Posts

Showing posts from December, 2021

ஈழத்தமிழரசியல் தரப்பு இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண முடியுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழரசியல் பரப்பில் அண்மைக்கால உரையாடல்களில் ஈழத்தமிழர்களுக்கான கட்டமைக்கப்பட்ட வெளியுறவுக்கொள்கை தொடர்பில் பொதுவெளியில் பல உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூகங்களால் முன்னெடுக்கப்படும் இவ்வினைத்திறனான செயற்பாடுகளில் பல ஆரோக்கியமான விடயங்கள் உரையாடப்படுகிறது. எனினும் வெளியுறவுக்கொள்கையை செயற்படுத்த வேண்டிய தமிழரசியல் தரப்பு அவ்ஆரோக்கியமான கருத்தாடல்களை உதாசீனம் செய்யும் நிலைமைகளே அதிகமாக காணப்படுகிறது. வெளியுறவுக்கொள்கை பற்றிய சிந்தனைகளுக்கு பெரிய அறிவு தேவையில்லையென ஆரோக்கியமான கருத்தாடல்களை உதறிதள்ளும் போக்கையே அரசியல் தலைவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.   இக்கட்டுரையும் சீனா தொடர்பில் ஈழத்தமிழரசியல் தரப்பின் வெளியுறவுக்கொள்கையின் போக்கை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர்  கியூ சென்கொங் மூன்று நாள் பயணமாக டிசம்பர்15-17 வடக்கிற்கு வருகை தந்திருந்தார். அவ்வருகையில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் வரலாற்று மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையில் 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்ன...

உக்ரைனை மையப்படுத்தி மீள யுரேசிய அரசவியலில் ரஷ்சியா ஆதிக்கம் எழுச்சியடைகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
உக்ரைனை மையப்படுத்திய அரசியல் கொதிநிலை சமகாலத்தில் சர்வதேச அரசியலில் தலைப்பு செய்தியாக தொடர்கிறது. பனிப்போர்க்கால இருதுருவ உலக ஒழுங்கின் வல்லாதிக்க அரசுகளாகிய அமெரிக்கா மற்றும் ரஷ்சியா இடையே உக்ரைனை மையப்படுத்தி மீளவும் பனிப்போருக்கான களம் உருவாகியுள்ளது. எனினும் இப்பனிப்போர் சூழலில் முன்னர் அமெரிக்காவுக்கான படைத்தள ஆதரவை வழங்கிய நேட்டோ அதே வீச்சோடு ஆதரவு வழங்குமா என்பது சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. ரஷ்சியா மீதான பொருளாதார தடைகள் தொடர்பான அமெரிக்காவின் உரையாடல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவு சமிக்ஞைகளை அரைகுறையாக வெளிப்படுத்துகின்ற போதிலும், படைக்குவிப்பு தொடர்பான உரையாடல்களிலிருந்து பின்வாங்கும் நிலையினையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையும் ரஷ்சியா-உக்ரைன் போர்ப்பதட்டம் சர்வதேச அரசியல் பரப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையின் ரஷ்சிய நிலப்பரப்பில் இவ்வருட ஆரம்பத்திலிருந்தே ரஷ்சியா இராணுவ பிரசன்னத்தை அதிகரித்து வருகிறது. இத்தொடர் நடவடிக்கை 2022இன் தொடக்கத்தில் முழு அளவிலான படையெடுப்புக்கான தயாரிப்பு என்று அமெரிக்க உளவுத்துறை ம...

இந்தியாவுடனான பகைமைப் போக்கு ஈழத் தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்கு ஆரோக்கியமானதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
ஈழத்தமிழர்களின் சிவில் சமூகப்பரப்பில் தமிழ்த்தேசிய இனத்தின் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் விரிவான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மறுபுறத்தில் குறித்த வெளியுறவுக்கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டிய ஈழத்தமிழரசியல் தரப்பின் செயற்பாடுகள் சிவில் சமூகத்தரப்பின முயற்சியையும், வெளியுறவுக்கொள்கை உருவாக்கத்தையும் மலினப்படுத்தும் வகையில் காணப்படுகிறது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் அண்மைக்கால இந்திய எதிர்ப்பு போக்கு ஈழத்தமிழர்களின் அரசியல் பாதையை முடக்கக்கூடிய ஆபத்துக்கள் காணப்படுகிறது. இது ஈழத்தமிழரசியல் தரப்பின் ஈழத்தமிழர் நலன் மீது கரிசணையற்ற நிலைப்பாடுகளையே உறுதி செய்கிறது. இக்கட்டுரையும் இதனை மையப்படுத்தியே தேசிய இனங்களின் உரிமை போராட்டங்களில் பிராந்திய, பூகோள வல்லரசுகளின் வகிபாக வரலாற்றை சர்வதேச அனுபவத்தில் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர்(2021) முன்னரைப்பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை சந்திப்பதற்கான அழைப்பை இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் முயற்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் விடுக்கப்பட்டது. குறித்த அழைப்பை  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந...

பூகோள போட்டிக்குள் நியூ கலிடோனியாவை பிரான்ஸ் நகர்த்துகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

Image
அமெரிக்கா-பிரித்தானியா-அவுஸ்ரேலியா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தமாகிய ஆக்கஸ் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிராகரிககப்பட்டதை தொடர்ந்து இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பிரான்ஸின் இருப்பு தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, 2022-ஏப்ரல் பிரான்ஸ் பொதுத்தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில் பிரான்ஸின் ஆதிக்கம் நிறைந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் குறித்த பிராந்திய அரசுடனான முரண்பாடு அதிக நெருக்கடிகளை ஆளும் மக்ரோன் தரப்பினருக்கு ஏற்படுத்தியிருந்தது. எனினும் கடந்த வாரம் பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட நியூ கலிடோனியாவில் நடைபெற்ற சுயாட்சிக்கான வாக்கெடுப்பின் முடிவுகள் பிரான்ஸிற்கு சாதகமாக கிடைக்கப்பெற்றுள்ளமையானது, பிரான்ஸின் இந்தோ-பசுபிக் பிராந்தியம் மீதான இருப்பு அதிகமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இக்கட்டுரையும் நியூ கலிடோனியா சுயநிர்ணய உரிமை வாக்கெடுப்பு முடிவுகள் தொடர்பான அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. பசிபிக் தீவு பிரெஞ்சு பிரதேசமான நியூ கலிடோனியாவின் 30 ஆண்டுகால சமாதான முன்னெடுப்பின் உச்சக்கட்டமாக, பிரான்சிலிருந்து சுதந்திரம் பெற வேண்டுமா என்பது குறித்த மூன்றாவது மற்ற...

இந்துசமுத்திர மகாநாட்டின் மூலோபாயமும் இந்தியா-இலங்கை நட்புறவும் -ஐ.வி.மகாசேனன்-

Image
சமகால புவிசார் அரசியல் போட்டியில் இந்து சமுத்திரம் உலகின் மிக முக்கியமான களங்களில் ஒன்றாக காணப்படுகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கான உலகின் ஏழு முக்கியமான கடல்பாதைகளில் மூன்று இந்த பிராந்தியத்தில் உள்ளன. இதனடிப்படையிலும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் அரசியல் புவியியல் அமைவிட முக்கியத்துவம் சார்ந்தும் இக்களம் மூலோபாயப் போட்டி நிறைந்து உள்ளது. இது இப்பிராந்தியத்துக்கு புறத்தே உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் சோவியத் யூனியனின் மூலோபாய அரசியல் களமாக வரலாற்றில் இருந்து வந்துள்ளது. இந்து சமுத்திரத்தின் சமீபத்திய வல்லரசாக பிராந்தியத்துக்கு புறத்தே சீனா எழுச்சியடைந்த வருகின்றது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்கள் அடிக்கடி இந்து சமுத்திர கடற்பரப்பில் பயணிப்பதுவும், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை மையப்படுத்திய அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்பு கூட்டுக்களும் இந்து சமுத்திரத்தின் கொதிநிலையை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இக்கட்டுரை துபாயில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான இந்து சமுத்திர மாநாட்டின் அரசியல் உரையாடல்களின் தன்மையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-5(2021) த...

இந்திய-ரஷ்சிய மூலோபாய நட்புறவை மீள உறுதி செய்கிறதா புடின்-மோடி சந்திப்பு? -ஐ.வி.மகாசேனன்-

Image
கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிகளுக்குள் பழகி உலகம் ஓரளவு வழமையான இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. சர்வதேச அரசியல் பரப்பிலும் இயல்பு நிலை உருவாக்கங்களை அவதானிக்க முடிகிறது. கடந்த ஒரு வருட காலமாக காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டு அல்லது நேரலையாக மெய்நிகர் வழியில் சந்திப்புக்களை மேற்கொண்டு வந்த அரசியல் தலைவர்கள் மீளவும் நேரடியான சந்திப்புக்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். எனிலும் நேரடியான சந்திப்புக்கள் அதிகம் நெருக்கமான உறவுகளை பகிரும் நாடுகளிடையேயே முன்னிலைப்படுகின்றது. மாறாக, பதட்டமான உறவு தொடரும் நாடுகளிடையே தொடர்ச்சியாக மெய்நிகர் வழியிலான சந்திப்புக்களிற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் சந்திப்பை அடுத்து  டிசம்பர்-8ஆம் திகதிகளில் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸையும் நேரடியாக சந்தித்த ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர்-07ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை மெய்நிகர் முறையில் சந்தித்துள்ளார். இக்கட்டுரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோரிடையிலான நேரடி சந்திப்பின் பின்னாலான ...

சீனாவிற்கு எதிரான கடன்பொறி பிரச்சாரத்தினால் அமெரிக்கா பலவீனமான நாடுகளை ஆக்கிரமிக்க முயலுகிறது? -ஐ.வி.மகாசேனன்-

Image
சீனாவின் கடன் பொறி(Debt Trap) தொடர்பிலே சர்வதேச அரசியலில் அமெரிக்க தலைமையிலான சீன எதிர்ப்பு சக்திகளினால் அதிகளவில் பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகிறது. குறித்த பிரச்சாரம் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மேற்கொள்காட்டியே அதிகமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. தற்போது உகண்டா விமான நிலையத்தினையும் கடன் பொறியூடாக சீனா கைப்பற்றியுள்ளதென ஊடகப்பரப்பில் செய்திகள் முதன்மைப்படுத்தப்படுகிறது. எனினும், இலங்கையின் சீனத்தூதரகம் சீனாவின் கடன் பொறி தொடர்பிலான எதிர்மறையான பிரச்சாரங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவினால் வழங்கப்டும் கடன்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பியுள்ளது. இக்கட்டுரையும் சீனாவின் கடன் பொறி தொடர்பிலான பிரச்சாரங்களின் உண்மைத்தன்மையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-சீனா அதிகாரப்போட்டியே இன்றைய சர்வதேச அரசியலையும், நாடுகளுக்கிடையிலான சர்வதேச உறவுகளினையும் முழுமையாக நிரப்பி வருகிறது. சித்தாந்தங்களூடாக தமது உலக அதிகாரத்தை உறுதிப்படுத்திய  அமெரிக்கா, சீனாவின் அதிகாரப்போட்டியை சிதைப்பதற்கு சீனா மீதான குற்றச்சாட்டுக்களை பொதுவெளியில் உலாவ விடுவதனையே முதன்மையாக ...

அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான உரையாடல் உலக அதிகாரத்தை தக்கவைக்க உதவுமா? -ஐ.வி.மகாசேனன்-

Image
பனிப்போருக்கு பின்னர் மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவால் பேணப்பட்டு வந்த ஒற்றைமைய அரசியலின் முடி கொரோனா பெருந்தொற்றின் அரசியல் தாக்கங்களுக்கு பின் தளம்பல்களை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடன் வர்த்தக போரை நிகழ்த்திய சீனா பைடனின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் உலக அதிகாரத்திற்கு எதிராகவே நேரடியாக சவால் விடும் நிலைக்கு பரிணாமம் அடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் உலக அதிகாரத்தை தக்கவைப்பதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக வேறுபட்ட புதிய இராஜதந்திர பொறிமுறைகளை பரீட்சித்து வருகின்றது. அவ்வாறானதொரு பரீட்சார்த்த இராஜதந்திர முயற்சியாகவே ஜனநாயக நாடுகளுக்கான மாநாட்டு அழைப்பும் அமைகிறது. எனினும் இம்முயற்சி அமெரிக்காவின் வல்லரசு அரசியலிலும், சர்வதேச வெளியிலும் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான மகாநாடு தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர்(2021) 9-10ஆம் திகதிகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பை...