Posts

புதிய அரசியலமைப்பு விவாதமும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு முயற்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதற்கு பின்னர் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய விவாதம் நிறுவன சீர்திருத்தமாக இலங்கை அரசியலில் தொடர்ச்சியான பிரச்சாரப் பொருளாக அமைகின்றது. 2010, 2015, 2019 மற்றும் 2024ஆம் ஆண்டு தேர்தல்களின் பிரச்சாரத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளிடம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் முதன்மையானதாகவும் அமைந்தது. பல சந்தர்ப்பங்களில் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் ஆணையும் கிடைக்கப்பெற்றிருந்தது. இந்த பின்னணியிலேயே கடந்த 15 ஆண்டுகளில் 2010ஆம் ஆண்டு 18ஆம் திருத்தம் முதல் 2022ஆம் ஆண்டு 22ஆம் திருத்தம் வரையில் ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் முழுமையான அரசியலமைப்பு மாற்றம் சாத்தியப்பாடற்றதாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கியிருந்தது. ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு தமிழ் அரசியல் பரப்பில் கடுமையான விவாதப் பொருளை உருவாக்கியிருந்த...

ஈழத்தமிழர்களின் சர்வதேச விசாரணை கோரிக்கையும் உள்ளக நீதியின் பலவீனத்தை உறுதிப்படுத்தலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
மீண்டுமொரு முறை ஐ.நாவும் சர்வதேசமும் ஈழத்தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற கோசம் ஈழத்தமிழரசியல் உரையாடலை பெற்றுள்ளது. ஜெனிவா திருவிழாவில் மார்ச் மற்றும் செப்டெம்பர் ஆரம்பங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதங்கள் அனுப்புவதும், ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏமாற்றியதாக புராணம் பாடுவதும் 2012களுக்கு பின்னரான ஈழத்தமிழரசியலின் தொடர் நிகழ்வாக அமைகின்றது. வருடம் வருடம் அரையாண்டுகளில் இரண்டு தொடக்கம் மூன்று மாத கால பின்தொடருகையில் ஐ.நாவும் சர்வதேசமும் ஈழத்தமிழர் நலனுக்காக முழுவீச்சாக செயற்பட வேண்டுமெனும் ஈழத்தமிழரசியல் எதிர்பார்ப்பு விவாதத்திற்குரியதாகும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உரிமை போராட்டக்காரர்கள் பருவகால செயற்பாட்டாளர்களாக இருந்து கொண்டு மூன்றாம் தரப்பை முழுநேர செயற்பாட்டாளராக கோருவது ஈழத்தமிழரசியலின் அரசியல் வறுமை அல்லது மாயையான நம்பிக்கைகளை அடையாளப்படுத்துவதாக அமைகின்றது. சர்வதேச அரங்கில் கடந்த காலத்துக்கான நீதிக் கோரிக்கையில் சர்வதேச நீதியை வலியுறுத்துவதாயின் அதற்கான நியாயாதிக்கம் மற்றும் தொடர்ச்சியான Home Work (அரசியல் சொல்லாடலில் ஆங்கிலத்தில் Home work ...

தமிழ்த்தேசிய இருப்பைப் பேண நுண் செயற்பாட்டாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்கள் விடுதலைக்கு போராடும் தேசிய இனமாக, தேசியத்தை பலப்படுத்தக்கூடிய அனைத்துக் காரணிகளையும் ஒன்றினைத்து பயணிப்பது அவசியமான முன்நிபந்தனையாகும். எனினும் ஈழத்தமிழரசியலில் ஒற்றுமை சாத்தியப்பாடற்றது என்பது தவிர்க்க இயலாத எதார்த்தமாக காணப்படுகின்றது. அதேவேளை தேசியம்சார் செயற்பாடுகளை மற்றும் செயற்பாட்டாளர்களை நிந்திப்பதனூடாக தேசியத்துக்கான அரண்களை சிதைக்கும் செயல்களே முன்னிலையில் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களையும் தமது செயற்பாடுகளையும் மகாத்மா தனமானதாக முன்னிறுத்தி பிற செயற்பாடுகளை சிறுமைப்படுத்தும் மற்றும் துரோகத்தனமாக்கும் பிரச்சாரங்களை முன்வைக்கின்றார்கள். தமிழ்த்தேசியத்தை திரட்டும் கருத்தாழத்தை கொண்டிருந்த தமிழ்ப் பொதுவேட்பாளரும் அவ்வாறே சிதைக்கப்பட்டது. இத்தகைய பரந்த அரசியல் செயற்பாடுகளே எவ்வித தூரநோக்கமற்று சிதைக்கப்படுகையில், நுண் செயற்பாட்டாளர்களும் செயல்களும் இலகுவாக அழிக்கப்படும் அவலமே தமிழ் பரப்பில் நிரவி காணப்படுகின்றது. சமகால சமூக வலைத்தள யுகத்தில் செயற்பாட்டாளர்களை எதிர் நிலையில் விமர்சிப்பதனூடாக பிரபல்யமாகும் இழிநிலை முதன்மை பெற்று வருகின்றது. மறுதளத்தில் இது அச்செ...

இளையோர் அரசறிவியல் பங்குபற்றலை ஊக்குவிக்கும் IFES திட்டம்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஈடுபாடு வரவேற்கத்தக்கது! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலக அரசியலில் இளையோர் தாக்கமிகு சக்தியாக எழுச்சியடைந்து வருகின்றார்கள். ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் அரகலய முதல் நேபாளத்தின் Gen-z போராட்டம் வரையில் அதனை நிருபிக்கிறது. இதுவொரு வகையில் இளையோரின் தன்னார்வ அரசியல் ஈடுபாட்டை அடையாளப்படுத்துகிறது. எனினும் அதிகரிக்கும் இளையோர் அரசியல் ஈடுபாடு கருத்தியல் இல்லாது வெறுமனவே கலகங்களாகவும், யாரோ ஒரு தரப்புக்கு மாத்திரம் நன்மைபயப்பதாகவுமே மாறி விடுகின்றது. இதன் பின்னணியில் சமுக வலைத்தள யுகத்தில் இளையோரிடையே ஆழமான கருத்து செறிவாக்கமின்மையும் ஒரு மையக் காரணமாகும். நடைமுறை அரசியலோடு தெளிவான அரசியல் சிந்தனையோட்டமும் இணைகையிலேயே ஆக்கபூர்வமான மாற்றங்களை உருவாக்க முடியும். அண்மையில் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமையத்தின் (IFES) இலங்கை கிளையின் PAVE (பங்கேற்பு, பரிந்து பேசுதல், குரல் மற்றும் ஈடுபாடு) செயற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் சிந்தனையும் நடைமுறை அரசியலும் ஒன்றிணைக்கும் வகையிலான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை மாணவர்களிடையே PAVE செயற...

அநுரகுமார திசநாயக்க ஒருவருடத்தில் தூசு தட்டியுள்ள நிர்வாக மாற்றங்களும் ஆழப்புதைத்துள்ள பேரினவாத அரசியல் கலாசாரமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
செப்டெம்பர்-21, 2024அன்று அநுரகுமார திசநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அவ்அலையின் தொடர்ச்சியாகவே நவம்பர்-2024இல் நடைபெற்ற 16வது பாராளுமன்றத்துக்கான தேர்தலிலும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது. செயல்களை கடந்து ஜனாதிபதி தேர்லுக்கு முன்பாகவும் தேர்தல் வெற்றிகளுக்கு பின்னராகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தம்மை இலங்கை அரசியல் கலாசார மாற்றத்தின் அடையாளமாகவே தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஒரு சில தளங்களில் குறிப்பாக நிர்வாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கடந்த கால நிர்வாக சலுகைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், போதைப் பொருட்களுக்கு எதிரான நடடிவடிக்கைகள் என சில மாறுதல்களை பொதுமக்களாலும் இனங்காணக்கூடியதாகவே உள்ளது. எனினும் அரசியல் கலாசார மாற்றத்திற்குரிய இயல்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஓராண்டுகளில் கொண்டுள்ளதா என்பதில் அரசியல் ஆய்வுத்துறை மத்தியில் பலமான கேள்விகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை அநுரகுமார திசநாயக்கவின் கடந்த ஓராண்டு கால ஆட்சி இயல்பை தேடுவதா...

ஈழத்தமிழரசியலை பலவீனப்படுத்தும் அரசியல் கட்சிகள்; இறந்த என்புகளும் நினைவுகளுமே போராடுகின்றது! -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகாலத்தில் ஈழத்தமிழர் தியாக தீபம் திலீபனின் 38து ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் தேசிய இனமாக ஈழத்தமிழர் அரசியலில் நினைவேந்தல்கள் கனதியான நிலையைப் பெறுகின்றது. அடுத்த அடுத்த தலைமுறைகளிடம் வரலாற்றை கடத்தி செல்வதிலும், இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு கடந்து வந்த வரலாற்றுப் பாதையினை மீள் நினைவுபடுத்துவதற்கும் நினைவேந்தல்கள் அவசியமாகின்றது. எனினும் ஈழத்தமிழர்களிடம் நினைவேந்தல்கள் சரியாக வினைத்திறனாக கையாளப்பட்டு வருகின்றதா என்பது தொடர்பில் முரணான வாதங்களே காணப்படுகின்றது. குறிப்பாக அரசியல் கட்சிகள் நினைவேந்தலின் வரலாற்றை கடத்தும் பணிக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க தத்தமது அரசியல் கட்சி நலன்களை முன்னிறுத்துவதையே பிரதான இலக்காக கொண்டுள்ளார்கள் என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. இவ்அவலம் தியாக தீபத்தின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலிலும் தொடர்வதனை செய்திகளில் அறியக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை நினைவேந்தல் அரசியலை ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை பலப்படுத்துவதில் பயன்படுத்தக்கூடிய முறையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண...

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கமும் ஜே.வி.பியின் கடந்த கால ஆதரவும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை நீக்கப்பட்டுள்ள விவகாரமே கடந்த ஓரிரு வாரங்களாக இலங்கை செய்திகளில் பிரதான பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக யுத்த வெற்றியூடாக தென்னிலங்கையில் நட்சத்திர நாயகனான, மகாவம்ச மனநிலையின் தொடர்ச்சியாக துட்டகைமுனுவின் பிரதிமையாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச விஜேயராமவிலிருந்து தங்கலக்கு இடம்பெயர்ந்தமை முதன்மையான செய்தியாகவும் அரசியல் விவாதமாகவும் மாறியிருந்தது. இதுவொரு வகையில் பேரினவாத தரப்புக்களை மீள மகிந்த ராஜபக்ச தலைமையில் ஒன்றுதிரட்டக்கூடிய வாய்ப்ப்புக்களை பொதுஜன பெரமுன தேட வழிவகுத்துள்ளது. மறுமுனைமுனையில் தேசிய மக்கள் சக்தி தமது இயல்பான வினைத்திறனான விளைவற்ற விளம்பர அரசியல் யுக்தியை தொடருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான ஜனத விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) உட்பட இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறலுக்குரிய பல விடயங்கள் இலங்கை அரசியலில் நிரவி காணப்படுகின்றது. எனினும் கடந்;த ஓராண்டுகளில் அதற்குரிய வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்காது வெறுமனவே ஜனரஞ்சக ரீதியாக ஈர்க்கக்கூடிய விடயங்கை முன்னிற...