Posts

ஜனாதிபதியின் கச்சதீவு விஜயமும் விளைவற்ற ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
செப்டெம்பர் முதல் வாரம் வடபுலத்திற்கான ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் விஜயம், உள்ளூர் அரசியலை மாத்திரமின்றி பிராந்திய அரசியலையும் நொதிப்படைய செய்துள்ளது. பிராந்திய நாடாகிய இந்திய செய்திகளிலும் அநுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க பதவியேற்று ஓராண்டு பூர்த்தியடைவதை மையப்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டெம்பர்-01அன்று யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அநுரகுமார திசநாயக்க, அதனோர் பகுதியாக இந்தியாவோடு கடல் எல்லையை பகிரும் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியான கச்சதீவுக்கும் திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அண்மைக்காலமாகவே தமிழக அரசியலில் கச்சதீவு மீட்பு மைய விவாதமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கச்சதீவுக்கான திடீர் விஜயமும் கச்சதீவை மையப்படுத்திய அரசியல் உரையாடலும் இந்திய அரசியல் தரப்புக்கான எதிர்வினையாகவே அவதானிக்கப்படுகின்றது. இக்கட்டுரை கச்சதீவுக்கான இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை மையப்படுத்திய அரசியலை தேடு...

ரணில் விக்கிரமசிங்கவின் கைதும்-பிணையும் உள்ளக நீதிப்பொறிமுறையின் பலவீனமும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
கடந்த வாரம் இலங்கை அரசியலில் மீளவும் ரணில் விக்கிரமசிங்க பிரதான தலைப்பு செய்தியாக மாறியிருந்தார். இலங்கை மாத்திரமின்றி சர்வதேச செய்திகளிலும் முதன்மையாக அமைந்திருந்தது. சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் நிறைவேற்றுத்துறை ஜனாதியாக ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளார். ஒருவகையில் இவ்சீர்திருத்தத்தின் பின்னணியிலும், கைது நடவடிக்கைகளுக்கு பொறுப்பான விசாரணைக் குழு உருவாக்கத்திலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்து செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இக்கைது தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகளிடையே கூட்டுச்செயற்பாட்டை ஊக்குவித்துள்ளதுடன், ஆளுந்தரப்பு இலங்கையின் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். எனினும் குறைந்தபட்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியை ஒரு நாள் கூட சிறைக்குள் அனுப்பமுடியவில்லை என்ற விமர்சனமும் அரசியல் அவதானிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை இலங்கையின் நீதிப்பொறிமுறை உள்ளக நீதிப்பொறிமுறையின் உறுதிப்பாட்டை...

அமெரிக்க வரிவிதிப்பு கொள்கையும் இந்திய-சீனா கூட்டாண்மையும் ஆசிய நூற்றாண்டை வேகப்படுத்துமா! -ஐ.வி.மகாசேனன்-

Image
கொரோனா உச்சநிலை பெற்ற காலத்தில் புதிய உலக ஒழுங்குக்கான உரையாடல், குறிப்பாக ஆசிய நூற்றாண்டுக்கான வாய்ப்புக்கள் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டது. சீனா சார்ந்த பொருளாதார வளர்ச்சி பிரதான நிலையை பெற்றிருந்தது. எனினும், இந்திய – சீன முரண்பாடு ஆசிய நூற்றாண்டினை நோக்கிய உலக ஒழுங்கின் மாற்றத்தின் இடைத்தடங்கலாக விவாதங்களும் காணப்பட்டது. பின்னாட்களில் ரஷ;சிய-உக்ரைன் போர் மற்றும் காசா யுத்தத்தில் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடுகள் வன்சக்தி ஊடாக அமெரிக்கா தனது மேலான்மையை பாதுகாப்பதாகவே அமைந்திருந்தது. சமகாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைள் மீள ஆசிய நூற்றாண்டுக்கான விவாதத்தை ஆரம்பித்துள்ளது. இம்முறை அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கை சீன-இந்திய-ரஷ்சியா ஆகிய நாடுகளிடையே தவிர்க்க இயலாத இணைப்பை உருவாக்கும் தூண்டலாகவும் அமைகின்றது. இக்கட்டுரை அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கையால் தூண்டப்படும் இந்திய-சீன உறவின் ஸ்திரத்தன்மையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, 1924ஆம் ஆண்டில், ஜேர்மன் இராஜதந்திரி கார்ல் ஹவுஷோபர் ( Karl Haushofer ) 'பசிபிக் யுகம்...

தமிழரசு கட்சியின் தனியாதிக்கத்தை நிராகரிப்போர் கூட்டான போராட்டத்தை ஒருங்கிணைப்பார்களா! -ஐ.வி.மகாசேனன்-

Image
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அரசியல் கோரிக்கைகளை பலமாக வெளிப்படுத்துவதும், உள்ளூர் - பிராந்திய – சர்வதேச அரசியலில் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதும் அவசியமான முன்நிபந்தனையாகும். அரசியல் கோரிக்கைகள் மலினப்படுகையில், தேசிய இன விடுதலைப் போராட்ட முன்நிகழ்வுகளும் நீர்த்துப்போகும் வரலாற்றினையே சர்வதேச அரசியலில் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் துருக்கி குர்துக்களின் ஆயுதப் போராட்டக்குழுவான குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (பி.கே.கே) ஆயுதக்களைவும் பின்வாங்கலும் எடுத்துக்காட்டாக அமைகின்றது. பி.கே.கே தலைவர் அப்துல்லா ஒகலன் 1999ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், துருக்கி குர்துக்களின் அரசியல் கோரிக்கைகளும் மெல்ல மெல்ல மலினப்பட ஆரம்பித்தது. அதன் உயர்ந்தபட்ச விளைவாக 2025இல் குர்துக்களின் விடுதலைப் போராட்டம் முழுமையாக நீர்த்துப்போகும் நிலைக்கு நகர்ந்துள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும் 2009களுக்கு பிற்பட பெருமளவில் வலிமையான போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்துவதும் தக்கவைப்பதுவும் அரிதாகவே காணப்படுகின்றது. உள்ளகரீதியிலான முரண்பாடுகளால், குறிப்பாக அரசியல் கட்சிகளின் தேர்தல் நலன்சார் சு...

பலவீனமான போராட்டங்களால் தமிழ் மக்களின் போராட்ட மனநிலை சிதைக்கப்படுகிறது! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் அரசியலில் ஜனநாயக வழிப்போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஆயுதமாக மாறியுள்ளது. உலக அரசியலிலும் 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதல், பயங்கரவாதத்தின் பெயரால் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்க வழிவகுத்தது. அதுவே உலகெங்கும் மக்கள் போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை 'இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கை' என்பது ஜனநாயக வழிப் போராட்டத்திற்கு உரமளிப்பதாக அமைந்திருந்தது. எனினும் கடந்த 16 ஆண்டு கால இடைவெளியில் இனப்படுகொலைக்கான நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வகையிலான வினைத்திறனான போராட்டங்களை தொடர்ச்சியாக பின்பற்ற தவறியுள்ளார்கள். விதிவிலக்காக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஏறத்தாழ 3000 நாட்களை கடந்ததாக அமைகின்றது. எனினும் பிறரை தூண்டக்கூடிய வகையிலோ அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையிலோ காணமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் பரிணமிக்க தவறியுள்ளது. அதற்கான வழிகாட்டலையோ அல்லது நெறிப்படுத்தலையோ தமிழ் அரசியல் பிரிதிநிதிகளும் வழங்க விரும்பியிருக்கவில்லை....

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கூட்டு முயற்சிகளும் தமிழரசுக்கட்சியின் நிராகரிப்புக்களும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர், ஈழத்தமிழர்கள் மேய்ப்பானற்ற மந்தைகளாக அலையும் அவலம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்குரிய தற்காலிக தீர்வாக தமிழ் மக்களிற்கு அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கும் தமிழ்க் கட்சிகளிடையே கூட்டுத் தன்மையை உருவாக்குவதற்கான செயற்பாடுகளும் பல கட்டமாக தமிழ் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் பலராலும் காலத்துக்கு காலம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. எனினும் தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தூய்மைவாத பிரச்சாரம் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரின் நிலையற்ற தன்மை என பல காரணங்களை குறித்து கூட்டு முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடிவடைந்தது. இந்நிலையின் தொடர்ச்சியாய் தமிழ்ப் பொதுவேட்பாளரில் கட்சிகளால் ஏற்பட்ட ஏமாற்றங்களை தொடர்ந்து சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் பெருமளவில் ஒதுங்கு நிலைக்கு சென்றுள்ளார்கள். அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தூய்மைவாத பிரச்சாரங்களை களைந்து கூட்டு முயற்சிக்கான முனைப்புக்களை நகர்த்தி வருகின்றார்கள். எனினும் கட்சி நலனை மையப்படுத்திய ஈழத்தமிழரசியலில் முழுமையான...

செம்மணி மனிதப் புதைகுழியை திசைதிருப்பும் தென்னிலங்கையும் மௌனிக்கும் தமிழ் தரப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

Image
உலகின் அழகிய தீவுகளின் 2025ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கைத்தீவு முதலாம் இடத்தை பெற்றுள்ளது. அதேவேளை இலங்கைத்தீவின் வடபகுதியில் தொடர்ச்சியான அகழ்வில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோரின் என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைத் தீவின் அழகில், ஒரு பகுதி மக்களின் கண்ணீர் கவனத்தைப்பெற தவறுகின்றது. இலங்கைத் தீவு, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஒன்றின் மூலமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியமாகவே வடக்கில் செம்மணியில் அகழப்படும் மனிதப்புதைகுழிகள் சாட்சியங்களாகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்படுகொலையை மறுத்துவரும் நிலையில், செம்மணி மனிதப்புதைகுழி அவலம் தொடர்பிலான கருத்தை தவிர்த்து வருகின்றது. மறுமுனையில் கடந்த கால தென்னிலங்கை அரசாங்க பிரதிநிதிகள், தமது குற்றங்களை மூடி மறைப்பதற்காக செம்மணி மனிதப்புதைகுழியை இறந்த உடல்களை முறையாக நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாக பிரச்சாரப்படுத்துகின்றார்கள். இது செம்மணி மனிதப்புதைகுழி சாட்சியம் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் தொடர்பில் தென்னிலங்கை அச்சம் கொள்வதனையே வெளிப்படுத்துகின்றது. எனினும் ஈழத்தமிழர்கள், செம்மணி மனிதப்பு...