வார்த்தைகளுக்குள்ளே தென்னிலங்கையின் அரசியல் விம்பம் பிரதிபலிக்கப்படுகின்றது . இலங்கையின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் , இலங்கைத்தீவு வளர்ச்சி பாதையில் பயணிப்பதாவும் ஆளுந்தரப்பு பிரச்சாரப்படுத்துகிறது . அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் எதிர்த்தரப்பின் வாதமும் பொருளாதார பிரச்சினைக்கேயே சுழலுகின்றது . மாறாக இலங்கையின் பொருளாதாரா பிரச்சினை பரந்ததொரு அரசியல் பொருளாதார பிரச்சினை என்பதையும் , அதன் அரசியல் பகுதியையும் ஒட்டுமொத்த தென்னிலங்கையும் இலாபகரமாக மறைக்க முயலுகின்றனர் . இம்மாஜை பிரச்சாரர்களை ஆதரிக்க வேண்டுமென்றே , அரசியல் உரிமை கோரும் தமிழ்த்தேசிய இனத்தின் சில அரசியல் பிரதிநிதிகளும் முட்டிமோதுவது தமிழினத்தின் சாபமாகும் . இக்கட்டுரை தென்னிலங்கையின் அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் பயணிக்க வேண்டிய போக்கை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது . 2024 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள் . வரலாறு...

தமிழ்த்தேசிய முழக்கத்தை சங்கு ஒலிக்கும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஆகஸ்ட்-15அன்று வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல்தல் வாக்குசீட்டில் 39 வேட்பாளர்கள் பெயரும் சின்னங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான சின்னங்களும், பிரச்சார அரங்குகளுமே இலங்கை அரசியலை முழுமையாக நிரப்பியுள்ளது. சுயேட்சையாக களமிறங்கியுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளரிற்கான சின்னமாக சங்கு வழங்கப்பட்டுள்ளது. சமுக வலைத்தளங்களில் நேராகவும் எதிராகவும் சங்கு முதன்மையான விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. வேட்பு மனுதாக்கல் மற்றும் சின்னம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழ்ப் பொதுவேட்பாளர் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் பொதுவெளியில் அதிகரிக்கப்பட்டு வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. முன்னைய அனுபவங்களினடிப்படையில், தமிழ்ப்பொதுவேட்பாளர் உரையாடலுடன் சுருங்கக்கூடியதெனும் எண்ணமே ஆரம்பத்தில் காணப்பட்டது. எனினும் வேட்புமனு தாக்கல் மற்றும் சங்கு சின்னம் பெற்றுக்கொண்டமை பொதுவெளியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆகஸ்ட்-18அன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற தமிழ்ப் பொதுவேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஈடுபாடும் உறுதி செய்கின...

யாழ்-நாகை கப்பல் சேவை இடைநிறுத்த ஆரம்பிக்கப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
இந்தியா-இலங்கை உறவில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத்துக்குமான உறவை இந்தியாவும் இலங்கையும் முரணான நிலையிலேயே தமது வெளியுறவுக்கொள்கையில் இணைத்துள்ளன. இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழர்கள் தமிழகத்துடன் நேரடியான உறவை ஏற்படுத்துவதை நிராகரிக்கும் முனைப்பிலேயே செயற்படுகின்றது. மாறாக இந்தியா தமிழக-ஈழத்தமிழர்கள் உறவினூடாக இலங்கையை அணுகின்றது. கடந்த கால போராட்ட இயக்கங்களின் வரலாறும் அதனையே உறுதிசெய்கின்றது. சமகாலத்தில் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் இந்தியாவின் முதலீடுகளும் அதன் தொடர்ச்சியாகவே அமைகின்றது. தமிழகத்தையும் ஈழத்தமிழர்களையும் நெருக்கத்திற்கு கொண்டு வரக்கூடிய செயற்பாடுகளை இந்திய அரசு திட்டமிடுகின்றது. இந்த பின்னணியிலேயே, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவையின் ஆரம்பம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் யாழ்ப்பாணம்-நாகப்பட்டிணம் கப்பல் சேவையின் ஆரம்பமும் அமைகின்றது. அத்துடன் இராமேஸ்வரம்-தலைமன்னாருக்கு இடையிலான தரைவழிப் பாதையாக பாளம் உருவாக்குவதற்கான உரையாடலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவை தமிழக-ஈழத்தமிழர்களின் உறவில் நெருக்கத்தை உருவாக்குகிறது. எனினும் இந்நெருக்கத்த...

தமிழரசு கட்சி தமிழ் மக்களிற்கான அரசியல் தலைமையை வழங்குகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்கள் அரசியலை, இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வெகுவாக குழப்பி உள்ளது. ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பில் சிவில் சமுகம் பலமான கருத்தியலை உருவாக்கி, மக்களிடம் விதைத்துள்ளார்கள். எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த கால எண்ணங்களுடன், மக்களிடமிருந்து வெகுதொலைவாகவே தொடர்ச்சியாக பயணிக்கிறார்கள். தலைமைத்துவ கிரீடங்களை தமக்கு தாமே சூடிக்கொள்வதிலேயே முனைப்பாக உள்ளார்கள். எனினும் தலைமைத்துவத்திற்கான இயல்பை கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் வலுவான சந்தேகங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நிறைவில், ஊடகவியலாளர் சந்ததிப்பில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 'அரசியல் தலைமைத்துவம் வகிக்கும் கட்சியாக’ தங்களை பிரகடனப்படுத்தி கொண்டார். இது பொதுப்பரப்பில் கேலிக்கையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை தமிழரசு கட்சி ஈழத்தமிழர்களுக்கு பொருத்தமான அரசியல் தலைமையை வழங்குகின்றதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பட தமிழ் மக்கள் அதிகம் நம்பிக்கையை குவித்த அரசியல் ...

1982இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முடிவை; 2024இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விமர்சிக்கிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் நிறைவேற்றுத்துறைக்கான ஜனநாயக திருவிழா அண்மிக்கையில், அதுசார்ந்த சூடான பேரம் பேசல்களும் நிலை தாவல்களும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லா அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. தென்னிலங்கைக்கு சமாந்தரமாகவே ஈழத்தமிழரசியலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முட்டி மோதுகிறது. ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் மூலோபாயமாக கையாள வேண்டிய களமாகும். அதற்குரிய வாய்ப்பே தமிழ் பொதுவேட்பாளரால் உருவாக்கப்படுகிறது. தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், தென்னிலங்கைக்கு நேரடியாகவும் மமறைமுகமாவும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியும் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் சேவகம் செய்கின்றனர்.  இப்பந்தியில் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் தொடர்பாடல் நீண்ட விளக்கங்கள் முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரை 1982ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அன்றைய தமிழ் அரசியல் கட்சிகளான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்ககள் முன்னணியின் தேர்தல் பதிவான அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்  அரசியல் நடத்தையை  தேடுவதாக உருவாக்கப்பகிறது....