தமிழ்த்தேசிய பேரவையின் தமிழக விஜயம் தமிழக-ஈழத்தமிழ் அரசியல் உறவை புதுப்பிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழ் அரசியலில் இராஜதந்திரத்தின் தேவைப்பாடு பற்றி பல சந்தர்ப்பங்களில் அறிவியல் மட்டத்தில் உரையாடப்பட்டு வந்துள்ளது. எனினும் இராஜந்திர செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட வேண்டிய தமிழ் அரசியல் தரப்புகளால், அறிவியல் மட்ட உரையாடல் உரையாடல்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. குறிப்பாக இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் பாக்குநீரிணையும், அது கூறாக்கும் நிலத்தொடர்ச்சியில் வாழும் தமிழக-ஈழத்தமிழர் பண்பாட்டு உறவும், பிராந்திய அரசாகிய இந்தியாவின் நிலையும் பிரதானமான அரசியல் மூலமாக காணப்படுகின்றது. இம்மூலங்களை புரிந்து கொள்வதும், அதனூடாக வழித்தடங்களை அடையாளங் காண்பதனூடாகவுமே தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்ட முடியும். நிலையான தீர்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை அங்கிகரிப்பதாகும். இவ்வழித்தடம் தொடர்பில் நீண்டகாலமாக ஈழத்தமிழ் அரசியல் அறிவியல் தளத்தில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் 2025ஆம் ஆண்டு இறுதியிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய பேரவையின் தமிழ் நாட்டுக்கான விஜயத்தின் முக்கியத்துவத்தை தேடுவதா...