ஈழத்தமிழராய் ஏக்கிய இராச்சிய வரைபிற்கு பதிலளிக்க வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கம் தென்னிலங்கை அரசியல் தரப்பினரிடையே தெளிவான உரையாடலை கொண்டுள்ளது. குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய தென்னிலங்கை வாதங்களில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பதுவே முதன்மையான விடயமாக அவதானிக்கப்படுகிறது. மாறாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மங்கலான தன்மையையே கொண்டுள்ளது. அதில் ஏக்கிய இராச்சிய வரைபே பிரதான வெளிச்சத்தைப் பெறுகிறது. அதற்கானதொரு ஆதரவை தமிழ்த் தரப்பினுள் காட்டும் முயற்சியாகவே, மீள கட்டமைக்கப்படும் தமிழரசுக் கட்சி ஆதிக்க புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் பங்காளிகளின் சேர்க்கை அமைகின்றதோ என்ற சந்தேகங்களும் பொதுவெளியில் காணப்படுகின்றது. அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏக்கிய இராச்சிய வரைபுக்கு எதிரான பிரச்சாரத்தை பிராந்திய அரசு மற்றும் புலம்பெயர் தமிழர்களிடம் முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் சிவில் சமூகங்கள் புதிய அரசியலமைப்பு உள்ளடக்கங்கள் தொடர்பில் எவ்வித வினையாற்றலுமின்றி மௌனித்துள்ளார்கள். இவை தொடர்பான விபரணங்கள் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக இப்பத்தியில் விவரிக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாரம் புதிய அரசிய...