இருப்பினை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மலையக – வடக்கு – கிழக்கு தமிழர்கள் ஒருங்குசேர வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் டித்வா புயல் அபத்தங்களும் அதுசார் அரசியல்களும் நிலையானதாக மாறியுள்ளது. மாறாக அதன் அபத்தத்தின் ஆழமான பகுதிகளை ஆராய்வது அல்லது விவாதிப்பது போதிய வெளிச்சத்தை பெறவில்லை. டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் முழு இலங்கைத் தீவைiயும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பது நிதர்சனமானதே ஆகும். எனினும் ஒப்பீட்டளவில் மலையகத்தின் பாதிப்பும் உயிரிழப்பும் உயர்வானதாகும். இலங்கை பேரிடர் மேலான்மை நிலையத்தின் தகவல்களின் படி முழு இலங்கைத்தீவிலும் 639 பேர் பேரிடரில் இறந்துள்ளனர். இதில் மலையகத்தில் மாத்திரம் பதுளையில் 90, மொனராகலை 04, கேகாலை 32, மாத்தளை 29, கண்டி 234, நுவரெலியா 89 மற்றும் இரத்தினபுரி 01 என மொத்தமாக 479 பேர் இறந்துள்ளனர். அத்துடன் இதுவரை காணாமல் போனவர்களாக பதிவு செய்;யப்பட்டுள்ள 210 பேரில் மலையக பிரதேசத்தில் மாத்திரம் 194 பேர் பதிவாகியுள்ளார்கள். எனவே மலையக பிரதேசங்களில் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே மரண எண்ணிக்கை 650ஐ தாண்டி உயரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இம்மரணங்கள் முதல் முறையானதும் அல்ல. முடிவானதும் அல்ல. வருட வருடம் மலையக பிரதேசங்களின் ஏதொவொரு பகுதியில்...