Posts

Showing posts from November, 2021

ஈழத்தமிழர்கள் சிறுபான்மைக் குழுவா தேசிய இனமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்கள் அரசியலில் தேசியம் அதிகம் முதன்மைப்பெறும் உரையாடலாக காணப்படுகின்ற போதிலும் தேசியம் தொடர்பான சரியான பார்வையை செலுத்த தவறியே வருகின்றார்கள். தமிழ்த்தேசியம் தொடர்பாக, சுயநிர்ணய உரிமைகள் தொடர்பாக தேர்தல் காலங்களில் பிரச்சார மேடைகளில் முழங்கும் தமிழரசியல் தரப்பினரே மறுபுறம் ஈழத்தமிழர்களை சிறுபான்மைக்குழு என்ற சொல்லினூடாகவும் விழித்து பொதுவெளியில் உரையாடி வருகின்றார்கள். இக்கட்டுரை ஈழத்தமிழர்கள் சிறுபான்மைக்குழுவா? அல்லது தேசிய இனமா? என்பதை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவினுடான சந்திப்பு பற்றிய விபரத்தை வெளியிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவு மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் பணியகம் ஆகியன ஈழத்தமிழர் விவகாரத்தை இலங்கையின் சிறுபான்மைக் குழுவின் (Minority Group) விவகாரமாக அடையாளப்படுத்தியிருந்தனர். அத்துடன் இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இதனை மறுதளிக்காமையானது தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஈழத்தமிழரை சிறுபான...

பைடன் - புடின் சந்திப்பு அமெரிக்க மீள் எழுச்சிக்கான உத்தியாகுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
அரசியல் இராஜதந்திரத்தில் சந்திப்புக்களும் உரையாடல்களும் கனதியான பெறுமதி பெறுகிறது. ஆயினும் கொரோனா பெருந்தொற்று முடக்கங்கள், பயணத்தடைகள் தலைர்களுக்கிடையிலான நேரடியான சந்திப்புக்களை தவிர்த்து வந்தது. தற்போது நேரடியான சந்திப்புக்களுக்கான களங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் முழுவிச்சில் இடம்பெறவியலாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், சர்வதேச அரசியலில் நிகழ்நிலை சந்திப்புக்கள் ஓர் அங்கமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பு இராஜதந்திர பொறிமுறையில் அதிக நாட்டத்தை செலுத்துகின்ற போதிலும், சந்திப்புக்கள் இறுதியில் அமெரிக்கா எதிர்பார்த்த விளைவுகளை தருபவைகளாக அமைவதில்லை. எனினும் தொடர்ச்சியாக ஜோ பைடன் தனது பிரதான போட்டி அரசுகளின் தலைவர்களுடன் சந்திப்புக்களை திட்டமிட்டு வருகின்றார். சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடனான நிகழ்நிலை சந்திப்புக்கு பின்னர் தற்போது ரஷ்சியா ஜனாதிபதி விளாடிமிர் புடினுடான சந்திப்புக்களுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. இக்கட்டுரை பைடன்-புடின் சந்திப்புக்கான சர்வதேச அரசியல் சூழல் காரணிகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்...

பைடன்-ஜின்பிங் சந்திப்பு போரற்ற உலக அமைதிக்கு வழிவகுக்குமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சர்வதேச அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கில் மோதிக்கொள்ளும் இரு வல்லரசுகளின் தலைவர்கள் மெய்நிகர்வழியில் முதல்முறையாகச் சந்திப்பை மேற்கொண்டுள்ளமையே சமீபத்திய சர்வதேச அரசியலில் முதன்மையான தேடல் பகுதியாகக் காணப்படுகிறது. கொரோனாத்தோற்றம் தொடர்பான அமெரிக்க அறிக்கைகள், சீனாவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்கா சர்வதேச நிறுவனங்களில் ஏற்படுத்திவரும் நெருக்கடி, தைவான் தொடர்பில் அமெரிக்கா-சீனாவிடையே எழும் கருத்து மோதல்கள் மற்றும் வர்த்தகப்போட்டி என அமெரிக்க-சீன இடையிலான முரண்பாட்டு நிலைமை பனிப்போருக்கான அறிகுறிகளுடன் உக்கிரம் பெற்றுள்ளதொரு சூழலில் இரு நாடுகளினதும் தலைவர்கள் மெய்நிகர்வழியாகச் சந்திப்பை மேற்கொள்வது சர்வதேச அரசியல் பரப்பில் அதிக கவனத்தை  ஈர்த்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்திப்பு தொடர்பான அரசியல் தாக்கங்களைத் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஷி ஜின்பிங் மற்றும் ஜோ பைடன் ஏற்கனவே பைடன் உப ஜனாதிபதி என்ற அறிமுகத்துடன் நேரடியாகச் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் கடந்த ஜனவரி(2021) ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபத...

இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தக்கூடிய அரசியல் ஆபத்துக்கள்? -ஐ.வி.மகாசேனன்-

Image
இலங்கையில், ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை சமர்ப்பிக்கிறது. எதிர்க்கட்சிகள் கொழும்பில் ஒன்று கூடி விலை உயர்ச்சிகளுக்கு எதிரான போராட்டங்களை நடாத்துகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய கடைத்தெருக்களில் வரிசையில் நிற்கிறார்கள். இந்நிலைமையை பலரும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்து செல்கிறார்கள். பொருளாதார நெருக்கடிகள் குறுகிய காலத்தில் மாற்று கொள்கைகள் மூலமாக சீர்செய்யக்கூடியதாகும். எனிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை அரசியல் ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதொன்றாகும். இக்கட்டுரையும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தரக்கூடிய அரசியல் விளைவுகளை தேடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு உயர்வு, உரத்தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் உள்ளடங்களாக அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கு எதிராக பிராந்திய அளவில் சிறுசிறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றாலும் ஒட்டுமொத்த மக்களின...

மாறிவரும் சீன-இலங்கை உறவு நெருக்கடிக்குள் தள்ளப்படுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
சீனாவின் பொறி அரசியல்(Trap Politics) தொடர்பில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் நீண்டகாலமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது. அது உலக வல்லாதிக்க போட்டியின் எதிர்ப்பிரச்சாரமாக காணப்படுகின்ற போதிலும், அதில் காணப்படும் உண்மைகளும் மறுக்க முடியாதது என்பதனையே இலங்கையின் அண்மைய செய்திகள் நிரூபிக்கின்றன. இலங்கையின் முதன்மையான அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படாத உரத்துக்கு ரஷ்ட ஈடாக எட்டு மில்லியன் டாலர்களை சீனா கோருவது என்பன மறுதலையாய் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை காங்கிரஸில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இலங்கையில் சீனா இராணுவத்தளம் அமைக்க திட்டமிட்டுள்ளது என்பது மெய்ப்பிக்கப்படக்கூடியது என்ற சந்தேகத்தை அரசியல் ஆய்வளார்களிடையே உருவாக்கி வருகிறது. இக்கட்டுரையும் இலங்கையில் மாறிவரும் சீன உறவை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிகம் சீன சார்பு கொள்கையையே ஆரம்ப காலப்பகுதியில் மேற்கொண்டு வந்தது. சீனாவுடன் அதிகமாக ஒப்பந்தங்களை மேற்கொண்டதுடன், மறுதலையாக சீனாவுடன் பகைமை பாரா...

சீனாவின் மென் அதிகார முகத்தை சிதைக்கும் பென்டகனின் அறிக்கை! -ஐ.வி.மகாசேனன்-

Image
அமெரிக்கா எதிர் சீனா என்ற அதிகார போட்டியை மையப்படுத்தியதாகவே நடப்பு சர்வதேச செய்திகள் யாவும் சுழலகின்றது. இந்தவரிசையில் நவம்பர் முதல் வாரங்களில் அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவாகிய பென்டகன் சர்வதேச அரசியல் பரப்பில் சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா காங்கிரஸில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பென்டகனின் அறிக்கை மீது சீனா தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இது வர்த்தகப்போரில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா எதிர் சீனா அதிகாரப்போட்டியில் பலப்பரீட்சைக்கான களத்தை உருவாக்குகின்றதா என்ற சந்தேகத்தை சர்வதேச அரசியல் ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இக்கட்டுரை சீனாவின் இராணுவ செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்புத்துறை காங்கிரஸில் சமர்ப்பித்துள்ள அறிக்கையையும் அது சர்வதேச அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களையும் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவின் பென்டகன் அதன் பிரதான எதிர்த்தரப்பாகிய சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின்(பி.எல்.ஏ) முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்து ஒர் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு அறிக்கை...

ஜி-20 மகாநாடும் அமெரிக்க-சீன-ரஷ்சிய தலைவர்களின் அரசியல் தந்திரோபாயமும் -ஐ.வி.மகாசேனன்-

Image
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிகரித்த சர்வதேச வர்த்தக போட்டிச்சூழல் உலக நாடுகள் தனித்து இயங்க முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது. இது புவிசார் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டமைப்பை அதிகரிக்க வைத்ததோடு மறுதலையாக பொருளாதார முன்னிலை பெறும் நாடுகளின் கூட்டுக்களையும் உருவாக்கியுள்ளது. அரசியல் கொள்கைகள் முரண்நகையாக உள்ள போதிலும் சர்வதேச வர்த்தகத்தை மையப்படுத்தி பல முரண்நகை நாடுகள் ஓரு கூட்டுக்குள் பயணிக்கும் நிலைமைகள் காணப்படுகிறது. அவ்வாறானதொரு ஒத்துழைப்பு கூட்டாகவே ஜி-20 நாடுகளும் காணப்படுகின்றது. பல்வேறு அரசியல் முரண்நகைகளை உடைய தலைலவர்கள் ஜி-20 மாநாட்டுக்காக உரோமில் கூடிய போது சர்வதேச அரசியல் அவதானிப்புக்களும் உரோமை சூழ்ந்தது. அதேநேரம் சீன மற்றும் ரஷ்சிய தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாமை சர்வதேச அரசியலில் விவாதப்பொருளாகி உள்ளது. இக்கட்டுரையும் சீன, ரஷ்சிய தலைவர்கள் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கான அரசியல் காரணிகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பொருளாதார சக்திகளின் கூட்டாகிய ஜி-20இன் 2021ஆம் ஆண்டுக்கான மாநாடு கடந்த ஒக்டோபர் 30-31ஆம் திகதிகளில் இத்தாலியின் த...

குவாட்-02 இஸ்ரேல்-அமெரிக்க நலனுக்குள் இந்தியா மூழ்கிப்போகுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
உலக ஒழுங்குக்கான அதிகார போட்டியில் ஈடுபடும் அமெரிக்கா - எதிர் சீனாவாக புதிய கூட்டுக்களின் உருவாக்கங்களே சமீபகால சர்வதேச அரசியலின் முதன்மையான விடயமாகக் காணப்படுகின்றது. சர்வதேச அரசியல் இந்தோ-பசுபிக்கை மையப்படுத்தி நகர்வதால் புதிய கூட்டு உருவாக்கங்களும் இந்தோ-பசுபிக் பிராந்தியங்களை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான அமெரிக்க கூட்டில் ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய அரசான இந்தியாவின் அண்மைய வெளியுறவுக்கொள்கையில் ஒரு பரபரப்பான வார்த்தையாக 'குவாட்' உருவாகியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நாற்கர உரையாடலாக உருவாக்கப்பட்ட குவாட், சமகாலத்தில் இந்தோ-பசுபிக் பிராந்திய நாடுகளிடையே பிராந்திய கட்டமைப்பாக உருவாக்கும் உரையாடல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை மேற்கு ஆசியாவை மையப்படுத்தி எழும் தென்குவாட் கட்டமைப்பு உருவாக்கத்தின் இந்திய அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மேற்கு ஆசியாவில் ஒரு புதிய நாற்கரக் குழுவை உருவாக்க முடிவு ச...