யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் சனத்தொகை என்பது என்றும் கொதிநிலையான விவாதப்பொருளாகவே இருந்து வருகின்றது. மக்கள் தலையெண்ணப்படும் ஜனநாயகத்தில் சனத்தொகை விகிதாசரத்தின் அளவே தீர்மானமிக்க சக்தியாக காணப்படுகின்றது. இலங்கையில் நிலைமாறும் மோதல்களிலும் இவ்சனத்தொகை விகிதாசாரத்தின் மாறுபாடுகள் தொடர்பான அச்சங்களும் வலுவான செல்வாக்கு செலுத்துகின்றது. 2009ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான இனமுரண்பாடாக தமிழ்-சிங்கள முரண்பாடே விவாதிக்கப்பட்டு வந்தது. எனினும் 2009களுக்கு பின்னர் சிங்கள-முஸ்லீம் கலவரங்கள் பிரதான விவாதப்பொருளை உருவாக்கியிருந்தது. இதன் பின்னணியில் முஸ்லீம் சனத்தொகையின் அதிகரிப்பு தொடர்பில் சிங்கள பேரினவாதத்திடம் மேலெழுந்த அச்சங்களும் வலுவான காரணமாகியது. எனினும் மறுமுனையில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் சனத்தொகை விகிதம் குறைவடைந்து செல்வது தொடர்பில் எவ்வித கரிசணையும் அற்ற நிலையே அச்சமுகத்தில் காணப்படுகின்றது. இதில் யாழ்ப்பாண வைத்தியத்துறை நவீன பாய்ச்சலை உள்வாங்கியுள்ளது. கரு வளர்ச்சி சிகிச்சை பணக்காரர்களுக்கு மாத்திரமே சாத்தியம் என்ற நிலையை மாற்றி ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கான நிறுவன ஒத...