Posts

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் சனத்தொகை என்பது என்றும் கொதிநிலையான விவாதப்பொருளாகவே இருந்து வருகின்றது. மக்கள் தலையெண்ணப்படும் ஜனநாயகத்தில் சனத்தொகை விகிதாசரத்தின் அளவே தீர்மானமிக்க சக்தியாக காணப்படுகின்றது. இலங்கையில் நிலைமாறும் மோதல்களிலும் இவ்சனத்தொகை விகிதாசாரத்தின் மாறுபாடுகள் தொடர்பான அச்சங்களும் வலுவான செல்வாக்கு செலுத்துகின்றது. 2009ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதான இனமுரண்பாடாக தமிழ்-சிங்கள முரண்பாடே விவாதிக்கப்பட்டு வந்தது. எனினும் 2009களுக்கு பின்னர் சிங்கள-முஸ்லீம் கலவரங்கள் பிரதான விவாதப்பொருளை உருவாக்கியிருந்தது. இதன் பின்னணியில் முஸ்லீம் சனத்தொகையின் அதிகரிப்பு தொடர்பில் சிங்கள பேரினவாதத்திடம் மேலெழுந்த அச்சங்களும் வலுவான காரணமாகியது. எனினும் மறுமுனையில் இலங்கையில் ஈழத்தமிழர்களின் சனத்தொகை விகிதம் குறைவடைந்து செல்வது தொடர்பில் எவ்வித கரிசணையும் அற்ற நிலையே அச்சமுகத்தில் காணப்படுகின்றது. இதில் யாழ்ப்பாண வைத்தியத்துறை நவீன பாய்ச்சலை உள்வாங்கியுள்ளது. கரு வளர்ச்சி சிகிச்சை பணக்காரர்களுக்கு மாத்திரமே சாத்தியம் என்ற நிலையை மாற்றி ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கான நிறுவன ஒத...

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் பெரும்பாலும் இலங்கை அரசியலின் ஜனநாயக இயல்புகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக அமைகின்றது. இலங்கை அரசு இயந்திரமானது குறைந்தபட்சம் காலத்திற்கு காலம் நீதியான தேர்தல்களை நடாத்துவதனூடாகவே ஜனநாயக விம்பத்தை பாதுகாத்து வருகின்றது. அவ்ஒழுங்கிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருந்தது. எனினும் நடைமுறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கையாளும் முறைமை, தேர்தல் மீது நம்பிக்கையீனத்தையும் குழப்பத்தையும் உருவாக்கி வருகின்றது. சுயாதீன செயற்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றங்களின் செயற்பாடுகளிலும் பொதுவெளியில் நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டு வருகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளுக்கு முழு அளவில் அரச இயந்திர பலத்தை இயல்பு நிலையில் பயன்படுத்துவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இது இலங்கையின் தேர்தல் மீதும் ஜனநாயக பொறிமுறை மீதும் அவநம்பிக்கையை உருவாக்குகிறது. இப்பின்னணி இலங்கையர்களிடையே, சர்வதேச தளத்தில் இடதுசாரி...

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-

Image
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் போட்டி கொதிநிலையை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் செய்தியிடல்களில் குட்டித்தேர்தல் என்றவாறு அழைக்கப்படுகின்றது. எனினும் தேர்தல்கள் யாவுமே மக்கள் எண்ணங்களை நாடிபிடித்து பார்க்கும் செயற்பாடாக அமைவதனால், அதன் பெறுமதிகள் உயர்வானதாகவே அமைகின்றது. அதனடிப்படையிலேயே ஆளும் தரப்பாகிய தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் யாவரும் தீவு முழுமையாக சூறாவளி பிரச்சார செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகப்பகுதியிலும் தேசிய மக்கள் சக்தி தமது வெற்றியை பாதுகாத்துக் கொள்ள அதீத அக்கறை செலுத்தி வருகின்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முழுமையாக வடக்கில் தீவிர பிரச்சார செயற்பாட்டில் உள்ளார். இதனைவிட இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாக வடக்கு-கிழக்கில் முகாமிட்டு பிராச்சர செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்கள். மறுமுனையில் தமிழ் அரசியல் கட்சிகள் தமது இருப்பை உறுதி செய்ய உள்ளூராட்சி சபை தேர்...

அமெரிக்க வரி விதிப்பு அறிவிப்பும் தாராள பொருளாதார தோல்வியின் எச்சரிக்கையும்! -சேனன்-

Image
'அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்தானது, ஆனால் அமெரிக்காவின் நண்பனாக இருப்பது அழிவுகரமானது' ( 'It may be dangerous to be America's enemy, but to be America's friend is fatal . ’ ) -ஹென்றி கிஸ்ஸிங்கர்- கொரோனா நெருக்கடிக்கு பின்னர் உலக ஒழுங்கின் மாற்றம் அதிக விவாதத்தை உருவாக்கியிருந்தது. குறிப்பாக அமெரிக்காவில் ஒற்றைமைய அரசியல் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் சீனாவில் எழுச்சி மற்றும் பல்துருவ உலகிற்கான எதிர் கூறுகள் சர்வதேச அரசியலில் வியாபித்திருந்தது. எனினும் உலக ஒழுங்கின் அதிகார மாற்றம் அல்லது அமெரிக்காவின் நிலை மாற்றத்தை அடையாளப்படுத்தக்கூடிய எந்த ஒரு உறுதியான நிகழ்வையும் இனங் காண முடியவில்லை. சர்வதேச நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்புக்களும் உலகமயமாதலுக்கு அமெரிக்க ஜனாதிபதியால் ஏற்படுத்தபப்பட்டு நெருக்கடிகளும், அமெரிக்காவை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்படும் சூழலை சர்வதேச அரசியல் அறிஞர்கள் விபரிக்கின்றார்கள். இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்புக்கள் சர்வதேச அரசியலில் ஏற...

புதுடெல்லி-கொழும்பு உறவு அசோப்பேரரசின் பௌத்த பண்பாட்டிற்கு நகர்த்தப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
'நாம் வரலாற்றை மாற்ற முடியும், ஆனால் புவியியலை மாற்ற முடியாது. நம் நண்பர்களை மாற்ற முடியும், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது' -அடல் பிஹாரி வாஜ்பாய்- இலங்கை அரசியலிலும், ஈழத்தமிழசியலிலும் இந்தியா தவிர்க்க முடியாததொரு காரணியாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் ஒவ்வொருவரிடமும் காணப்படினும், பிராந்திய அரசாக இந்தியாவின் தாக்கம் இலங்கை அரசியலிலும் ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்திலும் ஆழமான கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் பின்னணியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைக்கான விஜயம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. எனினும் இந்தியப் பிரதமரின் விஜயம் வரலாற்றை திசைதிருப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக இலங்கை-இந்திய பண்பாட்டு உறவு தமிழக-ஈழத்தமிழர்கள் பண்பாட்டு உறவை மையப்படுத்தியே கடந்த காலங்களில் விபரிக்கப்பட்டது. இந்திய-இலங்கை அரசியலும் அதன்வழியேயே நிர்மாணிக்கப்பட்டது. எனினும் அண்மைக்காலத்தில் தமிழக-ஈழத்தமிழர் உறவில் விரிச ஏற்படுத்தப்படுகிறது. இதுதொடர்பில் கடந்த வார இப்பத்தியில் விபரிக்கப்பட்டிருந்தது. அதேவேளை நரேந்திர மோடியின் விஜயத்தில், கொழும்பு-புதுடெ...

மீனவர் பிரச்சினையை பயன்படுத்தி தமிழக-ஈழத்தமிழ் தொப்புள்கொடி உறவு அறுக்கப்படுகிறதா! -ஐ.வி.மகாசேனன்-

Image
தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினை சமகாலத்தில் பூதகரமான வளர்ச்சியை பெற்று வருகின்றது. தமிழ்த்தேசிய அரசியலில் கரிசணையற்ற தரப்பினராலேயே இப்பிரச்சினையும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பிணக்கை தமிழ்த்தேசியத்திற்கு எதிரான வகையிலேயே நெறிப்படுத்தப்படுவதாக அமைகின்றது. அதேவேளை தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்டவர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலையில் காணப்படுகின்றார்கள். தமிழக-ஈழத்தமிழர் முரண்பாட்டின் அதிகரிப்பு, ஈழத்தமிழர்களின் அரணை சிதைக்கக்கூடிய செயலாக அமைகின்றது. அதேவேளை தமிழக மீனவர்களின் அத்துமீறலால் ஈழத்தமிழ் மீனவ சமுகத்தின் பொருளாதார இருப்பு சிதைக்கப்படுகின்றது என்பதும் நிதர்சனமானதாகும். இதனை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் தந்திரோபாயமாக கையாள்வதிலேயே ஈழத்தமிழர்களின் அரண் பாதுகாக்கக்கூடியதாக அமையும். இக்கட்டுரை தமிழக-ஈழத்தமிழர் மீனவர் பிரச்சினையை முன்னிலைப்படுத்திய சமகால முரண்பாட்டு சூழலை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4-6 வரையான மூன்று தினங்கள் இந்தியாவின் பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார். இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு தமிழகத்த...

வேட்பாளர்கள் தெரிவில் போட்டியும் உள்ளூராட்சி சபைத் தேர்தலும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கை மீளவொரு தேர்தல் களத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. செப்டெம்பர் (2024) ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நவம்பர் (2024) பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து, எதிர்வரும் மே-06 (2025) அன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த இலங்கையின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. முன்னைய தேர்தல் நிலவரங்களிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் இயல்பு வேறுபட்டதாக அமைகின்றது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாக அமைகின்ற போதிலும், முழுமையாக கடந்த தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கக்கூடியவையாக அமையப் போவதில்லை. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்திய காரணிகளிலிருந்து வேறுபட்டதொரு அரசியல் நடத்தையே உள்ளூராட்சி சபைகளில் பிரதிபலிக்கக்கூடியதாகும். கடந்த கால தேர்தல்களில் அத்தகையதொரு போக்கினையே அவதானிக்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது. இக்கட்டுரை உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஈழத்தமிழர் எதார்த்தங்களை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளத...