Posts

தொல்லியல் ஆலோசனைக்குழு நியமனமும் மாற்றமில்லாத இனப்பாகுபாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தொல்லியல் துறை ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாவம்ச மனோநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ள பேரினவாத கருத்தியல்கள் வரலாறுதோறும் தொல்லியல் துறையினூடாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தொல்லியல் மதக்கூறுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தொல்லியல் திணைக்களமும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் கீழேயே செயற்படுகின்றது. அதுமட்டுமன்றி பல்லின கட்டமைப்பையும் வரலாற்றையும் கொண்ட இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தில் பௌத்த தர்ம சக்கரமும், பௌத்த விகாரையுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்தப்பின்னணியிலேயே ஈழத்தமிழர்களின் வாழ்விடங்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பிக்களும் தொல்லியல் என்ற பெயர்ப்பலகையுடன் அரச இயந்திரத்தின் பாதுகாப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஆட்சி மாற்றங்களும் ஆட்சியாளர் மாற்றங்களும் அரச திணைக்களங்கள் குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்புக்களை சீர்செய்ய முடியாத நிலைமைகளையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலேயே அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட...

இலங்கைத்தீவில் போதை கலாசாரத்தை வேரறுக்க கட்சி அரசியல் கலாசாரம் மாற்றப்படுமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக தான் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் நிலையும் மாறிவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றிகள்  இலங்கையின் அரசியல் மாற்றமாகவே சிலாகிக்கப்பட்டது. புதிய வேட்பாளர்கள் புதிய பிரதிநிதிகளூடாக இலங்கை அரசியல் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி பிரச்சாரப்படுத்தியது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகரின் போலிப்பட்டம் முதல் சில சச்சரவுகள் உருவாகிய போதிலும், தொடர்ச்சியான வேறுபட்ட பிரச்சினைகளுடன் போலிப்பட்ட சச்சரவு கரைந்து போனது. தற்போது போதை பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த கால அரசியல்வாதிகளின் போதைப்பொருள் வியாபார தொடர்புகள் இனங்காணப்பட்ட நிலையில், சமகாலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் போதைப் வியாபார தொடர்புகளும் விசாரணையில் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதுவொரு வகையில் தேசிய மக்கள் சக்தியின் தூய்மைப்படுத்தப்பட்ட அரசியல் பிரச்சாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கேலிக்கைக்குரியதாகவும் ...

இலங்கைத் தேசிய அரசும் கறுப்பு அரசும்; இராணுவத்தின் இரட்டை தோற்றம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
போதைப் பொருள் சார்ந்த அபாயம் இலங்கையில் ஆழமான உரையாடலை அண்மையில் அதிகரித்து வருகின்றது. கடந்த காலங்களில் வடக்கு-கிழக்கு இளையோரிடம் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடம் வழமைக்கு மாறாக போதைப்பொருள் பாவனை அதிகரிப்பது தொடர்பில் ஆதங்கங்கள் அதிகரித்திருந்தது. ஒரு சில சிவில் அமைப்புக்கள் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் அரசாங்கங்கள் போதைக்கு எதிரான நடவடிக்கைகளில் உயர் கவனம் செலுத்தியிருக்கவில்லை. மாறாக இலங்கை அரச இயந்திரமே வடக்கு-கிழக்கு போதைப்பொருள் விநியோகத்தின் பிரதான தரப்பாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இன்று முழு இலங்கையும் போதை மாபியாவிற்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ள அபாயத்தை இலங்கை அரசாங்க நடவடிக்கைககள் உறுதி செய்துள்ளது. அதுமாத்திரமன்றி போதைப் பொருள் மாபியா மற்றும் அதுசார் பாதாள உலக குழுக்களின் செயற்பாட்டில் இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையின் ஈடுபாட்டையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதுவொரு வகையில் கடந்த கால போர் வெற்றியாளர்களின் விம்பத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அமைகிறது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் போதைப்...

ஏக்கிய இராச்சிய வரைபும் பயனற்ற பொருள்கோடல் விவாதமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் ஆயுத போராட்ட மௌனிப்புக்கு பின்னரான சர்வதேச தலையீடுடனான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் பற்றிய விவாதத்தில் நிறுவனச் சீர்திருத்தம் என்ற அடிப்படையிலான அரசியலமைப்பு மாற்றம் பிரதான உரையாடலாக நிலைபெற்று வருகின்றது. இந்த பின்னணியிலேயே 2009க்கு பின்னரான தேர்தல்கள் யாவற்றிலும் தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் விஞ்ஞாபனங்களும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை ஒரு பகுதியாய் கொண்டுள்ளது. எனினும் ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு மாற்றத்திற்கு கிடைக்கப்பெற்ற ஆணைகள் யாவையும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களாகவே சுருக்கி கொடார்கள். இதுவொரு வகையில் சர்வதேச அழுத்தங்களை தணிக்கை செய்வதற்கும் இழுத்தடிப்பதற்கான உத்தியாகவுமே அமைந்துள்ளது. இந்த பின்னணியிலேயே அநுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தேர்தல் கால வாக்குறுதிகள் பொது மக்கள் பார்வையில் அணுகப்படுகிறது. எனினும் தமிழ்த்தரப்பிடம் அவ்அசமந்தம் ஆபத்தானதாகும். அரசியலமைப்பு மாற்றம் நடைபெறினும் நடைபெறாவிடினும் தமிழ்த்தரப்பு தமது அரசியல் அபிலாசைகளை திரட்சியாகவும் உறுதியாகவும் வெளிப...

புதிய அரசியலமைப்பு விவாதமும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு முயற்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய விவாதம் நிறுவன சீர்திருத்தமாக இலங்கை அரசியலில் தொடர்ச்சியான பிரச்சாரப் பொருளாக அமைகின்றது. 2010, 2015, 2019 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தல்களின் பிரச்சாரத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் முதன்மையானதாகவும் அமைந்தது. பல சந்தர்ப்பங்களில் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றிருந்தது. இந்த பின்னணியிலேயே கடந்த 15 ஆண்டுகளில் 2010ஆம் ஆண்டு 18ஆம் திருத்தம் முதல் 2022ஆம் ஆண்டு 22ஆம் திருத்தம் வரையில் ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் முழுமையான அரசியலமைப்பு மாற்றம் சாத்தியப்பாடற்றதாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு தமிழ் அரசியல் பரப்பில் கடுமையான விவாதப் பொருளை உருவாக்கியிருந்த...

ஈழத்தமிழர்களின் சர்வதேச விசாரணை கோரிக்கையும் உள்ளக நீதியின் பலவீனத்தை உறுதிப்படுத்தலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
மீண்டுமொரு முறை ஐ.நாவும் சர்வதேசமும் ஈழத்தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற கோசம் ஈழத்தமிழரசியல் உரையாடலை பெற்றுள்ளது. ஜெனிவா திருவிழாவில் மார்ச் மற்றும் செப்டெம்பர் ஆரம்பங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதங்கள் அனுப்புவதும், ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏமாற்றியதாக புராணம் பாடுவதும் 2012களுக்கு பின்னரான ஈழத்தமிழரசியலின் தொடர் நிகழ்வாக அமைகின்றது. வருடம் வருடம் அரையாண்டுகளில் இரண்டு தொடக்கம் மூன்று மாத கால பின்தொடருகையில் ஐ.நாவும் சர்வதேசமும் ஈழத்தமிழர் நலனுக்காக முழுவீச்சாக செயற்பட வேண்டுமெனும் ஈழத்தமிழரசியல் எதிர்பார்ப்பு விவாதத்திற்குரியதாகும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உரிமை போராட்டக்காரர்கள் பருவகால செயற்பாட்டாளர்களாக இருந்து கொண்டு மூன்றாம் தரப்பை முழுநேர செயற்பாட்டாளராக கோருவது ஈழத்தமிழரசியலின் அரசியல் வறுமை அல்லது மாயையான நம்பிக்கைகளை அடையாளப்படுத்துவதாக அமைகின்றது. சர்வதேச அரங்கில் கடந்த காலத்துக்கான நீதிக் கோரிக்கையில் சர்வதேச நீதியை வலியுறுத்துவதாயின் அதற்கான நியாயாதிக்கம் மற்றும் தொடர்ச்சியான Home Work (அரசியல் சொல்லாடலில் ஆங்கிலத்தில் Home work ...