தென்னிலங்கையின் அரசியலமைப்பு முயற்சி ஏமாற்றுக்களும் அதிகாரப் பகிர்வு முறைமையில் முரண்படும் தமிழ் கட்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் ஆட்சியாளர்களும் சர்வதேச தரப்பினரும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக அரசியலமைப்பு மாற்றத்தையே அடிப்படையாய் கருத்துரைக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் பரிந்துரைக்கப்ட நிலைமாறுகால நீதியிலும் நிறுவனச்சீர்திருத்தம் என அரசியலமைப்பு மாற்றம் வலியுறுத்தப்பட்டது. அதற்கான முன்முயற்சிகளையும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கமும் மேற்கொண்டிருந்தது. அன்றைய காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் புதிய அரசியலமைப்பு முயற்சிகளுக்கு இணக்கத்தை வழங்கியிருந்தது. இதன் விளைவாகவே ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபும் உருவாக்கப்பட்டிருந்தது. அது அன்றைய தேசிய அரசாங்கத்தின் ஊடல் சீர்குலைந்ததால், இடைநிறுத்தப்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இடைநிறுத்தப்பட்ட ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் அரசியலமைப்பு முயற்சிகளை முழுமைப்படுத்தப் போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. எனினும் தமிழ் அரசியல் தரப்பிடம் தேசிய இனப்பிரச்சி...