Posts

தென்னிலங்கையின் அரசியலமைப்பு முயற்சி ஏமாற்றுக்களும் அதிகாரப் பகிர்வு முறைமையில் முரண்படும் தமிழ் கட்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் ஆட்சியாளர்களும் சர்வதேச தரப்பினரும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக அரசியலமைப்பு மாற்றத்தையே அடிப்படையாய் கருத்துரைக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் பரிந்துரைக்கப்ட நிலைமாறுகால நீதியிலும் நிறுவனச்சீர்திருத்தம் என அரசியலமைப்பு மாற்றம் வலியுறுத்தப்பட்டது. அதற்கான முன்முயற்சிகளையும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கமும் மேற்கொண்டிருந்தது. அன்றைய காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் புதிய அரசியலமைப்பு முயற்சிகளுக்கு இணக்கத்தை வழங்கியிருந்தது. இதன் விளைவாகவே ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபும் உருவாக்கப்பட்டிருந்தது. அது அன்றைய தேசிய அரசாங்கத்தின் ஊடல் சீர்குலைந்ததால், இடைநிறுத்தப்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இடைநிறுத்தப்பட்ட ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் அரசியலமைப்பு முயற்சிகளை முழுமைப்படுத்தப் போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. எனினும் தமிழ் அரசியல் தரப்பிடம் தேசிய இனப்பிரச்சி...

தேசிய மக்கள் சக்தியும் தொடரும் பேரினவாத அரசியலமைப்பு முயற்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, அரசியலமைப்பு மாற்றம் என்பதாகவே இலங்கையின் ஆட்சியாளர்களிடமும் ஈழத்தமிழர் அரசியல் தரப்பினரிடமும் பொதுப் பிரக்ஞை உருவாக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்சவைத் தவிர, 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முதல் ஆட்சிக்கு வந்திருந்த ஜனாதிபதிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் அரசியலமைப்பு மாற்றம் முதன்மையானதாக இருந்துள்ளது. சமகால அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளிலும் அரசியலமைப்பு மாற்றம் பிரதான நிலை பெற்றிருந்தது. எனினும் ஓராண்டுகளைக் கடந்தும் வெளிப்படையாய் அரசியலமைப்பு மாற்றத்திற்கான முன்னகர்வுகளை அறிய முடியவில்லை. அதேவேளை அரசியலமைப்பு மாற்றத்திற்கான கோரிக்கை, இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கானது என்பதுவும், ஈழத்தமிழர்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கைக்கானது என்பதுவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலப்பகுதியில் மலினப்பட்டுள்ளதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் விவாத நிலைக்கு வெளியே ...

ஈழத்தமிழ் அரசியலில் Gen-Z சமுகத்தின் மெத்தனமும் முன்னைய தலைமுறையினரின் பொறுப்பின்மையும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இளையோர் அரசியல் சர்வதேச அரசியல் பரப்பில் பேசு பொருளாகியுள்ளது. இணைய யுகத்தில் பிறந்து வளர்ந்துள்ள இன்றைய இளைய தலைமுறையாகிய Gen-Z பருவத்தினரின் இணையத்தள பயன்பாட்டின் ஊடான சமூகப் போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் சர்வதேச அரசியல் கவனத்தை குவித்துள்ளது. அதன் அடிப்படையாக இலங்கையின் 2022ஆம் ஆண்டு அரகலயவே சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் ஈழத்தமிழ் அரசியல் பரப்பில், குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிராக நீதியைக் கோரும் ஒரு சமூகத்தின் இளையோரின் அரசியல் விழிப்புணர்வும் செயற்பாடும் பொருத்தமான வழித்தடத்தை கொண்டுள்ளதாக என்பதில் வலுவான சந்தேகங்களே காணப்படுகிறது. 2024-2025ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகளில் நகர்த்தப்படும் ஈழத்தமிழ் அரசியலும், இளையோரின் அரசியல் நடத்தைகளும் விருப்புக்களும் எதிரான விமர்சனத்தை உருவாக்கி வருகின்றது. தமிழ் அரசியல் கலாச்சாரம் மரபுகளை கடந்து செல்ல வேண்டும். நடைமுறையில் மரபுகளை கடந்து செல்லல் வளர்ச்சியை நிராகரித்து,  எதிரான போக்கில் காணப்படுவதாக பொது விசனம் எழுந்துள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழரசியலில் இளையோரின் வழித்தடத்தை அடையாளம் காட்ட முயல்வதாகவே அமைகிறது. ஈழத்தம...

2025ஆம் ஆண்டு உலகளாவிய போராட்டங்களும் Gen-Z சமுகம் ஏற்படுத்தியுள்ள நிலையற்ற மாற்றங்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகாலத்தில் தமிழ்ப்பரப்பில் குறிப்பாக தென்னிந்தியாவின் தாக்கத்தில் ‘தற்குறி’ என்ற வசைபாடல் இளந்தலைைமுறையினர் மீது விரவி காணப்படுகின்றது. பெரும்பாலும் 2000இற்கு பின்பு பிறந்தவர்களை சமுகம் பற்றிய போதிய அறிவும் அக்கறையுமற்றவர்கள் என்ற தொனியிலேயே தற்குறிகள் என்ற வசைபாடல்கள் காணப்படுகின்றது. அதே பருவத்தினர் ‘Gen-Z போராட்டக்காரர்கள்’, ‘Gen-Z புரட்சியாளர்கள்’ என சமுக மாற்றத்தின் பிரதான பங்களிகளாக கொண்டாடும் சூழலொன்று சர்வதேச பரப்பில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் ஆரம்ப படிமங்கள் தென்னாசியாவில் குறிப்பாக 2022ஆம் ஆண்டு அரகலயவை மையப்படுத்திய இலங்கையின் போராட்ட சூழலே அடையாளப்படுத்தப்படுகின்றது. 2025ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்களால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் அரசியல் நெருக்குவாரங்களுக்கு பின்னால் முதன்மையான விவாதமாக Gen-Z ('Generation-Z’ தோராயமாக 1997-2012களுக்கு இடையில் பிறந்தோர்) என்ற சொல்லாடல் பரவலாக காணப்பட்டுள்ளது. இக்கட்டுரை 2025ஆம் ஆண்டு எதிர்ப்பு போராட்டங்களை வடிவமைப்பதில் Gen-Z இயக்கத்தின் வகிபாகத்தை தேடுவதாக உருவாக்கப்பட்ட...

தமிழ்த்தேசியப் பேரவையின் கூட்டாட்சி கோரிக்கையும் தமிழக கட்சிகளின் இனப்படுகொலை நீதி கோரிக்கையும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் இந்தியாவின் தாக்கம் நிலையானது. இந்தியா எதிர்ப்புவாதத்தை பிரதான கொள்கைகளில் ஒன்றாக கட்டமைத்து வளர்ச்சியடைந்த ஜே.வி.பியின் தலைவர் இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அண்மையில் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், 'இந்தியா இலங்கையின் மிக நெருக்கமான அண்டை நாடாகும். இது சுமார் 24 கி.மீ கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் எங்களுக்கு நாகரிக தொடர்பு உள்ளது. இலங்கையின் வாழ்க்கையின் எந்த அம்சமும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை என்பது அரிது' எனப் பதிலளித்துள்ளார். இதுவே எதார்த்தமானதாகும். இவ்எதார்த்தத்தை ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் புரிந்து கொள்வதினை தவிர்த்து வருகின்றார்கள். தமது தொண்டர்களையும் அவ்வாறே பயிற்றும் வந்துள்ளார்கள். புரிந்து கொண்டதாய் காட்டிக்கொண்டவர்களும், இந்தியாவின் நலன்களுக்குள் சரணாகதி அரசியலையே மேற்கொண்டிருந்தார்கள். சமகாலத்தில் இந்நிலையில் அரிதான மாற்றத்தை அடையாளங் காணக்கூடியதாக உள்ளது. தமிழ்த்தேசியப் பேரவை இலங்கை அரசியலில் இந்தியாவின் வகிபாகத்தை ஏற்றுக்கொண்டு, அதேவேளை ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவிற்கான வழியை புரிந்து கொண்டு, ஈ...

தமிழ்த்தேசிய பேரவையின் தமிழக விஜயம் தமிழக-ஈழத்தமிழ் அரசியல் உறவை புதுப்பிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழ் அரசியலில் இராஜதந்திரத்தின் தேவைப்பாடு பற்றி பல சந்தர்ப்பங்களில் அறிவியல் மட்டத்தில் உரையாடப்பட்டு வந்துள்ளது. எனினும் இராஜந்திர செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட வேண்டிய தமிழ் அரசியல் தரப்புகளால், அறிவியல் மட்ட உரையாடல் உரையாடல்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. குறிப்பாக இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் பாக்குநீரிணையும், அது கூறாக்கும் நிலத்தொடர்ச்சியில் வாழும் தமிழக-ஈழத்தமிழர் பண்பாட்டு உறவும், பிராந்திய அரசாகிய இந்தியாவின் நிலையும் பிரதானமான அரசியல் மூலமாக காணப்படுகின்றது. இம்மூலங்களை புரிந்து கொள்வதும், அதனூடாக வழித்தடங்களை அடையாளங் காண்பதனூடாகவுமே தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்ட முடியும். நிலையான தீர்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை அங்கிகரிப்பதாகும். இவ்வழித்தடம் தொடர்பில் நீண்டகாலமாக ஈழத்தமிழ் அரசியல் அறிவியல் தளத்தில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் 2025ஆம் ஆண்டு இறுதியிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய பேரவையின் தமிழ் நாட்டுக்கான விஜயத்தின் முக்கியத்துவத்தை தேடுவதா...

இருப்பினை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மலையக – வடக்கு – கிழக்கு தமிழர்கள் ஒருங்குசேர வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
  இலங்கையின் டித்வா புயல் அபத்தங்களும் அதுசார் அரசியல்களும் நிலையானதாக மாறியுள்ளது. மாறாக அதன் அபத்தத்தின் ஆழமான பகுதிகளை ஆராய்வது அல்லது விவாதிப்பது போதிய வெளிச்சத்தை பெறவில்லை. டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் முழு இலங்கைத் தீவைiயும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பது நிதர்சனமானதே ஆகும். எனினும் ஒப்பீட்டளவில் மலையகத்தின் பாதிப்பும் உயிரிழப்பும் உயர்வானதாகும். இலங்கை பேரிடர் மேலான்மை நிலையத்தின் தகவல்களின் படி முழு இலங்கைத்தீவிலும் 639 பேர் பேரிடரில் இறந்துள்ளனர். இதில் மலையகத்தில் மாத்திரம் பதுளையில் 90, மொனராகலை 04, கேகாலை 32, மாத்தளை 29, கண்டி 234, நுவரெலியா 89 மற்றும் இரத்தினபுரி 01 என மொத்தமாக 479 பேர் இறந்துள்ளனர். அத்துடன் இதுவரை காணாமல் போனவர்களாக பதிவு செய்;யப்பட்டுள்ள 210 பேரில் மலையக பிரதேசத்தில் மாத்திரம் 194 பேர் பதிவாகியுள்ளார்கள். எனவே மலையக பிரதேசங்களில் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே மரண எண்ணிக்கை 650ஐ தாண்டி உயரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இம்மரணங்கள் முதல் முறையானதும் அல்ல. முடிவானதும் அல்ல. வருட வருடம் மலையக பிரதேசங்களின் ஏதொவொரு பகுதியில்...