Posts

தமிழ்த்தேசிய பேரவையின் தமிழக விஜயம் தமிழக-ஈழத்தமிழ் அரசியல் உறவை புதுப்பிக்குமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழ் அரசியலில் இராஜதந்திரத்தின் தேவைப்பாடு பற்றி பல சந்தர்ப்பங்களில் அறிவியல் மட்டத்தில் உரையாடப்பட்டு வந்துள்ளது. எனினும் இராஜந்திர செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட வேண்டிய தமிழ் அரசியல் தரப்புகளால், அறிவியல் மட்ட உரையாடல் உரையாடல்கள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. குறிப்பாக இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் பாக்குநீரிணையும், அது கூறாக்கும் நிலத்தொடர்ச்சியில் வாழும் தமிழக-ஈழத்தமிழர் பண்பாட்டு உறவும், பிராந்திய அரசாகிய இந்தியாவின் நிலையும் பிரதானமான அரசியல் மூலமாக காணப்படுகின்றது. இம்மூலங்களை புரிந்து கொள்வதும், அதனூடாக வழித்தடங்களை அடையாளங் காண்பதனூடாகவுமே தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை எட்ட முடியும். நிலையான தீர்வு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை அங்கிகரிப்பதாகும். இவ்வழித்தடம் தொடர்பில் நீண்டகாலமாக ஈழத்தமிழ் அரசியல் அறிவியல் தளத்தில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும் 2025ஆம் ஆண்டு இறுதியிலேயே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இக்கட்டுரை தமிழ்த்தேசிய பேரவையின் தமிழ் நாட்டுக்கான விஜயத்தின் முக்கியத்துவத்தை தேடுவதா...

இருப்பினை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மலையக – வடக்கு – கிழக்கு தமிழர்கள் ஒருங்குசேர வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
  இலங்கையின் டித்வா புயல் அபத்தங்களும் அதுசார் அரசியல்களும் நிலையானதாக மாறியுள்ளது. மாறாக அதன் அபத்தத்தின் ஆழமான பகுதிகளை ஆராய்வது அல்லது விவாதிப்பது போதிய வெளிச்சத்தை பெறவில்லை. டித்வா புயலால் ஏற்பட்ட பேரிடர் முழு இலங்கைத் தீவைiயும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என்பது நிதர்சனமானதே ஆகும். எனினும் ஒப்பீட்டளவில் மலையகத்தின் பாதிப்பும் உயிரிழப்பும் உயர்வானதாகும். இலங்கை பேரிடர் மேலான்மை நிலையத்தின் தகவல்களின் படி முழு இலங்கைத்தீவிலும் 639 பேர் பேரிடரில் இறந்துள்ளனர். இதில் மலையகத்தில் மாத்திரம் பதுளையில் 90, மொனராகலை 04, கேகாலை 32, மாத்தளை 29, கண்டி 234, நுவரெலியா 89 மற்றும் இரத்தினபுரி 01 என மொத்தமாக 479 பேர் இறந்துள்ளனர். அத்துடன் இதுவரை காணாமல் போனவர்களாக பதிவு செய்;யப்பட்டுள்ள 210 பேரில் மலையக பிரதேசத்தில் மாத்திரம் 194 பேர் பதிவாகியுள்ளார்கள். எனவே மலையக பிரதேசங்களில் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே மரண எண்ணிக்கை 650ஐ தாண்டி உயரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இம்மரணங்கள் முதல் முறையானதும் அல்ல. முடிவானதும் அல்ல. வருட வருடம் மலையக பிரதேசங்களின் ஏதொவொரு பகுதியில்...

தேசிய மக்கள் சக்தியின் ஜனரஞ்சக அரசியல் டித்வா பொருளாதார சூறாவளிக்கு ஈடுகொடுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த வாரம் இலங்கை செய்திகளில் டித்வா சூறாவளியின் பேரழிவுகளிலிருந்து இலங்கைத் தீவை மீட்பது தொடர்பான செய்திகளே முதன்மையாக காணப்பட்டது. எதிர்க்கட்சி எதிர் ஆளுங்கட்சி என்ற மோதல்களும் மீட்புப் பணியை மையப்படுத்திய முரண்பாடாகவே அமைந்திருந்தது. குறிப்பாக உடனடி பிரச்சினைக்கான தீர்வுகளே பிரஸ்தாகிக்கப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களை பாதிப்பு பிரதேசத்திலிருந்து மீட்டு நலன்புரி மையங்களில் தங்க வைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் என்பவே முதன்மையான செய்திகளாக காணப்படுகின்றது. அதுவே பேரனர்த்த முகாமைத்துவத்தில் உடனடி தேவையாகவும் அமைகின்றது. பிராந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் ஆரம்ப உதவிகளும் மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணி சார்ந்தே கட்டமைக்கப்பட்டிருந்தது. அதேவேளை இயற்கைப் பேரனர்த்தம் தொடர் சங்கிலியான விளைவுகளை கொண்டது. அந்த வரிசையில் சுகாதார நெருக்கீடு தொடர்ச்சியானதாகும். சமகாலத்தில் அதனை சீர்செய்வதற்கான ஆதரவை வழங்கும் முனைப்புடனேயே இந்தியா மற்றும் ஜப்பானின் அண்மைய உதவிகளும் கிடைக்கப் பெற்றுள்ளது. இரு நாடுகளும் மருத்துவப் பொருட்களையும் வைத்தியர் குழுவையும் இலங்கைக்...

இலங்கையை சூழ்ந்துள்ள இயற்கையின் சீற்றம்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இயற்கையின் கோர தாண்டவம் முழு இலங்கைத் தீவையும் பெரும் அழிவுகரமான பாதைக்குள் நகர்த்தியுள்ளது. இலங்கையின் தீவுசார் புவியியல் அமைப்பு வருடா வருட பருவ கால மழைக்காலப்பகுதியில் தாழமுக்கம், மினி சூறாவளி, மழைவீச்சு அதிகரிப்பு, வெள்ளம், மண்சரிவு, உயிரிழப்பு, இடப்பெயர்வு என்பன நிலையான பதிவாக அமைகின்றது. அவற்றில் இழப்பு வீச்சுகள் குறைவாகவே அமைந்துள்ளன. எனினும் 2025ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை 'தித்வா' (Ditwah) சூறாவளியாக சீற்றம் கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டதுடன், பெருமளவானோர் காணாமலாக்கப்பட்டதுடன், தீவு முழுவதும் பெருமளவான சொத்து சேதங்களை ஏற்படுத்தி நாட்டை ஸ்தம்பிக்க செய்துள்ளது. நாடு மெல்ல பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் தோற்றத்தை காண்பிக்கையில் மறுபடி இலங்கை பொருளாதாரத்திற்கு பெரும் அதிர்வை தித்வா சூறாவளி உருவாக்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் என தென்னாசிய நாடுகள் பேரிடர் முகாமைத்துவத்தில் இலங்கையுடன் கைகோர்த்துள்ளது. இக்கட்டுரை தித்வா சூறாவளி ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளையும் மீட...

நினைவேந்தல்களின் உணர்வுபூர்வ எழுச்சியும் உணர்வைக் கடந்து அரசியல்மயமாக்கப்பட வேண்டிய தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2025ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள், 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 16 ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வழமைக்கு மாறாக வடக்கு-கிழக்கில் தமிழர்கள் வாழும் நிலங்களில் உள்ளூராட்சி சபைகளின் முன்னெடுப்பில் மாவீரர் தின நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இப்பின்னணியில் தெருக்களில் சிவப்பு-மஞ்சள் வர்ண கொடிகள் அலங்கரிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியப் பாடல்களும் ஒலிவாங்கியில் தெருக்களெல்லாம் பாடப்பட்டது. இடையிடையே சில இடங்களில் இலங்கை காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு துறையினர் தலையிட்டு எச்சரிக்கைகளை வழங்கியுள்ளமையும் செய்திகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மாவீரர் தின நாட்களை அண்மிக்கையில், தமிழ் இனத்தின் அவலமான ஒற்றுமையின்மையால் கட்சிசார் போட்டிகளால் சிறு சஞ்சலங்கள் வெளிப்பட்ட போதிலும், நிகழ்வுகளில் கட்சி முரண்பாடுகள் வெளிப்படாத வகையில் பொதுமக்கள் முகஞ்சுழிக்காத வகையிலும் பெருந்திரட்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிறைவேறியுள்ளது. இக்கட்டுரை 2025ஆம் ஆண்டு மாவீரர் தின பரிணாமத்தை கொண்டு செல்ல வேண்டிய நகர்வினை தேடுவதாக உருவாக்கப்பட்ட...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரமும் அரசியலமைப்பின் பௌத்த சாசனத்திற்கான முன்னுரிமையும்! தமிழரசுக்கட்சி பொறுப்புக்கூற வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில் அதிவிரைவாக இனவிகிதாசார மாற்றம் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில், மீண்டுமொரு இனரீதியான முரண்பாட்டின் வடு கடந்த வாரம் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சட்டமீறலான மற்றும் ஆக்கிரமிப்பு தொனியில் புத்த சிலைகள் நிறுவுவது இயல்பானதொரு நிலைமைகளாகும். 2005ஆம் ஆண்டு திருகோணமலை நகரின் மத்தியில் திடிரென அமைக்கப்பட்ட சட்டத்துக்கு புறம்பான புத்தர் சிலை விவகாரம் தமிழர் மத்தியில் கொதிநிலையை உருவாக்கியது. இக்கொதிநிலை இருபதுக்கும் மேற்பட்டோரை கொலை செய்ததுடன் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை இடம்பெயர செய்தது. எனினும் பேரினவாதத்தின் மூர்க்கத்தால் சட்டத்துக்கு புறம்பான புத்தர் சிலை நிலையானதுடன் தொடரானது. திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வென்னீர் ஊற்று வளாகம், அரிசி மலை, திருகோணமலை கோட்டை, குச்சவெளி, தென்னமரவாடி என சட்டத்துக்கு முரணாக புத்த சிலை நிறுவுவதும் ஆக்கிரமிப்பதும் தொடர் செய்திகளாகவே அமைந்துள்ளது. இலங்கையில் வடக்கு-கிழக்கில் சட்டத்துக்கு முரணான புத்தர் சிலை நிறுவலும், அரச எந்திரத்தின் பாதுகாப்புடன் நிலைபெறுவதும் இயல்பானதாகவே அமைகின்றது. ஆட்சியாளர்களின் மாற்றங்கள...

தொல்லியல் ஆலோசனைக்குழு நியமனமும் மாற்றமில்லாத இனப்பாகுபாடும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தொல்லியல் துறை ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாவம்ச மனோநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ள பேரினவாத கருத்தியல்கள் வரலாறுதோறும் தொல்லியல் துறையினூடாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தொல்லியல் மதக்கூறுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தொல்லியல் திணைக்களமும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் கீழேயே செயற்படுகின்றது. அதுமட்டுமன்றி பல்லின கட்டமைப்பையும் வரலாற்றையும் கொண்ட இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தில் பௌத்த தர்ம சக்கரமும், பௌத்த விகாரையுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்தப்பின்னணியிலேயே ஈழத்தமிழர்களின் வாழ்விடங்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பிக்களும் தொல்லியல் என்ற பெயர்ப்பலகையுடன் அரச இயந்திரத்தின் பாதுகாப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஆட்சி மாற்றங்களும் ஆட்சியாளர் மாற்றங்களும் அரச திணைக்களங்கள் குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்புக்களை சீர்செய்ய முடியாத நிலைமைகளையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலேயே அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட...