Posts

போர்களில் ட்ரம்பின் ஈடுபாடும் விளைவுகளும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சவால் செய்துள்ளதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலக ஒழுங்கு பற்றிய சக்கரவுகள் தொடர்ச்சியான பிரதான விவாதமாக காணப்படுகிறது. அமெரிக்காவின் ஒற்றைமைய அரசியல் மீதான சந்தேகங்கள் நீண்டகாலமாகவே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 2008ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடிகளும் அதன் பின்னரான விளைவுகளும் பொருளாதார ரீதியான பல துருவ ஒழுங்கை எதிர்வு கூறியது. அதேவேளை கொரோனாவுக்கு பின்னரான அரசியலில் சர்வதேச நிறுவனங்களில் சீனாவின் மேலாதிக்கமும் அமெரிக்காவின் சரிவும் சர்வதேச அரசியலில் அவதானிக்கப்பட்டது. இப்பின்னணியில் இருதுருவ உலக ஒழுங்குக்கான எதிர்பார்ப்பு விவாத மையத்தை பெற்றது. எனினும் சீனாவின் எழுச்சி பொருளதார ரீதியான மென் அதிகாரமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. உலக ஒழுங்கு பிரதானமாக மென் அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுவதால், அமெரிக்காவின் மேலாதிக்கம் தொடர்ச்சியாக முதன்மைப்படுத்தப்பட்டது. இப்பின்னணியிலேயே இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்காவின் தலையிடும், பின்வாங்கலும் அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் செய்திகளும் அமெரிக்காவின் மென் அதிகார மேலாதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இக்கட்டுரை அமெரிக்காவின் மேலாதிக்க...

வெகுஜன போராட்டங்களும் அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது அணையா விளக்கு போராட்டமாகும். செம்மணி மனிதப்புதைக்குழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டது. மக்கள் செயல் என்ற தன்னார்வ இளைஞர் கட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஜூன் 23-25ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதி நாளான ஜூன்-25அன்று பெருந்திரளான மக்கள் தன்னார்வமாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசியல்வாதிகள் ஒருசிலருடன் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் தமது கோபங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இது அணையா விளக்கு போராட்டத்தின் பிரதான பேசுபொருளாகவும் மாறியிருந்தது. இக்கட்டுரை வெகுஜன போராட்டக்களங்களில் அரசியல்வாதிகள் மீதான மக்கள்...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விஜயமும் ஈழத்தமிழ் அரசியல் எதார்த்தமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைக்கான விஜயம் கடந்த வாரம் ஈழத்தமிழர் அரசியல் பரப்பை நிரப்பியிருந்தது. குறிப்பாக செம்மணி-சிந்துபதி மனித புதைகுழிக்கான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம் பெரிதாக சிலாகிக்கப்பட்டிருந்தது. ஈழத்தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இதுவோர் பகுதியாகும். காசாவில் குத்துயிராய் பிணங்கள் குவிக்கப்படுகையில் அதனை தடுத்து நிறுத்த இயலாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் எலும்புக்கூடுகளை காட்டியவுடன் நீதியை பெற்றுத் தந்திடுவார்களென எண்ணுவது உயர்வான ஆசையாகும். எனினும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகையில் அவற்றை காட்சிப்படுத்துவதும் உரிமை சார்ந்த போராட்டத்தில் தவிர்க்க முடியாத அவசியமாகும். அதேவேளை ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை 1990களின் இறுதிக் காலப்பகுதியின் பதிவாகிய செம்மணியுடன் சுருக்கி விடவும் முடியாது. 2025 வரையில் தையிட்டி போன்றவற்றில் ஆக்கிரமிப்பு என்ற வடிவத்தில் அழிக்கப்படும் ஈழத்தமிழரின் இருப்பிட உரிமையையும் செம்மணிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்துக்கு நிகராக காட்சிப்படுத்த தவறியிருக்கிறமோ என்ற பார்வையும் ஈழத்தமிழர்களி...

இலங்கையின் நீதி அமைச்சர் கொலை செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளிடமிருந்து புகார்களை கோருகிறாரா! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை அரசியல் கலாச்சாரத்தில் வதை முகாம்களும் மனிதப் புதைகுழிகளும் இயல்பான ஒன்றாகவே அமைகிறது. பேரினவாத எண்ணங்களோடு சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்குவதற்கு இராணுவ வதை முகாம்கள் பயன்படுத்தப்பட்டதற்கு சமாந்தரமாக தென் இலங்கையிலும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு இராணுவ வதை முகாங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலைமை கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினருக்கு (ஜே.வி.பி) இராணுவ வதை முகாம் சார்ந்த அனுபவங்கள் காணப்படுகின்றது. 70 மற்றும் 80களில் பல ஜே.வி.பி சிங்கள இளைஞர்கள் இராணுவ வதை முகாம்களுக்குள் தங்கள் உயிரை இழந்துள்ளார்கள். அதற்கானதொரு ஆதாரமாகவே பட்டலந்த அறிக்கை காணப்படுகிறது. சர்வதேச ஊடக வெளிச்சத்தை தொடர்ந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் பட்டலந்த அறிக்கையும் அண்மையில் மீள்தூசு தட்டப்பட்டுள்ளது. இத்தகைய அனுபவங்களின் பின்னணியிலும் ஜே.வி.பி பரிமாண தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் வடக்கு-கிழக்கு மனிதப் புதைகுழிகளுக்கான நீதிக் கோரிக்கைகளை வதந்தியாக சித்தரிப்பது, உயர்வான இனவாத அரசியலின் தொடர்ச்சியையே உறுத...

இஸ்ரேல்-ஈரான் யுத்தம் | மூன்றாம் உலகப்போரின் ஆரம்பமா! | உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த காலங்களில் மேலோட்டமாகவும், மறைமுகமாய் பினாமி போர்களையும் நிகழ்த்திய இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நேரடிப் போருக்குள் நகர்ந்துள்ளது. இது உலகப் போருக்கான உரையாடலை மீள அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக திரளக்கூடிய அணி உருவாக்கங்களே உலகப்போருக்கான அச்சத்தையும் உருவாக்குகிறது. எனினும் இரு துருவ அரசியல்கள் பெருமளவில் மறைந்துள்ள போக்குகளே சர்வதேச அரசியலில் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. இது உலகப் போருக்கான அணி உருவாக்கங்களை சாத்தியமற்றதாக்கி உள்ளமையே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் அவதானமாகவும் அமைகின்றது. உலகில் அதிகரிக்கும் அரசுகளுக்கிடையிலான போர்கள் சர்வதேச பொருளாதாரத்தை தாழ்வான நிலைக்கு நகர்த்தி சர்வதேச அரசுகளின் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு நகர்த்தும் நிலைமைகளே அண்மைய வெளிப்பாடுகளாக அமைகின்றது. அதிகரிக்கும் இஸ்ரேல்-ஈரான் போரும் உலக பொருளாதாரத்திற்கான நெருக்கடியின் மற்றொரு ஆதாரமாகவே அமைகின்றது. இக்கட்டுரை இஸ்ரேல்-ஈரான் போர் ஏற்படுத்தக்கூடிய சர்வதேச அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்...

பட்டலந்த அறிக்கை வரிசையில் செம்மணி மனிதப் புதைகுழி NPP அரசாங்கத்தின் கவனத்தைப் பெறுமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
பல நாடுகளிலும் நிலத்தை தோண்டுகையில் கனிம வளங்களும், பெற்றோலியமும், குடிநீருமே கிடைக்கப் பெறுகிறது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் வீதி அபிவிருத்தி, மயான அபிவிருத்தி என அபிவிருத்தி திட்ட அத்திவாரப் பணிகளுக்கு நிலத்தை தோண்டுகையிலேயே தொகை தொகையான மனித எலும்புக் கூட்டு எச்சங்களே கிடைத்து வருகின்றது. சமுக வலைத்தளம் என்ற போர்வையில் இணையத்தால் உலகம் சுருங்கியுள்ள இன்றைய காலகட்டத்தில், காசாவிலும் உக்ரைனிலும் மக்கள் தொகையாக மரணித்து கிடக்கும் பிரேத காட்சிகள் உலக மக்களை உருக்கியுள்ளது. சாமாந்தரமான காலப்பகுதியில் ஈழத்தமிழர்களின் என்புக்கூடுகள் கூட்டாக அணைத்தவாறும், ஒன்றாக இணைந்தவாறும், சிறுவர்களினாதாகவும் காட்சிகளாகிறது. எனினும் உலக மக்களிடமோ குறைந்தபட்சம் இலங்கைக்குள்ளேயோ போதிய கவன ஈர்ப்பை பெறவில்லை என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றது. கூட்டு என்புத் தொகுதிகளின் கண்டுபிடிப்பும் அதனை மையப்படுத்தி எழும் செய்திகளும், ஈழத்தமிழர்கள் மீதான தென்னிலங்கை அரச பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலைக்கான ஆர்வத்தை தோலுருக்கிறது. எனினும் இதன் முக்கியத்துவம் ஈழத்தமிரசியலில் இனங்காணப்பட்டுள்ளமையை அரசியல் ம...

மீள அச்சுறுத்தும் கோவிட்-19 தொற்று | நெருக்கடி வருமுன் விழித்திடுவோம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
“அருமை உடலின் நலமெல்லாம் அடையும் வழிகள் அறிவாயே! வருமுன் நோயைக் காப்பாயே! வையம் புகழ வாழ்வாயே!”   -கவிமணி தேசிக விநாயகனார்- (மலரும் மாலையும்) உலக ஒழுங்கின் மாறுதலின் எல்லையை நிர்ணயித்த காரணியில், 2020களில் முழு உலகையும் முடக்கிய கோவிட்-19 (Covid-19) பிரதான நிலையை பெறுகின்றது. 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு; பொருளாதாரத்தை மையப்பத்திய பலதுருவ போக்கு என பல உரையாடல்கள் சர்வதேச அரசியல் பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அளாவிய சூழலில், நிலையான மாற்றத்தை அடையாளப்படுத்தியதில் கோவிட்-19 நெருக்கடிக்கு பிரதான வகிபாகம் உள்ளது. 2020ஆம் ஆண்டு கோவிட்-19 ஏற்படுத்திய அரசியல் பொருளாதார நெருக்கடியிலிருந்தே இன்னும் பல அரசுகள் மீள முடியாத நிலையில் உள்ளன. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியின் ஆதாரமாகவும்   கோவிட்-19 முடக்கம் ஏற்படுத்திய தாக்கம் பிரதானமாகும். இந்நிலையில் மீள தென்கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளில் கோவிட் தொற்றின் அதிகரிப்பு பிரதான செய்தியாகி உள்ளது. இக்கட்டுரை கோவிட் தொற்றுக்கான முன்னாயர்த்த தேவையை இனங்காண்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. மே-5, 2023அன...