சுயாதீனமற்ற ஐ.நா சபையும் மனித உரிமைக்கு தடையான நில ஆளுகை அரசுகளும்! -ஐ.வி.மகாசேனன்-
காசாவிலும் உக்ரைனிலும் இனப்படுகொலை மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இயலாமை பற்றிய விவாதங்களின் மத்தியிலேயே, கடந்த பதின்மூன்று வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிடலில் ஈழத் தமிழர்கள் நீதிக்காக காத்துக் கொண்டுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கடந்த 80 ஆண்டுகளில் உலகில் மலிந்த போர்களை தடுக்க திராணியற்ற நிறுவனம் என்பதைக் கடந்து, பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சமுகத்திற்கு துணையாக அல்லது அரணாக கூட செயற்பட தவறியுள்ளது என்ற விமர்சனம் காணப்படுகிறது. வலிமையான நாடுகளின் நலன்களுக்கு பின்னால் ஐ.நா ஒழிந்து இருந்துள்ளது. ஐ.நா-வின் பலவீனமான தன்மையை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) புத்தகத்திலும் பதிவு செய்திருந்தார். இது தமிழில் காணப்படும் 'சாத்தான் வேதம் ஓதுது' என்ற முதுமொழியை பிரதிபலிப்பினும், சாத்தானின் வேதம் சில நிஜயங்களை உறுதி செய்துள்ளது என்பதே எதார்த்தமாகும். இக்கட்டுரை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நிறுவனங்கள் மீதான நில ஆளுகை உள்ள நாடுகளின் தலையீடுகள் ஏற்படுத்ததும் நெருக்கீடுகளை தேடுவதாக உர...